The Remaining of Your Post Here
தங்களை அன்புடன் வரவேற்கிறது !!!
Posted by Tamil junction at 3:37 PM 0 comments
Labels: Tamil Video Songs Download
Posted by Tamil junction at 3:35 PM 0 comments
Labels: Wallpaper
Posted by Tamil junction at 3:12 PM 0 comments
Labels: Wallpaper
Posted by Tamil junction at 2:54 PM 0 comments
Labels: Tamil Dubbed Movies
Posted by Tamil junction at 2:51 PM 0 comments
Labels: Pictures download, Wallpaper
Posted by Tamil junction at 2:38 PM 0 comments
Labels: Cinema
Posted by Tamil junction at 2:36 PM 0 comments
Labels: Tamil Movies Download
Posted by Tamil junction at 1:35 PM 0 comments
Labels: Cinema, Tamil Movies Download
Posted by Tamil junction at 1:12 PM 0 comments
Labels: Cinema, Songs Download
Posted by Tamil junction at 12:27 PM 0 comments
Labels: Songs Download
Posted by Tamil junction at 12:25 PM 0 comments
Labels: Cinema
Posted by Tamil junction at 11:44 AM 0 comments
Labels: Songs Download
சதா ஆண்கள் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். திரையுலக அனுபவம் மூலம் இந்த வெறுப்பு ஏற்பட்டுள்ளதாம். மராட்டியத்தை சேர்ந்த இவர் 2003-ல் “ஜெயம்” படம் மூலம் தமிழில் அறிமுகமானார். மாதவனுடன் “எதிரி”, ஸ்ரீகாந்துடன் “வர்ணஜாலம்” விக்ரம் ஜோடியாக “அந்நியன்” படங்களில் நடித்துள்ளார். “பிரியசகி”, “திருப்பதி”, “உன்னாலே உன்னாலே” போன்ற படங்களும் இவர் நடித்த படங்கள். கடைசியாக மாதவனுடன் “நான் அவள் அது” படத்தில் ஜோடி சேர்ந்தார். இப்படம் சம்பளத்தகராறினால் ரிலீசாகமல் இழுபறியில் இருக்கிறது.
முன்னணி ஹீரோக்களுடன் நடித்தாலும் நடிகை நயன்தாரா, திரிஷா போல் இவரால் ஜொலிக்க முடியவில்லை. பட வாய்ப்புகளும் குறைந்து போயின. கவர்ச்சியாக நடிக்க மறுத்ததே இதற்கு காரணம் என்கின்றனர். மற்ற நடிகைகள் நீச்சல் உடை, முத்தக்காட்சி என இறங்கி விட்டார்கள். ஆனால் சதா அது மாதிரி நடிக்க மாட்டேன் பிடிவாதம் செய்கிறார்.
தற்போது இந்தியில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கிலும் ஒரு படம் செய்கிறார். ஆண்களுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவர்களை வெறுக்கும்படி செய்கின்றன. நம்பி பழகிய ஆண் நண்பர்கள் சிலரும் அவரை ஏமாற்றி விட்டார்களாம். இதனால் ஆண்களுடன் பழகுவதையே தவிர்க்கிறார். இதுபற்றி சதா சொல்கிறார்.
எனக்கு ஆண் நண்பர்கள் கிடையாது. அவர்களை நண்பர்களாக வைத்துக்கொள்ள ஆசையும் இல்லை. பெரும்பாலான ஆண்கள் மனநிலை எனக்கு தெரியும். அவர்கள் பெண்களை தங்கள் ஆசை வலையில் சிக்க வைக்கும் நோக்கத்துடனேயே பழகுகிறார்கள். எல்லா ஆண்களுமே ஏமாற்றுக்காரர்கள்தான் என்று ஆவேசமாக சொன்னார்.
Posted by Tamil junction at 11:32 AM 0 comments
Labels: Cinema
Posted by Tamil junction at 11:28 AM 0 comments
Labels: Songs Download
கேசவன் தயாரிப்பில் திரு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அழகான பொண்ணுதான். இப்படத்தில் புதுமுகம் கார்த்திக்குடன் நடிகை நமீதா ஜோடி போட்டிருக்கிறார். சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் போர்பிரேம் தியேட்டரில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகைகளுக்கு கட்டுப்பாடெல்லாம் விதிக்கப்பட்டது பழைய செய்தி. இப்போது அவ்விழாவில் நமீதாவை டைரக்டர் திருமலை ரொம்பவே பாராட்டியது லேட்டஸ்ட் டாக்காக உலா வந்து கொண்டிருக்கிறது. விழாவில் டைரக்டர் திருமலை பேசுகையில், இதுநாள் வரை மாமிசமலையாக தெரிந்த நமீதாவை முதன்முறையாக அழகுசிலையாக, ரசிக்கக்கூடிய வகையில் கவர்ச்சியில் காட்டியிருக்கிறார்கள், என்று பாராட்டினாராம். சொன்னாலும் சொல்லலைன்னாலும் ரசிகர்களுக்கு நமீதா அழகு சிலைதானே!
Read More...Posted by Tamil Junction at 7:52 AM 0 comments
Labels: Cinema
நடிகை சினேகா திருவண்ணாமலையில் செருப்புடன் கிரிவலம் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடிகை சினேகா அவரது தந்தை ராஜாராமுடன் திருவண்ணாமலைக்கு வந்தார். கோவில் ராஜகோபுரம் எதிரில் இருந்து கிரிவலம் புறப்பட்டார். அவருடன் பாதுகாப்புக்கு 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்தனர். பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க முயன்றபோது, பாதுகாப்புக்கு வந்த இளைஞர்கள் படம் எடுக்கவிடாமல் தடுத்தனர். "நாங்கள் விளம்பரத்துக்கு வரவில்லை, சுவாமி கும்பிடவே வந்தோம்,'' என கூறி தடுத்தனர். பின்னர் அனைத்து பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள் ஒன்றாக குவிந்ததால், பத்திரிகையாளர்களுக்கும், சினேகாவின் பாதுகாப்புக்கு உடன் வந்த இளைஞர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் சினேகா தலையிட்டு, போட்டோ எடுக்க அனுமதித்தார்.
