இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர ஷேவாக். இவரது பெயரில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் உள்ளது. இந்த ஓட்டலை ஷேவாக்கும், அவரது பார்டனர் சித்தார்த்தும் நடத்தி வந்தனர். இந்த ரெஸ்டாரண்ட் பெயரில் ஒப்பந்த அடிப்படையில் (பிரான்சைஸ்) வேறு நகரங்களில் ஓட்டல் தொடங்கலாம் என்று 2006-ம் ஆண்டு விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் ரஜத் சர்மா ரூ.2.4 லட்சம் கொடுத்து பிரான்சைஸ் பெற விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு பிரான்சைசும் கொடுக்கப்படவில்லை. பணத்தையும் ஷேவாக் திருப்பி கொடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து பணத்தை திருப்பி தருமாறு ஷேவாக் மீது அலகாபாத்தில் உள்ள சிவில் சாலைஸ் போலீஸ் நிலையத்தில் ரஜத்சர்மா புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் மீது இதுவரை எப்.ஐ.ஆர். தயாரிக்கப்படவில்லை என்றும், முதல் கட்டமாக இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் சிவில் லைனஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த தொழிலில் தன்னை தனது பார்ட்னர் சித்தார்த்தே ஏமாற்றி விட்டதாக ஷேவாக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment