Saturday, August 29, 2009

சேரன் - நேற்று இல்லாத மாற்றம்

பொக்கிஷம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததில் சேரனுக்கு வருத்தம். அவரைவிட அதிக வருத்தம் சேரனின் ரசிகர்களுக்கு. அவர்களின் பாராட்டும், பாஸிட்டிவ்வான விமர்சனமுமே தற்போது சேரனுக்கு எனர்‌ஜி பூஸ்ட்.

பொக்கிஷம் ஓடும் திரையரங்களுக்கு நே‌ரில் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்திவரும் சேரன், இனி சோதனை முயற்சிகள் செய்வதில்லை, குறிப்பாக அடுத்தவர் தயா‌ரிப்பில் என்று புதிய முடிவெடுத்திருப்பதை சில நாட்கள் முன்புகுறிப்பிட்டிருந்தோம். இந்த புதிய முடிவுடன் வேறொரு மாற்றத்தையும் சேரனிடம் காண முடிகிறது. அது தோற்றத்தில் உள்ள மாற்றம்.

பொக்கிஷம் படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் நடிப்பதாக இருந்தார் சேரன். சேரனை வைத்து படமெடுப்பதாக மிஷ்கினும் அறிவித்திருந்தார். இந்தப் படத்துக்காக சேரனும் அடர்த்தியாக தாடி வளர்த்திருந்தார்.

மிஷ்கின் கமலை சந்தித்த பிறகு எல்லாமே மாறிப் போனது. கமல் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க பச்சைக் கொடி காண்பித்ததால், யுத்தம் செய் படத்திலிருந்து சேரனை கழற்றிவிட்டு கமலுக்கு கதை பண்ண ஆரம்பித்தார் மிஷ்கின். இந்த திடீர் பல்டி காரணமாக யுத்தம் செய் படத்துக்கு வளர்த்த அடர்த்தியான தாடியை ஷேவ் செய்து பளபளப்பாக மாறியிருக்கிறார் சேரன்.

அடுத்து பெ‌ரிய ஹீரோவை வைத்து பாரசீக ரோஜாவை அவர் இயக்குவார் என கூறப்படுகிறது. ஆல் தி பெஸ்ட் சேரன்.

Read More...

Thursday, August 27, 2009

கந்தசாமிக்கு முதலிடம் - Chennai Box Office Kandhasamy

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் விக்ரமின் கந்தசாமி முதலிடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில் பிரமாண்டமான ஓபனிங் இந்தப் படத்திற்கே என்பது முக்கியமானது.

5. மலை மலை
மூன்று வாரங்கள் முடிவில் 42 லட்சங்கள் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது ஏ.வெங்கடேஷின் மலை மலை. இதன் சென்ற வார இறுதி வசூல், ஏறக்குறைய 1.7 லட்சங்கள்.

4. நாடோடிகள்
சமுத்திரக்கனியின் படம் நூறாவது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. எட்டு வாரங்கள் முடிவில் சென்னை வசூல் மட்டும் ஏறக்குறைய 3.53 கோடிகள். சென்றவார இறுதி வசூல் 1.9லட்சங்கள்.

3. அழகர்மலை
ஆர்கே-யை ஹீரோவாக நிலை நிறுத்தியிருக்கிறது அழகர்மலை. வடிவேலு ஆர்கே காம்பினேஷன் வொர்க் அவுட்டானது படத்தின் பலம். சென்றவார வசூல், 2.8 லட்சங்கள். இதுவரையான மொத்த சென்னை வசூல் 27 லட்சங்கள்.

2. பொக்கிஷம்
இரண்டாவது இடத்தில் பொக்கிஷம். முதல் மூன்று நாளில் ஏறக்குறைய 38 லட்சங்கள் வசூலித்த இந்தப் படம், சென்றவார இறுதியில் 10.7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 83 லட்சங்கள்.

1. கந்தசாமி
விக்ரமின் கந்தசாமி இந்த வருடத்தின் பிரமாண்ட ஓபனிங்கை பெற்றுள்ளது. நவீன ராபின்ஹுட் கதையான இதன் கமர்ஷியல் அம்சங்கள் படத்தை காப்பாற்றும் என நம்பலாம். முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய 93 லட்சங்களை இப்படம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Read More...

Tuesday, August 25, 2009

சேரனின் திடீர் முடிவு

பொக்கிஷம் படத்தின் ‌ரிசல்ட் சேரனை ரொம்பவே பாதித்திருக்கிறது. படம் சுமாராகப் போனாலும் பத்தி‌ரிகைகளாவது படத்தை கொண்டாடும் என்று நினைத்தார். அவர் எண்ணத்துக்கு மாறாக படத்தை எண்ணெய்யில் வறுத்தெடுத்துவிட்டன மீடியாக்கள். படமும் திரையிட்ட இடங்களிலெல்லாம் ஈயடிக்கிறது.

இழைத்து இழைத்து உருவாக்கிய பொக்கிஷத்தால் தயா‌ரிப்பாளர் இத்தேஷ் ஜெபக்கிற்கு ஆறு கோடி வரை இழப்பு ஏற்படும் சூழல் உருவாக்கியிருக்கிறது. இதனால் புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறார் சேரன்.

