பன்றி காய்ச்சல் திரையுலகினரை அச்சப்படுத்தி உள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்கும்போது கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரள்கிறார்கள்.
அப்போது பன்றி காய்ச்சல் நடிகர், நடிகைகளை தொற்றிக்கொள்ளலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. எனவே தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு படப்பிடிப்பை மாற்றுகிறார்கள். வெளிநாடுகளில் நடிக்க இருந்த பல தமிழ் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மெகா பட்ஜெட் படங்களின் பெரும்பகுதி படப்பிடிப்புகளை வெளிநாடுகளிலேயே நடத்துவது வழக்கம். அவற்றை இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அஜீத் நடிக்கும் “அசல்” படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. சரண் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பை துருக்கி, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஹங்கேரி உள்ளிட்ட சில நாடுகளில் நடத்த முடிவு செய்தனர். ஆனால் பன்றி காய்ச்சல் காரணமாக தயாரிப்பு தரப்பில் அந்த எண்ணம் கைவிடப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
திரிஷா, கோபிசந்த் ஜோடியாக நடிக்கும் “சங்கம்” படத்தின் படப்பிடிப்பு தென் அமெரிக்காவில் நடப்பதாக இருந்தது. பன்றி காய்ச்சல் பயத்தால் அதுவும் ரத்து செய்யப்பட்டது. வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த வேண்டாம் என்று இயக்குனர்களை நடிகர், நடிகைகள் வற்புறுத்துகின்றனர்
வட இந்தியாவில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் இந்தி நடிகைகளுடன் நடிக்கவும் தமிழ் நடிகர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.
புனே நகரில் நடிப்பதாக இருந்த “குர்பான்” என்ற இந்தி படப்பிடிப்பு பன்றி காய்ச்சல் பயத்தால் ரத்து செய்யப்பட்டது. நடிகை சமீரா ரெட்டி வெளிநாட்டு பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்து விட்டார். ஏற்கனவே மெக்சிகோவில் படப்பிடிப்பில் இருந்த இந்தி, நடிகர் ஹிருத்திக்ரோஷன் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்தியா திரும்பி விட்டார்.
0 comments:
Post a Comment