Saturday, August 15, 2009

Actress life's in Danger Zone in Family Life - Application of Divorse ---Sonia Agarwal,Vindhya,Kavya Madavan

தேவதைகளாக திரையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்த கதாநாயகிகள் பலர் குடும்ப வாழ்க்கையில் தோற்றுப்போய் நிற்கிறார்கள். திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து மனுக்களுடன் கோர்ட்டுபடியேறும் அவலங்கள் தொடர்கிறது.

விந்தியா, சோனியா அகர்வால், காவ்யா மாதவன், பிரகாஷ்ராஜ் ஆகிய நான்கு பேரின் விவாகரத்து வழக்குகள் திரையுலகின் தற்போதைய உலுக்கல் நிகழ்வுகள்.

“காதல் கொண்டேன்” படம் மூலம் தமிழுக்கு வந்த சோனியா அகர்வால் அப்படத்தின் இயக்குனர் செல்வராகவனை மணந்து சினிமாவுக்கு முழுக்குப் போட்டு ஒதுங்கினார். சந்தோஷமாக நகர்ந்த அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இப்போது புயல். இருவரும் விவாகரத்து கேட்டு நிற்கிறார்கள்.


விந்தியாவுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது. கணவராக வந்தவர் பானுப்பிரியாவின் தம்பி கோபாலகிருஷ்ணன். “சங்கமம்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நிறைய தமிழ் படங்களில் நடித்து முடித்தார். திருமணத்துக்கு பின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பெற்றோர் குடும்பத்தினர் சூழ திருப்பதியில் திருமணம் நடந்தது.

சேர்ந்து வாழ்வார்கள் என்று பார்த்தால் கருத்து வேறுபாடு தோன்றி பிரிந்து விட்டனர். சில மாதங்களாகவே தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள். விந்தியா தியாகராய நகரில் உள்ள தாய் வீட்டுக்கும் கோபால கிருஷ்ணன் வளசரவாக்கத்தில் உள்ள அவரது பழைய வீட்டுக்கும் போய் விட்டனர். இருவரையும் சமாதானபடுத்த பலர் முயன்றனர். பயன் இல்லை.

இவர்கள் வழக்கை அடுத்த மாதம் 17-ந்தேதி விசாரிக்கப் போவதாக நீதிபதி கூறியுள்ளார்.

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜின் விவாகரத்து வழக்கு வித்தியாசமானது. இவருக்கு குழந்தைகள் உள்ளனர். மனைவி லலிதாகுமாரி பழைய கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை. பிரகாஷ்ராஜ் விவாகரத்து கேட்டாலும் லலிதாகுமாரிக்கு உடன்பாடு இல்லை. கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார். கோர்ட்டிலும் கணவனோடு சேர்த்து வையுங்கள் என்று மனுபோட்டுள்ளார்.

மலையாள நடிகை காவ்யா மாதவன் தமிழ் படங்களிலும் நடித்தார். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடந்தது. அந்த குடும்பமும் பிரிந்து நிற்கிறது. மேலும் பல நடிகர், நடிகைகளும், விவாகரத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த விவாகரத்து வழக்குகள் புதுமுக கதாநாயகிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. குடும்ப வாழ்க்கையை நினைத்து இப்போதே அச்சப்படதுவங்கி உள்ளனர்.

நடிகைகள் தற்கொலை முயற்சியை தடுப்பதற்காக நடிகர் சங்கம் விசேஷ கவுன்சிலிங் கூட்டங்கள் நடத்தியது. அதுபோல் நட்சத்திர குடும்ப சண்டைகளிலும் தலையிட்டு அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009