அடுத்தவர் காசில் சோதனை முயற்சி மேற்கொள்வதில்லை என்பதுதான் அந்த முடிவு. மற்ற இயக்குனர்களைப் போல இனி கமர்ஷியல் ரூட்டில் பயணிக்கப் போவதாகவும் தீர்மானித்திருக்கிறார்.

கடினமான முடிவு, சேரனின் ரசிகர்கள் இதை எப்படி ‌‌ஜீரணிக்கப் போகிறார்கள்?

Read More...

Monday, August 24, 2009

Kandasamy TC DVD RIP - First on net Download Kandhasamy

Banner: V Creations
Cast: Vikram, Shriya, Raghuvaran, Vivek, Santhanam, Vinod Raj, Y G Mahendran, Arun Mathavan, Vinayak, Alex, Indrajith
Direction: Susi Ganesan
Production: Kalaipuli S Thanu
Music: Devi Sri Prasad

Download Links:
http://rapidshare.com/files/272453547/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.001
http://rapidshare.com/files/272455060/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.002

http://rapidshare.com/files/272456628/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.003
http://rapidshare.com/files/272458189/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.004
http://rapidshare.com/files/272460392/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.005
http://rapidshare.com/files/272462568/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.006
http://rapidshare.com/files/272464791/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.007
http://rapidshare.com/files/272466538/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.008
http://rapidshare.com/files/272452134/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.009

Read More...

Sunday, August 23, 2009

விநாயகர் வழிபாட்டில் ஆரோக்கியமும், ஆனந்தமும்!

``ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே''

முழுமுதற் கடவுளாம் விநாயகர் ஐந்து கரங்களுடன் அபயம் அளிப்பவர். விநாயகரின் தோற்றமே விசித்திரமானது எனலாம். அதனையே இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

ஐந்து கரங்களில் வலப்புறக் கையில் ஒன்று, பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது. மற்றொரு வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது.இடப்புறக் கைகளில் ஒன்றில் பாசக் கயிறும், மற்றொரு இடக்கையில் மோதகமும் (கொழுக்கட்டை) வைத்தபடி விநாயகர் காட்சி தருகிறார். ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

கொடியவர்களை ஒழிக்கும் ஆயுதமாக அங்குசத்தையும், தம்மை வழிபடும் அடியவர்களுக்குத் துன்பம் தருவோரை தமது பாசக்கயிற்றால் அழிக்கவே அதனைக் கையில் ஏந்தியுள்ளார். மற்றொரு கையில் அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டையை வைத்துள்ளார். துதிக்கையில் வைத்திருப்பது அமுதக் கலசம்.

அதாவது விநாயகரை மனமுருக வேண்டி வழிபடுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.

`ஆனை முகத்தனை ...' யானை போன்ற முகத்தைக் கொண்டிருப்பவர். இளம்பிறை (முழு நிலவின் ஒரு பகுதி - அரைவட்டம்) போன்ற வயிற்றைக் கொண்டிருப்பவர். நந்தி தேவரின் மகனாகப் பட்டவரை, ஞானமாகிய மிகச் சிறந்த அறிவு படைத்தவரை, புந்தியில் - நம் மனத்தில் என்றும் நினைத்து வணங்குவோமாக! - என்பதே அந்தப் பாடலின் பொருளாகும்.

விநாயகரை வழிபடுவோருக்கு வினைகள் ஏதும் வராது. ஐந்து கரத்தானை வணங்குவோருக்கு ஞானம் பெருகி, நலம் பல பெருகும்.

முகத்தில் ஒரு கையை (துதிக்கை) கொண்டிருப்பதால், விநாயகரை ஒருகை முகன் என்றும் கூறுவர்.

விநாயகர் தத்துவம்
யானைத் தலையின் தத்துவம் யாதெனில் யானை சிறந்த அறிவு படைத்தது. யானையின் காதுகள் பெரியதாக இருப்பதால் நுண்ணிய சப்தத்தைக் கூட அதனால் கேட்க முடியும். புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் யானை ஒருங்கே எடுத்துக் கொள்வது போல, நாமும் எப்போதும் ஒரே மாதிரி இருத்தல் அவசியம் என்பதையே விநாயகரின் யானை முகம் உணர்த்துகிறது.

விநாயகரின் வாகனம் மூஞ்சுறு. இது இருளில் தான் சஞ்சரிக்கும். உணவுப் பொருட்களின் வாசனையைப் பிடித்துக்கொண்டே அவை எங்கிருக்கிறது எனக் கண்டு கொள்ளும்.

ஆன்மீகத்தில் இருள் என்பது அஞ்ஞானத்தையும் வாசனை என்பது ஆசைகனையும் குறிக்கிறது. எனவே தான் அஞ்ஞானத்தையும் ஆசைகளையும் கட்டுப்பாட்டில் வைப்பவர் விநாயகர் என்பதை விளக்கவே அவற்றின் உருவமாக விளங்கும் மூஷிகத்தை (மூஞ்சுறு) வாகனமாகக் கொண்டுள்ளார்.

