Saturday, August 15, 2009

Pokisham - Movie review - Vimarsanam!!!!!!!!!!!!!!!!!

மகன் தனது இன்றைய காதலையும் , அவனது தந்தையின் காதலையும் அழகாக சொல்லி இருக்கும் படம் . ஒரு நிமிடம் வெயிட்டிங் கால் வந்தாலும் ஏவ கூட பேசிட்டு இருந்த என கேட்கும் இன்றைய காதலிக்கும் , காதலன் பிரிவினால் வாழ்வையே இழக்கும் அன்றைய காதலையும் வெளிச்சம் போடு காட்டும் உன்னத காவியம்.

லெனின் கப்பல் பணி அதிகாரி (சேரன் ) முஸ்லீம் பெண் பத்மப்ரியா கல்லூரி மாணவி (1970)ல் நடக்கும் கதை . அப்பா விஜயகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனை க்கு வருகிறார் அவரை பார்க்க வரும் சேரன் மற்றும் அங்கு அம்மாவின் சிகிச்சைக்கு வரும் பத்மப்ரியா இருவரும் இலக்கியங்களை பற்றி பேசி நட்பை வளர்கின்றனர். வேலைக்காக கொல்கத்தா செல்லும்போது பத்மப்ரியா உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார் . அவரிடம் சொல்லாமல்
வருத்தத்துடன் செல்லும் சேரனுக்கு அப்பா விஜயகுமார் அந்த பெண் தன்னை நன்றாக பார்த்துக்கொண்டார் நன்றி சொல்லி கடிதம் போடும்படி முகவரி அனுப்புகிறார் .


கடிதம் மூலம் காதல் செய்கின்றனர் ,பிறகு அப்பாவுடன் பெண் கேட்க செல்கிறார் சேரன் , சரி பெண்ணை தருகிறேன் என்று சொல்லி அனுப்பி , ஊரை காலிசெய்து சென்று விடுகிறார் பத்மப்ரியா அப்பா .அவர்களை தேடி அலைந்து கிடைக்காததால் அப்பாவுக்காக வேறு பெண்ணை திருமணம் செயகிறார்சேரன் .


சேரன் மகன் சொத்து பத்திரத்தை தேடும் போது சேரனின் கடிதம் ,டைரி படித்து
பத்மப்ரியாவை தேடும் போது எழுதிய கடிதங்களை எப்படி தன் அப்பா நினைவாக பத்மப்ரியாவை கண்டு பிடித்து சேர்க்கிறார் என்பது மீதி கதை .அவர் பத்மப்ரியாவை சந்தித்து தான் சேரன் மகன் அப்பா இறந்து விட்டார் என்று சொல்லும் போதும் , பத்மப்ரியா ஊரை கலி செய்து வந்தபின் என்ன நடந்தது என்பதை அறியும் போது எல்லோர் மனமும் கனக்கிறது.


அருமையான காதல் கதை சில இடங்களில் மட்டும் மெதுவாக செல்கிறது , சேரனின் முகம் தான் வயதான தோற்றம் அளிக்கிறது நடிப்பு அருமை ,பத்மப்ரியா அழகான முஸ்லீம் பெண்ணாக , அருமையான நடிப்பு இறுதிகாட்சியில் வரும் வயதான தோற்றம் மிக அருமை. ஒளிப்பதிவு ,பின்னணி இசை பாராட்டும் படி உள்ளது.

(1970) ல் நடக்கும் அனைத்து காட்சி அமைப்புகளும் அருமை .

காதல் நினவு சின்னம் இந்த பொக்கிஷம் .

குத்துபாட்டு ,ஹீரோ பறந்து வருவது , பஞ்ச் பேசுவது இல்லாமல் மனதை வருடும் படம் சேரனின் கொடியை உயரே பறக்கவிட்ட படம் .


காதலின் அழுத்தத்தை இதைவிட சொல்ல முடியாது. தமிழை தவிர பிற மொழிகளில் இப்படி ஒரு படம் வந்திருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

Read More...

சுத‌ந்‌திர ‌தின‌ வா‌ழ்‌த்துக‌ள் !!!


சுத‌ந்‌திர ‌தின‌ம்: செங்கோட்டையில் கொடியேற்‌‌றினா‌ர் பிரதமர்
63 வது சுதந்திர தினத்தையட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை, தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்‌றினா‌ர்.

நாடு முழுவதும் சுதந்திரத் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் 6வது முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்‌றினா‌ர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிரு‌ந்தது.

செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை 24 மணி நேரமும் அதிரடிப் படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். 40 இடங்களில் சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறி தவறாமல் சுடுவதில் கில்லாடிகளான தேசிய அதிரடிப்படை வீரர்கள் செங்கோட்டையை சுற்றியுள்ள உயரமான கட்டிடங்களின்மேல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

விழா முடியும் வரை செங்கோட்டைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. செங்கோட்டையை சுற்றியுள்ள வான் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க மாவோ இயக்கம் அழைப்பு விடுத்து இருப்பதால் பீகாரையொட்டி உள்ள இந்திய-நேபாள எல்லையில் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More...

நடிகை தீபிகா படுகோனேயுடன் டோனி மீண்டும் காதல்; “பேஷன்” விழாவுக்கு ஒன்றாக வந்தனர்-Again Dhoni love with Deepika Padukone!!!!!!!!!!!

கேப்டன் டோனியும், இந்தி நடிகை தீபிகாபடுகோனேயும் முன்பு ஒன்றாக சுற்றி வந்தனர். இருவரும் தீவிரமாக காதலிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இடையில் அவர்கள் காதல் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் டோனி நடிகை லட்சுமி ராயை காதலிப்பதாக கூறப்பட்டது. அடுத்து கல்லூரி மாணவி ஒருவருடன் சுற்றுவதாகவும் தகவல் வந்தது. ஆனாலும் அவர் யாரை காதலிக்கிறார் என்பது தெரியாமலேயே இருந்தது.

இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் டோனி கலந்து கொண்டார். அவருடன் நடிகை தீபிகா படுகோனேயும் பங்கேற்றார். இருவரும் நவீன ஆடைகள் அணிந்து மேடையில் ஒன்றாக தோன்றினார்கள்.
இருவரும் மீண்டும் காதலிப்பதாகவும் அதனால் தான் ஒன்றாக விழாவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி டோனியிடம் கேட்டபோது பதில் சொல்லவில்லை. அடுத்து நடக்கும் பேஷன் ஷோவில் இருவரும் ஒன்றாக பங்கேற்பீர்களா? என்று கேட்டதற்கு அப்போது கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பேன் என்றார்.

Read More...

Actress life's in Danger Zone in Family Life - Application of Divorse ---Sonia Agarwal,Vindhya,Kavya Madavan

தேவதைகளாக திரையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்த கதாநாயகிகள் பலர் குடும்ப வாழ்க்கையில் தோற்றுப்போய் நிற்கிறார்கள். திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து மனுக்களுடன் கோர்ட்டுபடியேறும் அவலங்கள் தொடர்கிறது.

விந்தியா, சோனியா அகர்வால், காவ்யா மாதவன், பிரகாஷ்ராஜ் ஆகிய நான்கு பேரின் விவாகரத்து வழக்குகள் திரையுலகின் தற்போதைய உலுக்கல் நிகழ்வுகள்.

“காதல் கொண்டேன்” படம் மூலம் தமிழுக்கு வந்த சோனியா அகர்வால் அப்படத்தின் இயக்குனர் செல்வராகவனை மணந்து சினிமாவுக்கு முழுக்குப் போட்டு ஒதுங்கினார். சந்தோஷமாக நகர்ந்த அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இப்போது புயல். இருவரும் விவாகரத்து கேட்டு நிற்கிறார்கள்.


விந்தியாவுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது. கணவராக வந்தவர் பானுப்பிரியாவின் தம்பி கோபாலகிருஷ்ணன். “சங்கமம்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நிறைய தமிழ் படங்களில் நடித்து முடித்தார். திருமணத்துக்கு பின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பெற்றோர் குடும்பத்தினர் சூழ திருப்பதியில் திருமணம் நடந்தது.

சேர்ந்து வாழ்வார்கள் என்று பார்த்தால் கருத்து வேறுபாடு தோன்றி பிரிந்து விட்டனர். சில மாதங்களாகவே தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள். விந்தியா தியாகராய நகரில் உள்ள தாய் வீட்டுக்கும் கோபால கிருஷ்ணன் வளசரவாக்கத்தில் உள்ள அவரது பழைய வீட்டுக்கும் போய் விட்டனர். இருவரையும் சமாதானபடுத்த பலர் முயன்றனர். பயன் இல்லை.

இவர்கள் வழக்கை அடுத்த மாதம் 17-ந்தேதி விசாரிக்கப் போவதாக நீதிபதி கூறியுள்ளார்.

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜின் விவாகரத்து வழக்கு வித்தியாசமானது. இவருக்கு குழந்தைகள் உள்ளனர். மனைவி லலிதாகுமாரி பழைய கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை. பிரகாஷ்ராஜ் விவாகரத்து கேட்டாலும் லலிதாகுமாரிக்கு உடன்பாடு இல்லை. கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார். கோர்ட்டிலும் கணவனோடு சேர்த்து வையுங்கள் என்று மனுபோட்டுள்ளார்.

மலையாள நடிகை காவ்யா மாதவன் தமிழ் படங்களிலும் நடித்தார். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடந்தது. அந்த குடும்பமும் பிரிந்து நிற்கிறது. மேலும் பல நடிகர், நடிகைகளும், விவாகரத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த விவாகரத்து வழக்குகள் புதுமுக கதாநாயகிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. குடும்ப வாழ்க்கையை நினைத்து இப்போதே அச்சப்படதுவங்கி உள்ளனர்.

நடிகைகள் தற்கொலை முயற்சியை தடுப்பதற்காக நடிகர் சங்கம் விசேஷ கவுன்சிலிங் கூட்டங்கள் நடத்தியது. அதுபோல் நட்சத்திர குடும்ப சண்டைகளிலும் தலையிட்டு அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Read More...

சின்னத்திரை பற்றிய செய்திகள்

தங்கம்
ரம்யா கிருஷ்ணனின் தங்கம் தொடரில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சியில் இறங்கியிருப்பது ரம்யா கிருஷ்ணன் குழுதான். ரம்யாவும், த்ரிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பதால் இந்த முயற்சி நிச்சயம் சாத்தியம் என்கிறது சின்னத்திரை பட்சிகள்.

முற்றுப்பெறாத கோலங்கள்
ஆறு வருடங்களைக் கடந்த பிறகும் கோலங்கள் தொடர் எப்போது முடியும் என்பது ஆண்டவனுக்கே தெரியாத விஷயமாக இருக்கும் நிலையில் தொடர் யூனிட்டுக்கு மட்டும் எப்படி தெரியும்.

மக்களின் ரசிப்புத் தன்மை, டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடம் என்ற சில காரணங்களால்தான் இந்த தொடர் நீட்டிப்புக்குக் காரணம் என்கிறது யூனிட் அறிக்கை.

நடிகையின் விவாகரத்து
திருமணமானதும் சின்னத்திரை தொடரில் நடித்து வந்த சோனியா அகர்வாலும், அவரது காதல் கணவன் செல்வராகவனும் பரஸ்பரம் ஒத்துப் போய் விவாகரத்து பெற நீதிமன்றத்தின் படியை மிதித்து விட்டனர்.

அவர்களின் விவாகரத்து மனு குடும்ப நல நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More...

வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்: குடியரசுத் தலைவர் சுதந்திர தின உரை

நாட்டில் வன்முறை மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக நாம் போரிட வேண்டும் என்று கூறியுள்ள குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், வலிமையான, ஒன்றுபட்ட மற்றும் முன்னேற்றம் காணும் இந்தியாவை நமக்காகவும், நமது வருங்கால சந்ததியினருக்காகவும் நாம் உருவாக்க வேண்டும் என்று நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் 63வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். அதன் விபரம்:

நாட்டின் 63வது சுதந்திர தின விழாவை நாம் நாளை கொண்டாடுகிறோம். இதையொட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்
மற்றும் துணை ராணுவப் படையினருக்கும் சிறப்பு நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறேன். இதேபோல் மத்திய மற்றும் மாநிலங்களில் காவல்துறையினர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

பல தலைவர்களின் தன்னலமற்ற தியாகத்தின் காரணமாக இந்தியா விடுதலையடைந்தது. நமது நாட்டின் தேசிய தலைவர்கள், தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் சுதந்திர போரட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நமது ஆழ்ந்த மரியாதையை தெரிவிக்கும் வகையில் என்னுடன் இணைந்து அஞ்சலி செலுத்த குடிமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

நாடு விடுதலை அடைந்தவுடன் எவ்வித தாமதமுமின்றி நாட்டின் வளர்ச்சிப் பணிகள் தொடங்கியது. நமது கண்ணோட்டம், கொள்கைகள் மற்றும் பொறுப்புகளை நமது நாட்டு தலைவர்களும், மக்களும் தீர்மானிக்கத் தொடங்கினர். ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு மற்றும் நமது கலாச்சார பாரம்பரியம் ஆகியவை நான்கு முக்கிய தூண்களாக விளங்குகின்றன.

இந்த ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவை பொதுத் தேர்தல்களில் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களையும் சென்றடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பகுதியில் ஒரே ஒரு வாக்காளர் மட்டுமே இருந்தாலும்கூட, அவர் தனது வாக்கை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜனநாயகத்திற்கு ஒற்றுமை உணர்வும், ஒவ்வொரு குடிமகனின் கருத்தும் இணைந்திருக்க வேண்டியது அவசியமாகும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. ஜனநாயகமும், இந்தியாவும் பிரிக்க முடியாதவை என்பதை நிரூபிக்கும் வகையில் ஜனநாயகத்தை நாம் முன்னெடுத்து சென்றிருப்பதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது மக்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதற்கான வாய்ப்புகள் கிடைப்பது போல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மூலமாக அவர்களது குரல் ஒலிக்க வேண்டும். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு உறுப்பினரும் சராசரியாக 13 லட்சம் வாக்காளர்களின் பிரதிநிதியாக உள்ளார். இது சில நாடுகளின் மக்கள் தொகையைவிட கூடுதலாகும் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதியின் பொறுப்பு அதிகமாகிறது. மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அவர் பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில் தங்களது உரிமைகள் பற்றி அறிந்திருப்பதால் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் வசிக்கும் மக்களுக்கு வசதிகள் மற்றும் சேவைகள் திறமையான நிர்வாகத்தின் மூலமாக வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடனும் நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி தவறாக பயன்படுத்தப்படும் போது தீங்கு ஏற்படுகிறது. சுகாதாரம், கல்வி, சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது போன்ற பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வகையில் அரசின் நலத்திட்டங்கள் அமைந்துள்ளன. இந்தத் திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த ஆண்டு பருவ மழை இயல்புக்கும் குறைவாக உள்ளதால், வேளாண்மை பாதிக்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகளை சந்திக்க நாம் தயாராக வேண்டும். இதனை சமாளிக்க அரசு எல்லா வகையிலும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. எச்1என்1 ப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பை சமாளிக்கவும் அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசின் இந்த முயற்சிகளுக்கு உதவ பொது மக்கள் முன்வர வேண்டும். மற்ற வளர்ச்சிக்கான முயற்சிகளிலும் பொது-தனியார் பங்கேற்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமுதாயக் குழுக்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக அரசின் முயற்சிகளுக்கு உதவ வேண்டும். குடிமக்கள் தங்களது சமூக பொறுப்புகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும்.

நமது நீடித்த ஜனநாயக நடைமுறை மற்றும் நிலையான பொருளாதார முன்னேற்றம் இந்தியாவை உயரமான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க முடிந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான பெரிய உள்நாட்டு சந்தை மற்றும் வலிமை நம்மிடம் உள்ளது. அறிவுசார் பொருளாதாரத்திலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளிலும் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.

எதிர்காலத்தை நம்பிக்கையுடன் சந்திப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம். நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு நமது கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை வலுப்படுத்த வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா உயர் தரத்தை எட்ட வேண்டும். இது அறிவுசார் சமுதாயத்தின் சர்வதேச தரத்திற்கான அளவுகோலாக அமைய வேண்டும்.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்க வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது. இந்த நிலையை நாம் எட்ட முடியும். பழங்காலத்தில் இருந்தே இந்தியா பொருளாதார ரீதியில் சிறந்து விளங்கியதுடன் அதன் வளத்திற்கும் உலகளாவிய அளவில் முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்றுள்ளதை வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. சமூக மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவு பணியாற்ற வேண்டும். இதில் நாம் முக்கிய இடம் வகிக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்கேற்க இயலாத நலிந்த மக்களும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தேசிய நீரோட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகியவை கிடைக்கச் செய்ய வேண்டும். இது அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். இன்றைக்கு மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பள்ளி செல்லாத பெற்றோர்களின் பெண் குழந்தைகள் கல்லூரிகளில் சேருகின்றன. ஒரு தலைமுறைக்குள் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இது. கல்வி அறிவு பெற்றவராக இருப்பதால் கிடைக்கும் பயன்களை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது அனைவருக்கும் கல்வி என்ற நமது இலக்கை அடைய உதவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாகும்.நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகித அளவிற்கு உள்ள பெண்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் வகையில், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் அவர்கள் சக்தி படைத்தவர்களாக மாற, அதற்கான தேசிய இயக்கம் உதவும்.

