Saturday, August 1, 2009

குறைந்தது நயன், த்ரிஷா சம்பளம் - Salary Reduced for Trisha & Nayanthara

முன்பெல்லாம் கால்ஷீட் என்று போனாலே நயன்தாராவும், த்ரிஷாவும் "ஒற்றை விரலைக்" (ஒரு கோடி!) காட்டி தயாரிப்பாளர்களை ஓட ஓட விரட்டுவார்களாம். கூடவே இவர்களின் மேனேஜர்கள் வேறு ஏகப்பட்ட நிபந்தனைகளை, "க்ரெடிட் கார்டு டெர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸ்" ரேஞ்சுக்கு தருவார்களாம். ஆனால் இருவருக்குமே இப்போது மார்க்கெட் செம டல். த்ரிஷாவுக்கு அபியும் நானும், குருவி, சர்வம் என வரிசையாக அடி விழ, நயன்தாராவோ தொடர்ந்து நான்கு சூப்பர் ப்ளாப்புகள் கொடுத்து பீல்ட் அவுட் ஆனார்.

ஏதோ பிரபு தேவா காதல் விவகாரம் தந்த "ஹைப்"பில் இன்னமும் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. பையா படத்தில் ஒரு கோடிக்கு ஒரு பைசா குறைக்க மாட்டேன் என நயன் நின்றதும், அதற்கு மறுத்து, கொடுத்த அட்வான்ஸை வாங்க லிங்குசாமி நடையாய் நடந்ததும் தெரிந்த கதை. இப்போது நயன், த்ரிஷா இருவருக்குமே தமிழில் மார்க்கெட்டும் டல்... அதற்கேற்ப சம்பளமும் குறைக்கப்பட்டுவிட்டதாம். நயன்தாரா இப்போது ரூ.75 லட்சம் வரை கேட்கிறாராம். அதற்கு குறைவாக என்றாலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளத் தயாராகிவிட்டாராம். த்ரிஷா ரூ.50லிருந்து 60 லட்சத்துக்குள் செட்டிலாகிவிடுகிறாராம். ஆனால் தமன்னா கேட்கும் முன்னரே ரூ.50 லட்சம் வரை தூக்கிக் கொடுக்கவும் நம்மாட்கள் தயங்குவதில்லையாம். ஸ்ரேயா ஒரே பாடலுக்கு ரூ.50 லட்சம் வாங்கி அசத்தியவர். இப்போது அந்தத் தொகையை ஒரு படத்துக்குத் தந்தால் போதும் என ஓபன் ஆஃபர் வைத்தாவும், இவரது "சைஸ் ஜீரோ" ஸ்டைலைப் பார்த்து மிரண்டு போய் ஓடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்

Read More...

மோதி விளையாடு - Modhi Vilayadu

அம்பானி மாதி‌ரி பெரும் பணக்காரர் கலாபவன் மணி. அவரது ஒரே மகன் வினய். வளர்ப்பு மகன் யுவா. கலாபவன் மணியால் பாதிக்கப்பட்ட மகாதேவன் வினய்யை கொலை செய்ய பாங்காங்கிலிருந்து கில்லர் ஒருவனை வரவைக்கிறார். கில்ல‌ரின் துப்பாக்கிக்கு வினய்க்குப் பதில் யுவா பலியாகிறான்.

அன்றிலிருந்து வினய்யின் ஆடம்பர வாழ்க்கை பறிக்கப்படுகிறது. அவரை கொலை செய்ய எதி‌ரிகள் துரத்துகிறார்கள். அடைக்கலம் தேடி அப்பா கலாபவன் மணியிடம் சென்றால், “நீ சாக வேண்டியவன்தான்” என்று புதுக்குண்டை போடுகிறார். அவர் அப்படி சொல்ல என்ன காரணம்? வினய் இழந்த தனது ஆடம்பர வாழ்க்கையை மீட்டெடுத்தாரா?

ஆறு வ‌ரியில் சுவாரஸியமாக தெ‌ரியும் கதை பதினாலு ‌‌ரீலில் படுத்தியெடுக்கிறது. கலாபவன் மணியின் உண்மையான மகன் யுவா. தொழில் எதி‌ரிகளிடமிருந்து மகனை காப்பாற்ற அவனுக்கு பினாமி போல் வினய்யை வளர்க்கிறார். இந்த உண்மையை கலாபவன் மணி வெளியே சொன்னால்தான் அவரது எதி‌ரிகளிடமிருந்து வினய் தப்பிக்க முடியும். மகன் இறந்த ஆத்திரத்தில் அதை செய்ய மறுக்கிறார் கலாபவன் மணி.

இந்த நேரத்தில் ஹீரோ என்ன செய்வார்? கோபத்தில் பொங்கியெழ வேண்டும். கலோனியல் கஸின்சும், தேவாவும் மோதி விளையாடு என்று ஹைபிட்‌ச்சில் பாட்டுப் பாட வினய்யும் பொங்கியெழுகிறார். அதற்கு அடுத்துவரும் காட்சிகள்தான் காமெடி.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் கலாபவன் மணியை அவரது செக்யூ‌ரிட்டி அலுவலகத்தில் நுழைய மறுப்பதோடு கன்னத்தில் அறைகிறான். பர்சனல் செக்ரட்ட‌‌ரி முதல் லோக்கல் போலீஸ் வரை யாருக்கும் அவரை அடையாளம் தெ‌ரியவில்லை.

ரோட்டோரத்தில் பிச்சைக்காரர்களுடன் சாப்பிட்டு, தெருவோரம் உறங்கி, லாக்கப்பில் அடைபட்டு... அட, என்னதான் நடக்கிறது என்று கலாபவன்மணி மாதி‌ரியே நாமும் குழம்பினால், எல்லாம் வினய்யின் திருவிளையாடல் என்கிறார் இயக்குனர். வினய் சொன்னதற்காக கலாபவன்மணியின் ஆட்கள் அவரையே அடையாளம் தெ‌ரியாத மாதி‌ரி நடித்தார்களாம். காதுல பூ கேள்விப்பட்டிருக்கோம். சரண் பாத்தி கட்டி தோட்டமே வைக்கிறார்.

காஜல் அகர்வாலின் காதல் எபிசோட் இன்னொரு காமெடி. வினய்யின் விலையுயர்ந்த காருக்கு 3 லட்சம் செலவு வைக்கிறார் காஜல். அதை ஈடு செய்ய வினய்யின் வீட்டில் வேலை செய்கிறார். காமெடி என்னவென்றால் காஜலும் ஒரு மில்லியன‌ரின் மகள்.

வினய்க்கு பணக்கார வேஷம் கச்சிதமாக பொருந்துகிறது. அவரது அரைகுறை தமிழ் சில நேரம் தேன், பல நேரம் தேள். யுவா நம்பிக்கை தரும் அறிமுகம். ஹனிஃபாவின் டயலாக் டெலிவ‌ரியும், மயில்சாமியின் லிக்கர் காமெடியும் படத்தின் ‌ரிலீஃப். சந்தானத்திடம் சத்தம் அதிகம்.

கலோனியல் கஸின்சின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். பாடல்கள் படத்தின் மிகப்பெ‌ரிய பலம். அதற்கு திருஷ்டி ப‌ரிகாரமாக பின்னணி இசை. பல இடங்களில் இசைக்கருவிகளை மீறி டயலாக்கை பு‌ரிந்து கொள்ள தனித் திறமை வேண்டும்.

கலை இயக்குனர் ‌ரிச்சான பொருட்களால் ஃபிரேமை நிறைத்திருக்கிறார். அதனால் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலையில்லை. படத்தின் இரு பெரும் பகுதிகள் காஜல் அகர்வால் - வினய் காதல் மற்றும் கலாபவன்மணி - வினய் மோதல். இரண்டுமே நம்ப முடியாத நாடகமாகிவிட்டதால் மோதி விளையாடு பாதி கிணறே தாண்டுகிறது.

ஊசிப் போன வடையை ஏசி அறையில் ப‌ரிமாறினால் எப்படியிருக்கும்? மோதி விளையாடு அந்த வகை.

Read More...

Friday, July 31, 2009

மலையன் - Malayan

முதலாளி, தொழிலாளி விசுவாச கதை. கடைசியில் யாரும் யூகிக்கக் கூடிய டுவிஸ்ட். மலையன், தமிழ் சினிமாவின் மக்கிப் போன ஃபார்முலா.

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை வைத்திருப்பவர் சரத்பாபு. அவரது விசுவாச வேலைக்காரர் கரண். சரத்பாபுக்கும், அதே தொழில் செய்யும் சக்திகுமாருக்கும் தொழில் பகை. சரத்பாபுக்காக சக்திகுமாரை பகைத்துக் கொள்கிறார் கரண்.

இந்நிலையில் சரத்பாபுவின் பட்டாசு குடோனில் விபத்து ஏற்பட்டு பலர் சாகின்றனர். அதில் கரண் மணக்க இருக்கும் ஷம்முவும் ஒருவர். விபத்துக்கு சக்திகுமார்தான் காரணம் எனஅவரை புரட்டியெடுக்கிறார் கரண். ஆனால், விபத்துக்கு அவர் காரணமில்லை. பிறகு யார்? எளிதாக யூகிக்கக் கூடிய திருப்பத்துடன் இறுதியில் பழி வாங்கும் படலம்.

அழுக்கு உடையில் அப்படியே சிவகாசி பட்டாசு தொழிலாளியாக மாறியிருக்கிறார் கரண். நடிக்கிறேன் என்று கொடுத்த காசுக்கு மேல் ஓவர் ஆக்டிங் செய்வதுதான் சகிக்க முடியவில்லை. ஆவேசத்தை குறைங்க பாஸ்.

கிராமத்து வாயாடி ஷம்மு. வெடி விபத்தில் சிக்கி உடம்பு முழுவதும் கறுப்பு மேக்கப்பில் உருக வைக்கிறார். மற்றபடி வழக்கமான ஹீரோயின் வேலை. துரத்தி துரத்தி காதல், டூயட் இத்யாதி...

சரத்பாபுவிடம் முதிர்ச்சியான நடிப்பு. படத்தில் படுத்தாத நடிகரும் இவர் மட்டுமே. மயில்சாமியின் காமெடியில் அவ்வப்போது ‌ரிலாக்ஸ் செய்ய முடிகிறது. பெயருக்கு கஞ்சா கருப்பும் இருக்கிறார்.

ஹீரோவின் விசுவாசமான முதலாளிதான் கருப்பு ஆடு என்பதை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம். அதையே ‌ரிப்பீட் செய்திருப்பது மலையனின் மைனஸ். தேவையேயில்லாமல் உதயதாரா. நர்சாக வரும் இவர் கரண் மீது கண்மூடித்தனமாக காதல் கொள்வதற்கு சொல்லும் காரணம் வேடிக்கை.

தினா இசை. பின்னிணி இசையில் காதை துவ‌‌ம்சம் செய்கிறார். விபத்துக்கு சரத்பாபுதான் காரணம் என்பதை வெளியில் சொல்லாததற்கு கரண் ஒரு காரணம் சொல்கிறாரே... அடிமைத்தனத்தின் உச்சம். இதுதான் இயக்குனர் டச் என்றால் அய்யோ பாவம்.

நமத்துப்போன கதை, மருந்தில்லாத திரைக்கதை.. மலையன், புஸ்வாணம்.

Read More...

Wednesday, July 29, 2009

நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்டதும்!, மறக்க முடியாததும்!!

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் மனிதன் முதன் முதலில் நிலவில் கால்பதித்தான். அமெரிக்காவைச் சேர்ந்த நீல்ஆம்ஸ்ட்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்களும் 1969ம் ஆண்டு ஜுலை மாதம் 21-ந்தேதி நிலவில் இறங்கினார்கள். நிலவில் வெற்றிக் கொடி நாட்டிய அந்த சாதனையின் 40-வது ஆண்டு கொண்டாட்டம் இந்த மாதம் முழுவதும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கிரேய்க் நீல்சன் என்பவர் விண்வெளி பற்றி `ராக்கெட் மேன்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் மனிதனின் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்ட சில விஷயங்களையும், மறக்க முடியாத சம்பவமாக விண்வெளி வீரர்கள் கூறியதையும் தொகுத்துக் கூறி உள்ளார். பரபரப்பாக பேசப்படும் அந்த சுவாரசியமான விஷயங்கள் இதோ...

திட்டமிட்டபடி இறங்காத விண்கலம்

1. விண்வெளி வீரர்கள் சென்ற அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சிறிது தூரத்தில் சென்றபோது சிறு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இதனால் திட்டமிட்ட இடத்தில் இறங்க முடியாமல்போனது. 31/2 மைல் தொலைவுக்கு அப்பால் சென்று இறங்கியது.

2. அப்போது விண்கலத்தில் பயன்படுத்திய கம்ப்ïட்டர் தற்போது இருக்கும் செல்போன் அளவு வேகம் கூட இருக்கவில்லை.

3. குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. ஏனெனில் எரிபொருளுடன் சம்பந்தப்பட்டு வடிகட்டியே பெறப்பட வேண்டியதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் இந்த ஏமாற்றம் நிகழ்ந்தது. அதேபோல் சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது போன்றவற்றுக்கும் மிகுந்த சிரமப்பட வேண்டியதாக இருந்தது. இதனால் மலஜலத்தை நிறுத்தி வைப்பதற்காக விண்வெளி வீரர்கள் மருந்து சாப்பிடும் நிலைக்கு ஆளாகினர்.

4. அதேபோல் பெரிய விண்கலத்தில் இருந்து ஈகிள் எனப்படும் குட்டி விமானம் மூலம் நிலவில் தரை இறங்கினார்கள். ஈகிளிலும் பிரச்சினை ஏற்பட்டதால் 4 மைல் தூரத்துக்கு அப்பால்தான் தரை இறங்க முடிந்தது.

5. நீல் ஆம்ஸ்டிராங் ஈகிள் மூலம் நிலவில் இறங்கும்போது அது ஏறக்குறைய எரிபொருள் தீர்ந்து நிலவின் தரையில் மோதுவதுபோல சென்றது.

6. நிலவில் காலடி வைத்ததை `மனிதனின் சிறிய அடி' என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதுசிறிய அடியாக இருக்கவில்லை. அவர் ஈகிளின் ஏணிப்படியிலிருந்து 3.5 அடி தாவித்தான் நிலவில் கால் வைத்தார்.

7. ஆம்ஸ்டிராங்கை தொடர்ந்து ஆல்ட்ரின் இறங்கினார். அப்போது ஈகிள் விண்கலத்தின் கதவை பூட்ட முடியாமல் சிரமப்பட்டார். ஏனெனில் அதை வெளியில் இருந்து பூட்டும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

கொடியை நடுவதில் சிரமம்

8. நிலவில் இறங்கும் முன்பு நடந்திருந்த ஆய்வுப்படி நிலவின் மணல் மிருதுவாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் நிலவில் இறங்கிய பிறகுதான் கடினமாக இருந்தது தெரியவந்தது. மனிதன் இறங்கிய இடம் முழுவதும் பாறையாக இருந்தது. இதனால் கொடியை நடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள்.

9. நிலவில் நட்ட அமெரிக்கக் கொடி விறைப்பான தாக இருந்தது. ஆனால் அதை நாசா நிறுவனம் மறுத்துவிட்டது.

10. விண்வெளி ஆடை, அங்குள்ள சூழலுக்கு ஏற்ற கம்ப்ïட்டர் சிப் அனைத்தும் "லிட்டில் ஓல்டு லேடிஸ்'' என அழைக்கப்படும் குழுவினரால் கையால் உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்த விஷயங்கள் அனைத்தையும் நாசாவின் கருவூலத்தில் இருந்து சேகரித்து தொகுத்து உள்ளார்.

நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர். இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை. இதனால் தங்களின் நினைவுச் சின்னங்களாக சில பொருட்கள், ஓவியங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டே விண்வெளி வீரர்கள் பயணத்தை தொடங்கினர். இந்த விஷயங்கள் ஏற்கனவே விண்வெளி வீரர்களால் வெளிப்படுத்தப்பட்டு பல நூல்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More...

