Saturday, July 11, 2009

2009 அரையாண்டு படங்கள் ஓர் அலசல் - 2009 Half Yearly Movies Review

சென்ற வருடம் கிடைத்த பாடங்களிலிருந்து தமிழ் சினிமா எதையும் கற்றுக் கொண்டதாக‌த் தெ‌ரியவில்லை. 2008 வெளியான மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 84. அதில் கரை சேர்ந்தவை ஏழே ஏழு.

தமிழ் சினிமாவின் வியாபாரத்தை விஸ்த‌ரிக்கும் என்று எதிர்பார்த்த குசேலன், பீமா, குருவி, ஏகன், சத்யம் என மெகா பட்ஜெட் படங்கள் அனைத்தும் பெருத்த நஷ்டத்தை சந்தித்தன.தமிழ் சினிமாவை ஓரளவு காப்பாற்றியவை என்றால் அது புதியவர்களின் சமரசமற்ற முயற்சிகளான சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, சரோஜா போன்ற பட்ஜெட் படங்கள் மட்டுமே. சினிமாவின் முகத்தை ஹைடெக்காக மாற்றப் போவதாகக் கூறிய கார்ப்பரேட் ஜாம்பவான்கள் ஒருவர் பாக்கி இன்றி அனைவரும் மண்ணை கவ்வினர்.


எளிமையான கதை, சிறந்த திரைக்கதை, யதார்த்தத்தை மீறாத காட்சிகள். இவை இருந்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் வெற்றி பெறும் என்பது சென்ற வருடம் கிடைத்த பாடம். இந்த வருடத்தின் முதல் ஆறு மாத கால தமிழ் சினிமா வியாபாரம் அந்த பாடத்தை மீண்டும் உண்மையாக்கியிருக்கிறது.ஜூன் 30 வரை ஏறக்குறைய 51 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்தவை ஒன்பது. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் நம்ப முடியாத முன்னேற்றம். ஆனால் இது போதுமா?

பஞ்ச் டயலாக், பரபர சண்டைக் காட்சிகள், கால் மணிக்கு ஒரு குத்துப் பாட்டு என ஸ்டார் வேல்யூ ஃபார்முலாவில் வந்த ஏறக்குறைய அனைத்துப் படங்களும் இந்த வருடமும் பணால். விஜய்யின் வில்லு, விஷாலின் தோரணை சிறந்த உதாரணங்கள். பழைய ஃபார்முலாவில் வெளிவந்த ம‌ரியாதைக்கும் வரவேற்பில்லை.

இந்த ஆறு மாத காலத்தில் வெற்றியை அறுவடை செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். முதலில் வெண்ணிலா கபடிக்குழு. ஸ்டார் வேல்யூ இல்லாத சராச‌ரி நடிகர்களால் உருவான படம். இயக்குனர் சுசீந்திரனுக்கும் இதுவே முதல் படம். எளிமையான கிராமத்து இளைஞர்களின் கபடி ஆசையின் வழியாக அவர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்திய இப்படம் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது. இதன் வெற்றி யதார்த்த சினிமாவுக்கான இருப்பை உறுதி செய்தது.

ஆவி கதையுடன் வந்த யாவரும் நலம் இந்த வருடத்தின் எதிர்பாராத ஆச்ச‌ரியம். மாதவன் என்ற ஹீரோ நடித்திருந்தாலும் இயக்குன‌ரின் பழமை தவிர்த்த புதுமை சிந்தனையே படம் வெற்றியின் படிக்கட்டில் ஏற உதவியது.

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த சசிகுமா‌ரின் தயா‌ரிப்பில் வெளிவந்த படம் பசங்க. பதினாலு வயது சிறுவர்கள் நடித்த இந்தப் படம் ஸ்டார் வேல்யூ இல்லாமலே பாக்ஸ் ஆபிஸை கலங்கடித்தது. பத்து இயக்குனர்கள் நடித்த மாயாண்டி குடும்பத்தார் பி அண்டு சி சென்டர்களில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. நஷ்டத்தை சந்திக்காத படங்களின் வ‌ரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சமீபத்தில் வெளியான நாடோடிகளும் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.நாம் மேலே பார்த்த ஐந்து படங்களும் இரண்டிலிருந்து நான்கு கோடிக்குள் தயாரானவை. பிரமாண்டமான அரங்குகள், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தேவையற்ற சண்டைக் காட்சிகள் போன்ற தமிழ் சினிமாவின் சாபக் கேடுகள் ஏதுமற்றவை. எளிமையான கதையையும், யதார்த்தமான காட்சிகளையும், அ‌ரிதாரம் பூசாத நடிகர்களையும் நம்பி எடுக்கப்பட்டவை. இந்த ஆறுமாத காலத்தில் வழக்கமான ஃபார்முலாவில் ஜெயித்த படங்கள் நான்கு. படிக்காதவன், சிவா மனசுல சக்தி, அயன், மாசிலாமணி. இவற்றில் படிக்காதவன், சிவா மனசுல சக்தி, மாசிலாமணி ஆகியவை வெற்றி பெற்றதில் அப்படத்தின் தயா‌ரிப்பாளர்கள் தண்ணியாக செலவழித்த விளம்பர பணத்துக்கு கணிசமான பங்குண்டு.

இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் என்றால் அது அயன். கே.வி.ஆனந்தின் இப்படம் தமிழ் சினிமாவுக்கு பழக்கமான கடத்தல் கதையை பிரமாண்டமாக காட்டியது. சூர்யாவின் நடிப்புக்கும், தொழில்நுட்பத்துக்கும் இந்த வெற்றியில் கணிசமான பங்குண்டு.நல்லவனான ஹீரோ, கெட்டதை மட்டுமே செய்யும் வில்லன், டூயட்டுக்கு ஒரு ஹீரோயின் என்ற வழக்கமான அம்மாஞ்சித்தனங்கள் இந்த வருடம் வெற்றிபெற்ற படங்களில் இல்லை. விதிவிலக்குகள் படிக்காதவனும், மாசிலாமணியும்.ஒரு படத்தின் வெற்றி இயக்குன‌ரின் கையில் இருக்கிறது. சிலர் நம்பிக் கொண்டிருப்பதுபோல் ஹீரோவோ, பிரமாண்டமோ அல்ல படத்தின் வெற்றியை தீர்மானிப்பது. எளிமையான கதையிலேயே எவரெஸ்டை தொடலாம். புதியவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். உணர்ந்து திருந்த வேண்டியது ஒவ்வொருவ‌ரின் கடமை.

Read More...

Sneha Special Interview - No.1 mela Nambikai ellai

பத்த வைத்த மத்தாப்பாக தீபாவளி பிரகாசத்துடன் இருக்கிறார் புன்னகை இளவரசி சினேகா. சி‌ரிப்பை சீசாவில் பிடித்தால் பளீரென்று இன்னொரு பவுர்ணமி பண்ணலாம். அவ‌ரின் உற்சாக பேட்டியிலிருந்து...


காக்கி உடையணிந்து நடிக்கப் போகிறீர்களாமே?
ஆமாம். விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தை ‌ரீ-மேக் செய்கிறார்கள். அதில் விஜயசாந்தி நடித்த போலீஸ் ஆபிஸர் வேடத்தில் நடிக்கிறேன்.


இந்தப் படத்துக்காக ஸ்பெஷல் ட்ரெயினி‌‌ங் எடுத்துக் கொள்வது உண்மையா?
ஆ‌க்சன் படம் என்பதால் சண்டைப் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். வைஜெயந்தி ஐபிஎஸ்-ன் ‌‌ரீ-மேக் என்றாலும் இன்றைய சூழலுக்கு ஏற்ப கதையில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படம் என்னுடைய கோpய‌ரில் முக்கியமான மாற்றமாக இருக்கும்.

இப்போது எத்தனை பட‌ங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
போன வருடம் எனக்கு நன்றாக அமைந்தது போலவே இந்த வருடமும் சிறப்பாக இருக்கிறது. ஒன்பது பட‌ங்கள் கைவசம் இருக்கின்றன.

தமிழில் தற்போது உ‌ங்கள் இடம் என்ன?
இந்த நம்பர் ஒன், நம்பர் டூ மாதி‌ரியான கணக்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஏன் அப்படி?
அதிகபடியான கிளாமர், அதிகபடியான சம்பளம் இதை வைத்துதான் நம்பர் ஒன், டூ எல்லாம் கணக்கு போடுகிறார்கள். அந்த கணக்கு எனக்கு பிடிக்காது.

Read More...

நெய் சாதம் - Gee Rice

தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - கால் கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
முந்திரி - 5,
நெய் - 100 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
•அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
•அடி கெட்டியான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

•நீளமாக நறுக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும்.
•அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
•கொதிக்கும் போது அரிசியை சேர்த்து வேக விடவும்.
•முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைக்கவும்.
•அரிசி முழுதும் வெந்ததும் 10 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும்.

குறிப்பு:
தொட்டுக்கொள்ள சிக்கன் குருமா, மட்டன் குருமா, உருளைக்கிழங்கு-பட்டாணி குருமா நன்றாக இருக்கும்.

Read More...

Sirupuu Vedigalll - Jokes ! !

A Software company Employee to Municipality Sweeper,"I have Degree, Knowledge and good status in society"..
what about u?
Sweeper: I have a permanent job..!

Tamil hero's next file tittles:

Rajni: Robot, Remote car, Plane, Battery train
Vijayakanth: Dharmapuri, Salem, Namakkal, Erode..
Vijay: Villu, ambu, Vundi koll, remote thuppaakki..
Ajith: Agaen, Bgaen, Cgaen, Dgaen,
Suriya: Vaaranam aayiram, rendaaiyiram, naalaiyuram.. pinbilikki pilaakkii..
Jeeva: Thenavattu, kolaputtu, koluppu, nakkal..
Vishal: Sathyam, subham, Santham, Sree
Simbu: Silambattam, Oyilattam, maiyilaatam, korangattam, karagattam.
Barath: Seval, vaathu, maina, pura,


While a Monkey crossing the road,
Wife: Ennaaanga unga Sondhakaaranga yaaro pooraru paarunga..
Husband: En maamanaara enakku theriyadha enna?
wife..?

Varanaam aayiram dialogue in chennai toungue..
Indhaamae Malini..Naan dhaanmae Kishtannn..
Unnanda sollie aavanum, aana nee avloo azhaga keera..I
nga endha oru baemaaniyum evloo sokka paarthukira maattan..
Appaala naan unna daavadikkuren..

What is the best punishment in the world to a girl
Give new clothes,
Jewels,Cosmetics,etc..
and lock her in a room WITHOUT A MIRROR to see..

In Kandhasamy movie,
Vikram's costumes costs 75 Lakhs
But in the same film,Shreya's costume costs 1 crore
MORALVara Vara Kerchief rates lam kanna pinna nu eritte pogudhu..

LKG:
Girl: Pencil tharuviya?
Boy: Miss kitta solliduven..
4th:
Girl: Pencil Thariya?
Boy: Indhaa..
12th
Girl: Pen kudukka mudiyuma?
Boy: oh my god.. Black or blue enna color venum?
College:
Boy: Un pen sariya eluthala nu nenaikuren, indha.. ennoda pen use pannikoo
OFFICE:
Boy: Pudhusa pen vaangi irukken, nee first eludhi paarthuttu kudu..
EPPADI IRUNDHAVANA IPPADI AAKKITAANGAYA.....

Read More...

ஞாபகங்கள் - Gnabagangal

சினிமா எனும் ஆகிருதி எந்தவொரு மனிதனையும் தன்பால் ஈர்க்கவல்லது. சினிமாவின் மூலம் தனது முகம் அல்லது படைப்பு வெளிவந்தால் அது பெரும்பகுதி மக்களை போய் அடைகிறது என்பதே அதன் காரணம். இதுவரை திரைப்பாடல் ஆசிரியராக இருந்த கவிஞர் பா. விஜய்க்கும் அதுவே நடந்துள்ளது.


ஒரு நடிகன் என்ற பரிமாணத்தில் தனது முகத்தை செல்லுலாய்டில் பதிவு செய்துள்ளார். கவிஞனாகிய தன் களம் சார்ந்த விஷயத்திலிருந்து கதையைத் தேர்ந்தெடுத்து 'ஞாபகங்கள்' மூலம் பதிவு செய்ய முயன்றிருக்கிறார்.

திரைப்பாடலாசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வரும் மீராப்பிரியன் என்ற கவிஞனுக்கு ஏற்படும் காதல், லட்சியம், காதல் தோல்வி, போராட்டமே ஞாபகங்களாக திரையில் வருகிறது. காதல் கொடுத்த தோல்வியை தனது வெற்றியின் ஆகுதியாக்கி சாதிக்கப் போகும்போது தான் காதலித்த பெண் கைம்பெண்ணாய்... எதிரில். முடிவு என்ன? என்பதே கிளைமாக்ஸ்.

படத்துக்கு கதையும், கவிதையும் கைகொடுக்கும் என ரொம்ப நம்பியிருக்கிறார் விஜய். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. கவிதை ஓ.கே. கதையும், திரைக்கதையும் அந்தப் பணியிலிருந்து ரொம்பவே விலகியிருக்கிறது. கவிஞர் படமென்பதால் பாடலும், இசையும் தத்தம் கடமைகளை சரியாய் செய்துள்ளன. காட்சி அமைப்புகளும் அருமை.

வசனங்களும், சில உருக்கமான காட்சிகளும் இருந்தும்கூட பல இடங்களில் படம் உணர்வுகளை பதிவு செய்கிறேன் பேர்வழி என்று ஏகத்துக்கு பொறுமை இழக்க வைக்கிறது. நாயகி ஸ்ரீதேவிகா மட்டும் பளிச் பளிச். மற்றபடி நம்ம கவிஞர் பா.விஜய் ஒரு படம் எடுத்துருக்காராம். பரவால்ல தேவல. பார்க்கலாம்பா ரகம்தான் பா.விஜய்யின் - ஞாபகங்கள்.

Read More...

Nayanthara - Safe fa ella un safe fa??????

கையில் 'Pரபு' பச்சை. கண்களில் லேசான சோகம். ஆனால், முகத்தில் மட்டும் பொலிவு குறைந்தபாடில்லை. நயன்தாரா படங்கள் இல்லாமல் கடந்த ஒரு மாதமாய் எந்த பத்திரிக்கையும் வெளிவரவே இல்லை.

இந்நிலையில் நயன்தாராவுடன் அவரது அப்பாவும் அம்மாவும் கூடவே இருப்பதாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவர்களது பாதுகாப்பு வளையத்திதுக்குள்தான் சிக்கியுள்ளார் என்று செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன

ஆனால், நயனோ, எங்க அப்பா, அம்மா என்னோட சுதந்திரத்தில் தலையிட மாட்டாங்க. யாரோட கண்காணிப்புலயும் நான் இல்லை. எந்த ஷூட்டி‌ங் ஸ்பாட்டுல யார் பார்த்தாங்க? என ரொம்பவே கோபம் காட்டுகிறார். பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றங்கள் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். விடுங்க நயன்! பிழைச்சுப் போகட்டும்.

Read More...

Friday, July 10, 2009

Jokes to Laugh - ஜோக்ஸ்

''எதுககுடா எதிர்க்கட்சித் தலைவரை கடிச்சு வச்žங்க?''

''நீங்கதானே தலைவரே அவர் மேல ''பல்முனை'' தாக்குதல் தொடர வேண்டுமுன்னு மேடையில அறிவிச்žங்க!''

''இனிமேல் நீங்க அதிகமா நடக்கணும்!''
''உங்ககிட்டே ட்ரீட்மெண்டுக்கு வந்த பின்னாடி எங்கிட்டே இருந்த காரை வித்துட்டு இப்பல்லாம் எங்கே போனாலும் நடந்தேதான் போறேன் டாக்டர்!''

''நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்...''
''அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க...!''

''எருமை வெளியே போகும்போது தன் ஆண் கன்றிடம் என்ன சொல்லிட்டுப் போகும்?''
''BI SON''


''என் மனைவி ரொம்ப நல்லவ.'' ''அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டே?''
''அவ நல்லவனு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகுதான் தெரியுது.''

''மாப்ளே! நேத்து பஸ்ல வரப்ப என் பாக்கெட்டுல ஒருத்தன் ''பிளேடு'' போட்டுட்டான்.''
''அச்சச்சோ! அப்புறம்?''
''என்ன பண்றது? அந்த பிளேடை எடுத்துக்கிட்டேன்.''

''தலைவரை விளையாட்டுப் போட்டிக்குத் தலைமை தாங்க கூப்பிட்டது தப்பு!''
''ஏன்?''
''நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்துல எவ்வளவு தூரம் ஓடணும்''னு கேட்கறாரு!''

''கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது...'' ''யாரு... எமனா?''
''இல்லை.... தமன்னா!''

''பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்žங்க?''
''ஷ•ட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் ''படப்பிடிப்பு''க்குனு நினைச்சுட்டேன்!''


''என்ன! உங்க வீட்டு காப்பி ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது...?''
''நான்தான் சொன்னேனே... என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு.''

''ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?''
''யோவ் அவன் ''போட்டது'' அசிஸ்டெண்ட் கமிஷனரை!''

Read More...

Thursday, July 9, 2009

முருகன் கோவில்கள்

பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்ற ஆறு கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவை அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன். இவற்றுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது திருச்செந்தூர் ஆகும். இது திருச்சீரலைவாய் எனவும் அழைக்கப்படும். மிக அரிதாக முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில் இதுவாகும். 130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.


சூரபத்மன் என்ற அரக்கன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று தனக்கு சர்வ வல்லமை வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டான்.

சிவபெருமானும் அவனுக்கு காட்சி கொடுத்து, தமது சக்தியன்றி வேறு எந்த சக்தியாலும் அவனுக்கு மரணம் கிடையாது என்று வரம் அருளினார். அதன் பிறகு சூரபத்மனின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போனது. அவனால் துன்பத்திற்கு உள்ளான தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சூரனை அழிக்க சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை உருவாக்கினார். ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. கார்த்திகைப் பெண்கள் அறுவர் குழந்தைகளுக்குப் பாலூட்டினர். அம்மையும், அப்பனும் குழந்தைகளைப் பார்க்க வந்தனர். பார்வதி தேவி அந்த குழந்தைகளைத் திருக்கரங்களால் சேர்த்து அணைத்தாள். அப்போது ஆறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்டு ஒரு குழந்தையாக மாறியது. பார்வதி தேவியின் பாத சிலம்பில் நவசக்திகள் தோன்றினர். நவசக்திகள் வயிற்றில் வீரபாகு முதலிய இலட்சத்து ஒன்பது வீரர்கள் தோன்றினர். இவர்கள் முருகனுக்கு படைவீரர்களாக ஆனார்கள். சிவபெருமான் வெற்றி தரும் வேலை முருகனிடம் தந்தார். தன் அம்சமாகிய பதினொரு ருத்ரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார். அம்மையப்பர் ஆசியுடன் முருகன் படைகளோடு திருச்செந்தூர் வந்து தங்கினார். முருகப் பெருமான் வீரபாகுவைச் சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுவித்திடுமாறு செய்தி அனுப்பினார். சூரபத்மன் அதற்கு மறுத்தார். ஆகவே முருகப் பெருமான் சூரபத்மனோடு போரிட்டார். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயில் சேவலாக மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் என்று முருகன் புகழ் கூவியது.



ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்த 6ம் நாள் முருகன் சூரனை வென்றான். இதுவே கந்த சஷ்டி என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரபதமனின் தளபதிகளான யானைமுகன், சிங்கமுகன், சூரபன்மன் ஆகிய மூன்று அரக்கர்களை ஒழித்தான். இக்காலத்திலும் இம்மூன்று அரக்கர்களும் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய குணங்களாக மக்களிடம் குடியிருக்கிறார்கள். இவர்களை ஒழிக்கவும் திருச்செந்தூரான் அருள் பாலிக்கிறான். இந்த மூன்று துர்குணங்களையும் விட்டொழித்தால் சூரனைப் போல இறுதியில் இறைவனை அடைய முடியும். இந்த சூரசம்ஹார சம்பவத்தைச் சித்தரிக்கும் வைபவம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெறும். தீராத நோய் நீங்க வேண்டும் என்றும், பிள்ளைப்பேறு வேண்டியும், பல பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர்.




பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இயற்கையை வழிபட்டனர். இயற்கையை முருகு எனப் பெயரிட்டு வணங்கினர். காடு, மலை, அருவி, கடற்கரை ஆகிய இடங்களில் கோவில் அமைத்து வழிபட்டனர். அத்தகைய தலங்களுள் ஒன்று திருச்செந்தூர் ஆகும்.



பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்த போது, இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எனினும் தற்போது உள்ள கோவில்களை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுக சுவாமிகள் என்ற மூவர் சுவாமிகள் ஆவர். இவர்கள் மூவரும் தத்தமது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் அமைத்துள்ளனர். இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளனர். இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன. இவர்களுக்கு பின்னர் வந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் ராஜகோபுரத்தை கட்டியதாக கூறப்படுகிறது.



இக்கோவிலில் மூலவர் பெயர் பாலசுப்பிரமணியர். கடற்கரையோரம் நின்று அருள்பாலிப்பதால் 'கடற்கரையாண்டி' என்றும் அழைக்கப்படுகிறார். இக் கோவிலில் மூலவர், வள்ளி, தெய்வானை கோயில்களுக்கு போத்திகளும், ஆறுமுகப் பெருமான், நடராஜர், சனீஸ்வரர் கோயில்களுக்கு சிவாச்சாரியார்களும் பூஜை செய்கின்றனர். வெங்கடாசலப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியார்கள் பூஜை செய்கின்றனர். கோயில் திருப்பணி செய்த மூவர் சமாதிகளில் ஓதுவார்கள் பூஜை செய்கின்றனர். மூலவரின் இடது பாதத்தின் அருகே தங்கச் சீபலி வைக்கப்பட்டுள்ளது. வலது பாதத்தருகே வெள்ளியாலான சீபலி உள்ளது. இந்த சீபலி மூலவரைப் போலவே உள்ள ஒரு சிறு விக்ரகம். தினமும் கோயில் பிரகாரங்களில் வலம் வந்து எல்லா சந்நிதிகளுக்கும் சென்று அந்தந்த கடவுளர்களுக்கு முறையாக நிவேதனம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த சீபலிக்கு உண்டாம். தன் கோயிலில் தன்னுடனே உறையும் பிற கடவுளர்களுக்கே படியளக்கும் இந்த பாலகுமரன், தன்னை நாடும் பக்தர்களை அவ்வாறே காத்து அருள்வான் என்பது உறுதி. கேரள மன்னர் மார்த்தாண்டவர்மன் இவற்றை கோவிலுக்கு வழங்கியுள்ளார்.



சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகளின் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி கோயில் திருப்பணியை மேற்கொள்ளும்படி ஆணையிட்டாராம். அதன்படி அவர் இங்கு தங்கி கோபுரம் கட்டி முடித்திருக்கிறார். அவ்வாறு கோபுரம் கட்டியபோது அந்தப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு கூலி கொடுக்க அவரிடம் பணமில்லை. மனதார முருகனை வேண்டிக்கொண்டு, அவர் பிரசாதமான விபூதியை இலையில் மடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். அந்த இலையை தூண்டுகை விநாயகர் கோயிலை தாண்டி சென்றதும் திறந்து பார்க்குமாறு கூறினார். பணியாளர்களும் அப்படியே பார்த்தபோது அவரவர் வேலைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் தனிதனியே ஊதியம் அந்த விபூதி இலைக்குள் இருந்தது கண்டு அதிசயித்தனர். ஆனால் கோபுரத்தின் ஆறாம் நிலை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்ட போது இந்த அற்புதம் நின்று விட்டது. சுவாமிகள் மிகவும் வருந்தினார். ஆனால் அன்றிரவே முருகன் அவரது கனவில் தோன்றி காயல்பட்டினத்தில் வசிக்கும் சீதக்காதி என்னும் வள்ளலிடம் சென்று பொருள் பெற்று வருமாறு பணித்தார். ஆனால் வள்ளலோ, சுவாமிகள் கொடை கேட்டவுடனேயே ஒரு மூட்டை உப்பை எடுத்துக் கொடுத்தார். சுவாமிகளுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. பணத்தை எதிர்பார்த்தால் உப்பு கிடைக்கிறதே என்று வருந்தினார். ஆனாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் உப்பு மூட்டையை வாங்கிச் சென்றார். திருச்செந்தூர் வந்து சுவாமிகள் மூட்டையைத் திறந்து பார்த்தால் அதற்குள் தங்கக் காசுகள் இருந்ததைக் கண்டு வியந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த காசுகளைக் கொண்டு கோபுரத்தைக் கட்டி முடித்தார் சுவாமிகள். கோயிலின் வடபுறத்தில் வள்ளி குகை அமைந்துள்ளது. இங்கு திரிசுதந்திரர்கள் பூஜை செய்கின்றனர். குகைக்குள் உள்ளே நுழையும் வாயில் 4 அடி உயரமே உள்ளது. குனிந்துதான் செல்ல வேண்டும். குகைக்குள் வள்ளியம்மன் சிலை சுவரையொட்டி அமைந்துள்ளது. முருகன் வள்ளியைச் சிறையெடுக்க வந்தபோது வள்ளியின் தந்தை நம்பிராசன் முருகனை துரத்தினான். முருகன், வள்ளியை இக்குகையில் ஒளிந்திருக்கச் சொல்லி பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு போருக்குச் சென்றதாக புராணம் சொல்கிறது. தெய்வயானையை திருமணம் முடித்து வருவதைக் கண்ட முதல் மனைவியான வள்ளி, முருகன் மீது கோபம் கொண்டு இக்குகையில் வந்து ஒளிந்து கொண்டதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது.



இக்கோயிலில் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார் ஆறுமுகப்பெருமாள். ஒரு காலத்தில் கேரளத்தவர்கள் இச்சிலையைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும் பிறகு குமரி மாவட்டம் பறக்கை என்ற ஊரில் இருந்த செட்டியார்கள் அதை மீட்டதாகவும் சொல்கிறார்கள். அவ்வாறு மீட்கப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அவர்கள் தோசையும், சிறு பருப்பு கஞ்சியும் நிவேதனமாக படைத்திருக்கிறார்கள். அவ்வழக்கப்படி இன்றும் ஆறுமுகப் பெருமானின் உதயமார்த்தாண்ட நைவேத்தியத்தில் தோசையும், கஞ்சியும் தவறாமல் இடம்பெறுகின்றன. கேரள மன்னர்கள் ஆளுகைக்குட்பட்ட காலத்தில் தான் இக்கோவில் பிரபலமடையத் துவங்கியது என்கிறார்கள். ஆகவே, கேரள முறைப்படி இங்கு போத்திகள் மூலஸ்தானத்தில் பூஜை செய்கிறார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளேயே தங்கி பூஜை காரியங்களில் ஈடுபடுகின்றனர். இக்கோயிலில் இன்றும் பூஜை புனஸ்காரங்கள் கேரள முறைப்படியே நடப்பதால், தரிசனத்திற்கு செல்லும் ஆண்கள் கோயிலுக்குள் சட்டை அணியாமல் தான் செல்ல வேண்டும். கேரளக் கோயில்களில் மேற்கொள்ளப்படும் துலாபார பிரார்த்தனை இங்கும் நடக்கிறது.



இக்கோவிலில் வழங்கப்படும் இலை விபூதி பிரசாதம் வேறெங்கும் கிடைக்காது. பன்னீர் மர இலைகளில் பன்னிரண்டு நரம்புகளுள்ள இலைகளாகத் தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்து கட்டு கட்டாக வைத்திருப்பர். நோயால் பாதிக்கப்பட்ட முனிவர் விசுவாமித்திரருக்கு அந்நோய் நீங்க ஆறுமுகப் பெருமான் தம் பன்னிரண்டு கைகளாலும் இலை விபூதியை வழங்கி அவரை முற்றிலும் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் எந்த நோயினால் பீடிக்கப்பட்டாலும் இந்த இலை விபூதி பிரசாதம் நலமளிக்கும் என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நம்புகிறார்கள். கோயிலில் தினமும் உச்சிக்கால பூஜையின் போது மூலவருக்கு பாலாபிஷேகம் நடக்கும். முன்பு இதற்காக திருச்செந்தூரில் ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம் செய்து பாலை கொண்டு வருவார்கள். இதற்கென இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு தலா ஆறு மாதம் பால் யாசிப்பது மட்டுமே வேலை. இப்படி வீடு வீடாக யாசகம் செய்து பாலாபிஷேகம் செய்வதால் இதனை பிச்சைப்பால் அபிஷேகம் என்றே சொல்கிறார்கள். ஆனால் தற்போது பக்தர்கள் தாமே கோயிலுக்கு நேரடியாக பால் கொடுத்து விடுவதால், யாசிக்கும் வழக்கம் இல்லை.



திருச்செந்தூரில் வியப்புக்குரிய ஓர் அம்சம், நாழிக்கிணறு. கடற்கரையை ஒட்டி வெகு அருகில் அமைந்துள்ள சிறிய கிணறு இது. இந்தக் கிணற்றிலிருந்து கிடைக்கும் நீர் உப்பு கரிப்பதில்லை என்பதும், இறைக்க இறைக்க வற்றாமல் நீர் அதே அளவில் சுரப்பதும் விடை காண முடியாத அதிசயமாகும். இது இயற்கை நீரூற்று. இதன் அருகிலேயே உள்ள நீள்சதுர கிணற்றின் நீர் கந்தக நெடியுடன் கல்ங்கிக் காணப்படுவதிலிருந்து நாழிக் கிணற்றின் தெய்வாம்சத்தைப் புரிந்து கொள்ளலாம். கடலில் நீராடிய பக்தர்கள் இந்த நாழிக் கிணற்றில் நீராடி செல்வது வழக்கம். சூரபத்மனை போரில் வென்ற முருகன் தம் படையினரின் தாகம் தணிக்க கடற்கரையில் ஓரிடத்தில் தன் வேலால் குத்தி நீர் வரச் செய்தார். முருகனே உருவாக்கிய பெருமையுடையது இந்த நாழிக்கிணறு என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன், சிறந்த முருக பக்தராகத் திகழ்ந்தார். அவரது காலத்தில் திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்தின் ஒன்பதாவது அறையில் உச்சி கால பூஜையின் போது, வெண்கல மணி தினமும் ஒலிக்கப்படும். 100 கிலோ எடை கொண்ட அந்த மணி சப்தம் கேட்டு திருச்செந்தூர் முதல், கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி வரை 40 மண்டபங்களில் அங்குள்ள மணிகளும் அடுத்தடுத்து ஒலிக்கப்படும். கடைசி மண்டப மணி ஒலிக்கப்படும் சப்தம் கேட்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டடயில் கட்டபொம்மன், திருச்செந்தூர் கோவிலில் உச்சி கால பூஜை நடப்பதை அறிந்து கொள்வார். அதன் பின் தான், அவர் பூஜைகளைச் செய்து அன்றைய உணவை அருந்துவார். திருச்செந்தூர் கோவில் உச்சி கால பூஜை பிரசாதம், அவருக்கு குதிரைகள் மூலம் அடுத்த சில மணி நேரத்தில் கோட்டைக்கு வந்து விடுமாம்.



அத்தகைய சிறப்பு வாய்ந்த மணியின் செயின் அறுந்ததால், கடந்த பல ஆண்டுகளாக பழுதாகக் கிடந்த அந்த மணியை சரி செய்ய வேண்டுமென கட்டபொம்மன் வாரிசு வீமராஜா மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 250 ஆண்டு பழமையான அந்த மணி தற்போது சரி செய்யப்பட்டு, ராஜகோபுர ஒன்பதாம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

Read More...

பார்த்தசாரதி பெருமாள் கோ‌யி‌ல்

மகாபாரத‌த்‌தி‌ல் தேரோ‌ட்டியாக வ‌ந்து அ‌ர்‌ஜூனனு‌க்கு அ‌றிவுரை சொ‌ன்ன ‌கிரு‌ஷ‌்ண‌ரி‌ன் அவதாரமான பா‌ர்‌த்தசார‌தி‌யி‌ன் கோ‌யி‌ல் ‌செ‌ன்னை ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.


108 திவ்ய தேசங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலு‌ம் ஒன்றாகும். இ‌ந்த கோ‌யிலு‌க்கு பல பெரு‌ம் ‌சிற‌ப்புக‌ள் உ‌ள்ளன. பிருந்தாரண்ய ஸ்தலம் என்றும், பஞ்ச வீரத்தலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகு‌ம். இ‌ந்த கோ‌யி‌‌லி‌ல் அமை‌ந்‌திரு‌க்கு‌ம் பா‌ர்‌த்தசார‌‌தி‌யி‌ன் ‌திரு‌முக‌த்‌தி‌ல் பல தழு‌ம்புக‌ள் இரு‌க்கு‌ம். அதாவது மகாபாரத‌ப் போ‌ரி‌ல் அ‌ர்ஜூனனு‌க்கு தேரோ‌ட்டியாக வ‌ந்து, போ‌ரி‌ல் ப‌ட்ட ‌விழு‌ப்பு‌ண்க‌‌ளி‌ன் தழு‌ம்புக‌ள் அவை. மேலு‌ம் ‌கிருஷ‌்ண அவதார‌ங்க‌ளி‌ல் ‌மீசையுட‌ன் காண‌ப்படு‌‌ம் அவதாரமு‌ம் இவ‌ர். அ‌ர்ஜூனனை பா‌ர்‌த்தா எ‌ன்று அழை‌ப்பா‌ர்க‌ள். தேரோ‌ட்டியை சம‌ஸ்‌கிருத‌த்‌தி‌ல் சார‌தி எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். எனவே பா‌ர்‌த்த‌னி‌ன் சார‌தியாக வ‌ந்த இவ‌ர் பா‌ர்‌த்தசார‌தி எ‌ன்று அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌க்கோ‌யி‌லி‌‌ல் பா‌ர்‌த்தசார‌தி‌க்கு‌ம், நர‌சி‌ம்மரு‌க்கு‌ம் த‌னி‌த்‌த‌னி கொடிமர‌ங்க‌ள் அமை‌க்க‌ப்ப‌‌ட்டிரு‌க்கு‌ம் கோ‌யி‌லி‌ன் அமை‌ப்பு கோ‌யி‌லி‌ல் அமை‌ந்‌திரு‌க்கு‌ம் மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார். பெரு‌ம்பாலு‌ம் பெருமா‌ள் தனது குடு‌ம்ப‌த்தாருட‌ன் கா‌ட்‌சி அ‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் அ‌‌ரிதாகு‌ம். சுமதி என்ற தொண்டைமான் மன்னனுக்கு ஏழுமலையான், பார்த்தசாரதியாக அரு‌ள் பா‌லி‌த்த தல‌ம் எ‌ன்று இ‌ந்த கோ‌யி‌லி‌‌ன் வரலாறு கூறு‌கிறது.

இவரு‌க்கு அடு‌த்ததாக பா‌ர்‌த்தசார‌தி ச‌‌ன்ன‌தி‌க்கு வலது புற‌த்‌தி‌ல் வேதவ‌ல்‌லி‌த் தாயா‌‌ரி‌ன் ச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது. ஒ‌‌வ்வொரு வெ‌ள்‌ளி‌க்‌கிழமையு‌ம் வேதவ‌ல்‌லி‌த் தாயாரு‌க்கு ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நட‌த்த‌ப்படு‌ம்.

அடு‌த்ததாக பா‌ர்‌த்தசார‌தி‌ ச‌ந்‌நிதி‌யி‌ன் ‌பி‌ன்புற‌த்‌தி‌ல், மே‌ற்கு நோ‌க்‌கியபடி உ‌க்‌கிர ‌நிலை‌யி‌ல் ஸ்ரீ நர‌சி‌ம்ம சுவா‌மி‌யி‌ன் ச‌ந்‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. இவரை அழ‌கிய் ‌சி‌ங்க‌ர் எ‌ன்று‌ம் அழை‌ப்ப‌ர். இவரது உ‌க்‌கிர‌ம் த‌ணி‌க்கு‌ம் வகை‌யி‌ல் நர‌சி‌ம்ம சுவா‌மி‌யி‌ன் ‌திருமா‌ர்‌பி‌ல் ல‌‌ஷ‌்‌மி தே‌வி‌யி‌ன் ‌திருவுருவ‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். அவரது முக‌த்தை‌ எ‌ப்படி‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் ‌சி‌ரி‌த்தபடியே நம‌க்கு‌க் கா‌ட்‌சி அ‌ளி‌ப்பா‌ர்‌.

அடு‌த்ததாக கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிக‌ளி‌ன் ச‌ந்‌நி‌தி வேதவ‌ல்‌லி‌த் தாயா‌ர் ச‌ந்‌நி‌தி‌க்கு ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் ‌கிழ‌க்கு நோ‌க்‌கியபடி அமை‌ந்து‌ள்ளது. அதாவது கஜே‌ந்‌திரா எ‌ன்ற யானை ‌நீ‌ர்‌நிலை ஒ‌ன்‌றி‌ல் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌ச் செ‌ன்றபோது அ‌ங்‌கிரு‌ந்த முதலை‌யி‌ன் வா‌யி‌ல் ச‌ி‌க்‌கி‌க் கொ‌ண்டது. தனது உ‌யிரை‌க்

கா‌ப்பா‌ற்றுமாறு யானை பெருமாளை வே‌ண்டியது. அ‌ப்போது உடனடியாக கருட‌னி‌ல் வ‌ந்த பெருமா‌ள் முத‌லை‌யிட‌ம் மா‌ட்டி‌யிரு‌ந்த யானையை ‌‌மீ‌ட்டா‌ர். அ‌ப்போது யானை‌க்கு அரு‌ள் பா‌லி‌த்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த ச‌ந்‌‌நி‌தி‌யி‌ல் கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிகளாக ப‌க்த‌ர்களு‌க்கு கா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறா‌ர்.

பா‌‌ர்‌த்தசார‌தி ச‌ந்‌‌‌நி‌தி‌யி‌ன் இடது புர‌த்‌தி‌ல் ஆ‌ண்டா‌ளி‌ன் ச‌ந்‌‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. ஆ‌ண்டா‌ள் பூதே‌வி எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர். இந்த கோயில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி சரஸ் என்பதாகும். இந்த திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது. கோ‌யி‌லி‌ன் சிறப்புஇ‌‌த்‌திரு‌த்தல‌த்‌தி‌ல் பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சி கொடுத்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகு‌ம். ஐப்பசி மாத திருமூல நன்னாளில் நடைபெறும் கைத்தல சேவை சிறப்பு வாய்ந்தது. உரியடி திருவிழா, இராப்பத்து, பகல்பத்து திருவிழாக்கள் சிறப்புடையவை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இந்த கோயிலில் சிறப்பாக வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

வழிபாட்டு நேரம்
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். த‌மிழக அர‌சி‌ன் அ‌ன்னதான‌த் ‌தி‌ட்டமு‌ம் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

எப்படி செ‌ல்வது?
பற‌க்கு‌ம் ர‌யி‌ல் சேவை‌யி‌ல் ‌திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம். ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி பேரு‌ந்து‌ ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து நட‌‌ந்து செ‌ல்லு‌ம் தூர‌த்‌தி‌லேயே இ‌க்கோ‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது. சென்னையி‌ல் எ‌ல்லா மு‌க்‌கிய பேரு‌ந்து வ‌ழி‌த்தட‌ங்க‌ளி‌‌ல் இருந்தும் இங்கு பேருந்துகள் விடப்படுகின்றன. செ‌ன்னை மெ‌ரினா கட‌ற்கரை‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌‌ள் பலவு‌ம் ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி வ‌ழியாக‌த்தா‌ன் செ‌ல்‌கி‌ன்றன.

Read More...

ஆக்ரா கோட்டை! - Agra Fort

ஆக்ரா என்றாலே தாஜ் மஹால்!

காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ் மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.

தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் உறுதியான சுவர்களுடன் திகழும் இக்கோட்டை
ஓராயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது. முகலாயப் பேரரசர் ஷா ஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை, இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

இக்கோட்டையிலுள்ள மூசாம்மன் புர்ஜ், காஸ் மஹால் ஆகிய பகுதிகள் கட்டக் கலைக்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் அழியாத சான்றாகத் திகழ்கின்றன.

தனது காதல் மனைவி மும்தாஜ் இறந்தபின், அவளின் நினைவாக படைத்த தாஜ் மஹாலை - தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது மகனால் இதே கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது - மூசாம்மன் புர்ஜ் கலைக்கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஷா ஜஹான் என்று வரலாறு கூறுகிறது.

ஆக்ரா கோட்டைக்குள் ஷா ஜஹான் கட்டிய அழகிய பகுதிகளில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ் மஹாலின் உன்னத காட்சியைக் காணலாம்.

தாஜ் மஹாலை நேரில் பார்ப்பதிலும், சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், ஷா ஜஹான் ஆக்ரா கோட்டையில் இருந்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இடங்களில் இருந்து பார்ப்பதும் வித்தியாசமான அனுபவங்கள்.

ஆக்ரா கோட்டையில் ஷா ஜஹான் உலாவிய இடங்கள் ஒவ்வொன்றையும் படங்களிலும், காட்சிகளிலும் கண்டுவிடலாம், ஆனால் நேரில் பார்ப்பதிலும், ரசிப்பதிலும் கிடைக்கும் அனுபவத்தைப் பெற முடியாது.

அது தாஜ் மஹாலைப் போல, ஆக்ரா கோட்டை எல்லாவிதத்திலும் வித்தியாசமானது.

ஆக்ரா கோட்டை வரலாறு!
தங்கள் ஆட்சியின் தலை நகராக, அதிகார பீடமாக கொண்டிருந்த ராஜ புதன அரசர்கள் 1080ஆம் ஆண்டில் கட்டியது (ஆக்ரா)மண்கோட்டை. 400 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு, அவர்களைத் தோற்கடித்த சிக்கந்தர் லோடியின் (1487-1517) ஆட்சியின் கீழ் இக்கோட்டை வந்தது.

அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார்.

இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் - அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் - முகலாய பேரரசு வளமாக, பலமாக காலூன்ற உதவியது.

பாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆஃப்கானிய அரசர் ஷேர் ஷா கைவசமானது இக்கோட்டை.

1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு மாற்றினார்.

இன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

யமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷா ஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேர்ரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள்.

பேரரசர் அக்பர் உறுதியாகக் கட்டிய இக்கோட்டையின் சில பகுதிகளை இடித்துவிட்டு, பளிங்கு கற்களைக் கொண்டு பேர்ரசர் ஷா ஜஹான் கட்டிய கூடங்களும், கோபுரங்களும்தான் இக்கோட்டைக்கு பெருமை சேர்த்தன.

இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷா ஜஹானுக்கே உரியது.

Read More...

Wednesday, July 8, 2009

லெமன் லாலி பாப் சிக்கன்

தேவையான பொருட்கள்:

கோழி கால் துண்டுகள் (லெக் பீஸ்) - 12 பீஸ்
எலுமிச்சை - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சோள மாவு - 2 மேஜைக் கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கோழி கால் துண்டுகளை (லெக் பீஸ்)(லாலி பாப்) சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக இரண்டு மூன்று கீரல்கள் போட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து அதில் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
2. பின்னர் எலுமிச்சை சாற்றில் ஊறிய கோழி கால் துண்டுகளை எடுத்து நீரில் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
3. இதனுடன் சோளமாவு, உப்பு, மீதமுள்ள மற்றொரு எலுமிச்சை சாறு, சேர்த்து நன்கு பிசறவும்.
4. பிறகு மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய கோழிக்கறி துண்டுகளை நன்கு வறுத்து எடுக்கவும்.
6. நல்ல எலுமிச்சையின் மனத்தில் குழந்தைகளுக்கு பிடித்த கோழிக்கறி லாலி பாப் தயார்.

குறிப்பு
1. கோழிக்கறியுடன் ஒவ்வொரு பொருளாக சேர்த்து பிசறுவதால் மசாலா நன்கு பிடிக்கும்.
2. பொரிக்கும் போது எண்ணெய் சூடானதும் தீயை மிதமாக வைத்து பொரிக்கவும். அப்போதுதான் கோழிக்கறி நன்கு வேகும்.
3. கோழிக்கறி மசாலாவில் ஒரு மணி நேரம் ஊறினாலே போதுமானது. இருந்தாலும் அதிக நேரம் நன்கு ஊறினால் சுவை கூடுதலாக இருக்கும்.

Read More...

வாழைக்காய் வறுவல்


தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2

பூண்டு - 5 பல்

வரமிளகாய் - 10

சோள மாவு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. வாழைக்காய் நீள நீளத் துண்டுகளாக விரல் மொத்தத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.

3. வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

4. வெந்நீரில் போட்டு எடுத்த வாழைக்காயுடன் அரைத்த மசாலா விழுது, சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

5. எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த வாழைக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

Read More...

சோள மாவு அல்வா - Corn Alwa

தேவையான பொருட்கள்:

சோளமாவு - ஒரு கோப்பை
சர்க்கரை - 2 கோப்பைபால் - 3
கோப்பைஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
கேசரி கலர் - 2 சிட்டிகை
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25
கிராம்நெய் - 100

செய்முறை:
1. ஒரு அகன்ற பாத்திரத்தில் பால், சர்க்கரை, சோளமாவு சேர்த்து நன்றாக கட்டி விழாமல் கலக்கவும்.

2. அதனுடன் கேசரி கலர் சேர்த்து கலக்கவும்.

3. முந்திரி, திராட்சையை சிறிது நெய் விட்டு தனியே பொன்நிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

4. வாணலியில் சோளமாவுக் கலவையைக் கொட்டி அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கிளறவும்.

5. கலவை திரண்டு கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடியைச் சேர்க்கவும்.

6. பின்னர் இக்கலவையுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

7. ஊற்றிய நெய் மேலே திரண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

8. ஒரு தட்டில் நெய் தடவி, அடுப்பிலிருந்து இறக்கிய கலவையை அதில் கொட்டி, ஆறியபின் வேண்டிய வடிவில் துண்டுகளாக்கவும்.

Read More...

Tuesday, July 7, 2009

கனவு பலித்தது - தமன்னா



ஆனந்த தாண்டவம், பையா என தொடர்ந்து பரபரப்பாக இருப்பதில் உள்ள நிறைவு பேச்சில் வெளிப்படுகிறது.

அயன் படத்தில் உங்க கேரக்டர் எந்த மாதி‌ரி?

காலே‌ஜ் ஸ்டூடண்டா வர்றேன். எதையும் முகத்துக்கு நேரா சொல்கிற தை‌ரியமான கேரக்டர். இந்த கேரக்ட‌ரில் நடித்தது புதுசா இருந்தது. ஏன்னா நிஜத்தில் நான் அப்படி கிடையாது. கே.வி.ஆனந்த், சூர்யா கூட வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம்.

பையாவில் நயன்தாராவுக்குப் பதில் நடிக்கிறீர்களே...?

நயன்தாராவுக்கு பதில் நடிக்கிறேன்னு சொல்வதைவிட எனக்கு அந்தப் படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்ததுன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். நயன்தாராவை பையாவுக்காக ஒப்பந்தம் செய்தது பற்றியெல்லாம் எனக்கு தெ‌ரியாது. லிங்குசாமி கேட்டார், நான் ஒத்துக் கொண்டேன். மற்ற விஷயங்கள் எனக்கு தேவையில்லாதது.

தெலுங்கிலும் நடிக்கிறீர்களாமே...?

ஆமாம், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடிக்கிறேன்.

பையாவுக்காக நீங்கள் கார் ஓட்ட கற்றுக் கொண்டது உண்மையா?

பையாவில் நான் டிரைவிங் பண்ற மாதி‌ரி நிறைய சீன்ஸ் இருக்கு. கார் ஓட்ட தெ‌ரிஞ்சா நல்லதுன்னு லிங்குசாமி சொன்னார். கத்துக்க அதிக நாள் இல்லாததால் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து கத்துகிட்டேன்.

படத்தில் சேஸிங் காட்சியில் நடித்தீர்களா?

அப்படி எதுவும் இல்லை. கார் ஓட்டுவதுபோல் சில காட்சிகள் வருகிறது அவ்வளவுதான்.

கண்டேன் காதலை பற்றி சொல்லுங்கள்...

இந்தியில் ஜப் வி மெட் படத்தை பல தடைவை பார்த்திருக்கிறேன். இதில் நடித்ததற்காக க‌ரீனா கபூருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் நிறைய கிடைத்தன. இந்தப் படத்தில் நடிக்க மாட்டோமா என பல நாட்கள் கனவு கண்டிருக்கிறேன். கனவு காணுங்கள் பலிக்கும் என்று அப்துல் கலாம்‌ஜி சொன்னதுபோல் என்னுடைய கனவு பலித்திருக்கிறது. ஜப் வி மெட் படம்தான் தமிழில் கண்டேன் காதலை என்ற பெய‌ரில் தயாராகிறது. பரத் ஜோடியாக நடிக்கிறேன்.

க‌ரீனா கபூ‌ரின் ஸ்டைலை பின்பற்றுவீர்களா?

இந்தப் படம் உண்மையிலேயே எனக்கு சவாலானது. க‌ரீனா கபூர் அற்புதமாக நடித்திருப்பார். அதற்காக அவரை காப்பி அடிக்க மாட்டேன். என்னுடைய ஸ்டைலில்தான் நடிப்பேன்.

Read More...

நெத்திலி தொக்கு


தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - 1/2கைப்பிடி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய்ப் பால் - அரை கோப்பை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் நெத்திலி மீனை நெத்திலியை முள்ளெடுத்து, உப்பு போட்டு நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டை தட்டி போடவும்.
4. பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
5. இதனுடன் எல்லா மசாலா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்.
6. புளியை கட்டியாக கரைத்து ஊற்றி பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
7. இப்போது வடித்து வைத்திருக்கும் நெத்திலி, தேங்காய்ப் பாலை சேர்த்து மீண்டும் குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும்.
8. உப்பு அளவு பார்த்து தேவைக்கு சேர்த்து கொள்ளவும்.
9. நெத்திலி கொதித்து கெட்டியானதும், கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
குறிப்பு
1. நெத்திலியை கழுவும் போது தலை பகுதியை பிடித்து கொண்டு விரலால் நடுவில் கீறினால் முள்ளை அப்படியே எடுத்து விடலாம். சாப்பிடும் போது ஒரு முள் கூட இருக்காது.
2. நெத்திலியை கழுவும் போது ஒரு பெரிய கண் வடிசட்டியில் (புளி வடிகட்டி போல்) வைத்து கழுவினால் கீழே விழாது. லேசாக ஜலிப்பது போல கழுவ வேண்டும்.
3. நெத்திலி மீன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் போட வேண்டும்.
4. காரசாரமாக சாப்பிடுபவர்கள் இன்னும் அரை தேக்கரண்டி மிள்காய் தூளும், ஒரு பச்சை மிளகாயும் கூட சேர்த்து கொள்ளலாம்.5. காஷ்மீரி சில்லி பொடி சேர்த்தால் நல்ல கலராக இருக்கும்

Read More...

மேக்கப் இல்லாமல் நடிக்கிறேன் - த்‌ரிஷா!

கிளாமர் வேடங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் த்‌ரிஷா. அவர் நடிப்பில் வெளிவரயிருக்கும் அபியும் நானும், சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகியவை த்‌ரிஷாவின் நடிப்பு திறமையை வெளிக் கொணரும் என்பது அனைவ‌ரின் நம்பிக்கை. இதில் அபியும் நானும் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார். அடுத்து நடிக்கயிருக்கும் மர்மயோகியும் த்‌ரிஷாவுக்கு சவாலான படம். தனது படங்கள் குறித்த அவரது பேட்டியிலிருந்து.


அபியும் நானும் படத்தில் புதுமுகம் கணேஷ் ஐயருக்கு ஜோடியாக நடித்திருக்கிறீர்களே?அபியும் நானும் படத்தை பொறுத்தவரை ஸ்கி‌ரிப்டை பார்த்துதான் அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். கோ ஸ்டார்ஸ் யார் என்று பார்க்கவில்லை. ஊட்டியில் படப்பிடிப்பு நடந்த போதுதான் என்னுடன் புதுமுகம் நடிக்கயிருப்பதை தெ‌ரிந்து கொண்டேன்

மேக்கப் இல்லாமல் படத்தில் நடிக்க என்ன காரணம்?
இயற்கையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் ப்‌ரீத்தா சொன்னதால் மேக்கப் போட்டுக் கொள்ளவில்லை

அபியும் நானும் படத்தை தொடர்ந்து மர்மயோகியிலும் மேக்கப் இல்லாமல் நடிக்கிறீர்கள் என்பது உண்மையா?
உண்மைதான். என்னுடைய கேரக்டருக்கு ஏற்ற நிறம் கிடைப்பதற்காக மேக்கப் போடாமல் நடிக்கிறேன்

தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா?
நாகார்ஜுன் ஜோடியாக கிங் படத்தில் நடிக்கிறேன். சீனு வைதாலா படத்தை இயக்குகிறார்

இப்போது நீங்கள் நடிக்கும் படங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சர்வம் படத்தில் நடிக்கிறேன். இதில் எனக்கு மருத்துவ கல்லூ‌ரி மாணவி வேடம். சென்னையில் ஒரு மழைக்காலம் கௌதம் இயக்கும் படம். இதில் இன்றைய நாக‌ரிக பெண்களை பிரதிபலிக்கும் வேடம். சென்னையில் ஒரு மழைக்காலம் முடிய இன்னும் பல நாட்கள் இருக்கிறது. கௌதம், ராதா மோகன், விஷ்ணுவர்தன் போன்ற இளம் இயக்குனர்களுடன் பணிபு‌ரிய எப்போதும் ஆவலாக உள்ளேன்.

அடுத்து என்னென்ன படங்களில் நடிக்க இருக்கிறீர்கள்?
மர்மயோகிக்கு தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால் வேறு படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவி‌ல்லை

Read More...

கேரட் அல்வா - Carrot Alwa

தேவையான பொருட்கள்:
கேரட் - 4
பால் - 2 மேஜைக்
கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக்கரண்டி
நெய்- 1/2 கோப்பை
ஏலக்காய் - 4
சர்க்கரை - 2 கோப்பை
வறுத்த முந்திரி - 10

செய்முறை
1. கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.
2. துருவிய கேரட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.
4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி சேர்க்கவும்.

Read More...

Monday, July 6, 2009

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

இந்த பிரியாணி மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். ஒரு தடவை இந்த பிரியாணியை வீட்டில் செய்தீர்களென்றால் பிறகு ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும்போது இந்த முறையில்தான் செய்யவேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்வார்கள்.

தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி - 3 கப்,
மட்டன் - 1/2 கி,
இஞ்சி - 50 கிராம்,
பூண்டு - 25 பல்,
பெரிய வெங்காயம் - 4,
சின்ன வெங்காயம் - 15,
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4,
கிராம்பு - 4,
பட்டை - 4 துண்டு,
ஜாதிக்காய் - பாதி,
ஏலக்காய் - 4,
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,
தேங்காய் - 1 மூடி,
முந்திரி - 10,
தயிர் - 1/2 கப்,
எலுமிச்சம்பழம் - 1 மூடி,
புதினா - 1 கட்டு,
மல்லி - 1 கட்டு,
நெய் - 1/2 கப்,
எண்ணெய் - 1/2 கப்.
--------------------------
தாளிக்கத்தேவையானவை
--------------------
கிராம்பு - 3,
பட்டை - 3 சிறிய துண்டு,
ஏலக்காய் - 3,
பிரிஞ்சி இலை - 1,
சோம்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை
மட்டனில் 1/4 கப் தயிர், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா, உப்பு 1டீஸ்பூன் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
பச்சமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும்.
பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். ( இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ் க்காகத்தான். )
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.
காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.
5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும்.
தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர்
சேர்க்கவும்.
இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும்.
உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.
பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.
பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.

Read More...

முக‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றது

கசகசா ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.

பப்பாளி‌ச் சா‌ற்றை முக‌த்‌தி‌ல் தடவினால், விய‌ர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.

கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.

எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.

தக்காளி சாறு தட‌வி வ‌ந்தா‌ல் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.

Read More...

சிக்கன் சில்லி ஃப்ரை

தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
மஞ்சல் தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 2
வினிகர் - 1 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
எண்ணெய் - 100 -150 மில்லி
மல்லி இலை - சிறிது.

செய்முறை:
சிக்கனை நன்கு சுத்தம் செய்து மஞ்சல்,உப்பு போட்டு கழுவி நீர் வடி கட்டவும்.
வடிகட்டிய சிக்கனோடு இஞ்சி பூண்டு பேஸ்ட்,வினிகர்,உப்பு,சில்லிபவுடர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த சிக்கனை சிவர பொரித்தெடுக்கவும்.
ஒரு சாலோ ஃப்ரை பேனில் சிறிது எண்ணெய் விட்டு மெல்லியதாக கட் செய்த வெங்காயம் போட்டு ப்ரவுனாக வதக்கவும்,பின்பு நைஸாக அரிந்த தக்காளி சேர்த்து சிக்கன் துண்டுகலை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.
மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான சிக்கன் சில்லி ஃப்ரை ரெடி.

பரிமாறும் அளவு - இது நாண் ,ஃப்ரைட் ரைஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
ஆயத்த நேரம் - 1 மணி நேரம்
சமைக்கும் நேரம் - 20 நிமிடம்.

Read More...

ஜிஞ்சர் சில்லி சிக்கன்

தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் -4
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
கார்ன் மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - கால்ஸ்பூன்
மிளகுத்தூல் - அரைஸ்பூன்
முட்டை - 1
உப்பு,தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் -100 மில்லி
டால்டா - 1 டேபிள்ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
•சிககனை சுத்தம் செய்து கழுவி நீர் வடிகட்டிக்கொள்ளவும்.
•மைதா,பேக்கிங் பவுடர்,கார்ன் மாவு,முட்டை,உப்பு,மிளகுத்தூல் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.இஞ்சி,பச்சை மிளகாய் பொடியாக கட் செய்து வைக்கவும்.
•சிக்கனை கரைத்த மாவு,முட்டை கரைசலில் முக்கி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
•கடாயில் டால்டா அல்லது எண்ணெய் விட்டு இஞ்சி,பச்சை மிளகாய் சிவக்க வதக்கி பொரித்த சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி எடுக்கவும்.
•சுவையான ஜிஞ்சர் சில்லி சிக்கனை ரெடி.ஸ்பிரிங் ஆனியன் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

பரிமாறும் அளவு - 4- -6 நபர்களுக்கு
ஆயத்த நேரம் - 30 நிமிடம்
சமைக்கும் நேரம் - 15-20 நிமிடம்

Read More...

பாலக் சிக்கன் கறி

தேவையான பொருட்கள்:
சிக்கன் - (கால்பகுதி) 10
பாலக்கீரை - 1 கட்டு
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 3 (காரம் தேவைப்பட்டால் கூட போடலாம்)
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
மஞ்சள்த்தூள் 1/2 டீஸ் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 1/2 கோப்பை (நறுக்கியது)
ஏலக்காய் - 2
பட்டை - சிறிய துண்டு
நல்லமிளகு - 5
சீரகம் - 3/4 டீஸ் ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சிக்கன் கால்பகுதியாக இருந்தால் நன்றாக இருக்கும் துண்டுகளும் பயன் படுத்தலாம் சுத்தம் செய்து வைக்கவும், பாலக்கீரையை கழுவி பொடியாகநறுக்கிவக்கவும்,

இஞ்சி மற்றும் பூண்டுகளை நறுக்கிக்கொள்ளவும் பச்சைமிளகாயை 2 ஆக கீறி வைக்கவும்.


அடுப்பில் குக்கரைவைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், நல்லமிளகு ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை போட்டு வதக்கவும்.


அடுத்து பாலக்கீரையைப்போட்டு கிளறிவிடவும், பாலக்கீரை வதங்கியதும் சிக்கன் துண்டுகளைப்போடவும் போட்டு நன்றாக கிளறி விடவும்
5 நிமிடம் கிளறி விட்டு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் தூவி மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும்.2 கப் தண்ணீர் விட்டு மூடிப்போட்டு வேகவைக்கவும் விசில் போடவேண்டாம்


10 நிமிடம் கழித்தப்பின்னர் மறுபடியும் மூடியைதிறந்து தேவையான அளவு உப்பு போட்டு சிக்கன் வேகும் வரை வேகவைத்து இறக்கவும். இறக்குமுன் கொத்தமல்லித்தழைத்தூவவும்.

பரிமாறும் அளவு - 4 பேர்
ஆயத்த நேரம் - 10 Min
சமைக்கும் நேரம் - 30 Min

Read More...

கத்தரிக்காய் மசாலா குழம்பு

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - அரைக் கிலோ
மிளகாய் வற்றல் - 2
பச்சைமிளகாய் - 2
தேங்காய் - அரை மூடி
மல்லிவிதை - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 6 பல்
எள்ளு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - கால் கிலோ
புளி - ஒரு எலுமிச்சை அளவு
வெல்லம் - ஒரு பாக்கு அளவு
கடுகு - அரைத் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 150 மி.லி.
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை

  1. கத்தரிக்காயை கழுவிச் சுத்தம் செய்து மேல்காம்பினை நீக்கிவிடாமல் நீளவாக்கில் நான்காக கீறிக் கொள்ளவும்.
  2. துண்டுகள் தனித்தனியே வந்துவிடாதவண்ணம் காம்பு பாகத்தை நறுக்கிவிடாமல் விட்டுவிடவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டு பொன்னிறமாக மாறும்வரை வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யில் மல்லிவிதை, மிளகாய்வற்றல் மற்றும் வெங்காயத்தைப் போட்டு வறுக்கவும்.
    வறுத்தவற்றை தேங்காய் மற்றும் பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  5. எள்ளினை தனியாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
  6. வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யில் புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைக் கலந்து வேகவிடவும்.
    பிறகு அதில் கத்தரிக்காய்கள் மற்றும் எள்ளுப்பொடி போட்டு மூடி வைத்து வேகவிடவும்.
  7. குழம்பானது சற்றுக் கெட்டியானதும் வெல்லத்தை அதில் போட்டு வேகவிடவும். குழம்பு நன்கு கெட்டியானதும் இறக்கிவிடவும்.
  8. மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டி கலக்கி பரிமாறவும்.

Read More...

சிக்கன் மிளகு குழம்பு

கோ‌ழி‌க் க‌றி‌யி‌ல் இ‌ந்த ‌மிளகு‌க் குழ‌ம்புதா‌ன் ‌மிகவு‌ம் அ‌ற்புதமான செ‌ய்முறையாகு‌ம்.

தேவையான பொருட்கள்:
மிளகு : 15
இஞ்சி : 1 துண்டு
மஞ்சள் தூள் : 2 ஸ்பூன்
தணியா தூள் : 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
வெங்காயம் : 1
வெண்ணெய் : 100 கிராம்
உப்பு : தேவையான அளவு
இவற்றுடன் சிக்கன் துண்டுகள் : 5 சிறியவை
எலுமிச்சம் பழச்சாறு

செய்முறை:

மிளகைத் தூள் செய்து மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

சிக்கன் துண்டுகளை தண்ணீரில் பத்து நிமிடம் வேக வைக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிக்கனை மிருதுவாக வேகவைத்து இறக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி, அரிந்த வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை வாணலியில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

சிக்கன் மிளகு குழம்பு தயார்.

Read More...

முக‌‌த்தை அழகா‌க்கு‌ம் முறை

முதலில் முக‌த்‌தி‌ற்கு மென்மையாக்கும் களிம்பு மற்றும் ஃபவுடன்டேஷன் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பிறகு உ‌ங்களது செயலை‌த் துவ‌க்கு‌ங்க‌ள்.

முதலில் லிப் லைனரை உதடுகளில் தடவுங்கள், பிறகு லிப்ஸ்டிக். இதனால் 2வது முறை அப்ளை செய்யப்படும் உதட்டுச் சாயம் நீண்ட நேரத்திற்கு இருக்கும். பழைய உதட்டுச் சாயங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இதனால் உதடுகள் வெளிறிவிடலாம்.

கருத்த உதடுகளுக்கு இளம்சிவப்பு உதட்டுச்சாயம் பொருத்தமாக இருக்கும். வெ‌ளி‌ரிய உதடுகளை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் அ‌ட‌ர்‌த்‌தியான ‌நிற‌த்தை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

மேக்-அப் செய்யும் முன் லோஷன் ஏதாவது பயன்படுத்தவும். முகம் முழுவதும் ச‌ரியான அள‌வி‌ல் ஃபவு‌ண்டேஷ‌ன் போ‌ட்டா‌ல் சரும‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் புள்ளிகள் வெளியே தெரியாது.

கடை‌சியாக ஐ லைனரை போடவு‌ம். ஐ லைன‌ர் ‌விரை‌வி‌ல் காயு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டதாக‌ப் பா‌ர்‌த்து வா‌ங்கவு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் முக‌த்தையே அது கெடு‌த்து‌விடு‌ம்.

Read More...

கூ‌ந்த‌ல் கறுமையாக வளர

உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கறுமையாகவும் இருக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.

உங்கள் முடி சுருட்டையானதாக இருந்தால் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். சீப்பு உபயோகித்தால் நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடு‌த்த முடியாது.

தலை முடியை ஷாம்பு போட்டு கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு மக் நீரில் கலக்கி அதைக் கொண்டு தலையை ஒரு முறை கழுவுங்கள், உங்கள் தலை முடி மிருதுவாகவும், பட்டுப் போன்றும், பளபளப்பாகவும் இருக்கும்.

குளிப்பதற்கு முன்பு கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்.

அதிக அளவில் ஷாம்பூ உபயோகிப்பதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால் தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். ஷாம்பூ தடவிய முடியை நன்றாக அலசவும்.

ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது மிகவும் அவசியமாகும். கண்டிஷரை முடியின் வேர்களைவிட நு‌னிப் பாகத்தில் தடவுவது நல்லது.

Read More...

அம்பாசமுத்திரம் அம்பானி முன்னோட்டம்





திண்டுக்கல் சாரதி படத்தையடுத்து அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தில் கருணாஸ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அரசாங்கம் படத்தில் நடித்த நவ்நீத் கவுர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அம்பிகா, நிரோஷா, மயில்சாமி, கோட்டா சீனிவாசராவ், மாஸ்டர் சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ராம்நாத்.பி படத்தை இயக்குகிறார்.இந்த படம் குறித்து டைரக்டர் ராம்நாத் கூறுகையில், அம்பாசமுத்திரத்தில் இருக்கும் ஓர் இளைஞன், அம்பானியை முன்மாதிரியாக வைத்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கிறான். குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காமல் கடுமையாக உழைக்கும் அவன், தன் லட்சியத்தை அடைந்தானா? இல்லையா? என்பதுதான் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் கதை, என்றார். ராஜாதிராஜா படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் கருணாஸ் இசையமைக்கிறார். வைரமுத்து ஐந்து பாடல்கள் எழுதியுள்ளார்.

Read More...

வால்மீகி


கெட்டவனை திருத்தும் ஹீரோயின். தமிழ் சினிமா பலமுறை அடித்து துவைத்து காயப் போட்ட கதை. அறிமுக இயக்குனர் அனந்த நாராயணன் கதையை சொல்ல எடுத்துக் கொண்டிருக்கும் களம் தமிழுக்கு புதுசு.

அழுக்கான மனிதர்கள், குப்பையும் கூளமும் நிறைந்த குறுகலான தெருக்கள், மனிதன் வசிக்கவே முடியாத சே‌ரி குடியிருப்புகள், கைவிடப்பட்ட கல்லறைத் தோட்டம்... தமிழ் சினிமா தனது கேமரா கண்களிலிருந்து மறைக்க விரும்பும் சென்னையின் அசலான முகத்தை அதன் அழுக்கோடும், அழகோடும் அள்ளி வந்திருக்கிறது அழகப்பனின் கேமரா.

பிக்பாக்கெட்டாக வரும் அகில் தனது கேரக்டருக்காக நிறைய உழைத்திருக்கிறார். சென்னை தமிழில் இன்னும் சிரத்தை கூடியிருந்தால் அவரது அழுக்கு கேரக்டருக்கு மேலும் அழகு சேர்ந்திருக்கும்.

மீரா நந்தன் கிண்டர் கார்டன் டீச்சர். பைத்தியத்திடம் சிக்கிக் கொள்ளும்; அவரை அகில் காப்பாற்ற, அகில் மீது பைத்தியமாகிறார் மீரா. அவருக்கொரு கொடுமையான பிளாஷ்பேக்.

அகில் திருந்துவதற்காக இயக்குனர் வைத்திருக்கும் காட்சி, நமது கட்டுப்பட்டை மீறி கண்ணீரை துளிர்க்க வைக்கிறது. பாலியல் தொழிலாளியாக மாறிய பெண், என்னை ம‌ரியாதையா அடக்கம் பண்ணுவியா என கேட்பது பொட்டில் அறையும் வசனம்.

பூக்கா‌ரியாக வரும் தேவிகா அகிலிடம் தனது திருமணத்தின் போது அடுக்கும் நீள வசனத்தை தன்னம்பிக்கை நூலில் சேர்க்கலாம். அவரது ஆடம்பர திருமணம் இயக்குனர் கோட்டைவிட்ட இடங்களில் ஒன்று.

அஜயன் பாலா‌விடம் சே‌ரி பாஷை அருவியாக கொட்டுகிறது. அவரது சகோத‌ரி பாசம் சென்டிமெண்ட் குறையை போக்குகிறது. ஆண்களிடம் மட்டுமே பழகும் பெண் நல்ல கற்பனை.

ஒவ்வொரு திருட்டின் பின்னணியிலும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் இருக்கிறது என்ற கருத்தை வால்மீகியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த காட்சிகள் பலவற்றில் நாடகத்தனம்.

என்னடா பாண்டி பாடலை தவிர மற்றவை இளையராஜாவா இசை என்று கேட்க வைக்கின்றன. பின்னணி இசையில் மட்டுமே ராஜா தெ‌ரிகிறார்.

படத்தின் கதைக் களத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருப்பது படத்தின் மிகப் பெ‌ரிய பலம். பலவீனம் நிறைய. அகில் ஒரு பிக்பாக்கெட் என்பதை மீரா தெ‌ரிந்து கொள்ள வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அந்த அணிவகுப்பு, மீராவின் பிளாஷ்பேக், அவரது திடீர் மரணம்...

அ‌ரிதாரம் பூசாத கதாபாத்திரங்களுக்காகவும், வழக்கமான குத்துப் பாடல்களை தவிர்த்ததற்காகவும் வால்மீகியை ஒருமுறை அல்ல பலமுறை பார்க்கலாம்.

Read More...

Sunday, July 5, 2009

Vijay TV Jodi No 1 Season 2 Simbu Fight




Read More...

ROBOT ENDHIRAN LEAKED SHOOTING







Read More...

Simran & Vijay Athiraj Fight - Sun TV

Read More...

உடல் நலக் குறிப்புகள்

இவை எ‌ல்லா‌ம் உ‌ங்களு‌க்கு ஏ‌ற்கனவே தெ‌ரி‌ந்ததுதா‌ன். ஆனாலு‌ம் ஒரு முறை ஞாபக‌ப்படு‌த்‌து‌‌கிறோ‌ம்.

  1. தினமும் குடிக்கும் டீயின் அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள்.காலையில் அதிகமான நீரை பருகுங்கள். இரவில் குறைவாக அருந்துங்கள்.தினமும் இரண்டு வேலை காபி குடிப்பதை தவிருங்கள்.
  2. இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்குள் எழுவதே சிறந்தது.
  3. மாலை 5 மணிக்குப் பிறகு அளவுக்கு அதிகமான உணவை உண்ணாதீர்கள்.
  4. மாத்திரைகளை குளிர்ந்த நீருடன் பருக வேண்டாம்.மாத்திரை சாப்பிட்டதும் உடனடியாக படுக்கச் செல்ல வேண்டாம்.சரியான தூங்கும் பழக்கம் இருப்பவர்களை முதுமை அண்டாது.
  5. காலையில் நடை செல்ல முடியாதவர்களுக்கு மாலை 5 மணில் இருந்து 8 மணி வரை நடை செல்வதற்கு சிறந்த நேரமாகும்.
  6. மின்னூட்டம் போட்டிருக்கும் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம்.பொதுவாக செல்பேசியில் பேசுவதற்கு இடது பக்க காதைப் பயன்படுத்துங்கள்.செல்பேசி காதுக் கருவியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஓய்வு கொடுங்கள்.
  7. உட்கார்ந்தே செய்யும் வேலையாக இருந்தாலும் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடந்து வாருங்கள்.
  8. தொடர்ந்து கணினித் திரையை பார்த்தபடி இருப்பதும் கண்களின் தன்மையை பாதிக்கும். எனவே 20 நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையை மாற்றுங்கள்.
  9. உண்ணாமல் இருப்பதையும், அதிகமாக உண்ணுவதையும் தவிருங்கள்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009