Thursday, September 24, 2009

Eeram_TC.Rip_X264_AAC_1CD download







Movie Name : Eeram
Year : 2009
Cast: Aadhi, Nandha, Sindhu Menon, Saranya Mohan, Srinath
Direction: Arivazhagan Venkatachalam
Music: Thaman
http://www.mediafire.com/?uimk3ggdmny
http://www.mediafire.com/?a4jwetyynyt
http://www.mediafire.com/?if2owncy1my
http://www.mediafire.com/?3nyiu1xtzht
http://www.mediafire.com/?iydmtj3jz2t
http://www.mediafire.com/?zbkzbrt0ynm

Read More...

Unaipol Oruvan(2009) TC HQ 1CD RIP X264 Rip download


Banner: Raj Kamal International, UTV Motion Picture
Cast: Kamal Haasan & Mohanlal
Direction: Chakri
Production: Kamal Haasan & Ronnie Screwala
Music: Shruthi Haasan
Lyricis: Kamal Haasan, Blaaze, & Manushya Puthran
Released Year: 2009


http://rapidshare.com/files/284243369/UnnaiPolOruvan__2009_1CD_HQ_TC_X264_RIP_AFT.part1.rar
http://rapidshare.com/files/284243457/UnnaiPolOruvan__2009_1CD_HQ_TC_X264_RIP_AFT.part2.rar
http://rapidshare.com/files/284243374/UnnaiPolOruvan__2009_1CD_HQ_TC_X264_RIP_AFT.part3.rar
http://rapidshare.com/files/284242656/UnnaiPolOruvan__2009_1CD_HQ_TC_X264_RIP_AFT.part4.rar

Read More...

நடிகர் சங்கத்தில் ஜெய் ஆகாஷ் மீது சுனேனா புகார்

“காதலில் விழுந்தேன்” படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனேனா. தொடர்ந்து “மாசிலாமணி” படமும் அவர் நடித்து ரிலீசானது. தற்போது பரத் ஜோடியாக “திருத்தணி” மற்றும் “கதிர்வேல்”, “யாதுமாகி” படங்களில் நடித்து வருகிறார்.

ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கும் “மதன்” படத்தில் சுனேனா கவர்ச்சியாக நடித்திருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பு எற்படுத்தின. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்காக சுனேனா கவர்ச்சி போஸ்களுடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு உள்ளன.

இதனால் ஆத்திரமடைந்துள்ளார் சுனேனா. அந்த படத்தில் முழுமையாக நடிக்கவில்லை என்றும் விளம்பரத்துக்காக தனது பெயரை மோசடியாக பயன்படுத்துவதாகவும் ஜெய் ஆகாஷ் மீது சுனேனா நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் ஆகாஷிடம் விசாரணை நடத்த நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மோசடி பற்றி சுனேனா கூறியதாவது:-


நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கு 15 வயது. அப்போது இரு தெலுங்கு படத்திலும் “மதன்” என்ற தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானேன்.

ஜெய் ஆகாஷ்தான் என்னிடம் மதன் கதையை சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார். ஒரே ஒரு நாள் மட்டும்தான் படப்பிடிப்புக்கு போனேன். மொத்தம் 16 மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த படப்பிடிப்பில் நான் நடித்தது. 8 மணி நேரம் தான் ஒரு பாடல் காட்சியில் பாதிதான் நடித்து இருந்தேன். அதன் பிறகு அந்த படப்பிடிப்பு நடக்கவில்லை. ஜெய் ஆகாஷிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

“காதலில் விழுந்தேன்” படத்துக்காக சென்னை வந்தபோது “மதன்” படம் பற்றி எந்த தகவலும் இல்லை. நான்கு வருடம் ஓடி விட்டது. இப்போது திடீரென்று “மதன்” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அடித்த போஸ்டரில் என் படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு நாள் கூட ஒழுங்காக அந்த படத்தில் நடிக்காத என்னை போஸ்டரில் படம் போட்டு நடித்ததாக விளம்பரப்படுத்துவது மோசடியாகும்.