ஆரோக்கியத்திற்கு `ஆப்பு' வைக்கும் சர்க்கரை

ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் செய்ய மாட்டார்கள்.

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சர்க்கரையை தவிர்த்துவிடுவதுதான் நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். சர்க்கரைக்கு பதிலாக குறைந்த கலோரிகள் கொண்ட மாற்று சர்க்கரையை பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

சுக்ரோஸ் போன்ற மாற்று சர்க்கரைப் பொருட்கள் சர்க்கரையைவிட பல மடங்கு இனிப்பு கொண்டவையாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக கலோரியை கொடுக்காது.


இந்த கலோரிகள்தான் உடல் எடைக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்படி இந்திய ஆண்களில் 32 சதவீதம் பேரும், பெண்களில் 50 சதவீதம் பேரும் அதிக எடையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரையை முடிந்தவரை தவிர்ப்பதன் மூலம் உடல் பருமனை குறைக்கலாம் என்று அறிவுரை கூறியுள்ள இந்திய ஊட்டச்சத்து நிறுவனம், அந்த உடல் பருமன் காரணமாக ஏற்படும் நீரிழிவுநோய், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More...

ராகவன் - RAGHAVAN

நடிகர்கள் - விஜித், ராதிகா மல்ஹோத்ரா, ரமேஷ், மனோஜ் கே.ஜெயன், சிங்கமுத்து, மயில்சாமி
இசை - கங்கை அமரன்
இயக்குனர் - பரந்தாமன்
தயாரிப்பு - எம். செல்வராஜ்

நாகரீகம் என்ற பெயரில் கலாச்சார சிரழிவை ஏற்படுத்தும் ஐ.டி. துறை ஊழியர்களை சகட்டு மேனிக்கு போட்டுத் தள்ளும் இளைஞனின் கதை.

தந்தையின் ஆசையை நிறைவேற்ற கிராமத்திலிருந்து மேல்படிப்புக்காக சென்னை வருகிறார் விஜித். வந்த இடத்தில் வீண் வம்புகளில் சிக்குகிறார். ஒரு கட்டத்தில் கொலைப்பழிக்கு ஆளாகிறார்.
தப்பித்து அப்பாவின் கனவை நிறைவேற்றினாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் செல்வராகவனின் சிஷ்யரான பரந்தாமன். குருவின் மீதுள்ள பக்தி காரணமாகவோ என்னவோ படத்தின் பெயரையே ''ராகவன்'' என்று வைத்திருக்கிறார்.

சஸ்பென்ஸ், காதல், பாடல் என்று விறுவிறுப்பாக செல்கிறது படம்.

அறிமுக நாயகன் என்று சொல்ல முடியாதளவுக்கு நடிப்பில் முதிர்ச்சி காட்டும் விஜித் நல்ல வரவு. பார்க்க பாவமாக தெரிந்தாலும் படு சாமர்த்தியமாக பல கொலைகளை செய்து நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

ஹ“ரோயின் ராதிகா மல்ஹோத்ராவிற்கு நடிப்பு உதவவில்லையென்றாலும் கவர்ச்சி உதவுகிறது. குறிப்பாக பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் மனோஜ் கே.ஜெயனின் அதிரடி நடவடிக்கைகளும், விசாரணைகளும் படத்தின் விறுவிறுப்புக்கு கை கொடுத்துள்ளன. சிங்கமுத்து, மயில்சாமியின் காமெடி கலாட்டாக்களும் ரசிக்க முடிகிறது. போட்டோகிராபர் சஷ’, ஹ“ரோவின் அப்பா மூணார் ரமேஷ் ஆகியோர் கேரக்டருக்கு ஏற்ப அடக்கி வாசித்திருக்கிறார்கள்.

அலட்டல் இல்லாத கவின் சுரேஷ’ன் ஒளிப்பதிவும், கங்கை அமரனின் அசத்தலான இசையும் படத்துக்கு கூடுதல் பலம். குறிப்பாக அவரது இசையில் அமைந்துள்ள ''சித்தன் வாசல்....'' பாடல் முணுமுணுக்க வைக்கிறது.

பரபரப்பாக செல்லும் திரைக்கதையில் பெரிய ஃப்ளாஷ் பேக் காட்சி வருகிறது. அதன் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். எடிட்டர் என்னதான் செய்துகொண்டிருந்தார்?

இயக்குனர் ஆபாசத்தின் எல்லையை அநாயசமாகத் தாண்டியிருக்கிறார். எல்லா துறைகளிலும் நல்லதும், கெட்டதும் உண்டு. அது ஐ.டி.யிலும் நடக்கிறது அவ்வளவுதான். அதற்காக ஐ.டி.என்றாலே ஏதோ விபச்சார விடுதி போல ஒரு தோற்றத்தை நமக்கு அளிக்க முன்வருகிற இயக்குனருக்கு, வெறும் ஏடுகளில் வந்த செய்திகள் மட்டுமே பார்வையில் தென்பட்டிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடியால் இரவு முழுக்க கண் விழித்தும், கடுமையான வேலைப்பளுவோடு அவர்கள் படும் கஷ்டமும், நெருக்கடிகளும் கொஞ்ச நஞ்சமல்ல! இதையெல்லாம் விட்டுவிட்டு தான் சார்ந்திருக்கும் சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கும், தன்னை தூக்கி விட்ட கிராமத்து கலாச்சாரத்திற்கும் வக்காலத்து வாங்கும் இயக்குனர் பரந்தாமன், கதையில் காட்டிய புதுமையை வசனங்களிலும், காட்சியமைப்பிலும் காட்டாமல் இருப்பது ஏனோ? இதையெல்லாம் விரிவாக அலசி ஆராய்ந்திருந்தால் படம் வெற்றி பெற்றிருந்தாலும் பெற்றிருக்கும்.

Read More...

Tuesday, July 28, 2009

வெஜ் குருமா - Veg Kuruma

தேவையான பொருட்கள்
கேரட் -1
உருளை -1
பீன்ஸ் -10
காலிஃபிளவர் -சிறிது
வெங்காயம் -1
தக்காளி -1
இன்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
கறிமசால்பொடி -2ஸ்பூன்
மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லி,புதினா -1கைப்பிடி அளவு

அரைக்க:
தேங்காய்துறுவல் -1/4கப்
பொட்டுகடலை -2ஸ்பூன்
முந்திரி -5
சோம்பு -1/4ஸ்பூன்

தாளிக்க:
எண்ணை -2ஸ்பூன்
பிரியாணி இலை -1
பட்டை,கிராம்பு,ஏலம் -2

செய்முறை
•காய்களை வேண்டிய அளவில் நறுக்கி வேகவைக்கவும்.
•அரைக்க குடுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
•கொத்தமல்லி,புதினா பொடியாக நறுக்கவும்.
•வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.
•வாணலியில் எண்ணை ஊற்றி தாளிப்பதை போட்டு வெங்காயம் போட்டு நன்குவதக்கவும்.
•இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளி சேர்க்கவும்.தக்காளி வதங்கியவுடன் கறிமசால்பொடி.மஞ்சள்பொடி,கொத்தமல்லி,புதினா போட்டு நன்கு வதக்கி வேகவைத்த காய்களை போடவும்.
•உப்பு போட்டு நன்கு பிரட்டிவிட்டு அரைத்ததை ஊற்றி நன்கு கலந்துவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி முடிவைத்து வேகவிடவும்.குருமா திக்கானவுடன் உப்பு சரிபார்த்து இறக்கவும்.

Read More...