முன்னேற்றம் காணும் சமுதாயம், பொருளாதார வல்லரசு மற்றும் ஜனநாயக நாடாக இந்தியா முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனினும், நமது செயல்பாடுகளை கணிப்பதற்கு என்ன அளவுகோல் உள்ளது? உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த மாற்றங்களை சமாளிக்க நாம் என்ன செய்ய போகிறோம்? மதநல்லிணக்கமும், அமைதியும் நமது கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இது எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும். எனவே நாம் முன்னேற்ற பாதையில் செல்லும் போதுகூட இவைதான் நமக்கு பலத்தை அளிப்பதாக அமையும். நல்ல பாரம்பரியத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இடையே இணக்கமான உறவு நிலவ வேண்டும்.

கடந்த பல நூற்றாண்டுகளுக்கு பல்வேறு குழுக்களால் நமது நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் தகுதி நமது நாட்டிற்கு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே பல்வேறு நிலைப்பாடுகள் இருந்த போதிலும் ஒன்றுபட்ட சமுதாயமாக நாம் இருந்து வந்துள்ளோம். இந்த ஒற்றுமை நமது தத்துவமாகவே இருந்து வந்துள்ளது. வேறுபாடுகளை அதிகப்படுத்துவதற்கு பதிலாக அவற்றுக்கு தீர்வு காண இது உதவுகிறது.

அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதம் அமைதிக்கு எதிரானதாகும். இது எல்லா மதங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்பதால் இது கண்டிக்கத்தக்கது. அமைதியான சமுதாயம் மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்கும் வகையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

கடந்த 1857-ம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் இருந்து நாம் போராடி கொண்டிருக்கிறோம். பிரித்தாலும் கொள்கைக்கு எதிராக நாம் போராடியிருக்கிறோம். சுதந்திர போராட்டத்தில் உயர்ந்த கொள்கைகள் அடிப்படையிலேயே நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். மதச்சார்பின்மை அனைத்து மதங்களுக்கும் சம அளவு மரியாதை ஆகியவற்றை நாம் பின்பற்றி வந்துள்ளோம். இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் என்று எந்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் எனது சகோதர, சகோதரிகளான அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்.

முன்னேற்றம் ஏற்பட சமூக நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. பல்வேறு நிறங்களையும், வாசனைகளையும் கொண்டுள்ள மலர்களை கோர்க்கும் நூலாக அது உள்ளது. மனிதர்களாக நாம் பிளவுபடாமல் ஒன்றுபட்டு இருப்பதை நாம் நிரூபிக்க வேண்டும். வன்முறை மற்றும் பிரிவினை வாதத்திற்கு எதிராக நாம் போரிட வேண்டும். அவநம்பிக்கை, வெறுப்பு போன்ற உணர்வுகள் இருந்தால் நாம் முன்னேற்றம் காண முடியாது. எனவே, நாம் வலிமையான, ஒன்றுபட்ட மற்றும் முன்னேற்றம் காணும் இந்தியாவை நமக்காகவும் நமது வருங்கால சந்ததியினருக்காகவும் உருவாக்க வேண்டும்.

குடிமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Read More...

Thursday, August 13, 2009

விவாகரத்து கோரி செல்வராகவன்- சோனியா அகர்வால் மனு - Director Selvaragavan, Actors Sonia Agarwal - Divorce

நடிகை சோனியா அகர்வாலும், அவரது கணவர் செல்வராகவனும் விவாகரத்து வழங்க கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து‌ள்ளன‌ர்.

'காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். பஞ்சாபை சேர்ந்த இவர், மும்பையில் மாடலிங் செய்து வந்தார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்தார். அப்போது, நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குநர் செல்வராகவனுக்கு அறிமுகமானார்.

இதையடுத்து, தனுஷ் நடித்த, 'காதல் கொண்டேன்’
திரைப்படத்தில் சோனியா அகர்வாலை கதாநாயகியாக செல்வராகவன் அறிமுகம் செய்தார். பின்னர், '7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் நடிக்க வைத்தார். அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2006 டிசம்பர் 15இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தனுசுடன் ‘புதுப்பேட்டை’, விஜயுடன் ‘மதுர’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

இந்நிலையில், சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் மனமுவந்து விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, செல்வராகவனும் சோனியா அகர்வாலும் தனது வழ‌க்க‌றிஞ‌ர் ஆர்த்தியுடன் செ‌ன்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்துக்கு நேற்று வந்தனர்.

அவர்கள் முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் ஆஜராகி தாங்கள் ஒருமனதாக விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Read More...

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க‌ சில யோசனைகள் - Tips to Avoid Swin Flu

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது ம‌க்களு‌க்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை தடு‌ப்போ‌ம்.

சுகாதாரமாக வாழு‌ங்க‌ள்
தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள்.

இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.

மது அருந்த வே‌ண்டா‌ம்
மது அருந்தினால் உடலில் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறையு‌ம். இதனா‌ல் பன்றி காய்ச்சல் போ‌ன்ற நோய்க்கிருமிக‌ள் உடலு‌க்கு‌ள் எ‌ளிதாக ஊடுருவு‌ம் எ‌ன்பதா‌ல் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடை‌ப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.

இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ல்வதை த‌விரு‌ங்க‌ள்
தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவ‌ற்றை தொடுவதையும் தவிருங்கள்.

உட‌ல் நல‌க் குறைவை‌த் த‌விர வேறு எ‌ந்த‌க் காரண‌த்‌தி‌ற்காகவு‌ம் குழ‌ந்தைகளை மரு‌த்துவமனை‌க்கு அழை‌த்து வரா‌தீ‌ர்க‌ள்.

குழ‌ந்தைகளை வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்வதை‌த் த‌விரு‌ங்க‌ள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் குழ‌ந்தைகளை‌த் தூ‌க்கா‌தீ‌ர்‌க‌ள். உடனடியாக உடலை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பி‌ன்னரே அடு‌த்த வேலையை‌த் துவ‌க்கு‌ங்கள‌்.

மரு‌த்துவரை அணுகு‌ங்க‌ள்
இருமல், காய்ச்சல் இருந்தால் மரு‌த்துவரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.

சாதாரண கா‌ய்‌ச்ச‌ல் எ‌ன்று ‌நீ‌ங்களாக எ‌ந்த மரு‌ந்தையு‌ம் வா‌ங்‌கி சா‌ப்‌பிடா‌தீ‌ர்க‌ள். கா‌ய்‌ச்ச‌ல் வ‌ந்தவ‌ரி‌ன் அரு‌கி‌ல் செ‌ல்வதை த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள். குழ‌ந்தைகளையு‌ம் அனு‌ப்ப வே‌ண்டா‌ம்.

வெ‌ளி நாடு ம‌ற்று‌ம் வெ‌ளி மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வ‌ந்தவ‌ர்களை செ‌ன்று பா‌ர்‌ப்பதை‌த் த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள்.

பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

Read More...

அழகர் மலை - Azhagar Malai Movie Review

ஒரு ஊ‌ரில் இரண்டு பெ‌ரிய மனிதர்கள். இரண்டு பேருக்கும் ஜென்ம பகை... காலங்காலமாக சொல்லப்படும் கதைதான் அழகர் மலை. அதில் இயக்குனர் ஊற்றியிருக்கும் காமெடி சாறு... ரொம்ப ஜோரு.

நெப்போலியனும், ஆர்கேயும் அண்ணன் தம்பிகள். அண்ணன் தலைவனைப் போல என்றால் தம்பி தறுதலை. திருமணம் வேண்டாமென்று வெறுமனே இருக்கும் நெப்சுக்கு தம்பியை மணக்கோலத்தில் பார்க்க ஆசை. பெண்ணும் பார்க்கிறார். அங்குதான் ஆரம்பமாகிறது தலைவலி.

குடியும், கூத்துமாக இருக்கும் ஆர்கே என்றாலே ஓடி ஒளிகிறார்கள் பெண்ணை பெற்றவர்கள். அத்துடன் பலாத்கார புகார் ஒன்றும் விழுகிறது ஆர்கே மீது. ஊ‌ரின் இன்னொரு பெ‌ரிய புள்ளி லாலும் நெப்போலியன் மாதி‌ரியே காவி கட்டி அலைகிறார். ஆர்கே-க்கு திருமணமே நடக்கக் கூடாது என்பது லாலின் சபதம். காளைக்கேற்ற கயிறு மாதி‌ரி அவருக்கொரு தங்கை, ஸ்ரீவித்யா.