போஸ்டர்களில் என்னை விளம்பரத்துக்காக பயன்படுத்துகிறார்கள். சுனேனா நடித்த சீன்கள் நிறைய இருக்கும் என்று நம்பி டிக்கெட் எடுத்து வரும் ரசிகர்கள் ஏமாந்து போவார்களே என்ற கவலை எனக்கு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை மீது நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுனேனா கூறினார்.

Read More...

பிரபுதேவா மனைவிக்கு நடிகை நயன்தாரா ஆவேச பதில் - Nayan replied for Prabhu deva wife interview

பிரபுதேவா மனைவி ரமலத் நடிகை நயன்தாரா மீது பரபரப்பான புகார் கூறினார். என் கணவர் பிரபுதேவா நயன்தாராவின் மாய வலையில் சிக்கி உள்ளார் என்றும் நயன்தாராவை பார்த்தால் அடிப்பேன் என்றும் கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்து நயன்தாரா கூறியதாவது:-

பிரபுதேவா மனைவி என் மீது குற்றச்சாட்டுகள் கூறுவதற்கு அருகதை இல்லாதவர். எனக்கும், பிரபு தேவாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். அப்படி இருக்கிறதா என்று பிரபுதேவாவிடமே கேட்டு தெரிந்து கொள்ளட்டும். இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
The Remaining of Your Post Here

Read More...

இண்டர்நெட்டில் பரவும் ஆபாச படம்; அசினிடம் “செக்ஸ்” குறும்பு - Asin have a problem

அசினிடம் ஒரு வாலிபர் “செக்ஸ்” குறும்பு செய்வது போன்ற ஆபாச படங்கள் இண்டர்நெட்டில் பரவியுள்ளன. தமிழ்ப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த அசின் திடீரென்று இந்திக்கு தாவினார். அமீர்கானுடன் நடித்த “கஜினி” என்ற ஒரே படத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமானார். இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகிகளை வீழ்த்தி விட்டு ரசிகர்கள் இதயங்களில் சிம்மாசனம் போட்டுள்ளார்.

ரசிகர்கள் கூட்டம் ஒருபுறம் பெருகினாலும் அவர்களால் தொல்லைகளும் விரட்டுகிறது. சமீபத்தில் ஒரு ரசிகர் வைர மோதிரத்துடன் காதல் கடிதம் அனுப்பினார். திருமணம் செய்ய விரும்புவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இது மாதிரி தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் குவிகின்றன. படப்பிடிப்புக்கு போகும் போதும் ரசிகர்கள் தொந்தரவு எல்லை மீறுகிறது. இதனால் பாதுகாப்புக்காக தனியார் செக்யூரிட்டிகளை நியமித்துள்ளார்.
இந்த நிலையில்தான் இந்த செக்ஸ் குறும்பு படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி உள்ளன. அந்த வாலிபர் அசின் மீது கையை படர விட்டு தகாத செயலில் ஈடுபடுவது போலவும் அவரை இடது கையை உயர்த்தி அசின் அடிக்கப்பாய்வது போலவும் அப்படங்கள் உள்ளன.

இந்த படத்தை பார்த்து அதிர்ச்சியில் உள்ளார் அசின்.

Read More...

Wednesday, September 23, 2009

உன்னைப்போல் ஒருவன் - Movie Review


சென்னை நகர போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு மர்ம போன் வருகிறது. அதில் பேசிய கமல் ஐந்து இடங்களில் அதி பயங்கர குண்டுகள் வைத்திருப்பதாக மிரட்டுகிறார். போலீஸ் நிலையத்தில் வைத்துள்ள குண்டு பற்றி மட்டும் விவரம் சொல்கிறார். போலீஸ் படை அங்கு முற்றுகையிடுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் குண்டை செயலிழக்க செய்கின்றனர்.

போலீஸ் வட்டாரமும் அரசும் அதிர்ந்து நிற்கிறது. கமல் திரும்பவும் கமிஷனரிடம் பேசி மீதி நான்கு குண்டுகளும் வெடிக்காமல் இருக்க ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்கும்படி “கெடு” வைக்கிறார்.

