Wednesday, September 2, 2009

தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாய்ச்சல்

"பட விழாக்களில் நடிகைகள் கலந்து கொள்ளாததற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தான் காரணம்' என்று, நடிகைகள் நயன்தாரா, நமீதா, மீரா ஜாஸ்மின் உட்பட ஆறு நடிகைகள், நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.திரைப்படங்களின் பாடல் "சிடி' வெளியீட்டு விழா மற்றும், "சிறப்புக் காட்சி' வெளியீட்டின் போதும், விளம்பரம் கருதி அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடகிகள், பாடலாசிரியர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

சமீபகாலமாக படத்தின் பாடல் "சிடி' வெளியீட்டு விழா மற்றும் சினிமா தொடர்பான சிறப்பு பேட்டிகளையும் நடிகைகள் தவிர்த்து வருகின்றனர்.சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த, "ஆதவன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர், பாடலாசிரியர்கள் உட்பட திரையுலக முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். படத்தின் ஹீரோயின், நயன்தாரா கலந்து கொள்ளவில்லை."ஆதிநாராயணா' படத்தில் ஹீரோயினாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் "சிடி' வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. "அழகான பொண்ணு தான்' படத்தில் நடித்த நமீதாவும், அப்படத் தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. "அகம் புறம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஹீரோயின் மீனாட்சியும் கலந்து கொள்ளவில்லை.

தற்போது, விளம்பரத்தை பார்த்து தான் படங்களை பார்க்க ரசிகர்கள், தியேட்டருக்கு வருகின்றனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட விழாக்களில் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய நடிகைகள், அவற்றைத் தவிர்த்துவருவதால், தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்."அழகான பொண்ணு தான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப் பாளர் கள் சங்கச் செயலர் சிவசக்தி பாண்டியன் பேசும்போது, "பல கோடி ரூபாய் செலவு செய்து தயாரிப் பாளர்கள் படம் எடுக்கின்றனர். படத்திற்கு முக்கியமான விளம்பர விழாக்களில் நடிகைகள் கலந்துகொள்வது கிடையாது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்வதில்லை. கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம், "ரெட் கார்டு' போட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது' என, பகிரங்கமாக பேசினார்.

இதைக் கேள்விப்பட்டு, நடிகைகள் நயன்தாரா, மீரா ஜாஸ்மின், நமீதா, மீனாட்சி உட்பட ஆறு நடிகைகள் அதிருப்தியடைந்துள்ளனர். படப் பாடல் வெளியீட்டு விழாவில் தாங்கள் கலந்துகொள்ளாதது ஏன் என்பது குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை இவர்கள், போனில் விளக் கமளித்தபோது, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது புகார் கூறியுள்ளனர்.பாடல் வெளியீட்டு விழா, குறிப்பிட்ட தேதியில் நடக்கிறது என்று, உறுதியாக முன்கூட்டியே தயாரிப்பாளரோ, இயக்குனரோ சொல்வது கிடையாது. படம் சம்பந்தமான, "சிறப்பு பேட்டி' தொடர்பாகவும் தகவல்களைத் தருவதில்லை. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நடிகைகள் மும்பையிலிருந்தோ, திருவனந்தபுரத்திலிருந்தோ, ஐதராபாத்திலிருந்தோ வருதென்றால், போக, வர விமானக் கட்டணம் குறித்தும், தங்கிச் செல்ல ஓட்டல் ஏற்பாடு குறித்தும் ஏதும் பேசுவது கிடையாது.

வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்தாலும், அவசியம் சம்பந்தப்பட்ட நடிகை கலந்துகொள்ள வேண்டும் என்றால், அங்கு ஷூட்டிங் முடிந்த பிற கே, இங்கு நடக்கும் விழாவில் கலந்துகொள்ள முடியும். அப்போது தான் நடிக் கும் படத்தின் தயாரிப்பாளருக்கு இடைஞ்சல் ஏற்படாது.பேசியபடி முழு சம்பளத்தைக் கொடுத்த நிலையில் அல்லது ஏதும் பிரச்னை இல்லாத நிலையில் நடிகைகள், பட விழாக்களைத் தவிர்க்க நினைப்பதில்லை. இக்குறைபாடுகளைத் தீர்க்க, நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்; போக்குவரத்து, தங்குமிடச் செலவுகளை தயாரிப்பாளர் ஏற்க வேண்டும்; சம்பள பாக்கி வைக்கக் கூடாது.இவற்றை செய்து தந்தால், எந்த நடிகையும் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ளத் தயங்க மாட்டார்கள்.

இப்பிரச்னை குறித்து தயாரிப்பாளர் கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய வேண் டும் என்றும் சரத்குகுமாரை கேட்டுக் கொண்டுள்ளனர்.நடிகர் சங்கம் சார்பில், மத்திய இணை அமைச்சரும் நடிகருமான நெப்போலியனுக்கும், இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கும் வரும் 5ம் தேதி, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இதன் பிறகு நடிகைகள் பிரச்னை குறித்து சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் துடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009