நமீதா மோகினிப்பேயாக நடிக்கும் `ஜகன்மோகினி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ். கார்டனில் நடந்தது. நமீதா மோகினிப்பேயாகவும், வடிவேல் நாதஸ்வர வித்வானாக-நமீதாவின் அண்ணனாகவும் நடிக்கும் காட்சி படமாகிக்கொண்டிருந்தது.
`வெண்ணிற ஆடை' மூர்த்தி, கிங்காங், கோவை செல்லத்துரை ஆகியோர் உடன் நடித்துக்கொண்டிருந்தார்கள். பேயாக இருக்கும் நமீதா, அண்ணன் வடிவேலுவையும் தன்னுடன் வந்துவிடும்படி அழைக்க, அவரைப் பார்த்து வடிவேலு பயந்து அலறுவது போன்ற காட்சியை, என்.கே.விஸ்வநாதன் படமாக்கினார். படப்பிடிப்பு இடைவேளையில், நமீதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
``வடிவேலுவின் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய `காமெடி'யை இந்த படத்தில் சேர்க்கும்படி நான்தான் டைரக்டரிடம் சொன்னேன். அப்படி வைத்தால், அண்ணன்-தங்கை பாசம் என்று உருக்கமான காட்சிகளை வைக்க வேண்டாம். `காமெடி'யான சீன்களை வையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.
வடிவேலுவும், நானும் `எங்க அண்ணா,' `ஏய்,' `சாணக்யா,' `இங்கிலீஷ்காரன்' ஆகிய படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். 4 வருடங்களுக்குப்பின், இந்த படத்தில் இணைந்து நடிக்கிறோம்.
படத்தின் கதைப்படி வடிவேல் எனக்கு அண்ணனாக நடித்தாலும், `செட்'டில் அவரை நான், ``சார்'' என்றுதான் கூப்பிடுவேன். ``அண்ணா'' என்று யாரையும் நான் கூப்பிடுவதில்லை. ஆண்கள் அனைவரும் எனக்கு மச்சான்கள்தான்.
எனக்கு திருமணம் நடந்தால், எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரசிகர்கள் உள்பட அத்தனை பேருக்கும் விருந்து கொடுப்பேன். அதுவரை நான், என்னை அழகாகவும், கவர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்காக, அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். மூன்று மாதங்களாக `சைவம்'தான் சாப்பிடுகிறேன்.''
இவ்வாறு நமீதா கூறினார்.
0 comments:
Post a Comment