போலீஸ் திகைக்கிறது. அந்த தீவிரவாதிகள் படுபயங்கரமானவர்கள். ஒருவன் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து நாசவேலைகள் செய்பவன். இன்னொருவன் பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்றவன். மற்றவன் வேறொரு தீவிரவாத அமைப்புக்கு வேலை செய்பவன். நான்காவது ஆள் தரம்சந்த் லாலா என்ற உள்ளூர்காரன். இவன் பணத்துக்காக தீவிரவாதிகளுக்கு ஆயுத சப்ளை செய்பவன். இவர்களை விடுதலை செய்ய போலீஸ் தரப்பிலேயே ஆட்சேபனை கிளம்புகிறது.

போனில் பேசுவது யார்? எங்கிருந்து பேசப்படுகிறது? என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போலீசும், உளவுத்துறையும் அல்லோலப்படுகிறது. கெடு நேரமும் நெருங்குகிறது. வேறு வழியின்றி கமல் கோரிக்கையை கமிஷனர் ஏற்கிறார். நான்கு தீவிரவாதிகளும் கமல் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்படுகின்றனர். அவர்களிடம் மேலிட உத்தரவுப்படி உங்களை விடுவிப்பதாகவும் வேனில் தப்பிச் செல்லுங்கள் என்றும் கமல் போனில் கூறுகிறார். அதன் பிறகு நடப்பது எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்...

தீவிரவாத கதைகளில் வித்தியாசமான படம். குண்டு வெடிப்பு, ரத்தம், வன்முறை தொகுப்பாக இல்லாமல் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குனர் சக்ரி.

ஒரே சட்டை, பேண்ட் தாடியில் அப்பாவியாக வரும் கமல். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், எக்ஸ்பிரஸ் ரெயில், போலீஸ் நிலையம் என வெவ்வேறு இடங்களில் மர்ம பைகளை வைத்து விட்டு திரும்புகையில் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.

சென்னை நகரில் கட்டப்பட்டு வரும் உயரமான கட்டிடத்தின் மாடியில் நவீன கம்ப்யூட்டர், செல்போன் என தகவல் தொழில்நுட்ப சாதனங்களுடன் உட்கார்ந்து போலீஸ் கமிஷனருக்கு மிரட்டல் விடுப்பது பகீர்.

அலட்டல் இல்லாமல் கமிஷனரிடம் பேசும் உரையாடல், மனக்குமுறலை உள்ளுக்குள் அடக்கும் முகபாவம் என நடிக்காமல் நடிக்கும் வித்தைக்காரராக இன்னொரு பரிணாம் காட்டுகிறார். கர்ப்பிணி பெண் பயங்கரவாத கோரத்துக்கு பலியாகும் பிளாஷ்பேக் கதை சொல்லி கண்ணீர் வடிக்கையில் இதயங்களை கனக்க வைக்கிறார்.

எல்லாவற்றையும் முடித்து விட்டு காய்கறி கூடையுடன் வீட்டுக்கு புறப்படுவது தமாஷ் ரகம்.

கமிஷனர் கேரக்டருக்கு கச்சிதமாய் பொருந்துகிறார் மோகன்லால். குண்டுகளை கண்டு பிடிக்கபடும் தவிப்புகளை நிறைவாய் வெளிப்படுத்துகிறார். இறுதியில் தனது பதவியை இழந்து நிமிர்கிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரிகளாக வரும் கணேஷ் வெங்கட்ராம், பிரேம்குமார் அதிரடி செய்கிறார்கள். லட்சுமி தலைமை செயலாளராக வருகிறார்.

டூயட் பாடல்கள் வளவன என்று நீளும் சீன்கள் இல்லாதது நிறைவு. இரா.முருகன் வசனத்துக்கு கை குலுக்கலாம். நிறைய ஆங்கில வசனங்கள் திணிப்பு சில சீன்களை அன்னியப்படுத்துகிறது. ஸ்ருதி இசையில் தேறி விட்டார். படத்துக்கு அவரது பின்னணி இசை பெரிய பலம்.

தீவிரவாத சட்டங்களை புதுப்பிக்க சொல்லும் படிப்பினையான படம்.

