Saturday, July 18, 2009

Beauty Tips - Maintain u r beauty to follow this valuable tips

பளிச் முகத்துக்கு
பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!

முகப் பொலிவுக்கு

வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகு கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.

கருப்பு திட்டுகள் மறைய
மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம் ஜாதிக்காய் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்.. மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்!

கருவளையம் மறைய
கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்... அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.

சருமம் கருமை மாற
முட்டைகோஸ’ன் வெளிப்புற இலைகளை எடுத்து மிக்ஸ’யிலிட்டு சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.

கழுத்தைப் பராமரிக்க
நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும்.... ஒரு ஸ்பூன் வெங்காயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய டபுள் சின் நாளடைவில் சூப்பர் சின் ஆகி விடும்!

முகத்தில் புதுப்பொலிவுக்கு
தர்பூசணி (Watermelon) பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசி வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும். பப்பாளிப்பழமும் (Papaya) அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது!

சிவந்த இதழ்களுக்கு
சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்!

Read More...

வாமனன் விமர்சனம் - Vamanan Review

சுப்பிரமணியபுரம் வெற்றிக்குப் பிறகு ஜெய் நடித்திருக்கும் படம். சூப்பர் ஹீரோவாக பன்ச் டயலாக் பேசி எதி‌ரிகளையும், நம்மையும் வதம் பண்ணாமல் யதார்த்தமாக வந்து போவதற்கு முதலில் சபாஷ்.

இரண்டு டிராக்காக பயணிக்கிறது கதை. ஜெய்க்கு சினிமாவில் ஹீரோவாகும் ஆசை. ஊ‌ரிலிருந்து கிளம்பி வந்து நண்பன் சந்தானத்தின் அறையில் தங்கி சென்னையில் வாய்ப்பு தேடுகிறார். ஊ‌ரிலிருந்து கிளம்பி வரும் ஹீரோவுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவே சென்னையில் ஒரு காமெடி நண்பர் இருப்பது இந்தப் படத்திலும் ‌ரிப்பீட்.


ஜெய் நடிக்க வாய்ப்பு கேட்டு போகும் இடங்கள் வாய்ப்பு தேடுகிறவர்களுக்கு பாடசாலை. திட்டு வாங்கிக் கொண்டு அதை சமாளிக்கும் இடத்தில் ஜெய் ' 'ஜெய்'க்கிறார்.

ப்‌ரியாவை பார்த்ததும் காதல் வருவதும், மோதலில் தொடங்கும் காதல் பிறகு கூடலில் முடிவதும் பழம் பஞ்சாங்க எபிசோட். ப்‌ரியாவின் அம்மா ஊர்வசியை சமையல் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்துவதாக கூறி ஜெய்யும், சந்தானமும் கலாய்க்கும் இடத்தில் வயிறு புண்ணாகிறது. ஊர்வசியின் நடிப்புக்கு நகைச்சுவை மாமணி பட்டமே தரலாம்.

காதலும் கலாட்டாவுமாக செல்லும் கதையில் க்ரைமை சேர்க்கிறது லட்சுமிராயின் மரணம். மாடலாக வந்து சொற்ப நேரத்திலேயே உயிரை விடுகிறார் லட்சுமிராய். அவரது கொலைப்பழி ஜெய் மீது விழ, பரமபத ஆட்டம் தொடங்குகிறது.

வாய்ப்பு தேடும் இளைஞனாக யதார்த்தத்தை மீறாமல் நடித்திருக்கிறார் ஜெய். ப்‌ரியாவுக்கு அதிக வேலையில்லை. கவர்ச்சியுடன் முடிந்து போகிறது லட்சுமிராயின் அத்தியாயம். ஆச்ச‌ரியம் என்றால் அது சந்தானம். இரட்டை அர்த்த வசனம் இல்லாமலே காமெடியில் கலக்குகிறார்.

அரசியல் சண்டையில் டெல்லி கணேஷை தீர்த்து கட்டும் சம்பத், அவருக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகா‌ரி தலைவாசல் விஜய், எதிர்பாராத வில்லன் ரகுமான் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

போலீசிடமிருந்து தப்பித்து ரகுமானிடம் அடைக்கலமாகும் ஜெய்யிடம், நான்தான் லட்சுமிராயை கொலை செய்தேன் என ரகுமான் கூறும்போது சூடு பிடிக்கிறது திரைக்கதை.

தமிழ்ப்பட கிளைமாக்சில் வரும் கட்டி முடிக்கப்படாத பில்டிங்கில்தான் இந்தப் படத்தின் கிளைமாக்சும். ரகுமானும்., ஜெய்யும் மோதும் காட்சியை ஆக்ரோஷத்துடன் எடுத்த அதே நேரம் புத்திசாலித்தனமாக மோதலை முடித்ததற்கு இயக்குனரை பாராட்டலாம்.

யுவனின் இசை படத்தின் ப்ளஸ். அதிலும் ஏதோ செய்கிறாய் பாடல் தாலாட்டுகிறது. படத்தின் குவாலிட்டியை உயர்த்தியிருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. பழக்கமான கதையை ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ஒருமுறை பார்க்கலாம்.

Read More...

நயன்தாரா அடுத்த அருந்ததி - Nayanthara is Next Arunthathi


ஹீரோயின் ஓ‌ரியண்ட் படங்களை எடுப்பதில் கோடி ராமகிருஷ்ணா டாக்டரேட் வாங்கியவர். இவர் விஜயசாந்தியை வைத்து இயக்கிய படங்கள் அவரை லேடி அமிதாப்பச்சன் என கொண்டாடும் அளவுக்கு உயர்த்தியது. இவரது அருந்ததியில் நடித்த பிறகு அனுஷ்காவின் மார்க்கெட் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது நாடறியும்.

கோடி ராமகிருஷ்ணாவின் அடுத்தப் படத்தில் நாயகியாக நடிக்கப் போகிறவர் நயன்தாரா என்கின்றன ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள். இதுவும் அருந்ததியைப் போல ஹீரோயின் ஓ‌ரியண்ட் கதை.


எம்.எஸ்.ராஜுவின் சுமந்த் ஆர்ட் புரொட‌க்சன் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது. கோடி ராமகிருஷ்ணாவும் எம்.எஸ்.ராஜுவும் இணைந்து உருவாக்கிய அனைத்துப் படங்களும் சில்வர் ஜூப்லி கொண்டாடியவை என்பதால் இந்த புதிய படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. எம்.எஸ்.ராஜுவின் மகன் சுமந்த் அஸ்வின் இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

நயன்தாராவின் கடைசி நான்கு படங்கள் - குசேலன், சத்யம், வில்லு, ஏகன் - தோல்வியடைந்தன. சூர்யாவுடன் நடித்துக் கொண்டிருக்கும் ஆதவன் மட்டுமே தற்போது அவர் கைவசம் உள்ளது. இந்த சூழலில் கோடி ராமகிருஷ்ணாவின் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை புதுப்பிக்க நினைக்கிறார் நயன்தாரா.

ஆக, அடுத்த அருந்ததி நயன்தாராதான் என அடித்து கூறுகிறார்கள் ஆந்திராவில். பார்ப்போம், கோடி ராமகிருஷ்ணாவின் கடைக்கண் பார்வை யார் மீது விழுகிறது என்று.

Read More...

