Wednesday, August 12, 2009

வரிசையாக படங்கள் தோல்வி: பிரபுதேவா உறவை நயன்தாரா முறிப்பாரா? Romba Kastum tannnn!!!!!!!!!!!!!!!!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி பட உலகிலும் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவது, பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தைத்தான். இருவரும் வேறு வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். பிரபுதேவாவுக்கு சொந்த ஊர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர். நயன்தாரா, கேரளாவை சேர்ந்தவர்.

`வில்லு' படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு முன், அவருக்கு பிரபுதேவாவை தெரியாது. அந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். பிரபுதேவா டைரக்டு செய்தார். இந்த படப்பிடிப்பின்போதுதான் இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அது, நட்பாக வளர்ந்தது.

பிரபுதேவாவின் மகன் மரணத்தின்போது, நயன்தாரா துக்கம் விசாரிக்க வந்தார். அப்போது, அவருடனே இருந்தார். கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். அனுதாபத்தில் உருவான இந்த நெருக்கம், காதல் தீயாக பற்றிக்கொண்டது. ``நீயின்றி நான் இல்லை'' என்கிற அளவுக்கு, ஈருடல் ஓருயிர் ஆகிவிட்டார்கள்.

பிரபுதேவாவுடன் தொடர்பு ஏற்படுவதற்கு முன், நயன்தாராதான் `நம்பர்-1' நாயகியாக இருந்தார். தொடர்பு ஏற்பட்டபின், அவருக்கு பிரச்சினைகள் ஆரம்பம் ஆனது. இவருக்கும், டைரக்டர் லிங்குசாமிக்கும் மோதல் ஏற்பட்டு, `பையா' படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

நயன்தாரா கதாநாயகியாக நடித்த `குசேலன்,' `ஏகன்,' `சத்யம்' ஆகிய 3 படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. பிரபுதேவாவுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் பிரச்சினைகளும், தோல்விகளும் தொடர்கின்றன என்று நயன்தாராவிடம், அவருக்கு நெருக்கமான தோழிகள் எடுத்து சொல்லி இருக்கிறார்கள். அதனால் பிரபுதேவாவுடன் உள்ள உறவை முறித்துக்கொள்ளும்படி அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

தோழிகளின் அறிவுரையை, நயன்தாரா பொறுமையுடன் கேட்டுக்கொண்டார். அதன்படி அவர் நடந்துகொள்வாரா, மாட்டாரா? என்பது சில நாட்களில் தெரிந்து விடும்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009