கொச்சி : " கந்தசாமி படத்தின் வசூல், ஒரே வாரத்தில் 37 கோடி ரூபாயை தாண்டி, தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது' என்று, நடிகர் விக்ரம் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் பத்திரிகையாளர்களிடம் நடிகர் விக்ரம் கூறியதாவது: என் புதிய திரைப்படமான கந்தசாமி திரையிடப்பட்ட ஒரே வாரத்தில் 37 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை. இத்திரைப்படத்திற்காக, செலவிடப்பட்ட தொகை 40 கோடி ரூபாய். கடைசியாக நான் நடித்த, "பீமா' திரைப்படத்திற்கு பிறகு, இரண்டரை ஆண்டுகள் கழித்து, "கந்தசாமி' வெளியாகி உள்ளது.கேரளாவிலும் இப்படம் நல்ல வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. சென்னையில் 16 தியேட்டர்களில் திரையிடப்பட்ட, "சிவாஜி' பட வசூலை, "கந்தசாமி' முறியடித்துள்ளது.
இப்படம் சென்னையில் 18 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.மொத்தம் 900 பிரிண்ட்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் அடங்கிய, "சிடி'க்கள் ஒரே வாரத்தில், ஒரு லட்சத்திற்கும் மேல் விற்பனையாகி, புதிய சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் எல்லா பாடல்களையும் சொந்த குரலில் பாடி உள்ளேன். விரைவில் ஆல்பம் தயாரித்து வெளியிடவும் ஆலோசித்து வருகிறேன். திரைப்பட இயக்குனர் மணிரத்தினம் படத்தில் நடிக்கவேண்டும் என்பது என் கல்லூரி காலத்து கனவு. அந்த கனவு தற்போது அவரது இயக்கத்தில் "ராவணன்' படத்தில் நடிப்பதன் மூலம் நிறைவேறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment