இரண்டு வாரிசுகளைப் பற்றிதான் இன்டஸ்ட்ரியில் பேச்சு. ஒருவர் துணை முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி. இன்னொருவர் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி.
உதயநிதி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஆதவன் படத்தை தயாரித்து வருகிறார். அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தையும் இவரே தயாரிக்கிறார்.
உதயநிதி சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது தரணி இயக்கிய கில்லி. கில்லிபோல் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது என பேட்டியொன்றில் அவரே கூறியிருக்கிறார். அதனால்தான் கில்லி டீமை வைத்து குருவி படத்தை தயாரித்தார். படம் சரியாகப் போகவில்லையென்றாலும் தரணி மீதுள்ள உதயநிதியின் நம்பிக்கை மங்கவில்லை.
அடுத்து தரணி இயக்கும் படத்தில் ஹீரோவாக உதயநிதி நடிக்கிறார் எனபதே இன்றைய தேதியில் இன்டஸ்ட்ரியை கலக்கும் ஹாட் நியூஸ். இந்த செய்தியை உதயநிதியோ, தரணியோ இன்னும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாரணம் ஆயிரம் படத்தை வாங்கி சினிமா கேரியரை ஆரம்பித்த தயாநிதி அழகிரி, அடுத்து பொல்லாதவன் இயக்குனர் வெற்றிமாறனிடம் கதை கேட்டிருக்கிறார். நல்லவேளையாக நடிப்பதற்கு அல்ல, படம் தயாரிப்பதற்கு. ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் தயாரிக்கும் படம் தயாநிதியுடையதாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
இரு வாரிசுகளின் முயற்சிகள் தமிழ் சினிமாவை வளப்படுத்தினால் சரிதான்.
0 comments:
Post a Comment