காலில் செருப்பு அணிந்தபடி சினேகா கிரிவலம் சென்றது, வேடிக்கை பார்த்த பக்தர்கள் மத்தியில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை நகர்ப்புற பகுதி நெருங்கியவுடன், "ரசிகர்கள் கூட்டம் அதிகமாக கூடிவிடும்' என்பதால், கோவிலுக்கு இரண்டு கி.மீ., தூரத்துக்கு முன் கிரிவலத்தை முடித்த சினேகா அதிகாலை 4 மணிக்கு காரில் ஏறி புறப்பட்டு அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.
கோவில் நடை திறந்தவுடன் காலை 5.30 மணி அளவில் கோவிலுக்குவந்து கோபூஜையில் கலந்து கொண்டார். கோவிலில், சுவாமி, அம்மனை தரிசனம் செய்தார். நவக்கிரக சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். கோவிலுக்கு திடீர் வருகை குறித்து நிருபர்கள் கேள்விகேட்டபோது பதிலளித்த சினேகா, தன் "டிரேட்மார்க்' சிரிப்பு சிரித்தபடி, "நல்ல விஷயத்துக்காக வந்திருக்கிறேன். நல்லதே நடக்கும்,'' என கூறினார். சினோ செருப்பு அணிந்தபடி கிரிவலம் சென்றதால் பக்தர்கள் பலர் முணுமுணுத்தனர்.
Posted by Tamil Junction at 7:48 AM 0 comments
Labels: Cinema
ஒரே நேரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, வாலிபன் படங்களுக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. இதில் வாலிபன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்கிறார் என்ற தகவல் முதலில் வெளியானது. பின்னர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி நடிக்கிறார் என்று தகவல் வந்தது. இப்போது லீனா என்ற புதுமுகம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து சிம்பு அளித்துள்ள பேட்டியில், வாலிபன் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி, வரலட்சுமி, லீனா ஆகிய 3 பேரை யோசித்து வைத்திருக்கிறேன். யாரை நாயகி ஆக்குவது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. விரைவில் எனது ஜோடியின் பெயரை அறிவிப்பேன், என்று கூறியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் ஏற்கனவே கெட்டவன் படத்தில் ஒப்பந்தமானார். பின்னர் என்ன காரணத்தினாலோ அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.
Posted by Tamil Junction at 7:45 AM 0 comments
Labels: Cinema
ஸ்ரேயா சமீபத்திய படங்களில் அதிக கவர்ச்சியாக நடிக்கிறார். இதற்கென அவர் கூடுதல் சம்பளம் வாங்குவதாக கிசுகிசுக்கப்படுகிறது. முத்தக்காட்சி, நீச்சல் உடை காட்சிகளுக்கென தனித்தனி சம்பளத்தொகை நிர்ணயித்திருப்பதாகவும் செய்தி பரவியுள்ளது. ஐதராபாத்தில் இதுபற்றிய கேள்விக்கு ஸ்ரேயா அளித்த பதில் வருமாறு:-
முத்தம் மற்றும் நீச்சல் உடை காட்சிகள் இந்திப்படங்களில் பிரபலம். அவை இப்போது தென்னிந்திய மொழி படங்களுக்கும் பரவி உள்ளது. அது சரியா தவறா என்பதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. அது அந்தந்த நடிகைகளின் மன நிலையை பொறுத்தது.
இந்த மாதிரி காட்சிகளில் நடிக்க நான் அதிக சம்ப ளம் கேட்பதாக செய்தி வந்துள்ளது. அதில் உண்மை இல்லை.
சினிமா என்பது ஒரு மாயை உலகம். இங்கு கவர்ச்சி அவசியமாகி விட்டது. அழுது வடியும் “ஆர்ட்” பிலிம்களை பார்க்க ரசிகர்கள் விரும்புவதில்லை. மூன்று மணி நேரம் கவலைகளை மறந்து சந்தோஷமாக இருந்து விட்டு போக தியேட்டர்ளுக்கு வருகிறார்கள். அதை பூர்த்தி செய்ய வேண்டும். முத்தக் காட்சிகளுக்கும் நீச்சல் உடை காட்சிகளுக்கும் அதிக சம்பளம் கேட்கவில்லை. மற்ற நடிகைகளை பற்றி எனக்கு தெரியாது.
சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. காதல் செய்யவும் டூயட் பாடவும் மட்டுமே அவர்களை பயன்படுத்துகின்றனர். கதாநா யகர்களை சுற்றித்தான் கதை பின்னப்படுகிறது. அது மாற வேண்டும். கதாநாயகிகளுக்கும் முக் கியத்துவம் அளிக்கும் வகையில் கதைகளை உருவாக்க வேண்டும். அது மாதிரி கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க நான் காத்துக்கொண்டு இருக்கிறேன். சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது.
சிவாஜி படம் மூலம் எனக்கு ஒரு அந்தஸ்து கிடைத்தது. இதை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறேன். எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்க முடியாது. எனக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதை பார்த்தே நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.
நான் அழகில் மெருகேறிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை எப்போதும் போல ஒரே மாதிரி தான் இருக்கிறேன். ஒளிப்பதிவாளர், மேக்கப் மேன், இயக்குனர் மூவரும்தான் என்னை அழகாக காட்டுகிறார்கள்.
ஒரு பாட்டுக்கு நடனம் ஆட நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அப்படி ஆடுவது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. கதாநாயகியாக நடிப்பதை தான் விரும்புகிறார்கள். எனக்கு திருமணம் இப்போது இல்லை. நானோ எனது குடும்பத்தினரோ அது பற்றி இன்னும் சிந்திக்கவே இல்லை.
Posted by Tamil junction at 7:29 AM 0 comments
Labels: Cinema
Posted by Tamil junction at 3:19 PM 0 comments
Labels: Wallpaper
Posted by Tamil junction at 3:05 PM 0 comments
Labels: Lollu Sabha
கொச்சி : " கந்தசாமி படத்தின் வசூல், ஒரே வாரத்தில் 37 கோடி ரூபாயை தாண்டி, தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது' என்று, நடிகர் விக்ரம் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் பத்திரிகையாளர்களிடம் நடிகர் விக்ரம் கூறியதாவது: என் புதிய திரைப்படமான கந்தசாமி திரையிடப்பட்ட ஒரே வாரத்தில் 37 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை. இத்திரைப்படத்திற்காக, செலவிடப்பட்ட தொகை 40 கோடி ரூபாய். கடைசியாக நான் நடித்த, "பீமா' திரைப்படத்திற்கு பிறகு, இரண்டரை ஆண்டுகள் கழித்து, "கந்தசாமி' வெளியாகி உள்ளது.கேரளாவிலும் இப்படம் நல்ல வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. சென்னையில் 16 தியேட்டர்களில் திரையிடப்பட்ட, "சிவாஜி' பட வசூலை, "கந்தசாமி' முறியடித்துள்ளது.