ஒருமுறை, கைலாயத்தில் சிவபெருமானும், பார்வதியும் தாயம் ஆடிக் கொண்டிருந்தார்களாம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவரை தீர்மானிக்கும் பொறுப்பு நந்திதேவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் உண்மையில் ஈஸ்வரன் தோற்ற போதிலும், அவர் மீது நந்திக்கு இருந்த பெரும் அபிமானம் காரணமாக, ஈஸ்வரனே வென்றதாக தீர்ப்பு கூறினார்.

இதனால் சினம் கொண்ட பார்வதி தேவி, நந்தியை சபித்தாராம். பின்னர் பார்வதியின் பாதம் பணிந்து பாவ விமேசனம் கோரினார் நந்திதேவர்.
பார்வதியும் மனமிரங்கி, ``ஆவணி மாத சதுர்த்தியில் விநாயகரின் பிறந்த தினத்தன்று, உனக்குப் பிரியமான அறுகம்புல்லினால் அர்ச்சனை செய்தால் உன் சாபம் நீங்கும்'' என அருளினார்.

இதன்மூலம் சுயநலத்தை விடுத்து, பொதுநலம் வேண்டி, நமக்குப் பிடித்த பொருளைக் கொண்டு கடவுளைப் பூஜிக்க வேண்டும் என்பது தெரிகிறது. இதுவே உண்மையான விநாயக தத்துவமாகும்.

நைவேத்யப் பின்னணி
விநாயகருக்குப் படைக்கப்படும் நைவேத்யங்களில் முக்கியமானவை சுண்டல், கொழுக்கட்டை, எள் உருண்டை மற்றும் பழங்கள்.

பொதுவாக உடலுக்கு ஏற்ற ஆற்றலைத் தருபவை பழங்கள் எனலாம். எள்ளானது சுவாச சம்பந்தமான நோய்களையும், கண் நோய்களையும் தீர்க்கவல்லது. தவிர, நீராவியில் வேக வைக்கப்படும் கொழுக்கட்டை, சுண்டல் போன்றவை அஜீரணம் ஏற்படாமல் எளிதில் ஜீரணிக்கக் கூடிய பதார்த்தங்களாகும்.

எனவே ஆரோக்கியமும், ஆனந்தமும் ஒருசேர நம் முன்னோர்கள் விநாயகரை வழிபட்டு வந்துள்ளார்கள் என்பது புலனாகிறது. நாமும் முன்னோர்களைப் பின்பற்றி, அவர்கள் வழியில் விநாயகர் வழிபாடு செய்து ஆரோக்கியத்துடன் ஆனந்தத்தையும் பெறுவோம்!

Read More...

கொழுக்கட்டை - இனிப்பு வகை

தேவையான பொருட்கள் :
1. அரிசி ஒரு ஆழாக்கு
2. வெல்லம் 1/4 கிலோ
3. முற்றிய தேங்காய் 1
4. ஏலக்காய் 10

செய்முறை :
1. பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை நைசான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

2. ஒரு ஆழாக்கு மாவிற்கு 2 1/2 ஆழாக்கு தண்ணீரை அளந்து உருளை மாதிரி அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

3. மாவு வெண்மையாக இருக்கும் பொருட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தண்ணீரில் விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை விட்டு கீழே இறக்கி வையுங்கள்.

4. அரைத்து வைத்த மாவில் ஒரு ஆழாக்கு மாவைச் சிறிது சிறிதாக உருளித் தண்ணீரில் தூவுங்கள், அதை கட்டி தட்டாமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

5. தண்ணீரும் மாவும் நன்றாகக் கலந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு டேஸ்டாக இருக்க ஒரு சிட்டிகை உப்பைத் தண்ணீரில் போடலாம். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும், மாவை இறக்கி வைத்து ஒரு தட்டு போட்டு மூடிவைத்துவிட வேண்டும். இப்போது கொழுக்கட்டைக்கு மாவு தயார்.

6. ஒரு முற்றிய தேங்காயைப் பூப்போல் துருவி 1/4 கிலோ வெல்லமும் சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கிளறவேண்டும்.

7. வெல்லமும் தேங்காயும் கலந்து ஒட்டாமல் வரும் பதத்தில், 10 ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து விடவேண்டும். இப்போது பூரணம் தயார்.

8. அரை மணி நேரம் கழித்து மாவை சிறிய எலுமிச்சம் பழ சைஸில் (கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு) உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளுங்கள்.

9. பூரணத்தை அதில் ஒரு ஸ்பூன் வைத்து, பூரணம் வெளியில் தெரியாதவாறு மூடி வைத்து விடவேண்டும்.

10. இம்மாதிரி 10 கொழுக்கட்டைகள் செய்தபின் குக்கரில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து வெயிட் போடாமல் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஆறியபின் கொழுக்கட்டைகளை எடுக்க வேண்டும்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009