நான் பிகினி உடையில் நடிக்கப் போவதாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருபோதும் அப்படிப்பட்ட உடையில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் புன்னகை இளவரசி சினேகா.
பிகினி எனப்படும் நீச்சலுடை நாயகிகள் வரிசையில் கோவா படம் மூலம் சினேகாவும் சேரப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதை சினேகா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அந்த மாதிரியான சூழ்நிலை எனக்கு இல்லை. எனக்கென்று ஹோம்லி பெண் என்ற இமேஜ் உள்ளது. அதை நான் ஒருபோதும் கெடுத்துக் கொள்ள மாட்டேன். பிகினியில் நடிக்க வேண்டிய அவசியமும், தேவையும் எனக்கு இல்லை.
வாய்ப்பு இல்லாததால் இப்படி நடிக்க கிளம்பி விட்டேன் என்றும் கதை விட்டுள்ளனர். உண்மையில் எனக்கு கை நிறையப் படங்கள் இப்போதும் உள்ளன. பிசியாகத்தான் இருக்கிறேன் என்கிறார் சினேகா.
அதேபோல கோவா படத்தில் தான் வில்லியாக நடிக்கவில்லை என்றும், கேரக்டர் நெகட்டிவானது என்றும் விளக்கியுள்ளார் சினேகா.
கோவா படத்தில் எனக்கு பிரமாதமான கேரக்டர். கேரக்டரைக் கேட்டதுமே நான் கால்ஷீட் கொடுத்துட்டேன். யாரும் இப்படிப்பட்ட கேரக்டரில் தமிழில் நடித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி ஒரு கேரக்டர் என்றும் புளகாங்கிதப்படுகிறார் சினேகா.
0 comments:
Post a Comment