Read More...

உன்னைப்போல் ஒருவன்... கமலை கட்டிப்பிடித்து வாழ்த்திய ரஜினி!- Unnaipol Oruvan rajini wished kamal

கமல் நடித்து வெளியாகியுள்ள உன்னைப் போல் ஒருவன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்து ரசித்தார். ஏவிஎம் வளாகத்தில் உள்ள ஏசி திரையரங்கில் ரஜினிக்கான பிரத்தியேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் கமல் ஹாஸன். ஒரிஜினல் படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில் கமல் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக இடைவேளையின்போது கருத்துப் பகிர்ந்து கொண்டார் ரஜினி. ரஜினி படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வந்துவிட்ட கமல்ஹாஸன் வெளியில் காத்திருந்தார். படம் முடிந்து வெளியில் வந்தவர், கமலை நோக்கி வேகமாகப் போய் கட்டிப் பிடித்துக் கொண்டார்.
"ஃபெண்டாஸ்டிக் கமல்... அருமையா வந்திருக்கு படம். என்னுடைய வாழ்த்துக்கள்!" என ஆத்மார்த்தமாக வாழ்த்த, கமல் முகத்தில் பரவசம். படத்தின் நாயகன் மோகன்லாலுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார் ரஜினி. ரஜினிக்கு நன்றி சொன்ன கமல், படம் பற்றிய பல விஷயங்களை நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்

Read More...

நடிப்புக்கு நயனதாரா முழுக்கு-விரைவில் பிரபு தேவாவுடன் டும்டும்- Nayan going to marry Prabhudeva soon!!!!!!!!!!!!!!!!

நயனதாரா, பிரபுதேவா நட்பு மேலும் இறுகிப் போயுள்ளதாகவும், விரைவில் எதிர்ப்புகளை மீறி கல்யாணத்தில் போய் அது முடியும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக நயனதாரா தனது கவர்ச்சி நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டார். விரைவில் நடிப்புக்கே குட்பை சொல்லப் போகிறார்கள் என்று குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரபுதேவாவின் கல்யாணம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தன்னுடன் நடனம் ஆடி வந்த ரமலத் என்பவரை காதலித்து வந்த பிரபுதேவா ரகசியமாக அவரை மணந்து கொண்டார்.

அதன் பின்னர் இருவரும் சில காலம் தனியாக குடித்தனம் நடத்தி வந்தனர். பின்னர் குடும்பத்தினருடன் சமரசம் ஏற்பட்டு அனைவரும் இணைந்தனர். இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை சில மாதங்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்து பிரபுதேவா குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் அந்த சோகத்திலிருந்து விடுபடுவதற்கு முன்பாகவே பிரபுதேவா தனது மனைவிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.

அது நயனதாராவுடன் அவர் கொண்ட திடீர் காதல். தன் மீது பெரும் அன்பும், ஆதரவும், காதலும் கொண்டிருந்த பிரபுதேவா இப்படி திடீரென நயனதாரா மீது காதல் கொண்டது அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. தன்னை விட்டு பிரபுதேவா போய் விட மாட்டார் என்ற பெரும் நம்பிக்கையுடன் உள்ளார். கோவில் கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் மறுபக்கம், நயன், பிரபுதேவா காதல் மேலும் மேலும் இறுகியபடி உள்ளதாம். வாழ்ந்தால் பிரபுதேவாவுடன்தான் வாழ்வேன் என்பதில் நயன்தாரா உறுதியாக உள்ளாராம். பிரபுதேவாவும் அப்படியே. அதேசமயம், இருவரும் சேர்ந்து பிரபுதேவாவுடன் வாழலாம் என்று நயன்தாரா கொடுத்த பார்முலாவை கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்து விட்டாராம் ரமலத். இருப்பினும் இதுகுறித்து நயன்தாராவும் சரி, பிரபுதேவாவும் சரி கவலைப்படாமல் உள்ளனராம். சமீபத்தில் நயனதாராவுக்காக தான் இந்தியில் முதன் முறையாக இயக்கியுள்ள வான்டட் படத்துக்குக் கூட்டிச் சென்று காண்பித்தார்.