தோழி வீட்டுக்கு வரும் பானு ஆர்கே-யின் காயம்பட்ட மனசுக்கு களிம்பு தடவிப் போகிறார். ஆர்கே-யும், பானுவும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

கிக் பண்ண தெ‌ரிந்தால் ஆ‌க்சன் ஹீரோ, கிளிச‌ரின் போட்டால் சென்டிமெண்ட், ஆனால் காமெடி...? சிலருக்கு மட்டுமே சித்திக்கும் அபூர்வ வரம். ஆச்ச‌ரியமாக அதில் கொஞ்சம் ஆர்கே-க்கும் சிக்கியிருக்கிறது. இவரும் வடிவேலும் சேரும் போதெல்லாம் சி‌ரிப்பில் புரையேறுகிறது. நடனக் காட்சியில்தான் சோளக் கொல்லை பொம்மை மாதி‌ரி சுணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பானு. நடனக் காட்சியில் மட்டுமே திறமையை காட்ட வாய்ப்பு. படத்தின் காமெடி ஹீரோ வடிவேலு. இவரும் ஆர்கேயும் டீக்கடை பென்சை டாஸ்மாக் பாராக்குவது சி‌ரிப்பு போதை. ஒவ்வொரு முறையும் ஆர்கே வடிவேலுவை சிக்க வைப்பதும், வடிவேலு சின்னாபின்னமாவதும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சரவெடி.

பாசக்கார அண்ணன் நெப்போலியனும், பேசியே கொல்லும் லாலும் காவி கட்டுவதற்கு மணிவண்ணன் தரும் பிளாஷ்பேக் விளக்கம், பயங்கரம். ஸ்ரீவித்யாவின் தற்கொலை தேவையில்லாத திணிப்பு. ரஞ்சிதா, சுகன்யா, சரவணன் ஆகியோரும் வந்து போகிறார்கள்.

இசை இளையராஜா. கருகமணி பாடலில் மட்டும் ராஜா, மற்றபடி சாதா. கமர்ஷியல் இலக்கணம் மீறாத ஒளிப்பதிவு. ஆ‌க்சன் படமான அழகர் மலையில் காமெடிதான் தூ‌ண், மற்றதெல்லாம் வீண்.

Read More...

Wednesday, August 12, 2009

ஷேவாக் மீது மோசடி புகார் - Sehwag in criminal case

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர ஷேவாக். இவரது பெயரில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் உள்ளது. இந்த ஓட்டலை ஷேவாக்கும், அவரது பார்டனர் சித்தார்த்தும் நடத்தி வந்தனர். இந்த ரெஸ்டாரண்ட் பெயரில் ஒப்பந்த அடிப்படையில் (பிரான்சைஸ்) வேறு நகரங்களில் ஓட்டல் தொடங்கலாம் என்று 2006-ம் ஆண்டு விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் ரஜத் சர்மா ரூ.2.4 லட்சம் கொடுத்து பிரான்சைஸ் பெற விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு பிரான்சைசும் கொடுக்கப்படவில்லை. பணத்தையும் ஷேவாக் திருப்பி கொடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து பணத்தை திருப்பி தருமாறு ஷேவாக் மீது அலகாபாத்தில் உள்ள சிவில் சாலைஸ் போலீஸ் நிலையத்தில் ரஜத்சர்மா புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் மீது இதுவரை எப்.ஐ.ஆர். தயாரிக்கப்படவில்லை என்றும், முதல் கட்டமாக இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் சிவில் லைனஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த தொழிலில் தன்னை தனது பார்ட்னர் சித்தார்த்தே ஏமாற்றி விட்டதாக ஷேவாக் கூறியுள்ளார்.

Read More...

சுதந்திர தினவிழாவில் நடிகர் லாரன்சுக்கு சமூக சேவை விருது : கருணாநிதி வழங்குகிறார்

வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா அரசு சார்பில் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று நடைபெறும் அணிவகுப்பை முதல்- அமைச்சர் கருணாநிதி காலை 8.25 மணிக்கு பார்வையிடுகிறார். அவருக்கு தலைமை செயலாளர் ஸ்ரீபதி, ராணுவ படை தளபதிகளையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

8.30 மணிக்கு தேசிய கொடியை முதல்- அமைச்சர் கருணாநிதி ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறார். பின்னர் துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனாசாவ்லா விருது, ஊனமுற்றோர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற் றியவர்களுக்கான விருதுகளை வழங்குகிறார்.



கல்பனா சாவ்லா சாதனை விருதை ராஜமகேஸ்வரி, புஷ்பாஞ்சலி, ராஜலெட்சுமி ஆகியோர் பெறுகிறார்கள். சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கான விருது காஞ்சீபுரம் மனோகரன், கே.கே.நகர் ஜெயக்குமார், திருச்சி பாண்டி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கான விருதை நடிகர்லாரன்சுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்குகிறார். திருவான்மியூர் பிரசாத், நெல்லை சங்கர் ராமன், பழவந்தாங்கல் சேதுகுமாரி ஆகியோரும் சிறந்த நிறுவனம் மற்றும் சமூக சேவைக்கான விருதுகளை பெறுகிறார்கள்.

விருது கிடைத்தது பற்றி லாரன்ஸ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

எனக்கு சிறந்த சமூக சேவைக்கான அரசு விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த 3 வருடங்களாக ஆதரவற்றோருக்கும் ஊனமுற்றோருக்கும் அறக்கட்டளை துவங்கி உதவிகள் செய்து வருகிறேன். அசோக்நகரில் உள்ள எனது வீட்டில் 60 ஆதரவற்ற குழந்தைகளை தங்க வைத்துள்ளேன்.

அவர்களுக்கான உணவு, படிப்பு செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறேன்.

மேலும் 40 பேர் அங்கேயே இலவசமாக தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்களுக்கான செலவையும் செய்கிறது அறக்கட்டளை.

40 குழந்தைகளுக்கு இலவச இருதய ஆபரேஷன் செய்துள்ளோம். மேலும் 20 குழந்தைகளுக்கான இருதய ஆபரேஷனுக்கு நன்கொடைகள் மூலம் நிதி திரட்டிகொடுத்துள்ளோம்.

சாலிகிராமத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மாத வாடகைக்கு வீடு எடுத்து 30 பேரை தங்க வைத்துள்ளேன்.

ஊனமுற்றோருக்கு நடன பயிற்சி அளித்து நடன குழு ஒன்றையும் துவக்கியுள்ளேன். அவர்களின் நடன நிகழ்ச்சி மூலம் வரும் தொகையில் 12 பேர் பெயரில் தலா ரூ.25 ஆயிரத்தை பாங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக போட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read More...

“எதிர்காலத்தை திட்டமிடுங்கள்”: இளைஞர்களுக்கு ரஜினி அறிவுரை ----- Think about future

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி இளைய சமுதாயத்தினர் எப்படி வாழ வேண்டும் என்று ரஜினி கூறிய அறிவுரைகளை அவர் மகள் சவுந்தர்யா வெளியிட்டார். ரஜினி சொன்ன கருத்துக்கள் வருமாறு:-

இளைஞர்கள் பழைய வாழ்க்கையை மறக்கக்கூடாது. அதே நேரம் அதிலேயே வாழவும் கூடாது. உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். அதிலும் வாழாதீர்கள். நிகழ்காலத்தில்தான் வாழ வேண்டும்.

துன்பம், இன்பம் இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு உங்களால் முடிந்த சேவைகளை செய்யுங்கள். முடியாவிட்டால் தொந்தரவு செய்யாதீர்கள். கூடுமான வரை சுயநலமில்லாமல் இருங்கள்.

இவ்வாறு ரஜினி கூறியதாக சவுந்தர்யா தெரிவித்தார். மேலும் சவுந்தர்யா கூறியதாவது:-

எனது தந்தை ரஜினியின் கருத்துக்களை என் மனதில் வைத்துள்ளேன். இளைஞர்கள் நமது கலாச்சாரத்தை மறக்கக்கூடாது. தற்போது மேற்கத்திய கலாச்சாரமும் பரவி வருகிறது. இரண்டில் எதை பின்பற்றலாம் என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது.

இப்போதைய இளைய தலைமுறையினரிடம் குழப்பங்கள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்கமாட்டேன். அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். இட்லி, தோசைக்காரர்கள் என்று நம்மை பற்றி சொன்னால் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை பெருமையாக நினைக்க வேண்டும்.

இளைஞர்களிடம் உண்மை, மூத்தவர்களை மதிக்கும் தன்மை இருக்க வேண்டும். பெரியவர்களின் வழிகாட்டுதல்களை என்றைக்கும் புறக்கணிக்கக் கூடாது. இன்றைய இளைஞர்கள் தான் நாளைய எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள். நாம் தான் எதிர்காலம். வருங்கால உலகை ஆட்சி செய்யப்போகிறவர்களும் இளைஞர்கள்தான்.

இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.

Read More...

வரிசையாக படங்கள் தோல்வி: பிரபுதேவா உறவை நயன்தாரா முறிப்பாரா? Romba Kastum tannnn!!!!!!!!!!!!!!!!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி பட உலகிலும் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவது, பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தைத்தான். இருவரும் வேறு வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். பிரபுதேவாவுக்கு சொந்த ஊர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர். நயன்தாரா, கேரளாவை சேர்ந்தவர்.

`வில்லு' படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு முன், அவருக்கு பிரபுதேவாவை தெரியாது. அந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். பிரபுதேவா டைரக்டு செய்தார். இந்த படப்பிடிப்பின்போதுதான் இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அது, நட்பாக வளர்ந்தது.

பிரபுதேவாவின் மகன் மரணத்தின்போது, நயன்தாரா துக்கம் விசாரிக்க வந்தார். அப்போது, அவருடனே இருந்தார். கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். அனுதாபத்தில் உருவான இந்த நெருக்கம், காதல் தீயாக பற்றிக்கொண்டது. ``நீயின்றி நான் இல்லை'' என்கிற அளவுக்கு, ஈருடல் ஓருயிர் ஆகிவிட்டார்கள்.

பிரபுதேவாவுடன் தொடர்பு ஏற்படுவதற்கு முன், நயன்தாராதான் `நம்பர்-1' நாயகியாக இருந்தார். தொடர்பு ஏற்பட்டபின், அவருக்கு பிரச்சினைகள் ஆரம்பம் ஆனது. இவருக்கும், டைரக்டர் லிங்குசாமிக்கும் மோதல் ஏற்பட்டு, `பையா' படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

நயன்தாரா கதாநாயகியாக நடித்த `குசேலன்,' `ஏகன்,' `சத்யம்' ஆகிய 3 படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. பிரபுதேவாவுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் பிரச்சினைகளும், தோல்விகளும் தொடர்கின்றன என்று நயன்தாராவிடம், அவருக்கு நெருக்கமான தோழிகள் எடுத்து சொல்லி இருக்கிறார்கள். அதனால் பிரபுதேவாவுடன் உள்ள உறவை முறித்துக்கொள்ளும்படி அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

தோழிகளின் அறிவுரையை, நயன்தாரா பொறுமையுடன் கேட்டுக்கொண்டார். அதன்படி அவர் நடந்துகொள்வாரா, மாட்டாரா? என்பது சில நாட்களில் தெரிந்து விடும்.

Read More...

ஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்) - Know and Aware of this "Swinflu Disease".

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?

ஸ்வைன் இன்புளுயன்சா ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கு / கோழிகளுக்கு (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.

பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.

மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.

கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது?

ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.

முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

என்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.
நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிபோட்டுக் கொள்ளவும் (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவலாம்).
வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ளவும்.
தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளவும். உடனே கையை அலம்பிகொள்ளவும்.
நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.
உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம்.
மாஸ்க் அணித்து பயணிக்கவும்.
மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ளவும்.
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக் காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால், தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஒதுக்கி கொள்ளவும்.
நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்
தொடர்ந்த தலை வலி
குளிருதல், நடுங்குதல்
இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்
பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
தலை சுற்றல் / மயக்கம்
பசியின்மை
உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
இடைவிடாத காய்ச்சல்
வயிற்று போக்கு
வாந்தி எடுத்தல்
மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்
உயிரிழப்பும் ஏற்படலாம்
குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?
தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்
மூச்சு விட சிரமப் படுவார்கள்
உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்
தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்
அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்
தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்
தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்
இந்நோய்க்கு மருந்துகள் ஏதும் உள்ளனவா?

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) இந்நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாக நம்புகிறார்கள். நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தொற்றுநோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள். 1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ நோய் தான் அதிகம் பேரை கொன்றுள்ளது. இந்த நோய் தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்த நோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை அங்கு முடங்கியுள்ளது.

வெப்ப நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை, என ஒரு பக்கம் கூறினாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்த நோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர், என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 30 லட்சம் பேருக்கு தேவையான "டேமிப்ளு'' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்த வகையான "ப்ளு'' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சிப்லா, ரன்பாக்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்துகளை சப்ளை செய்ய ஒப்பு கொண்டுள்ளன.
========================================================
இந்தியாவில் எங்கெங்கு இதற்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப் படுகின்றன?
-----------------------------------------------------------------------
Chennai
King Institute of Preventive Medicine (24/7 Service)
Guindy, Chennai – 32
(044) 22501520, 22501521 & 22501522

Communicable Diseases Hospital
Thondiarpet, Chennai
(044) 25912686/87/88, 9444459543

Government General Hospital
Opp. Central Railway Station, Chennai – 03
(044) 25305000, 25305723, 25305721, 25330300
------------------------------------------------------------------------
Pune
Naidu Hospital
Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01
(020) 26058243

National Institute of Virology
20A Ambedkar Road, Pune – 11
(020) 26006290
------------------------------------------------------------------------
Kolkata
ID Hospital
57,Beliaghata, Beliaghata Road, Kolkata - 10‎
(033) 23701252
------------------------------------------------------------------------
Coimbatore
Government General Hospital
Near Railway Station,
Trichy Road, Coimbatore – 18
(0422) 2301393, 2301394, 2301395, 2301396
------------------------------------------------------------------------
Hyderabad
Govt. General and Chest Diseases Hospital,
Erragadda, Hyderabad
(040) 23814939
------------------------------------------------------------------------
Mumbai
Kasturba Gandhi Hospital
Arthur Road, N M Joshi Marg, Jacob Circle, Mumbai - 11
(022) 23083901, 23092458, 23004512

Sir J J Hospital
J J Marg, Byculla, Mumbai - 08
(022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366

Haffkine Institute
Acharya Donde Marg, Parel, Mumbai – 12
(022) 24160947, 24160961, 24160962
------------------------------------------------------------------------
Kerala
Government Medical College
Gandhi Nagar P O, Kottayam - 08
(0481) 2597311,2597312

Government Medical College
Vandanam P O, Allapuzha - 05
(0477) 2282015

Taluk Hospital
Railway Station Road, Alwaye, Ernakulam
(0484) 2624040 Sathyajit - 09847840051

Taluk Hospital
Perumbavoor PO, Ernakulam 542
(0484) 2523138 Vipin - 09447305200
------------------------------------------------------------------------
Gurgaon & Delhi

All India Institute of Medical Sciences (AIIMS)
Ansari Nagar, Aurobindo Marg Ring Road, New Delhi – 29
(011) 26594404, 26861698
Prof. R C Deka - 9868397464

National Institute for Communicable Diseases
22, Sham Nath Marg,
New Delhi – 54
(011) 23971272/060/344/524/449/326

Dr. Ram Manohar Lohia Hospital
Kharak Singh Marg,
New Delhi – 01
(011) 23741640, 23741649, 23741639
Dr. N K Chaturvedi – 9811101704

Vallabhai Patel Chest Institute
University Enclave, New Delhi- 07
(011) 27667102, 27667441, 27667667, 27666182
------------------------------------------------------------------------
Bangalore
Victoria Hospital
K R Market, Kalasipalayam, Bangalore – 02
(080) 26703294
Dr. Gangadhar - 94480-49863

SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases
Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29
(080) 26631923
Dr. Shivaraj - 99801-48780
------------------------------------------------------------------------

நோய் உங்களையோ, உங்களுக்கு தெரிந்தவரையோ தாக்கி இருப்பதாக அறிய வந்தால், இருபத்து நாலு மணிநேர தொலைபேசி சேவை மையத்தை 1075 என்ற எண்ணிலும் 011-23921401 அல்லது EMR Control Room 011-23061469-மைத் தொடர்பு கொண்டால், நோய் பரவாமல் இருப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.

Read More...

கந்தசாமி Vs பொக்கிஷம் - Pokkisham vs Kandhasamy

இயக்குனர் சேரன் தனது பொக்கிஷத்தை 14ஆம் தேதி திரையிடுகிறார். கடித இலக்கியமாக செல்லுலாய்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் குறிப்பாக காதலர்களிடம் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பொக்கிஷம் படத்தின் போஸ்டரும், இசை வெளியீட்டு விழாவும் கூட ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். இப்போது சென்சார் போர்டால் யு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது படத்துக்கு இன்னுமொரு ப்ளஸ்பாய்ண்ட்.

இத்தனை பாசிட்டிவ் பாயிண்டுகள் இருப்பதால்தான் சேரனின் பொக்கிஷம் பன்மடங்கு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

கந்தசாமி ரிலீஸ் என்பதால் பல படங்க‌ள் களத்தில் இறங்கத் தயங்கி ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ள இந்த நேரத்தில், சேரன் தனது பொக்கிஷத்தை வெளியிடுகிறார்.

வாழ்த்துக்கள் சேரன்.

Read More...