Friday, July 17, 2009

Tamil Hit Songs Download with high quality-Difficult to get

Those songs are very difficult to find out in internet with good quality.Download it & enjoy to watch this evergreen hit songs......... http://rapidshare.com/files/248385218/TamilClassic__AndhaNillavadhan.mpeg
http://rapidshare.com/files/248391165/TamilClassic_IdhuOruNilaaKaalam.avi
http://rapidshare.com/files/248398200/TamilClassic_IvalOru.mpeg
http://rapidshare.com/files/248402145/TamilClassic_KannanVandhuPaadugindraan.avi
http://rapidshare.com/files/248405778/TamilClassic_KarpooraBommai.mpeg
http://rapidshare.com/files/248410331/TamilClassic_ManathilUruthi.mpeg
http://rapidshare.com/files/248360626/TamilClassic_PaniVizhumIravu.mpeg
http://rapidshare.com/files/248363731/TamilClassic_PonmaalaiPoludhu.mpeg
http://rapidshare.com/files/248367001/TamilClassic_RajaRajaChozlan.avi
http://rapidshare.com/files/248370328/TamilClassic_RathiriNerathu.avi
http://rapidshare.com/files/248374830/TamilClassic_VaaNila.mpeg
http://rapidshare.com/files/248380223/TamilClassic_VetiVeruVaasam.mpeg

Read More...

Tamil Movie - Autograph 2004 Tamil Dvdrip


DramaCast : Cheran , Sneha , Ilavarasu , Gopika , Mallika , Kanika and Rajesh

Story-Screenplay –Direction : Cheran

Music : Bharadwaj

Cinematography : Vijay Milton, Shanky Mahendra, Ravi Varman and Dwarakanath


http://www.filefactory.com/file/55c209/
http://www.filefactory.com/file/460f7e/
http://www.filefactory.com/file/9467ed/

Read More...

கோவில் புளியோதரை - Temple Tamarind Rice

தேவையான பொருட்கள்
புளி - ஒரு ஆரஞ்சு அளவு,
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க:
------------------------
காய்ந்த மிளகாய் - 5,
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி,
தனியா - 2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

எள் - 1 மேசைக்கரண்டி.
தாளிக்க:
-----------
கடுகு - 1 தேக்கரண்டி,
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி,
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 1கைப்பிடி,
பெருங்காயம் - சிறிது,
காய்ந்த மிளகாய் - 7,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
சாதம் கலக்க:
------------------
சாதம் - 4 கப்,
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்.

செய்முறை
•புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும்.
•வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து நைசாக பொடித்து வைக்கவும் (எள்ளை வாணலியில் போட்டு சடசடவென பொரிந்ததும் எடுக்கவும்).
•மிளகாயை கிள்ளி வைக்கவும்.
•வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும், வேர்க்கடலை சேர்த்து பிரட்டி கறிவேப்பிலை சேர்க்கவும்.
•கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
•புளி பச்சை வாசனை போய், நன்கு கொதித்து கெட்டியானதும் பொட்த்த பொடியில் முக்கால் பாகம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
•சாதத்தை உதிர் உதிராக வடித்து நல்லெண்னெய் கலந்து ஆற வைக்கவும். நன்கு ஆறியபின், புளிக்காய்ச்சல், மீதியுள்ள பொடி சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கலந்து அமுக்கி வைக்கவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற விட்டு பரிமாறவும்.

குறிப்பு:
புளி ரொம்ப எரிப்பான புளியாக இருந்தால், ஒரு கொட்டைப் பாக்களவு வெல்லம் சேர்த்தால், புளியின் எரிப்பு இருக்காது. புளிக்காய்ச்சல் அதிகம் செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது கலந்து கொள்ளலாம். எண்ணெய் மிதக்கும் அளவு கொதிக்க வைத்து வைத்துக் கொண்டால், 15,20 நாளூக்குக்கூட கெடாது. ஃபிரிஜ்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் இருக்கும். மசக்கை இருப்பவர்கள் புளிக்காய்ச்சல் செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது கலந்து சாப்பிடலாம்.

Read More...

சாம்பார் சாதம் - Sambar Rice

தேவையான பொருட்கள்
வேகவைக்க
-----------
அரிசி - அரை கிலோ
துவரம் பருப்பு - இரு நூரு கிராம்
மஞ்சள் பொடி - அரை தேக்கராண்டி
சின்ன வெங்காயம் - பத்து
உப்பு - இரண்டு தேக்கரண்டி
காய் வேக வைக்க
-----------------
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 200 கிராம்
கேரட் - 1

பீன்ஸ் - பத்து
முல்லங்கி - 1
முருங்கக்காய் - ஒன்று (ஒரு இன்ச் அளவு வெட்டி கொள்ளவேன்டும்)
பச்ச மிளகாய் - முன்று
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஆறு தேக்கரண்டி
வெல்லம் - ஒரு பிட்டு
புளி - இரண்டு எலுமிச்சை அளவு
தாளிக்க
------
எண்ணை - ஐமது கிராம்
கடுகு - ஒன்னறை தேக்கரண்டி
சின்ன வெஙாயம் - ஐந்து
கருவேப்பிலை - ஒரு கை பிடி
வெந்தயம் - ஐந்து
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - ஆறு பல்
நெய் - 25 கிராம்
கொத்து மல்லி தழை - அரை கை பிடி

செய்முறை
•முதலில் பருப்பு அரிசி இரண்டையும் நன்கு களைந்து பத்து நிமிடம் ஊற வைக வேண்டும்.
•பிறகு அதில் மஞ்சள் பொடி ,சின்ன வெங்காயம்.போட்டு ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு குக்கரில் அரிசி பருப்பு சேர்த்து நாலைரை டம்ளர் வரும் அப்படியே டபுளாகா தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
•வெங்காயம், தக்காளி,பச்ச மிளகாய், முல்லங்கி,கேரட்,பீன்ஸ்,சேர்த்து அதில் ஒரு டம்ளர்தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவேண்டும்.
•பாதி வெந்து கொண்டிருக்கும் போது சாம்பார் பொடியை சேர்க்கவும்.
•பிறகு புளியை கரைத்து ஊற்றவும்.
•முருங்கக்காயை தனியாக வேகவைத்து சேர்க்கவும்.
•இப்போது வெந்த பருப்பு சாதத்தில் வெந்து வைத்துள்ள காய ஊற்றி பாதி நெய்யும் சேர்த்து கிளறவேண்டும்.
•கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிந்து கொட்டி மீடி நெய், கொத்து மல்லி தழை சேர்த்து கிளறி அப்பளத்துடன் சாப்பிடவும்.
•கமகமண்ணு நெய் மணத்தோடு மணக்கும் சாம்பார் சாதம் ரெடி

குறிப்பு:
முருங்கககாயை முதலே போட்டால் குழைந்து விடும்.தனிய கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு பின்ச் உப்பு, மஞ்சள் பொடி ஒரு பின்ச் போட்டு வெந்து அதை சேர்க்கனும் அப்ப அது முழுசக இருக்கும். காய் கொஞ்சம் கல்லு மாதிரி உள்ள காய் போடனும், குழைந்து போகிற காய்கள் போட கூடாது, தனியா செய்கிற சாம்பாருக்கு ஒகே. தேவை பட்டால் உப்பு கூட சேர்த்து கொள்ளுங்கள்.

Read More...

தேங்காய் சாதம் - Coconut Rice

தேவையான பொருட்கள்
அரிசி - 1/4 கிலோ,
தேங்காய் - 1 மூடி,
சின்ன வெங்காயம் - 5,
பச்சை மிளகாய் - 4,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்,
நிலக்கடலை - 1 டீஸ்பூன்,
முந்திரி - 5,
பொரித்த அப்பளம் - 2,

கடுகு - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்துமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை
•சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் தே.எண்ணெய், உப்பு கல்ந்து, ஆற விடவும்.
•தேங்காயை நைசாக துருவி வைக்கவும்.
•வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும்.
•வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, முந்திரி சேர்த்து, சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
•வதங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
•தேங்காய் வாசம் வரும் வரை வதக்கி இறக்கவும்.
•ஆறிய சாதத்துடன் கலக்கவும்.
•பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, பொடித்த அப்பளம் தூவி கிளறவும்.

Read More...

தக்காளி சாதம் - Tomato Rice

தேவையான பொருட்கள்
1. சாதம் - 2 கப்
2. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. உளுந்து - 1 தேக்கரண்டி
6. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
7. பச்சை மிளகாய் - 2 (கீரியது)
8. வெங்காயம் - 4 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)


9. கொத்தமல்லி, கருவேப்பிலை
10. உப்பு
11. தக்காளி - 3 (நல்லா சிவந்து பழுத்த தக்காளி, பொடியாக நறுக்கியது)

செய்முறை
•கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
•இதில் பச்சை மிளகாய், வெங்காயம், மல்லி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
•வெங்காயம் வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து பச்சை வாசம் போய், தக்காளி குழைந்து வரும்வரை வேக விடவும்.
•எண்ணெய் பிரிந்து வரும்போது சாதத்தை கொட்டி கிளரவும். 5 நிமிடம் சிறுந்தீயில் சாதத்தோடு பிரட்டி எடுக்கவும்.

குறிப்பு:
சாதம் குழைந்து போகாமல் கிளர வேண்டும். சாப்பிட 1/2 மணி நேரம் முன்னதாக செய்து வைத்தால் தக்காளி சாதத்துடன் ஊறி சுவை கூடும். இதை அப்பளம், மசாலா வடை'யுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Read More...

தக்காளி பிரியாணி - Tomato Briyani

தேவையான பொருட்கள்
அரிசி -1கப்
தக்காளி -2
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
பிரியாணி மசாலா -1ஸ்பூன்
இஞ்சி,பூண்டுவிழுது -1ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணை(அ)நெய் -2ஸ்பூன்

கொத்தமல்லிதழை -1கைப்பிடி
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை -2

செய்முறை
•வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கி வைக்கவும்.
•அரிசியை 1/2மணி நேரம் ஊறவைக்கவும்.
•பாத்திரத்தில் எண்ணை(அ)நெய்விட்டு பட்டை,கிராம்பு,ஏலக்காய்,இலை தளித்து வெங்காயம்,மிளகாய் போடவும்.
•வெங்காயம் வதங்கியவுடன்,இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கி,தக்காளி போடவும்.
•தக்காளி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள்தூள்,பிரியாணிமசாலா,கொத்தமல்லிதழை போட்டு உப்பும் போட்டு வதக்கவும்.
•ஊறவைத்த அரிசியை நன்றாக கழுவி மசாலாவுடன் போட்டு பிரட்டி 2கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
•குக்கரில் வைப்பதென்றால் 3விசில் விட்டு இறக்கவும்.
•சுவையான தக்காளி பிரியாணி ரெடி.இத்துடன் தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.


குறிப்பு:
இங்கு நான் சொல்லியிருப்பது பாஸ்மதி புழுங்கலரிசி. அவரவர் உபயோகிக்கும் அரிசியைபொருத்துதண்ணீர் ஊற்றவும்.

Read More...

Thursday, July 16, 2009

Tamil Classic Movie - [DVD-Rip] Ethir Neechal (1968)


Movie Title: Ethir Neechal (1968)

Cast: Nagesh, Jayanthi, Sowcar Janaki, Muthuraman and etc

Music: M.S. Viswanathan Producer: Selvaraj, Durairaj, Krisnan

Read More...

கத்துக்கிட்ட விஷயங்கள் நிறைய - அனுஷ்கா: Learned Things are more - Anushka

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ''அருந்ததீ.'' தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் இந்த படம், தமிழில் டப்பிங் ஆகி இங்கும் மக்களின் பேராதரவை பெற்றிருக்கிறது. இத்தனைக்கும் ஹ“ரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். தமிழில் மாதவனுடன் ''ரெண்டு'' படத்தில் நடித்த அனுஷ்காதான் இதில் கதாநாயகி. அவரிடம் இனி....

''அருந்ததீ'' இவ்வளவு பெரிய ஹ’ட் ஆகும் என்று நினைத்தீர்களா?

''உண்மையிலேயே நினைக்கலை. படம் ரிலீஸ் ஆகி பெரிய ஹ’ட் ஆனதாக எனக்கு தகவல் கிடைத்தது. அப்போ நான் தெலுங்கு ''பில்லா'' படத்துக்காக மலேசியா போயிருந்தேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். ஹைதராபாத் திரும்பியதும் ரசிகர்களோட அமர்ந்து படத்தைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதே மாதிரி, ரெண்டு தடவை அவர்களோடு அமர்ந்து பார்த்து ரசித்தேன்.

ரசிகர்கள் என்ன சொன்னார்கள்?

நான் படம் பார்ப்பது முதலில் ரசிகர்களுக்கு தெரியாது. முதல் தடவை பார்க்கும்போது எடிட்டிங், பின்னணி இசை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், டைரக்ஷன் மற்றும் டெக்னிக்கல் விஷயங்களை கூர்ந்து கவனிச்சு ரசிச்சேன். ரெண்டாவது தடவை பார்க்கும்போதுதான் ரசிகர்களோட ரியாக்ஷனை கவனிச்சேன். குண்டு ஊசி விழுந்தால்கூட பெரிய சத்தம் கேட்கும். அந்த அளவுக்கு தியேட்டர்ல அமைதி. அவங்களை žட்டோட கட்டிப் போட்டுவிட்டது படம். எண்ட் கார்ட் போட்ட பிறகும், எழுந்து போக மனமில்லாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தாங்க.

என்னைப் பார்த்தவங்க அருந்ததி, அருந்ததின்னு என் கையைப் பிடிச்சிகிட்டாங்க. அந்த கேரக்டர் மேல அவங்க வச்சிருந்த மரியாதையை அதில் புரிஞ்சிக்க முடிஞ்சது. ரசிகர்களுக்கு என் நிஜப் பெயரே ஞாபகத்துக்கு வரலை. அந்த அளவுக்கு என் பெயரையே மறக்கடிச்சிடிச்சி அருந்ததி கேரக்டர்.

உங்களுக்கு இந்த படத்துல பிடிச்ச காட்சி எது?

எல்லாக் காட்சிகளையும் பிடிக்கும். ரொம்பப் பிடிச்சதுன்னா, கோட்டைக்குள் ராகுலை தேடிப் போகிற žன். அப்புறம் ஷாயாஜி ஷ’ண்டே கத்தியை தூக்கி வீசுகிற போது பிடிக்கிற ஸ“ன். இந்த ரெண்டையும் என்னால் மறக்க முடியலை.

பதினைந்து கிலோ நகை அணிந்து நடித்தீர்களாமே?

நகைகள் போடுறதே எனக்கு பிடிக்காது. ஆனா இவ்வளவு நகைகளை மாட்டிக்கொண்டு நடிச்சதை நினைச்சாலே, எனக்கு இன்னும் சிரிப்பா இருக்கு. அதை அணிந்தபோது உடம்புல கீறியது; காயம் ஏற்பட்டது. அந்த காயம் எல்லாம் படத்தை பார்க்கிறபோது ஓடி மறைஞ்சிடுச்சி. இப்போ அது எனக்கு சுகமான அனுபவமாகத்தான் தெரிகிறது.

எனக்கு அந்த நகைகளைப் போட்டு முதல்ல ஃபோட்டோ செஷன் பண்ணினாங்க. என் அம்மாவிடம் காட்டியபோது, அவங்க அதை பார்த்துட்டு சிரிச்சாங்க. ஏன்னா, எங்க அம்மா சொன்னபோதெல்லாம் நான் எந்த நகையையும் போட்டுக்கிட்டது இல்லை. ஆனா அவங்க என்னை அப்படிப் பார்க்க ஆசைப்பட்டதை டைரக்டர் செய்ய வச்சிட்டார்.

எந்த காட்சியில் நடித்தபோது கஷ்டமாக இருந்தது?

கஷ்டம்னு சொல்றதை விட நிறைய žன்ல நடிக்கும்போது சவாலாக இருந்தது. தினமும் நாலு மணிக்கெல்லாம் எழுந்து குதிரை ஏற்றம் கத்துக்கிட்டேன். இப்போ என்னால தனியாவே குதிரை சவாரி செய்ய முடியும். அது மாதிரி கிளாசிகல் ஆட கஷ்டமாக இருந்தது. அதுக்கு சிவசங்கர் மாஸ்டர் உதவியா இருந்தார். ட்ரம்ஸ் டான்ஸ் பண்ணும்போது எனக்கு நம்பிக்கையே இல்லை. பிறகு, மூணு நாள் போன பிறகு அதோட ஒன்றிப்போனேன். அதனால ''அருந்ததீ''யில கஷ்டம்ங்றதை விட நான் கத்துக்கிட்ட விஷயங்கள் தான் நிறைய!

இந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுத்தால் நடிப்பீர்களா?

கண்டிப்பா! இந்த டீமே வேற படம் பண்ணினாலும் நான் நடிப்பேன். படத்துல எனக்கு கிடைத்த மரியாதை, என் வளர்ச்சிக்கு பெரிய உதவியா இருக்கு. இன்னைக்கு சின்ன டவுன்லகூட நூறாவது நாளை நோக்கி படம் ஓடிகிட்டு இருக்கு. அதுவும் நல்லதுக்குத்தான்!

படத்தை பார்த்துவிட்டு முதலில் பாராட்டியது யார்? மறக்க முடியாத பாராட்டு எது?

எங்க அப்பாதான். அவர் படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே என்னை கட்டிப் பிடிச்சிகிட்டார். அவருக்கு பேச வார்த்தையே வரலை. அவர் பார்வையில் பாராட்டும், மகிழ்ச்சியும் எவ்வளவு அழுத்தமா இருந்தது தெரியுமா? அதுமாதிரி தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் ரெட்டி. எனக்கு தெரிஞ்சி அவர் சிரிச்சி நான் பார்த்ததே இல்லை. ஆனால் படம் பார்த்துட்டு ஃபோன்ல மனம்விட்டு சிரிச்சி பேசினார். அதை நான் பெரிய விஷயமா நினைக்கிறேன்.

''வேட்டைக்காரன்'' படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?

அதை இப்போதைக்கு சொல்லக் கூடாது. இப்போ ரெண்டு நாளாதான் நான் அந்த படத்தில் நடிக்கிறேன். விஜய்கூட இது எனக்கு முதல் படம். படம் முடிகிற நேரத்துல, அதில் நடித்த அனுபவத்தை சொன்னால்தான் நல்லா இருக்கும்.

உங்கள் அழகின் ரகசியம் என்ன?

நிறைய தண்­ர் குடிப்பேன். இரவு எட்டு மணிக்கு மேல சாப்பிட மாட்டேன். பெரும்பாலும் பாசிட்டிவ்வான எண்ணங்கள்தான் மைண்ட்ல இருக்கும். தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பேன் என்றார்.

Read More...

Wednesday, July 15, 2009

அஜித் குமார்


நடிகர் அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் நாள் ஹைதராபாத் நகரில் பிறந்தார். இவரின் அண்ணன் பெயர் அனில் தம்பி பெயர் அனுப் குமார். 1986 ஆம் ஆண்டு இவர் ஆசன் மெமோரியல் சீனியர் செகண்டர் பள்ளியிலிருந்து விலகி பகுதி நேர இரு மற்றும் நான்கு சக்கர வாகன மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார். பின்னார் 1990 வரை ஈரோட்டில் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் சிறிது காலம் மாடலிங் வேலையும் செய்தார். ஒரு சமயம் இவர் மோட்டர் சைக்கிள் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டதால் கால்கள் உணர்விழந்தன. ஆனால் இவர் விடாமுயற்சியுடன் அதிலிருந்து மீண்டு சென்னையிலுள்ள அவரின் வீட்டிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 1996 ஆம் வருடத்தில் அஜித் குமார்-நடிகை ஹீரா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதல் 1999 ஆம் வருடத்தின் முற்பகுதியில் முடிவுக்கு வந்தது. அஜித் குமார் அமர்க்களம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை 2000 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். 03-01-2008 அன்று அஜித்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுஷ்கா என பெயரிட்டுள்ளனர். அஜித் குமார் ஒரு சிறந்த மோட்டார் பந்தய வீரர். அவர் ஜெர்மனி மற்றும் மலேசியாவில் நடைபெற்ற மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் பார்முலா 3 கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் திரை உலகம்
நடிகர்கள்
அஜித் குமார் நடிகர் அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் நாள் ஹைதராபாத் நகரில் பிறந்தார். இவரின் அண்ணன் பெயர் அனில் தம்பி பெயர் அனுப் குமார். 1986 ஆம் ஆண்டு இவர் ஆசன் மெமோரியல் சீனியர் செகண்டர் பள்ளியிலிருந்து விலகி பகுதி நேர இரு மற்றும் நான்கு சக்கர வாகன மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார். பின்னார் 1990 வரை ஈரோட்டில் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் சிறிது காலம் மாடலிங் வேலையும் செய்தார். ஒரு சமயம் இவர் மோட்டர் சைக்கிள் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டதால் கால்கள் உணர்விழந்தன. ஆனால் இவர் விடாமுயற்சியுடன் அதிலிருந்து மீண்டு சென்னையிலுள்ள அவரின் வீட்டிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 1996 ஆம் வருடத்தில் அஜித் குமார்-நடிகை ஹீரா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதல் 1999 ஆம் வருடத்தின் முற்பகுதியில் முடிவுக்கு வந்தது. அஜித் குமார் அமர்க்களம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை 2000 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். 03-01-2008 அன்று அஜித்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுஷ்கா என பெயரிட்டுள்ளனர். அஜித் குமார் ஒரு சிறந்த மோட்டார் பந்தய வீரர். அவர் ஜெர்மனி மற்றும் மலேசியாவில் நடைபெற்ற மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் பார்முலா 3 கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
விருதுகள்
அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார். 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
அஜித் குமார் நடித்துள்ள படங்கள்
1. பிரேம புஸ்தகம் - (தெலுங்கு) - 1992 - பவன்
2. அமராவதி - (தமிழ்) - 1993 - ரமேஷ் குமார்
3. பாசமலர்கள் - (தமிழ்) (நட்புக்காக) - 1994 - ரமேஷ் குமார்
4. பவித்ரா - (தமிழ்) - 1994 - நிதின்
5. ராஜாவின் பார்வையிலே - (தமிழ்) (நட்புக்காக) -1995 - மன்மோகன்
6. யுவா ரக்தம் - (தெலுங்கு) (நட்புக்காக) - 1995 - மன்மோகன்
7. ஆசை - (தமிழ்) - 1995 - வசந்த்
8. ஆசா ஆசா ஆசா - (தெலுங்கு) - 1995 - வசந்த்
9. வான்மதி - (தமிழ்) - 1996 - அகத்தியன்
10. கல்லூரி வாசல் - (தமிழ்) - 1996 - பவித்ரான்
11. காலேஜ் கேட் - (தெலுங்கு) - 1996 - பவித்ரன்
12. மைனர் மாப்பிள்ளைகள் - (தமிழ்) (நட்புக்காக) - 1996 - ஏ. மனோகர்
13. காதல் கோட்டை - (தமிழ்) - 1996 - அகத்தியன்
14. நேசம் - (தமிழ்) - 1997 - நாராயண்
15. ராசி - (தமிழ்) - 1997 - முரளியப்பாஸ்
16. உல்லாசம் - (தமிழ்) - 1997 - ஜேடி-ஜெர்ரி
17. உல்லாசம் - (தெலுங்கு) - 1997 - ஜேடி-ஜெர்ரி
18. பகைவன் - (தமிழ்) - 1997 - டி. ராஜசேகர்
19. ரெட்டை ஜடை வயசு - (தமிழ்) - 1997 - சிவக்குமார்
20. காதம் மன்னன் - (தமிழ்) - 1998 - சரண்
21. அவள் வருவாளா - (தமிழ்) - 1998 - ராஜ் கபூர்
22. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - (தமிழ்) (நட்புக்காக)- 1998 - விக்ரமன்
23. உயிரோடு உயிராக - (தமிழ்) - 1998 - சுஷ்மா
24. தொடரும் - (தமிழ்) - 1999 - ரமேஷ் கண்ணா
25. உன்னைத் தேடி - (தமிழ்) - 1999 - சுந்தர் சி
26. பிரேமடோ பிலிசா - (தெலுங்கு) - 1999 - சுந்தர் சி
27. வாலி - (தமிழ்) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
28. வாலி - (தெலுங்கு) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
29. வாலி - (இந்தி) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
30. ஆனந்த பூங்காற்றே - (தமிழ்) - 1999 - ராஜ் கபூர்
31. நீ வருவாய் என - (தமிழ்) (நட்புக்காக) - 1999 - ராஜகுமாரன்
32. அமர்க்களம் - (தமிழ்) - 1999 - சரண்
33. அத்புதம் - (தெலுங்கு) - 1999 - சரண்
34. முகவரி - (தமிழ்) - 2000 - துரை
35. சிறுநாமா - (தெலுங்கு) - 2000 - துரை
36. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - (தமிழ்) - 2000 - ராஜீவ் மேனன்
37. பிரியுரலு பிலிச்சிண்டி - (தெலுங்கு) - 2000 - ராஜீவ் மேனன்
38. உன்னைக் கொடு என்னைத் தருவேன் - (தமிழ்) - 2000 - கவி காளிதாஸ்
39. தீனா - (தமிழ்) - 2001 - ஏ.ஆர். முருகதாஸ்
40. சிட்டிசன் - (தமிழ்) - 2001 - சரவண சுப்பையா
41. சிட்டிசன் - (தெலுங்கு) - 2001 - சரவண சுப்பையா
42. பூவெல்லாம் உன் வாசம் - (தமிழ்) - 2001 - எழில்
43. அசோகா - (இந்தி)(நட்புக்காக) - 2001 - சந்தோஷ் சிவன்
44. சாம்ராட் அசோகா - (தமிழ்) (நட்புக்காக) - 2001 - சந்தோஷ் சிவன்
45. ரெட் - (தமிழ்) - 2002 - ராம் சத்யா
46. ராஜா - (தமிழ்) - 2002 - எழில்
47. நூவு நாக்கு காவாலி - (தெலுங்கு) - 2002 - எழில்
48. வில்லன் - (தமிழ்) - 2002 - கே.எஸ். ரவிக்குமார்
49. வில்லன் - (தெலுங்கு) - 2002 - டாக்டர் ராஜசேகர்
50. என்னை தாலாட்ட வருவாளா - (தமிழ்) (நட்புக்காக) - 2003 - கே.எஸ்.
51. ஆஞ்சநேயா - (தமிழ்) - 2003 - மகராஜன்
52. ஆச்சார்யம் - (தெலுங்கு) - 2003 - மகராஜன்
53. ஜனா - (தமிழ்) - 2004 - ஷாஜி கைலாஷ்
54. ரௌடி டான் (தெலுங்கு) - 2004 - ஷாஜி கைலாஷ்
55. அட்டகாசம் - (தமிழ்) - 2004 - சரண்
56. ஜீ - (தமிழ்) - 2005 - லிங்குசாமி
57. ஜீ - (தெலுங்கு) - 2005 - லிங்குசாமி
58. பரமசிவன் - (தமிழ்) - 2006 - பி. வாசு
59. பரமசிவம் - (தெலுங்கு) - 2006 - பி. வாசு
60. திருப்பதி - (தமிழ்) - 2006 - பேரரசு
61. திருப்பதி - (தெலுங்கு) - 2006 - பேரரசு
62. வரலாறு - (தமிழ்) - 2006 - கே.எஸ். ரவிக்குமார்
63. ஆழ்வார் - (தமிழ்) - 2007 - செல்லா
64. கிரீடம் - (தமிழ்) - 2007 - விஜய் ஆனந்த்
65. பில்லா - (தமிழ்) - 2008 - விஷ்ணுவர்த்தன்
66. ஏகன் - (தமிழ்) - 24-10-2008 - ராஜு சுந்தரம்





Read More...

உணவில் நெய் சேர்த்தால் - Ghee Good for Health

பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும்.

மேலும், மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.

மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.


மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தியும் நிற்கும்.

சருமம் பளபளப்பாகும். கண்களுக்கு அதிக திறனும் உண்டாகும்.

Read More...

Tuesday, July 14, 2009

வள்ளிமலை அற்புதம் - Vallimalai Murugan

வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.

இந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. குளத்தை அடுத்து வரும் படிகட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும்.


படிகட்டுகளின் பாதையில் ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால் மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டன.

ஆனால் அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வ‌ள்‌ளிமலை‌க் கோ‌‌யிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்த போது, 8 கா‌ல் ம‌ண்டப‌ப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான நிலை

யில் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அதனா‌ல் அ‌‌வ்‌விட‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் எ‌‌ந்த‌வித மா‌ற்றமு‌ம் செ‌ய்யாம‌ல் அ‌‌ந்த க‌ல்லை அ‌ப்படியே மூடி‌வி‌ட்டன‌ர் எ‌ன்று‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.


தற்போதும் அப்பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை.

படிகளைக் கடந்து கோயிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயில் நம்மை அதிசயிக்க வைக்கிறது.

நுழைவா‌யி‌லி‌ல் உ‌ள்ள ஒரு ச‌‌ந்ந‌தி‌யி‌ல் வ‌ள்‌ளி அ‌ம்ம‌ன் பாறை‌யி‌ல் செது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அ‌ந்த ‌சி‌ற்ப‌த்‌தி‌ற்கு‌ம் ஆடைக‌ள் அ‌ணி‌வி‌க்க‌ப்ப‌ட்டு ‌தீபாராதனைக‌ள் நடைபெறு‌கி‌ன்றன. அவரை வண‌ங்‌கி‌வி‌ட்டு உ‌ள்ளே செ‌‌ல்லு‌ம் போது சாதாரண உயர‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌ம் கு‌ணி‌ந்துதா‌‌ன் செ‌ல்ல வே‌ண்டு‌ம். அ‌வ்வளவு தா‌ழ்வான நுழைவா‌யிலை அடு‌த்து முருக‌ன் க‌ர்‌ப்ப‌கிரக‌ம் கா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறது.

மேலே பா‌ர்‌த்தா‌ல் பாறை எ‌ங்கே நமது தலை‌யி‌ல் ‌விழு‌‌ந்து‌விடுமோ எ‌ன்ற அ‌ச்ச‌ம் உருவா‌கிறது. பாறைகளை‌க் குடை‌ந்து அத‌ற்கு‌ள் முருகனை வை‌த்து வ‌ழிபட வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் ‌எ‌ப்படி தோ‌ன்‌றி‌யிரு‌க்கு‌ம் எ‌ன்று ‌பிர‌ம்‌மி‌ப்பாக உ‌ள்ளது.

எப்படித்தான் இந்த கோயிலை உருவாக்கியிருப்பார்கள் என்று நாம் பிரம்மித்து நிற்கும்போது, கோயில் கருவறைக்குள் உள்ள ஒரு துளையைக் காண்பித்து, இது சித்தர்கள் சென்று வந்து கொண்டிருந்த இடம் என்றும், தற்போதும் இதற்குள் சித்தர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று கூறுகிறார் கோயில் பூசாரி.


மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாறையைப் பார்த்தால் யானையின் உருவம் தெரிகிறது. வள்ளியை தன் பால் கவர முருகனுக்கு உதவி செய்ய வந்த விநாயகர் பெருமான் தான் அந்த யானை‌யி‌ன் உருவம் கொண்ட பாறை எ‌ன்று ந‌ம்பு‌ம் ப‌க்த‌ர்க‌ள் அதனை கணேச கிரி என்று ப‌க்‌தியோடு வண‌ங்குகிறார்கள்.

கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் சுவாமி சட்சிதானந்தர் சமாதி அடைந்த ஆசிரமும் அமைந்துள்ளது.

மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லையாம்.

இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.


இந்த சுனைக்கு மிகவும் மகத்துவம் உள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம்.

இ‌ந்த கோ‌யி‌ல் மாலை 5 ம‌ணி வரை ம‌ட்டுமே ‌திற‌ந்‌திரு‌க்கு‌ம். கோ‌யிலு‌க்கு‌ள் 4 ம‌ணி‌க்கெ‌ல்லா‌ம் செ‌ன்று‌வி‌ட்டா‌ல் அத‌ற்கு ‌பி‌ன்ன‌ர் 2 ‌கி‌.‌மீ. தூர‌ம் நட‌ந்து செ‌ன்று ஆ‌சிரம‌ம், சுனை, ‌திருமா‌ல் ‌கி‌ரீ‌ஸ்வர‌ர் கோ‌யி‌ல்களை த‌ரிசன‌‌ம் ச‌ெ‌ய்து‌வி‌ட்டு ‌திரு‌ம்ப இயலு‌ம். கோ‌யி‌‌லி‌ன் நடை சா‌ர்‌த்த‌ப்ப‌ட்டாலு‌ம், ம‌ற்ற பகு‌திகளு‌க்கு‌ச் செ‌ன்று ‌திரு‌ம்ப த‌னி வ‌‌ழி உ‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வ‌ள்‌ளிமலை‌க்கு‌ச் செ‌ல்ல இர‌ண்டரை ம‌ணி நேர‌ம் ஆகு‌ம். செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேலூ‌ர் அ‌ல்லது ஆர‌ணி ஆ‌ற்காடு செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌ள் பல வ‌ள்‌ளிமலை‌யி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம்.

எனவே இறை‌த்த‌ன்மை வா‌ய்‌ந்த இ‌‌‌த்தல‌த்‌தி‌ற்கு செ‌ன்று வ‌ள்‌ளி‌‌ மலை‌யி‌ன் அ‌ற்புத‌த்தை க‌ண்டு வாரு‌ங்க‌ள். வ‌ள்‌ளி, தெ‌ய்வயானை சமேதரா‌ய் ‌வீ‌ற்‌றிரு‌க்கு‌ம் முருக‌னி‌ன் அருளை‌ப் பெ‌ற்று வாரு‌ங்க‌ள்.

Read More...

அழகர் மலை - Azhagar Malai (Cover Story)

தயா‌ரிப்பாளர் சங்கிலி முருகன் காதலுக்கு ம‌ரியாதை படத்துக்குப் பிறகு தயா‌ரித்திருக்கும் படம் அழகர் மலை. இளையராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார்.

எல்லாம் அவன் செயல் படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்.கே. இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். பணம் படைத்த வீட்டின் தெனாவட்டு வா‌ரிசாக நடித்திருக்கும் அவருக்கு ஜோடி தாமிரபரணி பானு.

படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி ஆர்.கே.இப்படி கூறுகிறார். "எல்லார் வாழ்க்கையிலும் சில விபத்துகள் நடக்கும். அது நல்லதாகவும் இருக்கும். அது சில பேரை மாற்றும். சில பேரை வீழ்த்தும். வரட்டு கவுரவத்துடன் நடந்து கொள்ளும் என்னுடைய கேரக்டர் எப்படி மாறுதுங்கிறது கதை.

கிராமத்து திருவிழாவுக்கு பட்டணத்திலிருந்து வருகிறார் பானு. அவரது வருகை சில எதிர்பாராத விஷயங்களை கிராமத்தில் ஏற்படுத்துகிறது. அதுதான் படத்தின் மையம். நெப்போலியன், லால் இருவரும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே.யின் மாமாவாக படம் நெடுக பட்டையை கிளப்பியிருக்கிறார் வடிவேலு.

பொன்மனம், என் உயிர் நீதானே, என் புருஷன் குழந்தை மாதி‌ரி, கார்மேகம் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ரா‌ஜ்குமார் அழகர் மலையின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். மணிவண்ணன், சுகன்யா, சரவணன, சோனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சி ராக்கி ராஜேஷ். ஏடிட்டிங் ஹர்ஷா. இசை இளையராஜா. சென்னை, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படம் இம்மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More...

ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில் - Sri Kalaikaambal Thiru koil

சென்னை நகரின் ‌மிக மு‌க்‌கிய‌ப் பகுதியான பா‌ரிமுனை‌யி‌ல் உள்ள தம்புசெட்டித் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில்.

இ‌ந்த கோ‌யி‌ல் ஸ்ரீகா‌ளிகா‌ம்பா‌ள் ‌திரு‌க்கோ‌யி‌ல் எ‌ன்று பலராலு‌ம் அ‌றிய‌ப்படு‌ம்.

ஸ்ரீகா‌ளிகா‌ம்பாளை, க‌ர்ப‌க்‌கிரக‌த்‌தி‌ன் மு‌ன்பு அம‌ர்‌ந்து ‌நிதானமாக வ‌ழிபடு‌ம் முறை இ‌ங்கு உ‌ள்ளது. அதாவது வ‌ரிசை‌யி‌ல் வரு‌ம் ப‌க்த‌ர்களை ஒரு ‌சிறு ‌சிறு‌ குழுவாக ‌பி‌ரி‌த்து க‌ர்ப‌க்‌கிரக‌த்‌தி‌ன் மு‌ன்பு அமரவை‌த்து வ‌ழிபாடுக‌ள் நட‌த்த‌ப்படு‌கி‌ன்றன. இ‌ந்த முறை அ‌ங்கு வரு‌ம் ப‌க்த‌ர்களு‌க்கு ‌விரு‌ம்ப‌த் த‌க்கதாக இரு‌க்‌கிறது.



மாத‌ந்தோறு‌ம் செ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி‌க் ‌கிழமைக‌ளிலு‌ம், பவு‌ர்ண‌மி நா‌ட்க‌ளி‌லு‌ம் ப‌க்த‌ர்க‌ளி‌ன் கூ‌ட்ட‌ம் அ‌திகமாக இரு‌க்‌கிறது.

நெ‌ய் ‌விள‌க்கு ஏ‌ற்றுவது, எலு‌மி‌ச்சை மாலை அ‌ணி‌வி‌ப்பது போ‌ன்றவ‌ற்றை ப‌க்த‌ர்க‌ள் செ‌ய்‌கி‌ன்றன‌ர்.

கோ‌யி‌ல் வரலாறு
செ‌ன்னை‌க் கோ‌ட்டை‌யி‌ல் கி.பி.1640லேயே இ‌க்கோ‌யி‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஆனா‌ல் ஆ‌ங்‌கிலேய ஆ‌ட்‌சி‌க்கால‌த்‌தி‌ல்தா‌ன் இ‌ந்த கோ‌யி‌ல் த‌ம்புசெ‌ட்டி‌த் தெரு‌வி‌ற்கு இடமா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

புராணங்களில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் அழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. கோ‌யி‌லி‌ல் உ‌ள்ள மூலவ‌ச் ‌சிலை‌க்கு அ‌ந்த கால‌த்‌தி‌ல் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும், நெய்தல் நில காமாட்சி என்ற பெயரும் காளிகாம்பாளுக்கு உண்டு.

காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீகாளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த் த‌க்கது. அதனை நினைவூட்டும் வகையில் தா‌ன் மேற்கு நோக்கி அர்த்தபத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீகாளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது.

மூல ‌க‌ர்‌ப்ப‌க்‌கிரக‌ம்
மூல க‌ர்‌ப்ப‌க்‌கிரக‌த்‌தி‌ல் வீற்றிருக்கும் ஸ்ரீகாளிகாம்பாளின் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்ப மலரும் காட்சியளிக்கிறது. இடது கை வரதமுத்திரையுடன் காணப்படுகிறது. வலது காலை தாமரையில் வைத்தபடி அன்னை காட்சி தருகிறார்.

இந்த கருவறையைச் சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங் கள், வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீமுருகர், ஸ்ரீவீரபஹாமங்கர் மற்றும் அவரது சீடர் சித்தையா, அன்னையின் பள்ளியறை, ஸ்ரீகமடேஸ்வரர் சந்நிதி, ஸ்ரீதுர்கா, ஸ்ரீசண்டிகேஸ்வரர், பிரம்மா, சூரிய சந்திரர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
வெளிப்பிரகாரத்தை சுற்றி ஸ்ரீ சித்தி விநாயகர், கொடி மரம், வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ வட கதிர்காம முருகன், ஸ்ரீசித்திபுத்தி விநாயகர், ஸ்ரீவீரபத்திர மகாகாளி, ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீவிஸ்வபிரம்மா, ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாமேரு சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன.

தல‌ சிறப்பு
பராசரர், வியாசர், அகத்தியர் உ‌ள்‌ளி‌ட்ட முனிவர்களும், இந்திரன், வருணன் ஆகிய அஷ்டதிக்கு பாலகர்களும், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் ஆகிய கிரகங்களும், ஆமைவடிவில் கமடேஸ்வரராக திருமாலும் இ‌‌த்தல‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் அன்னையை வழிபட்டுள்ளனர்.

மேலும், வரலா‌ற்று‌ப் புக‌‌ழ்பெ‌ற்ற சத்ரபதி சிவாஜியே ஸ்ரீகாளிகாம்பா‌ள் அ‌ம்மனை வழிபட்ட பின்னரே, த‌ன்னை சத்ரபதி எ‌ன்று அ‌றி‌வி‌த்து‌க் கொ‌‌ண்டதாக சா‌ன்றுக‌ள் உ‌ள்ளன.

‌சிற‌ப்பு பூஜைக‌ள்
சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி, ஒ‌வ்வொரு மாதமு‌ம் பவு‌ர்ண‌மி ‌தின‌ங்க‌ள், சித்ரா பவுர்ணமி, வைகாசியில் பிரம்மோற்சவம், ஆடியில் வசந்த உற்சவம், வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், ஆடிக்கிருத்திகை, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் கமடேஸ்வரர் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம், கந்த சஷ்டி உற்சவம், கார்த்திகையில் சோமவார உற்சவம், கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், அம்பாளின் தீர்த்தவாரி, தை மாதத்தில் புஷ்பாஞ்சலி, மகுடாபிஷேகம் ஆகியவை இங்கு வெகு சிறப்பாக‌க் கொ‌ண்டாட‌ப்படு‌ம்.

எ‌ப்படி‌ச் செ‌ல்வது
சென்னை உயர்நீதி மன்ற‌ம் பேரு‌ந்து ‌நிலைய‌த்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு நகரின் முக்கிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

ர‌யி‌ல் மா‌ர்கமாக‌ச் செ‌ல்பவ‌ர்க‌ள் செ‌ன்னை கட‌ற்கரை ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் இற‌ங்‌கி‌ச் செ‌ல்லலா‌ம். செ‌ன்னை கட‌ற்கரை ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து‌ குறை‌ந்தது 1 ‌கி.‌மீ. தொலை‌வி‌ல்தா‌ன் கா‌ளிகா‌ம்பா‌ள் கோ‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.

Read More...

Monday, July 13, 2009

வெண்ணிலா ஐஸ்கிறீம் - Vennila Ice Cream

தேவையான பொருட்கள்
கட்டிப்பால் - 1/4 கப்
பால்மா - 1/2 கப்
தண்ணீர் - 3/4 கப்
வனிலா எஸன்ஸ் - 1/4 தேக்கரண்டி

செய்முறை
•கட்டிப்பாலினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைக்கவும்.
•பால்மாவை மீதி 1/2 கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும்.


•இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் 1/2 மணித்தியாலம் வைத்து எடுக்கவும்.
•ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து பீட்டரால் அல்லது கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும்.
•பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். அடிக்க வேண்டாம்.
•பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் 1 - 11/2 மணித்தியாலங்கள் வைத்து எடுக்கவும்.
•மீண்டும் பீட்டரால் அல்லது கரண்டியால் பொங்க பொங்க அடிக்கவும்.
•ஃபிரீஸரில் வைத்து இறுகியதும் எடுத்து பரிமாறலாம்.
•சுவையான ஐஸ்கிறீம்.


குறிப்பு:
இரண்டாம் முறை அடித்ததும் குறைந்தது 21/2 மணித்தியாலங்களாவது ஃபிரீஸரில் வைக்கவும். விரும்பினால் நட்ஸ், டூட்டி ஃபுரூட்டி சேர்க்கலாம். வனிலாவுக்கு பதில் வேறு பழ எஸன்ஸும் சேர்த்து அதே நிறங்களும் சேர்க்கலாம்.

Read More...

Sunday, July 12, 2009

Vettaikaran - 2 Full songs (Mp3)


Movie Title: Vettaikaran (2009)

Cast: 'Ilayathalapathy' Vijay, Anushka and etc

Music: Vijay Anthony

Producer: AVM productions


Direction: Babu Sivan

SONG NAMES:-

Song 1 : Vettaikaran Parambarada

Song 2: Madikittane

Download Link:-



Read More...

மாணிக் முகாமில் சிறிலங்க அதிபர் மகன் மீது சேறு வீச்சு!

இலங்கையி‌‌ல் தமிழர்கள் அடைத்து வைக்கப்ட்டுள்ள மாணிக் முகாமை பார்வையிடச் சென்ற சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச மீது அங்கிருந்த தமிழர்கள் சேற்றையும், கற்களையும் வீசியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, இளையோர் செயல் திட்டம் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஊடகவியலாளர்களுடன் நாமல் ராஜபக்ச வன்னியில் உள்ள மாணிக் முகாமிற்குச் சென்றிருந்தபோதே இச்சம்பவம் நடந்துள்ளது.

அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ஊடகவியலாளர்கள் புகைப்படமும், ஒளிப்பதிவும் செய்துள்ளனர். ஆனால் அவற்றை அங்கிருந்த இராணுவத்தினர் அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பெரும்பாலான ஊடகங்களில் இதுபற்றிய தகவல் வெளிவரவில்லை என்று பதிவு இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Read More...

மீன் குருமா - Fish Kuruma

தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 5,
இஞ்சி - சிறிது,
பூண்டு -6 பல்,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
தேங்காய்ப்பால் - 2 கப்,
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை
மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மீன் துண்டுகள் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
மீன் முக்கால் பதம் வெந்ததும், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தேங்காய்ப்பால் ஊற்றி அதிகம் கொதிக்கக் கூடாது.

குறிப்பு:ஆப்பம், இடியாப்பம், தோசைக்கு நன்றாக இருக்கும்.

Read More...

ஃபிரைட் ரைஸ் - Fried Rice

தேவையான பொருட்கள்
பாஸுமதி அரிசி - 3 கப்
தண்ணீர் - 4 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை பட்டானி - 50 கிராம்
பட்டர் - 75 கிராம்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
உப்பு தேவையான அளவு

செய்முறை
முதலில் அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்,
பிறகு வெங்காயத்தை நீளவாகில் நருக்கவும்.

