மகன் தனது இன்றைய காதலையும் , அவனது தந்தையின் காதலையும் அழகாக சொல்லி இருக்கும் படம் . ஒரு நிமிடம் வெயிட்டிங் கால் வந்தாலும் ஏவ கூட பேசிட்டு இருந்த என கேட்கும் இன்றைய காதலிக்கும் , காதலன் பிரிவினால் வாழ்வையே இழக்கும் அன்றைய காதலையும் வெளிச்சம் போடு காட்டும் உன்னத காவியம்.
லெனின் கப்பல் பணி அதிகாரி (சேரன் ) முஸ்லீம் பெண் பத்மப்ரியா கல்லூரி மாணவி (1970)ல் நடக்கும் கதை . அப்பா விஜயகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனை க்கு வருகிறார் அவரை பார்க்க வரும் சேரன் மற்றும் அங்கு அம்மாவின் சிகிச்சைக்கு வரும் பத்மப்ரியா இருவரும் இலக்கியங்களை பற்றி பேசி நட்பை வளர்கின்றனர். வேலைக்காக கொல்கத்தா செல்லும்போது பத்மப்ரியா உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார் . அவரிடம் சொல்லாமல்
வருத்தத்துடன் செல்லும் சேரனுக்கு அப்பா விஜயகுமார் அந்த பெண் தன்னை நன்றாக பார்த்துக்கொண்டார் நன்றி சொல்லி கடிதம் போடும்படி முகவரி அனுப்புகிறார் .
கடிதம் மூலம் காதல் செய்கின்றனர் ,பிறகு அப்பாவுடன் பெண் கேட்க செல்கிறார் சேரன் , சரி பெண்ணை தருகிறேன் என்று சொல்லி அனுப்பி , ஊரை காலிசெய்து சென்று விடுகிறார் பத்மப்ரியா அப்பா .அவர்களை தேடி அலைந்து கிடைக்காததால் அப்பாவுக்காக வேறு பெண்ணை திருமணம் செயகிறார்சேரன் .
சேரன் மகன் சொத்து பத்திரத்தை தேடும் போது சேரனின் கடிதம் ,டைரி படித்து
பத்மப்ரியாவை தேடும் போது எழுதிய கடிதங்களை எப்படி தன் அப்பா நினைவாக பத்மப்ரியாவை கண்டு பிடித்து சேர்க்கிறார் என்பது மீதி கதை .அவர் பத்மப்ரியாவை சந்தித்து தான் சேரன் மகன் அப்பா இறந்து விட்டார் என்று சொல்லும் போதும் , பத்மப்ரியா ஊரை கலி செய்து வந்தபின் என்ன நடந்தது என்பதை அறியும் போது எல்லோர் மனமும் கனக்கிறது.
அருமையான காதல் கதை சில இடங்களில் மட்டும் மெதுவாக செல்கிறது , சேரனின் முகம் தான் வயதான தோற்றம் அளிக்கிறது நடிப்பு அருமை ,பத்மப்ரியா அழகான முஸ்லீம் பெண்ணாக , அருமையான நடிப்பு இறுதிகாட்சியில் வரும் வயதான தோற்றம் மிக அருமை. ஒளிப்பதிவு ,பின்னணி இசை பாராட்டும் படி உள்ளது.
(1970) ல் நடக்கும் அனைத்து காட்சி அமைப்புகளும் அருமை .
காதல் நினவு சின்னம் இந்த பொக்கிஷம் .
குத்துபாட்டு ,ஹீரோ பறந்து வருவது , பஞ்ச் பேசுவது இல்லாமல் மனதை வருடும் படம் சேரனின் கொடியை உயரே பறக்கவிட்ட படம் .
காதலின் அழுத்தத்தை இதைவிட சொல்ல முடியாது. தமிழை தவிர பிற மொழிகளில் இப்படி ஒரு படம் வந்திருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .
0 comments:
Post a Comment