இந்த நிலையில் நயனதாரா நடிப்புக்கு முழுக்குப் போடப் போவதாகவும், விரைவில் பிரபு தேவா - நயன் கல்யாணம் நடக்கப் போவதாகவும் மும்பை மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதை உறுதிப்படுத்துவது போல நயனதாராவின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. நயனை தெலுங்கில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் விநாயக். தற்போது ஜூனியர் என்.டி.ஆர்., நயனதாராவை வைத்து அதுர்ப் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் கவர்ச்சிகரமான உடை அணிய வேண்டும் என்று அவர் நயனிடம் கூறியபோது மறுத்து விட்டாராம்.

இதை விட கவர்ச்சிகரமான டிரஸ் முன்பு போட்டு நடித்தவர்தானே என்று அவர் ஆச்சரியத்துடன் நயனிடம் கேட்டபோது, அது அப்ப, இப்ப இப்படித்தான் என்று கூறி விட்டாராம நயன். கவர்ச்சிகரம் வேண்டாமே என்று பிரபு தேவா கேட்டுக் கொண்டதன் பேரிலேயே கவர்ச்சிக்கு விடை கொடுத்து விட்டாராம் நயனதாரா. அப்படியே படிப்படியாக படங்களையும் குறைத்துக் கொள்ளவும், பின்னர் திடுதிடுப்பென கல்யாணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம் நயனதாரா. கோடம்பாக்கத்தில் விரைவில் "குண்டு" வெடிக்கலாம்..!

Read More...

Tuesday, September 22, 2009

ஈரம் - சினிமா விமர்சனம்


அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் குளியல் அறையில் கார் கம்பெனி என்ஜினீயர் நந்தா மனைவி சிந்து மேனன் இறந்து கிடக்கிறார். அவர் ஜாக்கெட்டில் இருந்து என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல என்ற கடிதத்தை போலீஸ் கைப்பற்றுகிறது. அக்கடிதத்தை வைத்து வழக்கை முடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இறந்தது தனது கல்லூரி காதலி என உதவி கமிஷனர் ஆதிக்கு தெரிய வருகிறது. வழக்கு விசாரணையை தானே எடுத்து நடத்துகிறார்.

சாவு மர்மத்தை கண்டு பிடிக்க கணவன், பக்கத்து வீட்டுக்காரர்கள் என விசாரணையை தொடர்கிறார். அப்போது எதிர் வீட்டில் வசித்த வயதான பெண் திடீரென சாகிறார். அக்குடியிருப்புக்கு காதலியை தேடி வரும் இளைஞன், வாட்ச்மேன், இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் போன்றோரும் அடுத்தடுத்து இறக்கிறார்கள்.

ஆதிக்கு நடப்பது சாதாரண சாவுகள் அல்ல கொலைகள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிகிறது. கொலையாளியை தேடுகிறார். அப்போது கொலைகளை செய்வது ஒரு ஆவி என தெரிய உதறல். பேயாக வருவது யார்? எதற்காக பழி வாங்குகிறார் என்பது பிளாஷ் பேக்...

ஆவி கதையை வழக்கமான பாணியில் இல்லாமல் நவீன பாணியில் படமாக்கி சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் அறிவழகன். தண்ணீரில் ஆவி ஊடுருவி பழி தீர்க்கும் யுக்தி வித்தியாசமானது.

பிரமாண்ட அடுக்கு மாடி கட்டிடம் அமைதியான இரவு... அறைக்குள் பிணம்... அவ்வீட்டுக்குள் இருந்து கதவு வழியாக வெளியே பாயும் வெள்ளம் என ஆரம்பமே அமர்க்களமான மிரட்டல், ஒவ்வொரு சாவும் தண்ணீரிலேயே நடப்பது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. தியேட்டர் பாத்ரூமில் ஒருவன் செத்து விழ தண்ணீரில் கால் தடம் மட்டும் பதிய மர்ம உருவம் நடந்து செல்வது குலை நடுக்கம். பல காட்சிகள் மழை, நீர் என ஈரத்தோடு சம்பந்தப்படுத்தி நுணுக்கமாக நகர்த்தியது ஒன்றச் செய்கிறது.

ஆதி மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஓடும் பஸ்சில் சிந்து மேனனை காதல் செய்யும் காட்சிகள் கவிதை...

விசாரணைகளில் போலீசின் விறைப்பு காட்டுகிறார். ஒரு கட்டத்தில் சாவுகளுக்கு காரணம் ஆவி என்று அறிவதும் பேய் மூலமே எதற்காக கொலைகள் நடக்கின்றன. என அவர் தெரிந்து கொள்வதும் விறு விறுப்பானவை.

அன்பான கணவனாக வரும் நந்தா திடீர் என குணம் மாறுவது எதிர்பாராதது. சிந்து மேனன் அழகான காதலியாகவும் மனைவியாகவும் வருகிறார். சாகடிக்கப்படும் போது பரிதாபபட வைக்கிறார்.

காதல் கண்ணன், ஸ்ரீநாத், பாய்ஸ் ராஜன், ராஜசேகர், சரண்யா மோகன், லட்சுமி ராமகிருஷ்ணன் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. கதையிலும் காட்சிகளிலும் ஹாலிவுட் தரம்.

கொலையாளி தெரிந்த பிறகும் காட்சிகள் ஜவ்வாக நீள்வதை குறைத்து இருக்கலாம். தமன் இசையும், மனோஜ் ஒளிப்பதிவும் கைகுலுக்கும் ரகம்.

“ஹைடெக்” திகில் படம்.

Read More...

Sunday, September 20, 2009

மாட்னாருடா மாப்ளே... நடிகருக்கு விழுந்த திட்டு! - 80,90 hero heroine at party


மாட்னாருடா மாப்ளே என்கிறார்கள் அந்த நடிகரை பார்த்து. அவருக்கும் ஒரே கில்டி!
கடந்த சில தினங்களுக்கு முன் எண்பதுகளில் கொடிகட்டி பறந்த நடிகர் நடிகைகள் ஓரிடத்தில் கூடி ஒரே உய்யலாலா ஆட்டம் போட்டார்கள். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்து கொண்டார். பல வருஷம் கழித்து ஓரிடத்தில் சந்திக்கிற உற்சாகத்தில் ஆட்டம் கொஞ்சம் ஓவராகவே இருந்ததாம். இந்த மறக்க முடியாத அனுபவத்தை தனது செல்போனில் படம் பிடித்தாராம் அந்த முழி நடிகர்.



எடுத்த படங்களை முழியும் முழியும் வச்ச மாதிரி பாதுகாப்பா வச்சிருக்காம தனது ஃபேஸ்புக்கில் போட்டு விட்டார். அது அப்படியே கசிந்து மீடியா கைகளில் சிக்க, பாட்டிலும் பதுமையுமாக அவற்றை பிரசுரித்து ஒட்டு மொத்த சனத்துக்கும் கேட்கிற மாதிரி ஊதி தள்ளி விட்டார்கள். இதில் சூப்பர் ஸ்டாருக்கு செம கோபமாம். ஏதோ பல வருஷம் கழிச்சு மீட் பண்றோம்னு வந்தா, இப்படி பேர கெடுத்து பினாயிலை தெளிச்சிட்டாய்ங்களேன்னுதான்.


நல்லவேளை, கடைசி நேரத்தில் எஸ்கேப். நம்பாத கடவுளுக்கு நன்றி சொன்னாலும் சொல்வார் கமல். இவரையும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தார்களாம். அந்த நேரத்தில் டெல்லியில் இருந்தார் அவர். முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் கார்த்திகேயன் கமல் படங்கள் பற்றி ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாராம். அதில் கலந்து கொள்ளதான் இந்த விழாவை புறக்கணித்தாராம் உலக நாயகன்.

சரி, முழி கதை என்னாச்சு? நாலாபுறத்திலேர்ந்தும் ஒரே பிரசாத பார்சல்தான். தின்னு அடங்கலையாம்!

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009