பிறகு ஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பாத்திரத்தில் 25 கிராம் பட்டரை போட்டு அதில் அரிசியின் நீரை வடிகட்டி அதில் போட்டு விடாமல் கிளறவும் சிவக்காமல் வருத்து எடுத்துக்கொள்ளவும்,பின்பு 3கப் சோறு ஆக்கக்கூடிய அளவு பாத்திரத்தில் மீதமுள்ள பட்டரைபோட்டு அதில் பட்டை கிராம்பு போட்டு வெந் த்ததும் நருக்கிய வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக சிவக்கும் வரை வருக்கவும் வெங்காயம் சிவந்தபின்பு பச்சை பட்டானி போட்டு வதக்கியபின்பு வறுத்துவைத்த அரிசியை போட்டு ஒருநிமிடம் கிளறி பிறகு அளந்துவைத்துள்ள தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து மேலே மூடிபோட்டு வைக்கவும் தண்ணீர் சுன்டி வரும் தருவாயில் தீயை குறைத்து புழுங்கவிடவும்,பிறகு சோறு வெந்ததை உறுதி செய்தபின்பு இறக்கவும்.

Read More...

நாஞ்சில் மீன் குழம்பு - Naangil Fish Curry

தேவையான பொருட்கள்:
மீன்(ஏதேனும் வகை) - 6 முதல் 7 துண்டுகள்
புளி - சின்ன எலுமிச்சம் பழ அளவு

வறுத்து அரைக்க:
தேங்காய் - ஒரு சிறிய முறி (பொடியாக துருவிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – 1 அல்லது சின்ன வெங்காயம் - 8
மல்லி விதைகள்(தனியா) - 3 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
பெருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 3 நெட்டுகள்


தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி

செய்முறை:
•மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
•புளியை ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.அதனுடன் ஒரு நெட்டு கறிவேப்பிலை மற்றும் இரண்டு பச்சை மிளகாய்களை நீள வாக்கில் நறுக்கி சேர்த்துக் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
•மல்லி ,காய்ந்த மிளகாய் ,மிளகு, பெருஞ்சீரகம், இரண்டு நெட்டு கறிவேப்பிலை இவற்றுடன் ஒரு பெரிய வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயம் பயன்படுத்துவதாக இருந்தால் நறுக்கத் தேவையில்லை.
•தேங்காயை சிறு துருவல்களாக துருவி எடுத்துக் கொள்ளவும்.
•அடுப்பில் வாணலியை வைத்து அரை கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவலையும் இதர பொருட்களையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.தேங்காய் நன்கு பொன்னிறமாக பொலபொலவென ஆகும் வரை வறுக்க வேண்டும்.
•இதை ஐந்து நிமிடங்கள் ஆற வைத்து பின் மிக்ஸியில் இட்டு நீர் விடாமல் நன்கு பொடித்துக் கொள்ளவும்.
•அதன் பின்னர் அரை கப் நீர் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.(முதலிலேயே நீர் சேர்த்து அரைத்தால் நன்கு அரையாது, மை போல் அரைத்தால் தான் சுவை கூடும்.)
•ஏற்கனவே கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் இந்த விழுதை சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
•வாணலியை அடுப்பில் வைத்து அரை கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தை இட்டு தாளித்துக் கொள்ளவும்.வெந்தயம் பொன்னிறமானதும் கரைத்து வைத்துள்ள குழம்புக்கலவையை ஊற்றவும்.
•குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும்.
•மூடியை சிறிது திறந்திருக்குமாறு மூடி பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.
•மணமணக்கும், நாவூறும் நாஞ்சில் மீன் குழம்பு தயார். சூடாக்கி இரண்டு நாள் வைத்திருந்து சாப்பிடலாம்.அடுத்த நாள் இன்னும் சுவை கூடும்.

குறிப்பு:
மண் சட்டியில் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதில் மீன் துண்டுகளுடன் முருங்கைக்காய் சேர்த்து செய்தால் வாசமாக இருக்கும். கண்டிப்பாக ஒரு முறை முருங்கைக்காய் சேர்த்தும் செய்து பாருங்கள். மத்தி மற்றும் நெத்திலி மீன்களுடன் கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி சேர்த்தும் செய்யலாம்.

Read More...

உருளைகிழங்கு பூரி - Potato Poori

தேவையான பொருட்கள்
மைதாமாவு -1கப்
உருளைகிழங்கு -1
உப்பு -தேவையான அளவு
எண்ணை -பொரிக்கதேவையான அளவு

செய்முறை
உருளைகிழங்கை வேகவைத்து நன்கு கட்டியில்லாமல் பிசைந்துவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு,பிசைந்த உருளைகிழங்கு,தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து 1/2மணிநேரம் ஊறவிடவும்.

ஊறியமாவை சிறு உருண்டைகளாக செய்து பூரிக்கட்டையில் மெல்லியதாக தேய்த்து காய்ந்த எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
விருப்பமான மசாலாவுடன் சாப்பிடலாம்.

குறிப்பு:குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Read More...

காய்கறி ரொட்டி - Vegetables Bread

காய்கறி ரொட்டி எல்லோராலும் விரும்பி உண்ண கூடியதும் சுவைவையானதும்,கல்சியம்,புரதம் காபோவைதரேட்டு,மினரல்,உயிர்சத்துகள் நிறைந்ததும் ஆன ஓரு உணவு(சிறுவர்களுக்கு மிகமிக நல்ல சத்தான் உணவு).

தேவையான பொருட்கள்
கோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
உப்பு - தேவையானளவு
பால் - 1 மேசைக்கரண்டி
பட்டர் - 1 மேசைக்கரண்டி
கொதிநீர்- (1- 2)கப்
எண்ணைய் -தேவையானளவு

பெரியவெங்காயம்(சிறிது சிறிதாக வெட்டியது) - 1
பச்சைமிளகாய்(சிறிய வட்டமாக வெட்டியது) - 3
கருவப்பிலை(சிறிதுசிறிதாகவெட்டியது)- சிறிதளவு
லீக்ஸ்(சிறியமெல்லியவட்டமாகவெட்டியது)-25கிராம்
கரட்(துருவியது)- 25கிராம்
பீன்ஸ்(சிறியமெல்லியவட்டமாகவெட்டியது)- 25கிராம்
முட்டைகோஸ்(சிறிது சிறிதாக வெட்டியது)- 15கிராம்
தக்காளிப்பழம்(சிறியது)(சிறிதுசிறிதாகவெட்டியது)-1
உருளைகிழங்கு(துருவியது) - 1

செய்முறை
(1)கோதுமைமா(மைதாமா),உப்பு,பால்,பட்டர்,வெங்காயம்,பச்சைமிளகாய்,
கருவப்பிலை,லீக்ஸ்,கரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்,தக்காளிப்பழம்
உருளைகிழங்குஆகியவற்றை போட்டு கலக்கவும்.
(2)அதன் பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும்.
(3)அதன் பின்பு குழைத்த மாவை சிறு உருண்டைகளக உருட்டவும்.
(4)அதன் பின்பு சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும்.
(5)அதன் பின்பு அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணைய் தடவவும்.
(6))அதன் பின்பு வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும்.
(7)அது வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.
(8)இருபக்கமும் வெந்ததும் சுவையான, மெதுமையான ரொட்டி தயராகிவிடும்.
(9) இதனைப்போல மற்றைய ரொட்டிகளையும் தயார் செய்து பரிமாறவும் .

குறிப்பு:
1)எச்சரிக்கை - இருதய, சக்கரை நோயாளிகள் வைத்தியரின் ஆலோசனைப்படி சாப்பிடவும். (2)மாற்று முறை -கொழுப்புபட்டருக்கு பதிலாக கொழுப்பு குறைந்த பட்டரோ அல்லது எண்ணைய் பாவிக்கலாம்,பால்க்கு பதிலாக தயிர் பாவிக்கலாம். விரும்பினால் முட்டை- 1ஜ சேர்க்கலாம்,காய்கறிகளில் விரும்பியதை பாவிக்கலாம். (3)கவனிக்க வேண்டிய விசயங்கள-ரொட்டி நன்றாக வெந்துவிட்டதா என்பதை கவனிக்கவும்,ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும் ,பால் பட்டர் ,முட்டை ஆகியவற்றை சேர்த்து செய்த ரொட்டி மெதுமையாக இருக்கும்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009