Thursday, August 13, 2009

விவாகரத்து கோரி செல்வராகவன்- சோனியா அகர்வால் மனு - Director Selvaragavan, Actors Sonia Agarwal - Divorce

நடிகை சோனியா அகர்வாலும், அவரது கணவர் செல்வராகவனும் விவாகரத்து வழங்க கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து‌ள்ளன‌ர்.

'காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். பஞ்சாபை சேர்ந்த இவர், மும்பையில் மாடலிங் செய்து வந்தார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்தார். அப்போது, நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குநர் செல்வராகவனுக்கு அறிமுகமானார்.

இதையடுத்து, தனுஷ் நடித்த, 'காதல் கொண்டேன்’
திரைப்படத்தில் சோனியா அகர்வாலை கதாநாயகியாக செல்வராகவன் அறிமுகம் செய்தார். பின்னர், '7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் நடிக்க வைத்தார். அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2006 டிசம்பர் 15இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தனுசுடன் ‘புதுப்பேட்டை’, விஜயுடன் ‘மதுர’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

இந்நிலையில், சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் மனமுவந்து விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, செல்வராகவனும் சோனியா அகர்வாலும் தனது வழ‌க்க‌றிஞ‌ர் ஆர்த்தியுடன் செ‌ன்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்துக்கு நேற்று வந்தனர்.

அவர்கள் முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் ஆஜராகி தாங்கள் ஒருமனதாக விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009