இப்படம் சென்னையில் 18 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.மொத்தம் 900 பிரிண்ட்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் அடங்கிய, "சிடி'க்கள் ஒரே வாரத்தில், ஒரு லட்சத்திற்கும் மேல் விற்பனையாகி, புதிய சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் எல்லா பாடல்களையும் சொந்த குரலில் பாடி உள்ளேன். விரைவில் ஆல்பம் தயாரித்து வெளியிடவும் ஆலோசித்து வருகிறேன். திரைப்பட இயக்குனர் மணிரத்தினம் படத்தில் நடிக்கவேண்டும் என்பது என் கல்லூரி காலத்து கனவு. அந்த கனவு தற்போது அவரது இயக்கத்தில் "ராவணன்' படத்தில் நடிப்பதன் மூலம் நிறைவேறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Posted by Tamil Junction at 8:10 AM 0 comments
Labels: Cinema
"பட விழாக்களில் நடிகைகள் கலந்து கொள்ளாததற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தான் காரணம்' என்று, நடிகைகள் நயன்தாரா, நமீதா, மீரா ஜாஸ்மின் உட்பட ஆறு நடிகைகள், நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.திரைப்படங்களின் பாடல் "சிடி' வெளியீட்டு விழா மற்றும், "சிறப்புக் காட்சி' வெளியீட்டின் போதும், விளம்பரம் கருதி அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடகிகள், பாடலாசிரியர்கள் கலந்துகொள்வது வழக்கம்.
சமீபகாலமாக படத்தின் பாடல் "சிடி' வெளியீட்டு விழா மற்றும் சினிமா தொடர்பான சிறப்பு பேட்டிகளையும் நடிகைகள் தவிர்த்து வருகின்றனர்.சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த, "ஆதவன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர், பாடலாசிரியர்கள் உட்பட திரையுலக முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். படத்தின் ஹீரோயின், நயன்தாரா கலந்து கொள்ளவில்லை."ஆதிநாராயணா' படத்தில் ஹீரோயினாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் "சிடி' வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. "அழகான பொண்ணு தான்' படத்தில் நடித்த நமீதாவும், அப்படத் தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. "அகம் புறம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஹீரோயின் மீனாட்சியும் கலந்து கொள்ளவில்லை.
தற்போது, விளம்பரத்தை பார்த்து தான் படங்களை பார்க்க ரசிகர்கள், தியேட்டருக்கு வருகின்றனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட விழாக்களில் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய நடிகைகள், அவற்றைத் தவிர்த்துவருவதால், தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்."அழகான பொண்ணு தான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப் பாளர் கள் சங்கச் செயலர் சிவசக்தி பாண்டியன் பேசும்போது, "பல கோடி ரூபாய் செலவு செய்து தயாரிப் பாளர்கள் படம் எடுக்கின்றனர். படத்திற்கு முக்கியமான விளம்பர விழாக்களில் நடிகைகள் கலந்துகொள்வது கிடையாது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்வதில்லை. கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம், "ரெட் கார்டு' போட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது' என, பகிரங்கமாக பேசினார்.
இதைக் கேள்விப்பட்டு, நடிகைகள் நயன்தாரா, மீரா ஜாஸ்மின், நமீதா, மீனாட்சி உட்பட ஆறு நடிகைகள் அதிருப்தியடைந்துள்ளனர். படப் பாடல் வெளியீட்டு விழாவில் தாங்கள் கலந்துகொள்ளாதது ஏன் என்பது குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை இவர்கள், போனில் விளக் கமளித்தபோது, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது புகார் கூறியுள்ளனர்.பாடல் வெளியீட்டு விழா, குறிப்பிட்ட தேதியில் நடக்கிறது என்று, உறுதியாக முன்கூட்டியே தயாரிப்பாளரோ, இயக்குனரோ சொல்வது கிடையாது. படம் சம்பந்தமான, "சிறப்பு பேட்டி' தொடர்பாகவும் தகவல்களைத் தருவதில்லை. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நடிகைகள் மும்பையிலிருந்தோ, திருவனந்தபுரத்திலிருந்தோ, ஐதராபாத்திலிருந்தோ வருதென்றால், போக, வர விமானக் கட்டணம் குறித்தும், தங்கிச் செல்ல ஓட்டல் ஏற்பாடு குறித்தும் ஏதும் பேசுவது கிடையாது.
வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்தாலும், அவசியம் சம்பந்தப்பட்ட நடிகை கலந்துகொள்ள வேண்டும் என்றால், அங்கு ஷூட்டிங் முடிந்த பிற கே, இங்கு நடக்கும் விழாவில் கலந்துகொள்ள முடியும். அப்போது தான் நடிக் கும் படத்தின் தயாரிப்பாளருக்கு இடைஞ்சல் ஏற்படாது.பேசியபடி முழு சம்பளத்தைக் கொடுத்த நிலையில் அல்லது ஏதும் பிரச்னை இல்லாத நிலையில் நடிகைகள், பட விழாக்களைத் தவிர்க்க நினைப்பதில்லை. இக்குறைபாடுகளைத் தீர்க்க, நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்; போக்குவரத்து, தங்குமிடச் செலவுகளை தயாரிப்பாளர் ஏற்க வேண்டும்; சம்பள பாக்கி வைக்கக் கூடாது.இவற்றை செய்து தந்தால், எந்த நடிகையும் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ளத் தயங்க மாட்டார்கள்.
இப்பிரச்னை குறித்து தயாரிப்பாளர் கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய வேண் டும் என்றும் சரத்குகுமாரை கேட்டுக் கொண்டுள்ளனர்.நடிகர் சங்கம் சார்பில், மத்திய இணை அமைச்சரும் நடிகருமான நெப்போலியனுக்கும், இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கும் வரும் 5ம் தேதி, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இதன் பிறகு நடிகைகள் பிரச்னை குறித்து சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் துடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Posted by Tamil Junction at 7:44 AM 0 comments
ரசிகர்களுக்கு இம்மாதம் கொண்டாட்டமாக அமைய போகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மாதத்தில் 20 புதுப்படங்கள் ரிலீசாகின்றன. அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தீபாவளி வருகிறது. அதுவரை புதுப்படங்கள் தொடர்ச்சியாக திரையரங்குகளை கலக்க உள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்டு 31-ந்தேதி வரை 81 படங்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 150 ஆக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இம்மாதம் ரிலீசாகும் படங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்த மாதத்திலேயே திரைக்கு வர உள்ள சில சிறு படங்களின் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்படவில்லை. தியேட்டர்கள் கிடைப்பதை பொறுத்து அவற்றை ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர்.
