கேப்டன் டோனியும், இந்தி நடிகை தீபிகாபடுகோனேயும் முன்பு ஒன்றாக சுற்றி வந்தனர். இருவரும் தீவிரமாக காதலிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இடையில் அவர்கள் காதல் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் டோனி நடிகை லட்சுமி ராயை காதலிப்பதாக கூறப்பட்டது. அடுத்து கல்லூரி மாணவி ஒருவருடன் சுற்றுவதாகவும் தகவல் வந்தது. ஆனாலும் அவர் யாரை காதலிக்கிறார் என்பது தெரியாமலேயே இருந்தது.
இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் டோனி கலந்து கொண்டார். அவருடன் நடிகை தீபிகா படுகோனேயும் பங்கேற்றார். இருவரும் நவீன ஆடைகள் அணிந்து மேடையில் ஒன்றாக தோன்றினார்கள்.
இருவரும் மீண்டும் காதலிப்பதாகவும் அதனால் தான் ஒன்றாக விழாவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி டோனியிடம் கேட்டபோது பதில் சொல்லவில்லை. அடுத்து நடக்கும் பேஷன் ஷோவில் இருவரும் ஒன்றாக பங்கேற்பீர்களா? என்று கேட்டதற்கு அப்போது கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பேன் என்றார்.
0 comments:
Post a Comment