"அசல்" கெட்டப்பில் விஜய் - Asal Ajit, Vijay, Vettaikaran

விருமாண்டி கமல் கெட்டப்பில்தான் அஜித் தனது 'அசலில்' கிருதாவும், மீசையும் இணைத்து, ஃபோட்டோ செஷனில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போது இந்த கெட்டப்பிலேயே விஜய்யும் தனது படமான வேட்டைக்காரனில் ஒரு பாடலுக்குத் தூள்பரத்தும் நடனமாடியிருக்கிறார். பாபு சிவன் இயக்கும் வேட்டைக்காரனின் பாடல் காட்சி அண்மையில் ஏவி.எம். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளது.

அசல் கெட்டப்பில் விஜய் தனது ஜோடி அனுஷ்காவுடன் ஆட்டம் போட்டுள்ள இந்தப் பாடல்தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடன இயக்குனர் பாபு பாஸ்கரின்

டிபிக்கலான மூவ்மெண்டுகளை அனயாசமாக ஆடிக்காட்டி அசத்தியிருக்கிறார் விஜய்.

ரிங்டோனாகவும், டயலர் டோனாகவும் ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கப் போகும் அந்தப் பாடல் பெரிய அளவில் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என உத்தேசித்து ஒவ்வொரு அசைவுகளையும் தேர்ந்தெடுத்து தந்துள்ளார் நடன இயக்குனர் பாபு பாஸ்கர்.

Read More...

Tuesday, August 11, 2009

நடிகையை துரத்திய பன்றிக்காய்ச்சல்....Swine FLU??????

பட உலகையும் விட்டு வைக்கவில்லை பன்றி காய்ச்சல் பீதி. தமிழ் படவுலகை விட இந்தி படவுலகம்தான் ஆடிப் போயிருக்கிறது. மும்பை, புனே போன்ற இடங்களில் இக்காய்ச்சலின் அறிகுறி அதிகமாகவே இருப்பதால், சில படப்பிடிப்புகள் கேன்சல் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில் அழகு தேவதை சமீரா ரெட்டி பற்றிய ஒரு வதந்தி, குலை நடுங்க வைத்திருக்கிறது.

அசல் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சமீரா ரெட்டி ஊருக்கு திரும்பிவிட்டார். வந்த சில நாட்களில் அவருக்கு சாதாரண காய்ச்சல். அவ்வளவுதான்... பன்றி காய்ச்சலாக இருக்குமோ என்று சந்தேகத்தை கொளுத்தி விட்டார்கள். எள் முனையளவு நெருப்பிருந்தால் போதும். எரிமலையாக்கி பார்க்கவென்றே ஒரு கும்பல் இருக்குமல்லவா? பன்றி காய்ச்சல் என்றே பரப்பி விட்டார்களாம்.


போன் கால்களில் ஆரம்பித்து, பொக்கேக்கள் வரைக்கும் பன்றி காய்ச்சல் பற்றியே விசாரிக்க, கன்றி போனது சமீராவின் முகம். நல்லவேளையாக ஜூரம் விட்டது அவருக்கு. பிரச்சனையும் விட்டது. இதற்கிடையில் அசல் படத்திற்காக சிங்கப்பூர்-மலேசியாவை சுற்றி வந்த யூனிட், சென்னை திரும்பிவிட்டது. மீண்டும் செப்டம்பர் முதல் வாரம்தான் மலேசியா கிளம்புகிறார்களாம்.

Read More...

"அண்ணா என்று யாரையும் அழைக்க மாட்டேன்; ஆண்கள் அனைவரும் மச்சான்கள்" -நமீதா `கிளுகிளு' பேட்டி

நமீதா மோகினிப்பேயாக நடிக்கும் `ஜகன்மோகினி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ். கார்டனில் நடந்தது. நமீதா மோகினிப்பேயாகவும், வடிவேல் நாதஸ்வர வித்வானாக-நமீதாவின் அண்ணனாகவும் நடிக்கும் காட்சி படமாகிக்கொண்டிருந்தது.

`வெண்ணிற ஆடை' மூர்த்தி, கிங்காங், கோவை செல்லத்துரை ஆகியோர் உடன் நடித்துக்கொண்டிருந்தார்கள். பேயாக இருக்கும் நமீதா, அண்ணன் வடிவேலுவையும் தன்னுடன் வந்துவிடும்படி அழைக்க, அவரைப் பார்த்து வடிவேலு பயந்து அலறுவது போன்ற காட்சியை, என்.கே.விஸ்வநாதன் படமாக்கினார். படப்பிடிப்பு இடைவேளையில், நமீதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

``வடிவேலுவின் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய `காமெடி'யை இந்த படத்தில் சேர்க்கும்படி நான்தான் டைரக்டரிடம் சொன்னேன். அப்படி வைத்தால், அண்ணன்-தங்கை பாசம் என்று உருக்கமான காட்சிகளை வைக்க வேண்டாம். `காமெடி'யான சீன்களை வையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

வடிவேலுவும், நானும் `எங்க அண்ணா,' `ஏய்,' `சாணக்யா,' `இங்கிலீஷ்காரன்' ஆகிய படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். 4 வருடங்களுக்குப்பின், இந்த படத்தில் இணைந்து நடிக்கிறோம்.

படத்தின் கதைப்படி வடிவேல் எனக்கு அண்ணனாக நடித்தாலும், `செட்'டில் அவரை நான், ``சார்'' என்றுதான் கூப்பிடுவேன். ``அண்ணா'' என்று யாரையும் நான் கூப்பிடுவதில்லை. ஆண்கள் அனைவரும் எனக்கு மச்சான்கள்தான்.

எனக்கு திருமணம் நடந்தால், எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரசிகர்கள் உள்பட அத்தனை பேருக்கும் விருந்து கொடுப்பேன். அதுவரை நான், என்னை அழகாகவும், கவர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இதற்காக, அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். மூன்று மாதங்களாக `சைவம்'தான் சாப்பிடுகிறேன்.''

இவ்வாறு நமீதா கூறினார்.

Read More...

அலெக்சாண்ட்ராவாக நடிக்கும் நயன்தாரா!

கமர்ஷ’யல் படங்களில் குத்தாட்ட நாயகி ரேஞ்சுக்கு இறங்கி வந்து கவர்ச்சி காட்டிய நயன்தாரா, அடுத்து ஆர்ட் பிலிம் எனப்படும் கலைப்படங்களில் நடித்து தன் கலை தாகத்தைத் தணித்துக் கொள்ளப் போகிறாராம். பிரபல மலையாள இயக்குநர் ஷ்யாமா பிரசாத் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் மம்முட்டி - மீரா ஜாஸ்மின் நடித்து வெளிவந்த ஒரே கடல் என்ற மலையாள திரைப்படம் உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.
எலக்ட்ரா எனும் கிரேக்க நாடகத்தைத் தழுவி ஷ்யாமா பிரசாத் எடுக்கும் புதிய படத்தில்தான் இப்போது நயன்தாரா நடிக்கப் போகிறார். இந்த நாடகத்தில் வரும் அலெக்சாண்ட்ரா எனும் கேரக்டர் நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் அந்தப் பாத்திரத்திலேயே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். செப்டம்பருக்குப் பின் இந்தப் படத்தின் வேலைகள் துவங்கிவிடும் என்கிறார்கள். தமிழில் சூர்யாவுடன் நடிக்கும் ஆதவனைத் தவிர நயன்தாராவுக்கு வேறு படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்சாண்ட்ராவுக்கு கிரேக்க மொழியில் கேசந்த்ரா என்ற பெயரும் உண்டு. கிரேக்க மன்னன் பிரியம், டிராய் நகரத்து ராணி ஹெக்குபா ஆகியோருக்குப் பிறந்தவர்தான் அலெக்சாண்ட்ரா. இவரது அழகால் கவரப்பட்ட அப்போல்லோ கடவுள், எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் வரத்தைக் கொடுத்தார் என்பது கிரேக்க நம்பிக்கை. இப்படி மிகப் பெரிய அரிய வரத்தைக் கொடுத்தும் கூட அலெக்சாண்ட்ரா, அப்போல்லோ கடவுள் மீது காதலோ, நம்பிக்கையோ கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த அப்போல்லோ, இனிமேல் அலெக்சாண்ட்ரா கூறும் கணிப்புகளை யாரும் நம்ப மாட்டார்கள் என்று சபித்து விட்டாராம்.

Read More...

பன்றி காய்ச்சல்: நடிகர், நடிகைகள் பீதி -Actors & actress scare about swine flu

பன்றி காய்ச்சல் திரையுலகினரை அச்சப்படுத்தி உள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்கும்போது கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரள்கிறார்கள்.

அப்போது பன்றி காய்ச்சல் நடிகர், நடிகைகளை தொற்றிக்கொள்ளலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. எனவே தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு படப்பிடிப்பை மாற்றுகிறார்கள். வெளிநாடுகளில் நடிக்க இருந்த பல தமிழ் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மெகா பட்ஜெட் படங்களின் பெரும்பகுதி படப்பிடிப்புகளை வெளிநாடுகளிலேயே நடத்துவது வழக்கம். அவற்றை இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அஜீத் நடிக்கும் “அசல்” படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. சரண் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பை துருக்கி, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஹங்கேரி உள்ளிட்ட சில நாடுகளில் நடத்த முடிவு செய்தனர். ஆனால் பன்றி காய்ச்சல் காரணமாக தயாரிப்பு தரப்பில் அந்த எண்ணம் கைவிடப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

திரிஷா, கோபிசந்த் ஜோடியாக நடிக்கும் “சங்கம்” படத்தின் படப்பிடிப்பு தென் அமெரிக்காவில் நடப்பதாக இருந்தது. பன்றி காய்ச்சல் பயத்தால் அதுவும் ரத்து செய்யப்பட்டது. வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த வேண்டாம் என்று இயக்குனர்களை நடிகர், நடிகைகள் வற்புறுத்துகின்றனர்

வட இந்தியாவில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் இந்தி நடிகைகளுடன் நடிக்கவும் தமிழ் நடிகர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

புனே நகரில் நடிப்பதாக இருந்த “குர்பான்” என்ற இந்தி படப்பிடிப்பு பன்றி காய்ச்சல் பயத்தால் ரத்து செய்யப்பட்டது. நடிகை சமீரா ரெட்டி வெளிநாட்டு பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்து விட்டார். ஏற்கனவே மெக்சிகோவில் படப்பிடிப்பில் இருந்த இந்தி, நடிகர் ஹிருத்திக்ரோஷன் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்தியா திரும்பி விட்டார்.

Read More...

ஷில்பாவை கட்டிப்பிடித்து முத்தமிட்ட சாமியார் - மீண்டும் சர்ச்சை-Shilpa in another controversy!!!!!!!!!!!!!!!

மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. முன்பு ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கிரே, பொது மேடையில் லிப் டு லிப் முத்தம் கொடுத்து பெரும் பரபரப்பேற்படுத்தினார்.

இப்போது நாக பஞ்சமி பூஜைக்காக கோயிலுக்கு வந்த ஷில்பாவை ஒரு சாமியார் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்க, அது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

மும்பை அருகே பொவாய் பகுதியில் சஹி கோபால் ஆலயத்துக்கு ஷில்பா நாக பஞ்சமி பூஜைக்காகச் சென்றார். சிறப்பு பூஜைகள் செய்து பயபக்தியோடு கடவுளை வழிபட்டுக் கொண்டு நின்றார். ஷில்பா ஷெட்டி வந்திருப்பதை அறிந்து ஏராளமான பக்தர்கள் அவரைச் சூழ்ந்தனர்.

கோவிலில் பூஜைகள் செய்து வரும் சாமியார் அங்கு வந்த ஷில்பா ஷெட்டியின் முகத்தை பிடித்து திடீரென்று இழுத்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை இறுகப் பிடித்து திடீரென்று அவர் கன்னத்தில் முத்தமிட்டார்.

கோவிலுக்குள் நடந்த இந்த முத்தக்காட்சி பக்தர்களை கடும் ஆத்திரமடையச் செய்தது. ஷில்பா ஷெட்டியையும் சாமியாரையும் கடுமையாக திட்டித் தீர்த்தனர். ஆனால் ஷில்பா அசரவில்லை.

"மகளுக்கு தந்தை முத்தம் கொடுப்பதில்லையா? அப்படித்தான் இதுவும்", என்று ஆவேசமாகக் கூறினார்.

கோவிலில் சாமியாரை முத்தமிட வைத்து புனிதத்தை கெடுத்து விட்டதாக ஷில்பா மீது வழக்குப் போட ஏற்பாடுகள் நடக்கின்றன.

ரிச்சர்ட் கிரே முத்த விவகாரத்தின் போதும் இதேபோல சர்ச்சைகள் எழுந்தன. போலீஸில் புகாரும் தரப்பட்டது ஷில்பா மீது.

Read More...

சென்னை - நிலநடுக்கம் Quake-Jolts Chennai People

சென்னை நகரில் பல இடங்களில் நேற்‌றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நள்ளிரவு 1.30 மணி அளவில் எழும்பூர், வேப்பேரி, தியாகராய‌ர் நகர், அண்ணாநகர், புரசைவாக்கம், புளியந்தோப்பு, பாலவாக்கம், மடிப்பாக்கம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 7 விநாடிகள் நீடித்தது.

சென்னை தலைமை செயலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு நிலநடுக்கம் 45 விநாடிகள்வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாயினர்.

சென்னை: அந்தமானில் நேற்றிரவு 7.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாகையில் சுனாமி எச்சரிக்க‌ை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அடுக்குமாடிகளில் வசித்தவர்கள் அலறியடித்து வீடுகளிலிருந்து வெளியேறினர். சென்னை மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு 1.40 மணியளவில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. சில நொடிகளே நீடித்த நிலநடுக்கத்தை அடுக்கு மாடி வீடுகளில் வசித்தவர்கள் உணர்ந்துள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து அலறியடித்து வெளியேறி சாலைகளில் குவிந்தனர். சென்னையில், தேனாம்பேட்டை, கீழ்பாக்கம், மதுரவாயல், திரு.வி.க.,நகர் பாலவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதற்கிடையே, நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை பெய்ததால், நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்களது வீட்டினுள் இருக்க முடியாமலும், வெளியே வர முடியாமலும் தவித்தனர்.

ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமானில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமே, சென்னையில் நில அதிர்வுக்கு காரணம் என்று வானிலை ஆராய்ச்சி நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More...

பிகினியில் ஒருபோதும் நடிக்க மாட்டேன்- சினேகா

நான் பிகினி உடையில் நடிக்கப் போவதாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருபோதும் அப்படிப்பட்ட உடையில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் புன்னகை இளவரசி சினேகா.

பிகினி எனப்படும் நீச்சலுடை நாயகிகள் வரிசையில் கோவா படம் மூலம் சினேகாவும் சேரப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதை சினேகா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அந்த மாதிரியான சூழ்நிலை எனக்கு இல்லை. எனக்கென்று ஹோம்லி பெண் என்ற இமேஜ் உள்ளது. அதை நான் ஒருபோதும் கெடுத்துக் கொள்ள மாட்டேன். பிகினியில் நடிக்க வேண்டிய அவசியமும், தேவையும் எனக்கு இல்லை.

வாய்ப்பு இல்லாததால் இப்படி நடிக்க கிளம்பி விட்டேன் என்றும் கதை விட்டுள்ளனர். உண்மையில் எனக்கு கை நிறையப் படங்கள் இப்போதும் உள்ளன. பிசியாகத்தான் இருக்கிறேன் என்கிறார் சினேகா.

அதேபோல கோவா படத்தில் தான் வில்லியாக நடிக்கவில்லை என்றும், கேரக்டர் நெகட்டிவானது என்றும் விளக்கியுள்ளார் சினேகா.

கோவா படத்தில் எனக்கு பிரமாதமான கேரக்டர். கேரக்டரைக் கேட்டதுமே நான் கால்ஷீட் கொடுத்துட்டேன். யாரும் இப்படிப்பட்ட கேரக்டரில் தமிழில் நடித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி ஒரு கேரக்டர் என்றும் புளகாங்கிதப்படுகிறார் சினேகா.

Read More...

Monday, August 10, 2009

மலை மலை - Malai Malai

பழனிமலை ஹீரோவும், பரங்கிமலை வில்லனும் நடத்தும் ஆ‌க்சன் சடுகுடுதான் மலை மலை. கிராமத்திலிருந்து வரும் ஹீரோ இன்னும் எத்தனை நாளைக்கு சிட்டி வில்லனை சிதறு தேங்காய் உடைப்பார்களோ...? ஐயா, தயவு செய்து திருந்துங்கப்பா.

பழனியில் வேன் ஓட்டும் அருண் விஜய் தமிழ் சினிமா ஹீரோவுக்கு‌ரிய எல்லா குணாம்சங்களும் கொண்டவர். அவருக்கு பாசத்தை மட்டுமே பொழியும் ஒரு அண்ணன், பிரபு. சிட்டியிலிருந்து வரும் வேதிகாவுக்கு அருண் விஜய் மீது லவ். வேதிகாவை தேடி சென்னை வருகிறார் அருண் விஜய்.

வந்த இடத்தில் வில்லன் பிரகாஷ்ராஜுடன் வேதிகாவை முன்னிறுத்தி தகராறு. பிறந்தநாள் அன்றைக்குப் பார்த்து எம்.எல்.ஏ. எலெ‌க்சனுக்கு நிற்கும் வாய்ப்பு அருண் விஜய்யால் பிரகாஷ்ராஜுக்கு பறிபோகிறது. விடுவாரா? அடிக்குரலில் மிரட்டியபடி இருவரும் மோதிக்கொள்ள ஊ‌ரிலிருந்து வரும் பிரபுவால் கதையில் தடாலடி திருப்பம். அருண் விஜய் காதலில் கரை கண்டாரா? வில்லனை சமாளித்தாரா என்பது கிளைமாக்ஸ்.