வருகிற 4-ந்தேதி நினைத்தாலே இனிக்கும், மதுரை சம்பவம் ஆகியவை ரிலீசாகின்றன. நினைத்தாலே இனிக்கும் படம் மலையாளத்தில் ஹிட்டான “கிளாஸ்மெட்” படத்தின் “ரீமேக்”. ஜி.என்ஆர். குமரவேலன் இயக்கி உள்ளார். இதில் பிருதிவிராஜ், ஷக்தி, கார்த்திக்குமார், பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
மதுரை சம்பவம் படத்தில் டான்ஸ்மாஸ்டர் ஹரிகுமார் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகி கார்த்திகா. ஏற்கனவே இந்த ஜோடி “தூத்துக்குடி” என்ற ஹிட் படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநாளில் பயங்கர ராட்சஷ ஆடுகள் என்ற ஆங்கில டப்பிங் படமும் வெளியாகிறது.
வருகிற 11-ந்தேதி பரத்-தமன்னா ஜோடியாக நடித்த “கண்டேன் காதலை” படம் வெளியாகிறது. இது இந்தியில் வெற்றிகரமாக ஓடிய “ஜெப்விமெட்” என்ற படத்தின் ரீமேக். ஜெயம் கொண்டான் பட டைரக்டர் கண்ணன் இயக்கியுள்ளார். சுஷ்மிதாசென் நடித்த இந்திப் படமொன்று “பெயர் சந்தியா தொழில் தாசி” என்ற பெயரில் அதே நாளில் தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
12-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள் மேலும் 12 படங்கள் ரிலீசாகின்றன. அவற்றி¢ல் கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன், அஜ்மல் நடித்த திருதிரு துறுதுறு, ஷங்கர் தயாரித்துள்ள ஈரம், ஜெய் நடித்துள்ள அதேநேரம் அதே இடம், வைதேகி, மதுரை தேனி வழி ஆண்டிப்பட்டி போன்ற படங்கள் முக்கிய மானவையாகும்.
தீபாவளிக்கு சூர்யா நடித்த ஆதவன், விஜய்யின் வேட்டைக்காரன், தனுசின் குட்டி படங்கள் மோதுகின்றன.
Posted by Tamil junction at 1:43 PM 0 comments
Labels: Cinema
தெலுங்கு நடிகர் ராஜேந்திரபிரசாத்- ரம்பா ஜோடியாக நடித்த “குயிக்கன் முருகன்” என்ற படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதில் வசனங்கள் உள்ளன. ராஜேந்திரபிரசாத் “கவ்பாய்” வேடத்திலும், ரம்பா வில்லனுக்கு உதவும் பார் டான்சர் கேரக்டரிலும் நடித்துள்ளனர். கிளை மாக்சில் வில்லனுக்கு எதிராக மாறி ராஜேந்திர பிரசாத்துக்கு உதவுவதுபோல் ரம்பா கேரக்டர் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
ரம்பா கேரக்டரை மட்டம் தட்டுவதுபோல் ராஜேந்திரபிரசாத் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். ரம்பா சிறு வேடத்தில்தான் நடித்துள்ளார். அதுவும் பார் டான்சராக வருகிறார் என்றார்.
இது ரம்பாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி ரம்பா கூறியதாவது:-
ராஜேந்திரபிரசாத் எனது கேரக்டர் பற்றி சொன்ன கருத்துகள் தவறானவை. “பார் டான்சர்” என்று அவர் சொன்னது சரியல்ல. எனது கேரக்டர் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. கதாநாயகன் குயிக்கன் முருகனுக்கு உதவும் வேடத்தில் நடித்துள்ளேன் என்றார்.
இதன்மூலம் இருவருக்கும் மோதல் உருவாகியுள்ளது.
Posted by Tamil junction at 1:16 PM 0 comments
Labels: Cinema
முத்தூட் வங்கி அதிபர் பால்முத்தூட் ஜார்ஜ் கொலை வழக்கில் நடிகை பாவனாவை சம்பந்தப்படுத்தி செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளதால் கோடம்பாக்கமே பரபரக்கிறது. கொலை செய்யப்பட்ட ஜார்ஜின் காரில் சம்பவம் நடந்தபோது நடிகை பாவனாவும் உடன் இருந்ததாக பரவியுள்ள இந்த செய்தி குறித்து பாவனாவிடம் கேட்டால், அந்த கொலை நடந்ததாக கூறப்படும் நாளில் நான் வெளிமாநிலத்தில் சூட்டிங்கில் இருந்தேன். என்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் செய்யும் சூழ்ச்சி இது, என்கிறார். நடிகை பாவனா தற்போது அஜித்துடன் அசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வருவேன் என்கிறார் பாவனா.
Posted by Tamil Junction at 7:39 AM 0 comments
புதுடில்லி : நேரு கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான பைனலில் இந்திய அணி, "பெனால்டி ஷூட்-அவுட்' (5-4) முறையில் சிரியாவை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றது.
டில்லியில் 14 வது நேரு கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, லெபனான், சிரியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட ஐந்து அணிகள் "ரவுண்டு ராபின்' முறையில் லீக் போட்டியில் மோதின. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த முறையே சிரியா (12 புள்ளி), இந்தியா (6 புள்ளி) அணிகள் பைனலுக்கு முன்னேறின. இதன் பைனல் டில்லியில் உள்ள அம்பேத்கார் மைதானத்தில் நேற்று நடந்தது.விறுவிறுப்பான பைனலின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோலடிக்க முடியாமல் திணறினர். கிடைத்த "கார்னர் ஷாட்' வாய்ப்பை வீணடித்த இரு அணியினரும், 2வது பாதியிலும் கோலடிக்க முடியாமல் ஏமாற்றம் அளித்தனர்.இதனால் இரு அணியினருக்கும் கூடுதலாக தலா 15 நிமிடம் கொடுக்கப்பட்டது.
பரபரப்பான முதல் 15 நிமிடத்தில் இரு அணியினரும் பலமுறை கோலடிக்கும் வாய்ப்பை வீணடித்தனர். இரண்டாவது 15 நிமிடத்தில் அபாரமாக ஆடியஇந்திய அணிக்கு 114 வதுநிமிடத்தில் கிடைத்த "ப்ரி ஹிக்' வாய்ப்பை ரெனிடி சிங் கோலடித்து 1-0 என முன்னிலை தந்தார். தொடர்ந்துபோராடிய சிரியா அணிக்கு, அல்டோனியின் ஆட்டம் கைகொடுத்தது. கடைசிநிமிடத்தில் இவர் தலையால் முட்டி சூப்பர் கோலடிக்க, ஆட்டம் 1-1 கணக்கில் சமநிலையை எட்டியது. இதனால் போட்டி "பெனால்டி ஷூட்-அவுட்' முறைக்கு சென்றது. இதில் இந்தியா சார்பில் கிளிமாக்ஸ், ஷேத்ரி, ஸ்டீவன் டயாஸ், அன்வர் ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக மாற்றினர்.
ரெனிடே, வாது தங்கள் வாய்ப்பை வீணடித்தனர். இந்திய கோல் கீப்பர் சுப்ரதா பவுல், சிரியாவின் மூன்று வாய்ப்பை தடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் நேரு கோப்பை கால்பந்து தொடரை 2வது முறையாக கைப்பற்றி அசத்தியது. முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு நடந்த இத்தொடரின் பைனலில் இந்திய அணி, சிரியாவை வீழ்த்தியிருந்தது.
Posted by Tamil Junction at 7:34 AM 0 comments
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மறைவுக்கு முன், தமிழக கடலோர கிராமங்களில், தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவும், பாசமும், தமிழக மீனவர்களிடையே இருந்து வந்தது. ராஜிவ் காந்தியின் கொடுமையான மரணத்திற்கு பிறகு, பெரும்பாலான தமிழக கடலோர மீனவ கிராமங்களில், விடுதலைப் புலிகள் ஆதரவு குறைந்து போனது.
மீனவர்கள், விடுதலைப் புலிகளை தங்கள் இனமாகவும், உறவாகவும் கருதி செய்து கொண்டிருந்த உதவிகளும் குறைந்தன. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் ஒன்றிரண்டு, எல்லை தாண்டும் நிலையில் மட்டுமே, இலங்கை கடற்படை தாக்குதலுக்கும்,நடவடிக்கைக்கும் ஆளாகின.இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகளை அழிக்கவும், கட்டுப்படுத்தவும், தாக்குதலை சமாளிக்கவும் முழு மூச்சில் இருந்ததால், தமிழக மீனவர்கள் மீது கவனம் திரும்பவில்லை.தற்போது, விடுதலைப் புலிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்ட நிலையில், பிரபாகரன் மரணத்திற்கு பின், கடல் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் முற்றிலும் இல்லை.கடற்புலிகள் நடமாட்டத்தாலும், தாக்குதலாலும் பாதிப்பிற்குள்ளான இலங்கை அரசு, கடற்படையை பலப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முழு சுதந்திரத்தை கடற்படைக்கு வழங்கியது.
தற்போது, புலிகளின் நடமாட்டம் இல்லாமலிருந்தும், கடலில் வலம் வரும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், எதிரிகளாக நினைத்து தாக்குவது தொடர்கிறது. இலங்கை கடற்படை - விடுதலைப் புலிகள் மோதல் திசை மாறி, தமிழக மீனவர்கள் - இலங்கை கடற்படை மோதலாக உருமாறி வருகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறலால், தமிழக மீனவர்கள், விடுதலைப் புலிகள் தங்களுக்கு அரணாக இருந்து வந்ததாக நினைத்து, மீண்டும் புலிகள் மீது இரக்கமும், பாசமும், பரிவும் காட்டத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக, தமிழக கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் அதைச் சார்ந்த நகரங்களில், பிரபாகரன் ஆதரவு பெருகி வருவதும், இதற்கு சில புலி ஆதரவு பிரமுகர்கள், அரசியல்வாதிகள் உரமேற்றி வருவதும், மறைமுகமாக தொடங்கியுள்ளது.
இலங்கை கடற்படை அட்டூழியத்தை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால், மீண்டும், தமிழக கடலோரங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவு எழும் அபாயம் உள்ளது.
ஓய்வெடுக்கும் உளவுத்துறை : இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் மோதல் நடந்து கொண்டிருந்த போது, தமிழக மீனவ கிராமங்களில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஐ.பி., கியூ பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார், விடுதலைப் புலிகள் ஒழிப்பிற்கு பிறகு, தங்கள் வேலை முடிந்து விட்டதாக, மீனவ கிராமங்களில் தொடர்பை துண்டித்து விட்டனர். வி.ஐ.பி.,களின் வருகையை மட்டும் அரசுக்கு தெரிவிப்பதோடு கடமை முடிந்து விட்டதாக எண்ணி, தலையெடுக்கும் தலைவலியைப் பற்றி சிந்திக்காமல், "ஹாயாக' ஓய்வெடுத்துக் கொண்டுள்ளனர். அதிகாரிகள் உளவுத்துறையினரை தட்டி எழுப்ப வேண்டியது மிகவும் அவசியம்.
Posted by Tamil Junction at 7:31 AM 0 comments
Labels: News
சைஸ் ஜீரோ என்று மெலிந்த உடலை அப்பட்டமாக வெளிக்காட்டி கோடம்பாக்கத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கும் நடிகை ஸ்ரேயா வெளியிட்டிருக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட், உஸ்... இப்பவே கண்ண கட்டுதே... என்று சொல்ல வைக்கிறது. அடுத்தமாதம் டொரண்டாவில் உலக படவிழா நடக்கிறது. இதில் ஸ்ரேயா நடித்த ஹாலிவுட் படமான குக்கிங் வித் ஸ்டெல்லா படமும் திரையிடப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க ஸ்ரேயாவுக்க அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து அம்மணி அளித்துள்ள பேட்டியில், இந்த அழைப்பே பெருமையாக இருக்கிறது. அடுத்த மாதம் 3 நாட்கள் அங்கு பட விழாவில் பங்கேற்க உள்ளேன். இதற்காக சிறப்பு ஆடைகளை தயாரிக்குமாறு காஸ்ட்யூமரை கேட்டு கொண்டுள்ளேன். இந்திய கலாசாரத்தை விளக்கும்படியான ஆடைகளையே அணிய விரும்புகிறேன். குறிப்பாக புடவையிலேயே செல்ல வேண்டும் என எண்ணியுள்ளேன், என்று கூறியிருக்கிறார். உண்மையிலேயே கண்ணைக் கட்டுதா?