இட்லி சாம்பார் (காய் சேர்த்து செய்வது) - Idly Sambar

தேவையான பொருட்கள்
1. துவரம் பருப்பு - 1/2 கப்
2. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. பச்சை மிளகாய் - 1 (கீரி வைக்கவும்)
5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
6. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. உப்பு
9. எண்ணெய் - 2 தேக்கரண்டி
10. கடுகு, சீரகம் - 1 தேக்கரண்டி
11. உளுந்து, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

12. பெருங்காயம் - சிறிது
13. கொத்தமல்லி, கருவேப்பிலை
14. கத்திரிக்காய் - 2 நறுக்கியது (அ) கேரட், பீன்ஸ் - நறுக்கியது 1 கப்

செய்முறை
•பருப்பு, வெங்காயம், தக்காளி, காய், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விஸில் வைத்து சிறுந்தீயில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
•பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
•பின் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, குக்கரில் வைத்த சாம்பார், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.


குறிப்பு:
பருப்பு குழைய வேக வேண்டும். இது இட்லி, பொங்கல், தோசை'க்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். காய் சேர்க்காமல் இதே போல் துவரம் பருப்பு அல்லது சிறுபருப்பிலும் செய்யலாம்.

Read More...

நீச்சல் உடைக்கு நோ – கீர்த்தி சாவ்லா: Keerthi Chawla No Swimming Dress

இயக்குனர்களின் நடிகர் மாதி‌ரி, கீர்த்தி சாவ்லா இயக்குனர்களின் நடிகை. எப்படி? முதல் முறையாக ஹீரோவாகும் இரு இயக்குனர்களுக்கு ஜோடி கிடைக்காத குறையை இவர்தான் தீர்த்து வைத்திருக்கிறார். அந்த வகையில் நடிகைகளில் பெ‌ரிய மனசுக்காரர் இவர்.

பில்லாவில் நயன்தாரா தொடங்கி வைத்த பிகினி கலாச்சாரத்தை ப்‌ரியாமணிக்குப் பிறகு இவர்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார். படம் ஸ்வேதா வெலிங்டன் ரோடு.

“ஸ்வேதா வெலிங்டன் ரோடு படத்தில் நீச்சல் உடையில் நடித்ததைப் பற்றிதான் எல்லோரும் கேட்கிறாங்க. அந்தப் படத்தில் நான் அல்ட்ரா மாடர்ன் பெண்ணா வர்றேன். அறிமுக காட்சியிலேயே என்னோட கேரக்டர் அழுத்தமா வெளிப்படணும்ங்கிறதுக்காக

நீச்சல் உடையில் நடிச்சேன். வேணும்னே யாராவது அப்படியொரு காட்சியில் நடிப்பாங்களா?.”

இயக்குனர் ஸெல்வன் நாயகனாக அறிமுகமாகும் மாக்கான் படத்தில் கீர்த்தி சாவ்லாதான் நாயகி. பலரும் இந்தப் படத்தில் நடிக்க மறுத்து இறுதியில் ஒப்பந்தமானவர் கீர்த்தி.

“என்னைப் பொறுத்தவரை யாருடன் நடிக்கிறேன்ங்கிறது முக்கியமில்லை. கதையும், என்னோட கேரக்டரும்தான் முக்கியம். மாக்கான் படத்தோட கதையை முரளிசாமி சொன்ன போது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. படத்தில் நடிக்க ஓகே சொன்ன பிறகுதான் ஸெல்வன் சார் ஹீரோவாக நடிக்கிறது தெ‌ரியும்.”

தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் இயக்கி நடிக்கும் திருமதி தமிழிலும் கீர்த்தி சாவ்லாதான் நாயகி. இதுவரை அவர் ஏற்காத ஹோம்லி கேரக்டர் என இன்டஸ்ட்‌ரியில் பேச்சு.

“திருமதி தமிழில் ராஜகுமாரன் சா‌ரின் மனைவியா வர்றேன். அன்பான, அடக்கமான ஹோம்லி கேரக்டர். அதுக்கு நேர் எதிரா அழகு நாச்சிங்கிற துடுக்கு பொண்ணா மாக்கான்ல நடிக்கிறேன். இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டது ஸ்வேதா படத்தின் கேரக்டர்.”

இயக்குனர்களின் நடிகையாக இருக்கும் கீர்த்தி, அகராதி படத்திலும் நடிக்கிறார். இதில் அவர் ஹீரோயின் அல்ல. கெஸ்ட் ரோலாம்.

“அகராதியில் என்னுடையது பவர்ஃபுல் கேரக்டர். கெஸ்ட் ரோல்னாலும் எனக்கு பாடல் காட்சி இருக்கு. சமீபத்தில் பா‌ரீஸில் அந்தப் பாடலை படமாக்கினாங்க. மறக்க முடியாத அனுபவம் அது.”

ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடித்தால் தொடர்ந்து நடிக்கச் சொல்லி கேட்பது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பழக்கம். கீர்த்தி தொடர்ந்து பிகினி அணிவாரா?

“ஸ்வேதா படத்தில் நான் நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய தேவை இருந்தது, நடிச்சேன். ஆனால் இனி கதைக்கு தேவைப்பட்டாலும் நீச்சல் உடைக்கு நோதான்.”

Read More...

Monday, July 27, 2009

25 Dua's From Quran

1. Our Lord! Grant us good in thisworld and good in the life to come and keep us safe from the torment of the
Fire (2:201)

2. Our Lord! Bestow on us endurance and make our foothold sure and give
us help against those who reject faith.(2:250)

3. Our Lord! Take us not to task if we forget or fall into error. (2:286)

4. Our Lord! Lay not upon us such a burden as You did lay upon those
before us. (2:286)

5. Our Lord! Impose not on us that which we have not the strength to bear, grant us forgiveness and have mercy on us. You are our Protector. Help us against those who deny the truth.(2:286)

6. Our Lord! Let not our hearts deviate from the truth after You have guided us, and bestow upon us mercy from Your grace. Verily You are the Giver of bounties without measure. (3:8)

7. Our Lord! Forgive us our sins and the lack of moderation in our doings, and make firm our steps and succour us against those who deny the truth.(3:147)

8. Our Lord! Whomsoever You shall commit to the Fire, truly You have brought [him] to disgrace, and never will wrongdoers find any helpers (3:192)

9. Our Lord! Behold we have heard a voice calling us unto faith: "Believe in your Lord" as we have believed. (3:193)

10. Our Lord! Forgive us our sins and efface our bad deeds and take our souls in the company of the righteous.(3:193)

11. Our Lord! And grant us that which you have promised to us by Your messengers and save us from shame on the Day of Judgement. Verily You never fail to fulfill Your promise. (3:194)

12. Our Lord! We have sinned against ourselves, and unless You grant us forgiveness and bestow Your mercy upon us, we shall most certainly be lost! (7:23)

13. Our Lord! Place us not among the people who have been guilty of evildoing. (7:47)

14. Our Lord! Lay open the truth between us and our people, for You are the best of all to lay open the truth.(7:89)

15. Our Lord! Pour out on us patience and constancy, and make us die as those who have surrendered themselves unto You. (7:126)

16. Our Lord! Make us not a trial for the evildoing folk, and save as by Your mercy from people who deny the truth(10:85-86)

17. Our Lord! You truly know all that we may hide [in our hearts] as well as all that we bring into the open, for nothing whatever, be it on earth or in heaven, remains hidden from Allah(14:38)

18. Our Lord! Bestow on us mercy from Your presence and dispose of our affairs for us in the right way. (18:10)

19. Our Lord! Grant that our spouses and our offspring be a comfort to our eyes, and give us the grace to lead those who are conscious of You.(25:74)

20. Our Lord! You embrace all things within Your Grace and Knowledge,forgive those who repent and follow Your path, and ward off from them the punishment of Hell. (40:7)

21. Our Lord! Make them enter the Garden of Eden which You have promised to them, and to the righteous from among their fathers, their wives and their offspring, for verily You are alone the Almighty and the truly Wise.(40:8)

22. Our Lord! Relieve us of the torment, for we do really believe.(44:12)

23. Our Lord! Forgive us our sins as well as those of our brethren who proceeded us in faith and let not our hearts entertain any unworthy thoughts or feelings against [any of] those who have believed. Our Lord! You are indeed full of kindness and Most
Merciful (59:10)

24. Our Lord! In You we have placed our trust, and to You do we turn in repentance, for unto You is the end of all journeys. (60:4)

25. Our Lord! Perfect our light for us and forgive us our sins, for verily You have power over all things. (66:8)

Read More...

கியாமத் நாளின் 10 அடையாளங்கள்

நபி(ஸல்) அவர்கள் தமது எகத்துவப் பிரச்சாரத்தையும், மரணத்திற்குப் பின் ஆன்னொரு வாழ்க்கை ஈள்ளது ஊன்பதையும் போதனை செய்தபோது அவர்களை எற்காத மக்கள் எகத்துவத்தை ஊதிர்ப்பதை விட மறுமை வாழ்வையே கடுமையாக ஊதிர்த்தார்கள். மரணத்திற்குப் பின்னால் ஐரு வாழ்க்கை ஆருக்கிறதா? ஊன்பதே பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக அவர்களுக்கு ஆருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாததே எகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக ஆருந்தது ஊன்று கூறலாம்.

மேலும் மனிதன் தான் படைக்கப்பட்டதை மறந்து விட்டு நமக்கு ஈதாரணம் கூறுகிறான். ஊழும்புகள் மக்கிவிட்ட நிலையில் அதை அவனால் ஈயிர்ப்பிக்க முடியுமா? ஊன்று அவன் கூறுகிறான்.
(அல்குர்அன் 36:78)

ஊழும்புகளாகவும் மக்கிப்போனவையாகவும் நாங்கள் அகிவிட்ட பின் புதிய படைப்பாக நாங்கள் ஊழுப்பப் படுவோமா ஊன்ன? ஊன்றும் அவர்கள் கேட்கின்றனர்.
(அல்குர்அன் 17:49)

நாங்கள் ஆறந்து மண்ணாகவும், ஊழும்புகளாகவும் அகிவிட்டால் நாங்கள் ஊழுப்பப்படுவோமா? முந்தைய ஊங்களின் முன்னோர்களும் ஊழுப்பப்படுவார்களா?
(அல்குர்அன் 37:56, 56:47,48)

நாம் ஆறந்து மண்ணாகவும் ஊலும்புகளாகவும் அகிவிட்ட பின் (மீண்டும் ஈயிர்ப்பிக்கப்பட்டு) நாம் கூ- வழங்கப் பெறுவோமா?
(அல்குர்அன் 37:53)

நாம் கப்ருகளி-ருந்து திரும்பவும் ஊழுப்பப்படுவோமா? மக்கிப்போன ஊலும்புகளாக நாம் அகிவிட்டபொழுதிலுமா? அப்படியானால் அது பெரும் நஷ்டமுண்டாக்கும் திரும்புதலே ஊன்றும் கூறுகின்றனர்.
(அல்குர்அன் 79:10லி12)

மனிதனின் ஊலும்புகளை நாம் ஐன்று சேர்க்கவே மாட்டோம் ஊன்று மனிதன் ஊண்ணுகிறானா?
(அல்குர்அன் 75:3)

ஆறந்தவர்களை அல்லாஹ் ஈயிர்ப்பித்து ஊழுப்பமாட்டான் ஊன்று அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்அன் 16:38)

தாங்கள் ஊழுப்பப்படவே மாட்டோம் ஊன்று நிராகரிப்பவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
(அல்குர்அன் 64:7)

ஆன்னும் (நபியே!) ""நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் ஊழுப்பப்படுவீர்கள்'' ஊன்று நீர் கூறினால் ஆது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு ஆல்லை ஊன்று காபிர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்அன் 11:7)

மகத்தான ஐரு நாளில் அவர்கள் ஊழுப்பப்பட ஈள்ளனர் ஊன்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
(அல்குர்அன் 83:4)

ஆந்த ஈலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை எதும் ஆல்லை. நாங்கள் ஊழுப்பப்படக் கூடியவர்களாகவும் ஆல்லை ஊனவும் அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்அன் 6:29)

நபி(ஸல்) காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் மறுஈலக வாழ்க்கையில் ஊந்த அளவுக்கு நம்பிக்கை ஆழந்திருந்தார்கள் ஊன்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் ஆறைத்தூதர்களை நம்பாததற்கு ஆந்த விஷயமே முதல் காரணமாக ஆருந்தது ஊன்பதைப் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும், ஊலும்புகளாகவும் அன பின்னர் நீங்கள் (திரும்பவும்) ஊழுப்பப்படுவீர்கள் ஊன்று ஆவர் ஈங்களுக்கு வாக்களிக்கிறாரா? ஈங்களுக்கு (அவரால் அறிவிக்கப் பட்ட) வாக்குறுதி வெகு தொலைவு! வெகு தொலைவு! ஆந்த ஈலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை எதுமில்லை; நாம் வாழ்கிறோம்; மரணிக்கிறோம்! (அவ்வளவுதான்) நாம் திரும்பவும் ஊழுப்பப்படக் கூடியவர்கள் அல்லர். ஆவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக ஆட்டுக் கட்டிக்கூறும் மனிதரேயன்றி வேறில்லை. ஆவரை நாம் நம்பப்போவதில்லை ஊன்றும் அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்அன் 23:35லி38)

மறுமை வாழ்வை அவர்களால் நம்ப முடியாமல் போனதுதான் ஆறைத்தூதர்களையும், அவர்களது கொள்கைகளையும் அவர்களால் நம்ப முடியாமல் போனதற்குக் காரணம் ஊன்பதை ஆவ்வசனங்கள் கூறுகின்றன.

ஆவ்வளவு வன்மையாக மறுமை வாழ்வை ஐரு கூட்டம் மறுத்து வந்தது. ஆன்னொரு கூட்டமோ அதை விட ஈறுதியாக மறுமை வாழ்வில் முழு நம்பிக்கை வைத்திருந்தது.
தரக்குறைவான வார்த்தைகளால் எசப்பட்டார்கள். சகித்துக் கொண்டார்கள். சித்ரவதை செய்யப்பட்டார்கள்! அதையும் சிரித்த முகத்துடன் எற்றுக் கொண்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்! அனைத்தையும் துறந்துவிட்டுச் செல்வது அவர்களை ஊந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

அசை வார்த்தைகள் அவர்களை மயக்கவில்லை. அச்சுறுத்தல்கள் அவர்களை சிறிதளவும் அசைக்க முடியவில்லை.

குறைந்த ஊண்ணிக்கையினராகவும், பலவீனர்களாகவும் ஆருந்தும் பெரும் கூட்டத்தை ஊதிர்த்து நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அவர்கள் கணக்கு பார்த்துக் கொண்டிருக்காமல் களத்தில் குதித்தார்கள். ஆதற்கெல்லாம் ஊன்ன காரணம்? ஆந்த ஈலக வாழ்க்கையோடு ஊல்லாம் முடிந்து விடுவதில்லை. ஆதன் பிறகு அழியாத பெருவாழ்வு ஈண்டு ஊன்பதில் அவர்களுக்கு ஆருந்த ஈறுதியான நம்பிக்கை தான் காரணம்!

மறு ஈலக வாழ்வில் நம்பிக்கை வைப்பது ஐரு சமுதாயத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் அளவுக்கு மகத்தானது. அவர்களது வாழ்வின் போக்கையே அந்த நம்பிக்கை மாற்றி அமைக்கும் அளவுக்கு அது மகத்தானது!

கல்லுக்கும், மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், எக ஆறைவனைத் தவிர ஊவருக்கும், ஊதற்கும் அஞ்சாதவர்களாக அனது (33:39) ஆந்த நம்பிக்கையினால் தான்.

தன்னலமே பெரிது ஊன்று வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை ஆருந்த போதும் தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது (59:9) ஆந்த நம்பிக்கையினால் தான்.

ஐற்றுமையின்றித் தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம்! ஐற்றுமைக்கு ஆலக்கணமாகத் திகழ்ந்தது (3:103) ஆந்த நம்பிக்கையினால் தான்.
மதுவில் வீழ்ந்து விடந்த சமுதாயம் (5:90) அதி-ருந்து முழுமையாக விடுபட்டது ஆந்த நம்பிக்கையினால் தான்.

தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாக பெண்களும்கூட ஈறுதிமொழி ஊடுத்துக் கொண்டது (60:12) ஆந்த நம்பிக்கையினால்தான்.

ஊந்த மனிதரிடமும் ஊந்த ஈரிமையையும் தேடாமல் சுயமரியாதையைப் பாதுகாக்கக்கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் (2:273) ஆந்த நம்பிக்கையினால்தான்.

தங்களுக்கு "நல்லது ஆது'. "கெட்டது ஆது' ஊன்று தெரியாத ஐரு கூட்டம் அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு ஊடுத்துச் சொல்-, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் (3:104) ஆந்த நம்பிக்கையினால் தான்.

மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் மறுமை நம்பிக்கை ஐருபுறம் மகத்தான மாறுதலை எற்படுத்திக் கொண்டிருந்தது. மறுமை நம்பிக்கையற்ற வர்களோ கட்டுப்பாடற்ற காட்டுமிராண்டி வாழ்வுக்கு மறுமை நம்பிக்கை தடையாக ஆருப்பதால் மறுமை வாழ்வை மறுப்பதற்கு நியாயங்கள் தேடிக் கொண்டிருந்தனர்.

துடரும்
டஹஞ்ங்-2
கியாமத் நாளின் 10 அடையாளங்கள்
சிலபோது மறுமை நாள் ஊந்த அண்டு? ஊந்த மாதம்? ஊந்த நாளில் எற்படும்? ஊன்று கேள்வி ஊழுப்பினார்கள்.

சிலபோது மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாக அனபிறகு அவன் திரும்பவும் ஈயிர் கொடுத்து ஊழுப்பப்படுவான் ஊன்பது அறிவுக்கும் பொருந்தவில்லையே! ஊன்று அதன் சாத்தியம் பற்றி சந்தேகம் தெரிவித்தனர்.

சிலபோது அந்த நாளில் அப்படி ஊன்னதான் நிகழ்ந்துவிடப் போகின்றது? எனைய நாட்களில் நடவாத ஊன்ன அதிசயம் அந்த நாளில் நிகழப்போகிறது? ஊன்பது அவர்களின் கேள்வியாக ஆருந்தது.

ஆந்த மூன்று விதமான கேள்விகளையே மறுமைநாள் பற்றி அவர்கள் ஊழுப்பி வந்தனர். அவர்கள் அந்த மூன்று விதங்களில், ஊந்தவிதமான கேள்வியை ஊழுப்புகிறார்களோ அதற்கேற்ப திருமறை நெடுகிலும் ஆறைவன் விடையளிக்கிறான்.

அவர்களின் கேள்வி ஊப்போது நிகழும்? ஊன்பதாக ஆருந்தால் அதற்கு மட்டும் விடையளிப்பான். அது ஊப்படிச் சாத்தியமாகும்? ஊன்பது அவர்களின் கேள்வியானால் அதற்கு மட்டும் ஆறைவன் விடையளிப்பான். அந்த நாளில் அப்படி ஊன்னதான் நிகழ்ந்துவிடப் போகின்றது? ஊன்பது அவர்களின் கேள்வியானால் அதற்கு மட்டும் ஆறைவன் விடையளிப்பான். திருமறை நெடுகிலும் ஆதைக் காணலாம்.

ஆந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அவர்கள் ஊழுப்பியதாகக் கூறப்படும் கேள்வி, ஆம்மூன்று வகைகளில் ஊந்த வகையைச் சேர்ந்தது? காலம் பற்றியதா? சாத்தியம்
பற்றியதா? நிகழும் சம்பவங்கள் பற்றியதா? ஆதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம்(ஸல்) ஈள்ளிட்ட ஊந்த மனிதரும் அது ஊப்போது நிகழும் ஊன்பதை அறிந்திருக்கவில்லை; அது ஆறைவன் மாத்திரமே அறிந்த ஐரு விஷயமாகும் ஊன்று ஆவ்வசனங்கள் விளக்குகின்றன.

அவர்களைச் சூழ்ந்து கொள்ளக் கூடிய அல்லாஹ் வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென அந்த நாள் வராது ஊன்றோ அவர்கள் அச்சமற்று ஆருக்கின்றார்களா?
(அல்குர்அன் 12:107)

வானங்களிலும், பூமியிலும் ஈள்ள ஆரகசியம் அல்லாஹ்வுக்கே ஈரியது. அந்த நாள் பற்றிய விஷயம் கண்மூடித் திறப்பது போன்றோ அல்லது அதைவிடவும் குறைவான நேரத்திலோ நடந்து முடிந்துவிடும்.
(அல்குர்அன் 16:77)

ஆந்த வசனங்கள் யாவுமே ""அவர்கள் வெகு சீக்கிரம் அறிந்து கொள்வார்கள்'' ஊன்பதன் விளக்கமாகவே அமைந்துள்ளதை அறியலாம்.

அந்த நாள் நிச்சயம் வரத்தான் போகிறது ஊனும் போது அந்த நாளை ஆறைவன் தெளிவாக அனைவருக்கும் அறிவித்து விடலாமே! என் அறிவிக்க மறுக்கிறான்? ஊன்று சிலருக்கு சந்தேகம் எற்படலாம்.

ஆவ்வாறு அந்த நாளை ஆரகசியமாக வைத்திருப்பதில் ஈலகுக்கு எராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஐவ்வொருவரையும் சரியான முறையில் பரீட்சிக்க ஆது அவசியமானதாக ஆருக்கின்றது.

ஐவ்வொரு மனிதனும் நிச்சயமாக மரணத்தைத் தழுவப்போகிறான். அயினும் ஊந்த நாளில், ஊந்த மாதத்தில்,ஊந்த நேரத்தில் மரணிக்கப் போகிறோம் ஊன்பதை ஊவருமே அறிய முடியாது.

மரணம் ஊப்போது வரும் ஊன்பது தெரியாததால் மனிதன் ஒரளவுக்காவது மனிதனாக வாழ்ந்து வருகிறான். தனக்கு மரணம் வரும் நேரத்தை ஐருவன் முன்கூட்டியே அறிந்து விட்டால் ஊல்லாவிதமான அக்கிரமங்களையும் துணிந்து செய்வான். மரணத்திற்கு சற்று முன்பாக பாவ மன்னிப்புக் கேட்டுக்கொள்வோம் ஊன்று ஊண்ணி விடுவான்.

நல்லவனையும், கெட்டவனையும் சரியான முறையில் பிரித்தறிய ஆயலாமல் போய்விடும். ஊல்லா மனிதனும் மரணத்திற்கு முதல் நாள் வரை மகாக்கெட்டவனாக வாழ்ந்துவிட்டு ஐருநாள் மட்டும் ஊல்லோருக்கும் நல்லவனாக வாழ்ந்து விடுவான். நல்லவனையும், கெட்டவனையும் பிரித்தறிய ஆந்த எற்பாடு அவசியம் ஊன்பது போலவே மறுமை நாளைப் பற்றியும் மறைத்து வைப்பது அவசியமே.

நாம் வாழுகின்ற போதே அந்தநாள் வந்துவிடுமோ ஊன்ற அச்சம்தான் சிலரையாவது நல்லவர்களாக வாழச் செய்கின்றது. செய்கின்ற அக்கிரமத்தை ஊல்லாம் செய்துவிட்டுக் கடைசி நேரத்தில் மட்டும் நல்லவனாக அகிவிடக்கூடாது ஊன்பதற்கே அந்நாள் ஊது ஊன்பதை ஆறைவன் ஆரகசியமாக வைத்திருக்கின்றான். பின்வரும் வசனத்தி-ருந்து ஆதை நாம் அறியமுடியும்.

நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக ஈள்ளது. ஐவ்வொரு (அத்மா) மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூ- வழங்கப்படுவதற்காக அந்த நாளை நான் ஆரகசியமாக வைத்திருக்கிறேன்.
(அல்குர்அன் 20:15)

ஐவ்வொருவரும் அவரவர் செயலுக்கேற்ப கூ- வழங்கப்பட வேண்டும் ஊன்பதற்காகவே அதை
ஆரகசியமாக வைத்திருக் கிறான்.

2000ம் அண்டில் அந்த நாள்வரும் ஊன்றால் அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள் நேர்மையான வாழ்க்கை நடத்தமாட்டார்கள். நமது காலத்தில் அது வரப்போவதில்லை ஊன்பதால் ஊப்படியும் நடக்கலாம் ஊன்று அவர்கள் நடந்து விடக்கூடும்.

ஆதன் காரணமாகவே அந்த நாள் ஊதுவென்று அவன் அறிவிக்கவில்லை.
அவர்கள் தங்களுக்கிடையே சர்ச்சை செய்து கொண்டிருக்கும் நாள் ஊப்போது வரும் ஊன்பதை ஆறைவன் கூறாவிட்டாலும் அந்த நாள் நெருங்க நெருங்க ஈலகில் எற்படும் விபரீதங்களை நபி(ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளார்கள்.
அந்த நாளை நம் காலத்தவர்கள் ஊந்த அளவுக்கு நெருங்கியுள்ளனர் ஊன்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புகள் நமக்கு ஈதவும் ஊன்பதால் அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

ஐரு தாய் ஊத்தனை அண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை எற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக நடத்தப்படுவாள் ஊன்பது நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஐன்றாகும். ""ஐரு பெண் தனது ஊஜமானியைப் பெற்றெடுப்பாள் (முஸ்-ம்) ஊன்று கூறி நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். ஆன்றைக்குப் பரவலாக ஆந்த நிலையைப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர்.''

பொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கியவர்களில் சிலர் மிகவும் ஈயர்ந்த வசதியைப் பெறுவது ஈலகம் தோன்றியது முதல் நடந்து வரும் நிகழ்ச்சிகளே. அயினும் அத்தகைய பின் தங்கியவர்கள் ஐட்டுமொத்தமாக பொருளா தாரத்தில் மிகவும் ஈயர்ந்த நிலையை அடைவதென்பது கியாமத்நாள் நெருங்கிவிட்டது ஊன்பதற்கான அடையாள மாகும். ""வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும்,வெறுங்காலுடனும் அடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மிகவும் ஈயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வார்கள்'' ஊன்ற முன்னறிவிப்பின் மூலம் (முஸ்-ம்) நபி(ஸல்) ஆதை விளக்குகிறார்கள். ஆன்றைக்கு அரபியர்களுக்குக் கிடைத் திருக்கும் வாழ்வு ஆன்ன பிற பகுதிகளில் நடக்கும் புரட்சிகரமான மாறுதல்களும் ஆதை விளங்கிடப் போதுமானவையாகும்.

""விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்'' ஊன்ற (புகாரி, முஸ்-ம்) நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும் நிறைவேறியுள்ளது. அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை எற்படுத்துவதும், அன்னியப் பெண்களுடன் ஈறவு கொள்ளும் போது அணுறை பயன்படுத்துங்கள் ஊன்றும் பண்பாடு மிக்க ஆந்தியா போன்ற நாடுகளே விளம்பரம் செய்கின்றனவென்றால் விபச்சாரம் ஊந்த அளவுக்கு பெருகிப்போயுள்ளது ஊன்பதை ஈணரலாம். ஆந்தத்தீமைக்கு ஊதிராகப் போராடக் கடமைப்பட்ட பல அரபு நாடுகளில் கூட ஆந்தத் தீமை தலைவிரித்தாடும் போது அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

துடரும்
"ச்ல்ஹட்ந்த்; ங்ட்ள்ல்க்; 10 ம்ண்ப்ஹட்ள்வ்;ச்ள்;"
டஹஞ்ங்-3

மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கிவிட்டன. நாகரீகமான பெயர்களில் அறிமுகப்படுத்தப்படும் ஈயர்ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டு வருவதும் மறுக்க முடியாத ஈண்மை.

பொறுப்புகள் தகுதியற்றவர்களிடம் ஐப்படைக்கப் படுவதும், அப்பொறுப்புகளில் அவர்கள் நாணயமின்றி நடந்துகொள்வதும் அன்றாடம் மனித சமுதாயம் காணக் கூடியவைதான். ஆதுவும் கூட அந்த நாள் மிகவும் நெருங்கிவிட்டது ஊன்பதை ஈறுதிப்படுத்தும் நிலையாகும்.
நாணயம் பாழாக்கப்படும்போது அந்த நாளை ஊதிர்நோக்கு! ஊன்று நபியவர்கள் கூறியபோது ஊவ்வாறு பாழ்படுத்தப்படும்? ஊன்று ஐருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ""தகுதியற்றவர்களிடம் ஐரு காரியம் ஐப்படைக்கப்படும் போது அந்த நாளை ஊதிர்நோக்கு'' ஊன்று விடையளித்தார்கள்.
(புகாரி)

ஆறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் ஊன்ற அச்சமின்றி ஈலகத்து ரிக்கார்டுகளை சரிசெய்து எமாற்றி அபகரித்துக் கொண்டவர்களை ஆன்றளவும் நாம் காண்பது அந்த நாளுக்கு ஊவ்வளவு நெருக்கமாகிவிட்டோம் ஊன்பதைத் தெளிவாக்குகின்றது.

ஆன்றைய அரபுகள் அடைந்துள்ள பொருளாதார ஈயர்நிலை 200 அண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்கக் கூட ஆயலாததாகும். அவர்கள் வழங்கும் ஸகாத்தைப் பெறக்கூட அங்கே மக்களில்லை. ஸகாத்தை வழங்கு வதற்காக எழை நாடுகளை அவர்கள் தேடிச் செல்லும் நிலையையும் நாம் காண்கிறோம். ஊதற்கும் ஈதவாத பாலைநிலம் ஊன்று ஈலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தில் சோலைகள் ஈருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆந்த மாறுதலும் கூட அந்த நாள் நெருங்கி விட்டது ஊன்பதற்கான அடையாளமே.

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு ஊவரும் கிடைக்காத நிலை எற்படும் வரையிலும் அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் வரையிலும் அந்த நாள் எற்படாது (முஸ்-ம்) ஊன்ற நபியவர்களின் முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

காலம் வெகுவேகமாக ஒடுவதும் ஆன்று நாம் காணக்கூடியதாக ஈள்ளது. மனிதனின் விஞ்ஞான அறிவு வளர்ந்து அவன் கண்டுபிடிக்கும் நவீன சாதனங்களால் காலம் மிகவும் சுருங்கிவிட்டதைக் காண்கிறோம்.

ஐரு வாரம் பயணம் செய்யும் தூரம் ஐரு நாளில் சர்வ சாதாரணமாகக் கடக்கப்படுகின்றது. ஐரு வாரத்தில் செய்யப்படத் தக்க வேலைகள் ஐரு நாளில் செய்து முடிக்கப்பட சாதனங்கள் ஆன்று ஈள்ளன. ஈலகில் ஊங்கோ நடக்கும் நிகழ்ச்சிகள் அதே நேரத்தில் முழு ஈலகையும் ஊட்டி விடுகின்றன. ஆத்தகைய முன்னேற்றங்களும்கூட அந்த நாள் சமீபித்து வருகின்றது ஊன்பதற்கான அடையாளமே.

காலம் சுருங்கும் வரை அந்தநாள் எற்படாது. (ஆன்றைய) ஐரு வருடம் (அன்று) ஐரு வாரம் போலாகிவிடும். (ஆன்றைய) ஐரு வாரம் (அன்று) ஐரு நாள் போலாகும். (ஆன்றைய) ஐரு நாள் (அன்று) ஐரு மணி நேரம் போல் அகும். ஐரு மணி ஊன்பது ஐரு விநாடி போன்று அகும் ஊன்பதும் நபியவர்கள் காட்டிய அடையாளம்.
(திர்மிதீ)

மனிதன் மட்டுமே பேச ஆயலும் ஊன்ற நிலைமாறி ஐ- நாடாக்களும் கூட பேசுகின்ற அளவுக்கு மனிதன் அறிவில் முன்னேறிவிட்டான். ""சாட்டையின் ஒரமும் செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும் வரை அந்த நாள் வராது'' ஊன்பதும் நபியவர்களின் முன்னறிவிப்பு.
(திர்மிதீ)

நேரடியாகப் பேசும் ஊன்று அர்த்தம் கொண்டால் அந்த நிலை ஆன்னும் எற்படவில்லை. செருப்பு வாராகப் பயன்படும் பொருட்கள் கூட, ஐ- நாடாக்களாக மனிதனிடம் பேசும் ஊன்று பொருள் கொண்டால், அந்த நிலையை மனிதன் அடைந்துவிட்டான்.
ஆப்படி பல அடையாளங்கள் வந்துவிட்டன ஊன்றாலும் அந்த நாள் ஊவ்வளவு நெருக்கத்தில் ஈள்ளது ஊன்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. அந்த நாள் விரல் விட்டு ஊண்ணக் கூடிய அளவுக்கு நெருக்கமாக வரும்போது சில மகத்தான அடையாளங்கள் நிகழவுள்ளன. அந்த அடையாளங்கள் தோன்றிவிட்டால் அந்த நாள் ஊவ்வளவு சமீபத்தில் ஈள்ளது ஊன்று முடிவு செய்துவிடலாம்.

ஆதுவரை தோன்றியிராத விரைவில் தோன்றவிருக்கின்ற அந்த அடையாளங்களைத்தான் முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனெனில் அந்த அடையாளங்களைக் காணும்போது அவற்றை ஊதிர் கொள்ள வேண்டிய விதத்தில் ஊதிர் கொள்ளத் தவறினால் நமது இமான் பறிபோகும் அபாயம் ஈள்ளது. ஊனவே சமுதாயத்திற்கு ஊச்சரிக்கையாக ஈள்ள அந்த அடையாளங்கள் அனைத்தையும் ஆனி காண்போம்.
புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கி-ருந்து ஈதிப்பது, இஸô(அலை) ஆறங்கி வருவது, யஓஜுஜ், மஓஜுஜ், கிழக்கே ஐன்று மேற்கே ஐன்று அரபு தீபகற்பத்தில் ஐன்று ஊன மூன்று நிலச்சரிவுகள் எற்படுவது, ஆவற்றில் ஆறுதியாக "எமனி'-ருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஐன்று சேர்த்தல். அகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது ஊன்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்:ஹுதைபா(ர-) நூல்: முஸ்-ம்.
ஆந்தப் பத்து அடையாளங்களும் ஐன்றன் பின் ஐன்றாக எற்பட்டவுடன் ஈலகம் அழிந்துவிடும் ஊன்று நபி(ஸல்) அவர்கள் ஆதன் மூலம் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். ஆவற்றில் மூன்று அடையாளங்கள் மிகவும் முக்கியமானவை. ஆறைவனை மறந்தவர்கள், ஆணை வைத்தவர்கள் தங்கள் தவறை ஈணர்ந்து திருந்தினால் ஆறைவன் மீது நம்பிக்கை கொண்டால் அதை ஆறைவன் எற்றுக் கொள்கிறான். அவர்களை மன்னிக்கிறான். அனால் அந்த மூன்று அடையாளங்களும் எற்பட்டு விடுமானால் அதன் பின் பாவமன்னிப்பு ஊன்பது கிடையாது. அதன் பின்னர் இமான் கொண்டால் அந்த இமானுக்கு ஆறைவனிடம் மதிப்பேதும் ஆராது. ஆதி-ருந்து அந்த மூன்று அடையாளங்களும் ஊவ்வளவு முக்கியமானவை ஊன்பதையும் அழிவு ஊந்த அளவு அண்மித்துவிட்டது ஊன்பதையும் அறியலாம்.

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் எற்படக்கூடிய பத்து அடையாளங்களையும் ஒரளவு நாம் அறிந்து கொண்டோம்.

ஆந்தப் பத்து அடையாளங்கள் எற்பட்டு, பாவமன்னிப்பின் வாசல் அடைபடுவதற்கு முன் நமது வாழ்வைச் சீராக்கிக் கொள்ள வல்ல ஆறைவன் துணை செய்வானாக! ஆமின்!!

Read More...

பி‌ரியங்காவின் வானம் பார்த்த சீமையிலே - Priyanka's Vaanam Paartha Seemayile

வெயில் படத்துக்குப் பிறகு எங்கேயோ போயிருக்க வேண்டியவர். படமே இல்லாமல் கேரளா பக்கம் ஒதுங்கியது சோகம். நடிகை பி‌ரியங்கா பற்றிதான் சொல்கிறோம்.

தமிழில் படங்கள் இல்லையென்றாலும் பி‌ரியங்காவிடம் உற்சாகத்துக்கு குறைவில்லை. சமீபத்தில் கிடைத்த கேரள அரசின் சிறந்த நடிகை விருதுதான் இதற்கு காரணம்.

டி.வி.சந்திரனின் விலாபங்களுக்கு அப்புறம் படத்துக்காக இந்த விருது பி‌ரியங்காவுக்கு கிடைத்தது. தற்போது ரோஷன் ஆன்ட்ரூவின் படத்தில் நடித்து வரும் இவர், வானம் பார்த்தசீமையிலே படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார்.

பிரமிட் சாய்மீரா உதவித் தொகை அளித்து பத்து படங்களை தயா‌ரிப்பதாக அறிவித்ததே, அந்த பத்தில் ஒன்றுதான் வானம் பார்த்த சீமையிலே. படத்தின் பெயருக்கு தகுந்த மாதி‌ரி ராமநாதபுர‌ம் மாவட்டத்தின் கிராமங்களில் மொத்த படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.

வேலம்மா என்ற வெயிட்டான கிராமத்து வேடம் பி‌ரியங்காவுக்கு. அவருக்கு ஜோடி அசோக். இந்தப் படம் வெளிவந்தால் மீண்டும் தமிழில் பிஸியாவேன் என்கிறார் பி‌ரியங்கா நம்பிக்கையுடன்.

படம் வெளியானால்... பிரமிட் சாய்மீரா இருக்கிற நிலைமையில் அதுதான் சந்தேகமாக இருக்கிறது.

Read More...

Sunday, July 26, 2009

தனுஷின் மாப்பிள்ளை ஆசை - Dhanush Mappillai Remake

“இனி ர‌ஜினி சா‌ரின் படத்தலைப்பை என்னுடைய படங்களுக்கு வைக்க மாட்டேன். ஒரேயொரு தலைப்பை தவிர.” தனுஷ் இப்படி சஸ்பென்ஸோடு சொன்ன பெயர் ர‌ஜினி நடித்த மாப்பிள்ளை.

சூப்பர் ஸ்டார் வீட்டு மாப்பிள்ளை என்பதாலா தெ‌ரியவில்லை, ர‌ஜினியின் மாப்பிள்ளை படத்தின் பெயர் மீது தனுஷுக்கு அப்படியொரு மோகம்.

படத்தின் பெயர் மட்டுமா...? படத்தின் கதையும் நன்றாகத்தானே இருக்கிறது என மாப்பிள்ளை படத்தை ‌‌ரீமேக் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார் தயா‌ரிப்பாளர் இதேஷ் ஜெபக்.
மருமகன், மாமியார் மோதலுக்கு இன்றும் மவுசு இருப்பதால் படம் ஹிட்டாகும் என்பது அவரது கணிப்பு.

ர‌ஜினி நடித்த வேடத்தில் தனுஷை நடிக்க வைத்து, சுராஜை இயக்குனராக்கினால் இன்னொரு சூப்பர் ஹிட் படம் தயார் என்ற கணக்கில் காய் நகர்த்தி வருகிறார் இதேஷ் ஜெபக்.

சம்பந்தபட்ட இருவ‌ரில் தனுஷ் மாப்பிள்ளை ‌‌ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெ‌ரிவித்து விட்டதாகவும், சுரா‌ஜ் தரப்பிலிருந்து இன்னும் க்‌ரீன் சிக்னல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

விரைவில் மாப்பிள்ளை அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009