அருண் விஜய்க்கு பக்கா ஆ‌க்சன் அவதாரம். கரளை கரளையாக கட்ஸ் வைத்து அடிதடியில் அசத்துகிறார். நாலு நாள் தாடியில் வெட்டருவா மாதி‌ரி துருத்தி நிற்கும் மீசைதான் உறுத்தல். ஆ‌க்ச‌ன் ஹீரோவுக்கான அடித்தளத்தை இதில் செமத்தியாகவே போட்டிருக்கிறார்.

வேதிகாவுக்கு டூயட் பாடுவதுடன் கால்ஷீட் முடிந்து விடுகிறது. பிரகாஷ்ரா‌ஜ் வழக்கமான வில்லன். இந்த மாதி‌ரி கேரக்டருக்கு வேற எந்த மாதி‌ரி நடிப்பதாம்? பிரபு அண்ணன் சென்டிமெண்டில் வெளுக்கிறார். கிளைமாக்ஸில் கஸ்தூ‌ரி இறந்ததை மறைத்து அவர் துடிப்பது, அய்யோ பாவம்.

ஆ‌க்சன் படத்தில் கை கொடுத்திருப்பது காமெடி. ஊ‌ரில் கஞ்சா கருப்பு என்றால் சிட்டியில் சந்தானம். ஹீரோவை நையாண்டி செய்வதில் சந்தானம் இன்னொரு கவுண்டமணி. அருண் விஜய்யிடம் அவ்வப்போது ஷோல்டரை இறக்கு என்று கூல் படுத்துகிறாரே, தியேட்டரே அலறுகிறது. இந்தப் படத்திலும் மயில்சாமிக்கு ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள். போதையில் அவர்விடும் சலம்பலுக்கு தளும்புகிறது ஜனம்.

படத்தில் சென்டிமெண்ட் இடைச்செருகலாக வரும் கஸ்தூரியும், அவரது முடிவும் ஆ‌ண்டி கிளைமாக்ஸ். பின்னணி இசையும் பாடல்களும் மணிசர்மா. பின்னணியில் இருக்கும் பலம், பாடல்களில் இல்லை. வெங்கடேஷின் கேமரா ஆ‌க்சன் படங்களுக்கு‌ரிய நியதி மாறாமல் வில்லனும், ஹீரோவும் சந்திக்கும் போதெல்லாம் நடுங்குகிறது. டெரராம்.

அருண் விஜய்யின் ஆ‌க்சனும், சந்தானம் அண்டு கோ-வின் காமெடியும் மலையை தாங்கிப் பிடிக்கின்றன.

Read More...

Mothi Vilaiyadu [2009] DVD Rip Download - மோதி விளையாடு [2009]


Cast:-Vinai, Kajal Agarval, Kalabhavan Mani, Chanthanam, Mylsamay, V.M.C.Hanifa, Yuva And Many Other's
Directionaran
Music:-Hariharan & Lessi Luuji

http://hotfile.com/dl/9497996/6066f61/_XVID__Mothi_Vilaiyadu__2009_.part1.rar.html
http://hotfile.com/dl/9498010/8e6a063/_XVID__Mothi_Vilaiyadu__2009_.part2.rar.html
http://hotfile.com/dl/9498030/e89b201/_XVID__Mothi_Vilaiyadu__2009_.part3.rar.html

http://hotfile.com/dl/9498039/ddfcaa6/_XVID__Mothi_Vilaiyadu__2009_.part4.rar.html
http://hotfile.com/dl/9498055/4c5cb40/_XVID__Mothi_Vilaiyadu__2009_.part5.rar.html
http://hotfile.com/dl/9498062/794381d/_XVID__Mothi_Vilaiyadu__2009_.part6.rar.html
http://hotfile.com/dl/9498080/2f33caf/_XVID__Mothi_Vilaiyadu__2009_.part7.rar.html
http://hotfile.com/dl/9498086/c7bae05/_XVID__Mothi_Vilaiyadu__2009_.part8.rar.html

Read More...

இந்திப் படத்தில் சந்தானம் - Santhanam Comedy in Hindi Film

காமெடி நடிகர்களின் அதிகபட்ச கனவு, ஹீரோ. பாலிவுட்டுக்கு போகணும், வெற்றிக் கொடி நாட்டணும் என்று நடிகைகள் மாதி‌ரி காமெடியன்கள் நினைப்பதில்லை.

அப்படி நினைக்காமலே பாலிவுட் வாய்ப்பு சந்தானம் வீட்டு காலிங்பெல்லை அழுத்தியிருக்கிறது. ஆமாம், விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சந்தானம். விரைவில் என்ன... படப்பிடிப்பே தொடங்கிவிட்டது.

காக்கி படத்தை தயா‌ரித்தவர் தனது மகனை ஹீரோவாக வைத்து புதுப் படம் ஒன்றை‌த் தயா‌ரிக்கிறார். இந்தப் படம் தமிழ், இந்தி இரு மொழிகளிலும் தயாராகிறது. இரு மொழிகளிலும் காமெடி ஏ‌ரியாவை கவனித்துக் கொள்கிறவர் சந்தானம். ஐந்தே நாளில் இந்தி அத்துப்படியாயிடுச்சி என்கிறார் உற்சாகமாக.

ஆங், படத்தின் பெயரை சொல்ல மறந்துவிட்டோமே. படத்தின் பெயர், சின்னு மன்னு (Chinnoo Mannoo).

Read More...

தயாநிதி, உதயநிதி – வா‌ரிசுகளின் அடுத்த மூவ் - Dayanidhi, Udyanidhi's Next Move

இரண்டு வா‌ரிசுகளைப் பற்றிதான் இன்டஸ்‌ட்‌ரி‌யி‌ல் பேச்சு. ஒருவர் துணை முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி. இன்னொருவர் மத்திய அமைச்சர் அழகி‌ரியின் மகன் தயாநிதி.

உதயநிதி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஆதவன் படத்தை தயா‌ரித்து வருகிறார். அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தையும் இவரே தயா‌ரிக்கிறார்.

உதயநிதி சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது தரணி இயக்கிய கில்லி. கில்லிபோல் ஒரு படத்தை தயா‌ரிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது என பேட்டியொன்றில் அவரே கூறியிருக்கிறார். அதனால்தான் கில்லி டீமை வைத்து குருவி படத்தை தயா‌ரித்தார். படம் ச‌ரியாக‌ப் போகவில்லையென்றாலும் தரணி மீதுள்ள உதயநிதியின் நம்பிக்கை மங்கவில்லை.

அடுத்து தரணி இயக்கும் படத்தில் ஹீரோவாக உதயநிதி நடிக்கிறார் எனபதே இன்றைய தேதியில் இன்டஸ்ட்‌ரியை கலக்கும் ஹாட் நியூஸ். இந்த செய்தியை உதயநிதியோ, தரணியோ இன்னும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணம் ஆயிரம் படத்தை வாங்கி சினிமா கே‌ரியரை ஆரம்பித்த தயாநிதி அழகி‌ரி, அடுத்து பொல்லாதவன் இயக்குனர் வெற்றிமாறனிடம் கதை கேட்டிருக்கிறார். நல்லவேளையாக நடிப்பதற்கு அல்ல, படம் தயா‌ரிப்பதற்கு. ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் தயா‌ரிக்கும் படம் தயாநிதியுடையதாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

இரு வா‌ரிசுகளின் முயற்சிகள் தமிழ் சினிமாவை வளப்படுத்தினால் ச‌ரிதான்.

Read More...

இந்திக்கு செல்லும் லட்சுமிராய் - Lakshmi ray goes to Hindi

ஜெனிலியா, ஸ்ரேயா, அசின், த்‌‌ரிஷாவைத் தொடர்ந்து லட்சுமிராயும் இந்திக்குச் செல்கிறார். ஏற்கனவே கதாநாயகிகள் பஞ்சத்தில் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு இது மேலுமொரு பின்னடைவு.

முதல்வ‌ரிசை ஹீரோக்கள் நாயகிகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இங்குள்ள முன்னணி நடிகைகள் இந்திப் பக்கம் சாய்வதால் அனுஷ்கா, ஹன்ஷிகா என தெலுங்கிலிருந்து நடிகைகளை இறக்குமதி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இரண்டாம் வ‌ரிசை ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த லட்சுமிராயும் இந்திக்குச் செல்கிறார். யாஷ் சோப்ராவின் அடுத்தப் படத்தில் ராய் நடிக்கிறார். அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

லட்சுமிராயின் இந்திப் பிரவேசம் நடிகைகள் ஏ‌ரியாவில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009