Read More...Posted by Tamil Junction at 8:22 AM 0 comments
Labels: Cinema
ஸ்பா-பிரான்கர்சாம்ப்ஸ் : பார்முலா-1 ரேசில் நேற்று இந்தியாவுக்கு பொன்னான நாள். பெல்ஜியம் கிராண்ட்பிரிக்ஸ் ரேசில் "போர்ஸ் இந்தியா' அணியின் கியான் கார்லோ பிசிக்கெலா இரண்டாவது இடம் பெற்று அசத்தினார்.
இதன் மூலம் "பார்முலா-1 ரேஸ் ஒரு விளையாட்டு அல்ல, வெறும் பொழுதுபோக்கு தான்' என விமர்சித்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு சரியான பதிலடி கொடுக்கப் பட்டுள்ளது.பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா பிரான்கர்சாம்ப்சில் பார்முலா-1 கிராண்ட்பிரிக்ஸ் ரேஸ் நேற்று நடந்தது. இதில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான "போர்ஸ் இந்தியா' அணியும் பங்கேற்றது. இதன் சார்பில் பங்கேற்ற இத்தாலியைச் சேர்ந்த கியான்கார்கலோ பிசிக்கெலா மின்னல் வேகத்தில் பறந்தார். இவர் இரண்டாவது இடம் பெற்றார். இதன் மூலம் "போர்ஸ் இந்தியா' அணி முதல் முறையாக பார்முலா-1 புள்ளிகளை பெற்று வரலாறு படைத்தது. முதலிடத்தை பெராரி அணியின் கிமி ரெய்கானன் பெற்றார்.
இது குறித்து பிசிக்கெலா கூறுகையில்,""ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் முதலிடத்தை பறிகொடுத்தது மிகுந்த கவலை அளித்தது. எங்களது இலக்கு பார்முலா-1 புள்ளிகளை பெறுவது தான். இரண்டாவது இடம் பெற்றதன் மூலம் 8 புள்ளிகள் கிடைத்தது மிகப் பெரிய விஷயம்,''என்றார்.
Posted by Tamil Junction at 7:59 AM 0 comments
சென்னை :விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு மறைமுக எதிர்ப்பும், அவரது படங்களுக்கு வெளிநாட்டில் தமிழர்களால் சிக்கல் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.
நடிகர் விஜய், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலை டில்லியில் சந்தித்து விட்டு திரும்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள், விஜயை வரவேற்றுள்ளதால், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லது ராஜ்யசபா எம்.பி., பதவி அவருக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.விஜய் மீண்டும் ராகுலின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஆனால் விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி உள்ளது. அடுத்த மாதம் தமிழகம் வரும் ராகுலை சந்திக்கும் போது தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என, காங்கிரஸ் கட்சியில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களின் வாரிசுகள் கணக்கு போட்டு காத்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியில் விஜய் சேரும் பட்சத்தில், அவரது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கொடுக்கப்படும்.
இதனால், பதவியை எதிர் பார்த்துக் காத்திருக்கும் காங்கிரசார் இப்போதே தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.மத்திய அமைச்சர்கள் சிலரை, விஜயின் அப்பா சந்திரசேகர் சந்தித்துப் பேசியுள்ளார். அமைச்சர் வாசன் மூலமாகவே ராகுலை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்வது உறுதியாகி உள்ளது. விஜய் முடிவுக்கு வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் விஜய் மனைவியின் பூர்வீகம் இலங்கை. லண்டன் மற்றும் கனடாவில் அவரின் பெற்றோர்களும், உறவினர்களும் உள்ளனர். இதனால் கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விஜய் ரசிகர்களாக உள்ளனர். இதனால், விஜய் நடித்த படங்கள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விஜய், காங்கிரசில் சேர்ந்தால் இந்நாடுகளில் அவரது படங்களைப் புறக்கணிப்போம் என்று கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்தக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் விஜய், மக்கள் இயக்கம் துவங்கி அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று புதிய அரசியல் கட்சி துவங்கப் போவதாக செய்திகள் வந்தன. இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாகவும், அவருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர்களும் குடிமக்கள் என்பதால், அவர்களும் அரசியலில் பங்கு கொள்ள உரிமை உண்டு. ஆனால் விஜய், காங்கிரசில் சேர முன் வந்தால், அதைத் தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள்.மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது தான் இலங்கையில் வரலாறு காணாத வகையில் இனப்படுகொலை அரங்கேறியது.காங்கிரஸ் கட்சியில் ராகுலுடன் விஜய் கைகோர்க்க எத்தனித்திருப்பது, இலங் கைத் தமிழர்களுக்கு செய்யக் கூடிய ரெண் டகம். விஜய் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விஜய் படங்கள், நடித்து வெளிவர இருக்கும் புதிய படங்களை உலகளாவிய அளவில் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்' என, கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், விஜய் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது
Posted by Tamil Junction at 7:51 AM 0 comments
தமிழக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போது நடித்து வரும், "எந்திரன்' படத்துக்குப் பின் கண்டிப்பாக அரசியல் கட்சி துவக்குவார் என, அவரது ரசிகர் கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது, தி.மு.க., - த.மா.கா., கூட்டணி ஆட்சியைப் பிடிக்க நடிகர் ரஜினிகாந்த், அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க.,வுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததே காரணம்.அப்போதே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அவரது ரசிகர்களும் அதையே விரும்பினர். ஆனால், ரஜினி அரசியலுக்கு வரவில்லை.தமிழகத்தில் அடுத்தடுத்து நடிகர்கள் அரசியலுக்கு வந்து புதிய கட்சி துவக்கி வருகின்றனர். தங்களுக்கு இருந்த ரசிகர் மன்றங் களை ஒருங்கிணைத்து தே.மு.தி.க.,வை விஜயகாந்தும், அ.இ.ச.ம.க., கட்சியை சரத்குமாரும் துவக்கினர்.அதேபோல், நடிகர் டி.ராஜேந்தரும் லட்சிய தி.மு.க.,வை நடத்தி வருகிறார். நடிகர் விஜய்யும் விரைவில் புதிய கட்சியை துவக்குவார் என்று கூறப்படுகிறது.ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து, தன் நலம்விரும்பிகளிடம் ஆலோசனை செய்துள்ளதாகவும், அவர் தற்போது நடித்து வரும் எந்திரன் படம் ரிலீசுக்குப் பின் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் கட்சி துவக்குவார் என்றும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் சிலர் கூறியதாவது:தலைவர் ரஜினி அரசியலுக்கு வரும் முடிவை எடுத்து விட்டார். தற்போது அவர் நடித்து வரும் எந்திரனுக்கு பிறகு, கண்டிப்பாக மன்றங்களை ஒருங்கிணைத்து, அரசியல் கட்சி துவக்கவுள்ளார் என்பது அவரது நடவடிக்கையில் இருந்து தெரிகிறது. கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட எந்த மன்றத்துக்கும் இதுவரை பதிவு எண் கொடுக்கப்படவில்லை. தற்போது, அந்த ஆண்டுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட மன்றங்களுக்கு பதிவு எண் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவராகவும் தன்னை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் மூடில் இருப்பதால் தான், மக்கள் மத்தியில் செல்வாக்கின் உண்மை நிலையை அறிய, ரசிகர் மன்ற விழாக்களுக்கும், ரசிகர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் தன் நலனில் அதிக அக்கறையுள்ள அண்ணன் சத்திய நாராயணராவை அனுப்பி வருகிறார். அவருடன் ரஜினிக்கு மருமகன் உறவுமுறையில் உள்ள சந்திரகாந்த் என்பவரும் தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மக்களின் நாடித்துடிப்பை பார்த்து வருகின்றனர்.எந்திரன் படம் இன்னும் எட்டு மாதங்களில் முடியும் என தெரிகிறது. ஆகையால், அடுத் தாண்டு கண்டிப்பாக ரஜினி அரசியலில் காலடி எடுத்து வைப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முடிவு எப்போது? சத்திய நாராயணராவ் பேட்டி:""எந்திரன் படம் முடிந்த பிறகு அரசியல் கட்சி துவங்குவது பற்றி ரஜினி நல்ல முடிவை அறிவிப்பார்,'' என்று அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.திருச்சியில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொள்ள நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ், இவரது மருமகனும், கர்நாடக மாநில ரஜினி மன்ற தலைவருமான சந்திரகாந்த் ஆகியோர் நேற்று காலை திருச்சி வந்தனர்.சிதம்பரம் நகர ரசிகர் மன்ற நிர்வாகிகள், நடிகர் ரஜினி குறித்து தயாரித்த, "மக்கள் மனம் கவர்ந்த மன்னன்' "சிடி' வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சத்தியநாராயணராவ், நிருபர்களிடம் கூறியதாவது:ரசிகர் மன்ற நிர்வாகிகளின் அழைப்புக்கு இணங்கி திருமண விழாக்களில் கலந்து கொள்ள திருச்சி வந்துள்ளேன். அரசியல் கட்சி துவங்குவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் ஏதும் நடத்தவில்லை. ரஜினி தற்போது எந்திரன் படப்பிடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படம் முடிந்ததும் அரசியல் கட்சி துவக்குவது குறித்து சரியான நேரத்தில், சரியான முடிவை அறிவிப்பார்.இவ்வாறு சத்தியநாராயணராவ் கூறினார்.
Posted by Tamil Junction at 7:34 AM 0 comments
படங்களை வியாபாரம் செய்ய தயாரிப்பாளர்கள் டிரெயிலர் வெளியீட்டு விழாக்களையும் ஆடியோ வெளியீட்டு விழாக்களையும் பெரும் செலவு செய்து நடத்துகின்றனர். நட்சத்திர ஓட்டல்கள், தியேட்டர்களில் இவ்விழாக்கள் நடைபெறும். இதற்காக ஆடம்பர அழைப்பிதழ்கள் அச்சிட்டும் விநியோகிக்கிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி யூனியன் நிர்வாகிகள் இத்தகைய விழாக்களில் பங்கேற்று படத்தை உயர்வாக பாராட்டி பேசுவர். இது அப்படத்தின் விளம்பரத்துக்கும் வியாபாரத்துக்கும் உதவியாக இருக்கும்.
ஆனால் இந்த விழாக்களில் அப்படங்களில் நடித்த கதாநாயகிகள் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. கதாநாயகர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். நடிகைகள் வெளியூர் சூட்டிங், என்றே ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி வராமல் புறக்கணித்து விடுகின்றனர்.
சமீபத்தில் “ஆதவன்” பட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சத்யம் தியேட்டரில் நடந்தது. விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நேரில் வந்து சூர்யாவையும் படக்குழுவினரையும் பாராட்டி பேசினார்கள். ஆனால் அதில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா வரவில்லை.
“ஆதி நாராயணா” என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. அதில் கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மின் விழாவுக்கு வராமல் புறக்கணித்தார்.
நேற்று நமீதா கதாநாயகியாக நடிக்கும் “அழகான பொண்ணுதான்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் நடந்தது. படத்துக்கு சம்பந்தம் இல்லாத நடிகை குஷ்புவே இவ்விழாவில் மகளுடன் பங்கேற்று படத்தை பாராட்டி பேசினார். தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராமநாராயணன் வெளியீட்டு ஆடியோ சி.டி.யையும் பெற்றுக்கொண்டார்.
படத்தின் டைரக்டர் திரு, தயாரிப்பாளர் கேசவன், கதாநாயகன் புதுமுகம் கார்த்திக், இசையமைப்பா ளர் சுந்தர் சி.பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால் நமீதா வரவில்லை.
இந்த விழாவில்தான் பிரச்சினை வெடித்தது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சிவசக்தி பாண்டியன், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகைகள் படங்களை விளம்பரப்படுத்தும் இது போன்ற விழாக்களுக்கு வருவதில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இக்கருத்தை குஷ்பு, பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் ஆகியோரும் வரவேற்று பேசினர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி ஆகிய மூன்று சங்க நிர்வாகிகளும் கலந்து பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு, காணப்படும் என்று ராம நாராயணன் தெரிவித்தார்.
