சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர்
63 வது சுதந்திர தினத்தையட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை, தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
நாடு முழுவதும் சுதந்திரத் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் 6வது முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை 24 மணி நேரமும் அதிரடிப் படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். 40 இடங்களில் சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறி தவறாமல் சுடுவதில் கில்லாடிகளான தேசிய அதிரடிப்படை வீரர்கள் செங்கோட்டையை சுற்றியுள்ள உயரமான கட்டிடங்களின்மேல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
விழா முடியும் வரை செங்கோட்டைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. செங்கோட்டையை சுற்றியுள்ள வான் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க மாவோ இயக்கம் அழைப்பு விடுத்து இருப்பதால் பீகாரையொட்டி உள்ள இந்திய-நேபாள எல்லையில் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment