Thursday, October 15, 2009

கமலுடன் முத்த காட்சியில் நடிக்க தமன்னா சம்மதம் ரூ.1? கோடி சம்பளம் கேட்கிறார்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகியுள்ளார் தமன்னா. “கல்லூரி” படத்துக்கு பின் பெரிய நடிகர்களுடன் ஜோடியாகி விட்டார். சூர்யாவுடன் நடித்த “அயன்” படம் வெற்றிகரமாக ஓடியதால் மார்க்கெட் மேலும் எகிறியது. சம்பளத்தையும் உயர்த்தி விட்டார்.

பரத்துடன் நடித்த “கண்டேன் காதலை” படம் இம்மாதம் இறுதியில் ரிலீசா கிறது. ஜெயம் ரவியுடன் “தில்லாலங்கடி” படத்திலும் நடித்து வருகிறார்.

கமல் படமொன்றில் நடிக்கவும் தமன்னாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. கே.எஸ். ரவிக்குமார் இப் படத்தை இயக்கப்போவதாக பெயர் அடிபடுகிறது. காமெடி படமாக இதை உருவாக்குகின்றனர்.

இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க தமன்னாவை அணுகியதாக செய்திகள் வந்துள்ளன. தமன்னாவும் நடிக்க சம்மதித்தாராம். ஆனால் சம்பளம் ரூ.1 கோடியே 25 லட்சம் கேட்டாராம். கமல் படங்களில் முத்தக்காட்சிகள் இருக்கும். அக்காட்சிகளில் நடிப்பேன். அதற்கு நான் கேட்டதை தர வேண்டும் என்று கூறி விட்டாராம். தமன்னாவை ஒப்பந்தம் செய்வதா? அல்லது கழற்றி விட்டு வேறு நடிகையை பார்ப்பதா என்று யோசனையில் தயாரிப்பு தரப்பினர் உள்ளனர்.

Read More...

நயன்தாராவை திருமணம் செய்யவில்லை -பிரபுதேவா

நயன்தாரா- பிரபுதேவா காதல் தீவிரமாகியுள்ளது. இருவரும் ரகசியமாக சந்திக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா தொழிலாளர்கள் விழாவுக்கு நயன்தாரா வந்த போது நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது பிரபுதேவா தனது குழந்தையை அழைத்து போய் நயன்தாராவை பார்த்தார்.

பிறகு குழந்தையுடன் நயன்தாரா ஷாப்பிங் போனதாக தகவல் வெளியானது. இந்த விஷயங்கள் பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு தெரிய ஆவேசமாகியுள்ளார். ஏற்கனவே நயன்தாராவும் பிரபுதேவாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் பிரபுதேவா இருந்தார். இப்போது முதல் தடவையாக வாய் திறந்துள்ளார் அவர் கூறியதாவது:-

எனக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவில்லை. நயன்தாரா கையில் எனது பெயரை பச்சை குத்தி இருப்பது உண்மையா என்று என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த கேள்விக்கான பதில் ஒரு குழந்தைக்கே தெரியும். நானும் நயன்தாராவும் பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்பதற்கு பயப்படவில்லை.

ஸ்ரீதேவியும், பிரியாமணியும் எனக்கு பிடித்த நடிகைகள். அடுத்த படம் பற்றி இன்னும் முடிவு செய்யவல்லை. அரசியலுக்கு வரமாட்டேன். நடிப்பு, இயக்கம், நடனம் மூன்றில் நடனத்தைதான் ரொம்ப விரும்புகிறேன். சல்மான்கான், விஜய் இருவரில் விஜய்தான் சிறப்பாக நடனம் ஆடுகிறார். தமிழ் திரையுலகில் விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி நால்வரும் நன்றாக நடனம் ஆடக்கூடியவர்கள்.

இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

Read More...

Wednesday, October 14, 2009

முன்னோட்டம்: நான் அவனில்லை 2-ம் பாகம்; 5 கதாநாயகிகளை ஏமாற்றும் ஜீவன்

நான் அவனில்லை படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. ஜீவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை செல்வா இயக்குகிறார். ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, துபாய் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஜீவன் பாகதவர் ஸ்டைலில் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். வெளிநாடுகளில் ஐந்து கதாநாயகிகளை அவர் ஏமாற்றுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.

ஏமாறும் கதாநாயகிகளாக சங்கீதா, லட்சுமி ராஜ், சுவேதா மேனன், ஹேமமாலினி, ரக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர். நேமிசந்த் நிறுவனம் சார்பில் இத்தேஷ் ஜபக் தயாரித்துள் ளார். அவரிடம் இருந்து இப்படத்தை வாங்கி வெளியிடுகிறார் ரஞ்சன். இவர் பிரபல விநியோகஸ்தர். சமீபத்தில் `மதுரை சம்பவம்', `ஈரம்' போன்ற படங்களை விநியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவு: பாலமுருகன், இசை: டி. இமான்.

Read More...

முன்னோட்டம்: வானம் பாத்த சீமையிலே

பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் லிட் நிறுவனத்துக்காக தெய்வானை மூவிஸ் சார்பில் அமுதா துரைராஜ், கே.சி.என். சந்திரசேகர், தயாரிக்கும் புதிய படம் வானம் பாத்த சீமையிலே. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜேப்பி அழகர். அசோக்குமார், கதாநாயகனாக நடிக்கிறார். வெயில் படத்தில் நடித்த பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சரண்யா, கஞ்சாகருப்பு, விஜயகுமார், செவ்வாழை, குருஜி, கதிர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்குநர் ஜேப்பி அழகர் சொல்கிறார்:-

இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகி போல் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது கருப்பணசாமி கோயில். இந்தக்கோயில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ஐந்தரை அடி உயரத்தில் உண்மையான கருப்பண்ணசாமி சிலையை ஐதீக முறைப்படி உருவாக்கினார். கிராம மக்களின் ஒத்துழைப்புடன் அந்த சிலை புதிய கருப்பணசாமி கோயிலாக நிர்மாணிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் வரும் ஒரு திருவிழா பாடலுக்கு 500-க்கும் மேற்பட்ட முளைப்பாரி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. கதாநாயகன் அசோக்குமார் உண்மையிலேயே தீவிர கடவுள் பக்தி உள்ளவர். படத்தில் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது போன்ற காட்சியில் நடிக்கும் போது உண்மையிலேயே சாமி அருள் வந்து மயங்கி விட்டார்.

ஒளிப்பதிவு: செந்தில் பரமேஷ், இசை: ஸ்ரீகாந்த்தேவா, பாடல்கள்: பழனி பாரதி, நந்தலாலா, ஜேப்பி அழகர், படத்தொகுப்பு: வி.டி.விஜயன், சண்டைப் பயிற்சி: சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம்: பி.வி

Read More...

Tuesday, October 13, 2009

சூர்யா படத்துக்கு சி‌க்கல் (Trouble for Surya film)

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த ச‌ரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரக்த ச‌ரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடியாக இருந்து பின் அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ. ஆன பிரபல ரவுடி ப‌ரி‌ட்டால ரவியை பற்றியது. இதில் ப‌ரி‌ட்டால ரவியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். ரவியின் வலதுகரமாக இருந்து, பிறகு அவனது சாவுக்கு காரணமாக அமைந்த அவரது கூட்டாளி சூ‌ரியாக சூர்யா நடிக்கிறார்.

ரக்த ச‌ரித்திராவின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் அனந்தபூ‌ரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரவியின் மனைவியும் அவரது ஆதரவாளர்களும் வர்மா படப்பிடிப்பை நடத்தக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனந்தபூ‌ரிலிருந்துதான் ப‌ரி‌ட்டால ரவி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டா‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப‌ரி‌ட்டால ரவி ஒரு ஹீரோ, அவரை ரவுடியாகவர்மா சித்த‌ரிக்கிறார் என்பது ரவி மனைவியின் குற்றச்சாட்டு. வர்மா இதற்கு விளக்கமளித்தப் பிறகும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக இல்லை. இதன் காரணமாக படப்பிடிப்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வர்மாவின் பூர்வீகம் ஆந்திரா. அவரது முதல் படம் சிவா. தமிழில் உதயம் என்ற பெய‌ரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் அவருக்கு ச‌ரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் கோபித்துக் கொண்டு இந்திக்கு சென்றார்.

அதன் பிறகு பல வருடங்கள் அவர் தெலுங்கில் படம் இயக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தெலுங்குக்கு திரும்பி வந்திருக்கிறார். இப்போதும் பிரச்சனை. என்ன செய்யப் போகிறார் வர்மா?

Read More...

சசிகுமா‌ரின் நகரம் (Sasikumar ready to start Nagaram)

அடுத்தப்பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் சசிகுமார். இந்தமுறை நகரத்து கதையுடன் களம் இறங்குகிறார். படத்தின் பெயர், நகரம்.

நகரத்தை விக்ரம் தயா‌ரிப்பதும், 52 வயது நபரே இந்தப் படத்தின் கதாநாயகன் என்பதும் ஏற்கனவே தெ‌ரிந்த விஷயங்கள். சசிகுமா‌ரின் முதல் படத்தில் நடித்த சமுத்திரக்கனி இந்தப் படத்திலும் நடிக்கிறார். கேரக்டருக்காக சற்று குண்டாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் உடல் எடையை அதிக‌ரிக்கும் முயற்சியில் இருக்கிறார்.

ஹீரோ, சமுத்திரக்கனி கதாபாத்திரங்கள் தவிர்த்து ஏறக்குறைய பத்து முக்கியமான கதாபாத்திரங்கள் படத்தில் உள்ளனவாம். இந்த கதாபாத்திரங்களில் அதிகமும் புதுமுகங்களையே நடிக்க வைக்க சசிகுமார் திட்டமிட்டிருக்கிறார்.

நகரத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். ஹீரோயினாக அபிநயா நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009