விரைவில் இதற்கான கூட்டம் நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக நயன்தாரா, மீரா ஜாஸ்மின், நமீதா, “அகம் புறம்” பட விழாவில் பங்கேற்காத அப்படத்தின் கதாநாயகி மீனாட்சி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருக்கும் படவிழாவில் பங்கேற்காததற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
அவர்கள் அனுப்பும் பதில் கடிதத்தை வைத்து நடவடிக்கை இருக்கும். இனிமேல் நடிகைகள் அனைவரும் இதுபோன்ற பட விழாக்களில் பங்கேற்க சுற்றறிக்கைகள் அனுப்பப்பட உள்ளது.
Posted by Tamil junction at 2:13 PM 0 comments
Labels: Cinema
"திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும்' என, மாஜி மத்திய அமைச்சர் இளங்கோவன் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகிறார். புதிய இளைஞர்களை கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கும் லட்சியமாக உள்ளது. அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாஜி இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களை ராகுல் கேட்டறிந்து வருகிறார்.
தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுகளை கவரும் வகையில் சினிமா பிரபலங்களை காங்கிரஸ் கூட்டணியில் இணைத்து வலு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்கான ரகசிய திட்டத்தை தீட்டி, மாஜி மத்திய அமைச்சர் ஒருவர் ராகுலுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார். அவரது திட்டத்தின் முதல் கட்டமாக புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கடந்த 23ம் தேதி நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "அரசியலில் நுழைய விருப்பம். வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்' என தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டி பேசினார் நடிகர் விஜய்.
இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேசும் போது, "மாணவ, மாணவிகளுக்கு விஜய் அதிகமான அறிவுரைகளை கூறியுள்ளார். அவற்றை முறையாக பின்பற்றி நடந்து கொள்ள வேண் டும்' என வேண்டுகோள் விடுத்தார். "காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் பேசியுள்ளது, தமிழக காங்கிரசாருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. காங்கிரசை பலப்படுத்தி, தனித்து போட்டியிடும் வகையில், மாற்றியமைக்க ராகுல் ஒருபுறம் முயற்சி எடுத்து வரும் நிலையில், தற்போதுள்ள தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னொருபுறம் அச்சாரம் போடப்பட்டு வருகிறது.
"கூட்டணி தர்மத்திற்காக தி.மு.க., வை அனுசரிக்கிறோம், தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் 2010ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடத்த தி.மு.க., முடிவு செய்துள் ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்ந்து நமக்கு சரிவு தான் ஏற்படும்' என்று வேலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் ஞானசேகரன் பரபரப்பாக பேசினார். தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த ராகுல் எடுத்துவரும் முயற்சியின் ஒருபகுதியாகவே ஞானசேகரன் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை ஞானசேகரன் எழுப்பியுள்ளார்.
டில்லியிலும் காங்கிரஸ் - தி.மு.க., தலைவர்கள் இடையே சுமூக உறவு இல்லை என கூறப்படுகிறது. இப்படி பல்வேறு திரைமறைவு அரசியலுக்கு மத்தியில், தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி வளர்ச்சி மற்றும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நடிகர் விஜயுடன் புது கூட்டணி அமைப்பது காங்கிரசுக்கு தமிழகத்தில் வெற்றியை தேடித் தரும் என்ற கருத்தை மாஜி மத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ராகுல் திட்டம் மற்றும் காங்கிரசாரின் விருப்பங்கள் எந்த அளவுக்கு பலனை அளிக்கப் போகின்றன என்பது விரைவில் தெரியவரும்.
Posted by Tamil Junction at 9:56 AM 0 comments
தமிழைவிட அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது நாடோடிகளின் தெலுங்கு ரிமேக்கான சம்போ சிவ சம்போ. அஞ்சாதேயில் வரும் கத்தாள கண்ணால குத்தாத நீ என்னை... பாடலை சேர்த்து படத்தின் டெம்போவை கூட்டியிருக்கிறார்கள்.
சசிகுமார் நடித்த வேடத்தில் ரவிதேஜாவும், அனன்யா நடித்த வேடத்தில் ப்ரியாமணியும் நடிப்பது தெரியும். படத்தில் முக்கியமானது அந்த எம்பி கதாபாத்திரம். அதில் நடிக்க சமுத்திரக்கனி தேர்வு செய்திருப்பது நிஜ அரசியல்வாதியான ரோஜாவை.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணி தலைவராக இருக்கும் ரோஜாவின் சாராய கடை உடைப்பு மற்றும் எதிர்கட்சியினரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் கசமுச மேடை பேச்சுகள் ஏற்கனவே அவருக்கு ரவுடி இமேஜை ஆந்திராவில் ஏற்படுத்தியிருக்கிறது. வில்லி எம்பி வேடத்துக்கு அவரைவிட பொருத்தமானவர் ஆந்திராவில் இருக்க முடியாது.
சம்போ சிவ சம்போவை ஒரே ஷெட்யூல்டில் முடித்துவிட்டு கன்னட ரிமேக்கிற்கு செல்லவுள்ளார் சமுத்திரக்கனி. அப்படியே இந்தி ரிமேக்கையும் இயக்குங்க சார்.
Posted by Tamil Junction at 9:37 AM 0 comments
Labels: Cinema
விஜய்யின் வேட்டைக்காரன் பன்ஞ் டயலாக்கும், குத்துப் பாடலுமாக பரபரவென வளர்ந்து வருகிறது. சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் செட் போட்டு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள்.
வேட்டைக்காரன் விஜய்யின் 49 வது படம். மேலும் வில்லு, குருவி என இரு சுமார் படங்களுக்குப் பிறகு வெளியாகும் படம். நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைமை.
வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட ஏவிஎம் திட்டமிட்டுள்ளது. ரஜினி, கமல், அஜித், விக்ரம், சூர்யா என யாருடைய படமும் வரும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. வேட்டைக்காரன் மட்டும்தான் ஒரே மாஸ் ஹீரோவின் படம். அதனுடன் போட்டி போட இருப்பது தனுஷின் குட்டி.
விஜய்யின் அழகிய தமிழ் மகன் வெளியான போது தனுஷின் பொல்லாதவன் ரிலீஸானது. அழகிய தமிழ் மகன் அவுட். பொல்லாதவன் ஹிட். வில்லு வெளியான போது படிக்காதவன் வெளியானது. வில்லு சுமார், படிக்காதவன் ஹிட்.
தீபாவளிக்கு வேட்டைக்காரனும், குட்டியும் மோதுகின்றன. ஜெயிக்கப் போவது யார்? காத்திருக்கிறார்கள் இருவரின் ரசிகர்களும்.
Posted by Tamil Junction at 9:32 AM 0 comments
Labels: Cinema