ஜெனிலியா, ஸ்ரேயா, அசின், த்ரிஷாவைத் தொடர்ந்து லட்சுமிராயும் இந்திக்குச் செல்கிறார். ஏற்கனவே கதாநாயகிகள் பஞ்சத்தில் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு இது மேலுமொரு பின்னடைவு.
முதல்வரிசை ஹீரோக்கள் நாயகிகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இங்குள்ள முன்னணி நடிகைகள் இந்திப் பக்கம் சாய்வதால் அனுஷ்கா, ஹன்ஷிகா என தெலுங்கிலிருந்து நடிகைகளை இறக்குமதி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இரண்டாம் வரிசை ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த லட்சுமிராயும் இந்திக்குச் செல்கிறார். யாஷ் சோப்ராவின் அடுத்தப் படத்தில் ராய் நடிக்கிறார். அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லட்சுமிராயின் இந்திப் பிரவேசம் நடிகைகள் ஏரியாவில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
0 comments:
Post a Comment