சதா ஆண்கள் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். திரையுலக அனுபவம் மூலம் இந்த வெறுப்பு ஏற்பட்டுள்ளதாம். மராட்டியத்தை சேர்ந்த இவர் 2003-ல் “ஜெயம்” படம் மூலம் தமிழில் அறிமுகமானார். மாதவனுடன் “எதிரி”, ஸ்ரீகாந்துடன் “வர்ணஜாலம்” விக்ரம் ஜோடியாக “அந்நியன்” படங்களில் நடித்துள்ளார். “பிரியசகி”, “திருப்பதி”, “உன்னாலே உன்னாலே” போன்ற படங்களும் இவர் நடித்த படங்கள். கடைசியாக மாதவனுடன் “நான் அவள் அது” படத்தில் ஜோடி சேர்ந்தார். இப்படம் சம்பளத்தகராறினால் ரிலீசாகமல் இழுபறியில் இருக்கிறது.
முன்னணி ஹீரோக்களுடன் நடித்தாலும் நடிகை நயன்தாரா, திரிஷா போல் இவரால் ஜொலிக்க முடியவில்லை. பட வாய்ப்புகளும் குறைந்து போயின. கவர்ச்சியாக நடிக்க மறுத்ததே இதற்கு காரணம் என்கின்றனர். மற்ற நடிகைகள் நீச்சல் உடை, முத்தக்காட்சி என இறங்கி விட்டார்கள். ஆனால் சதா அது மாதிரி நடிக்க மாட்டேன் பிடிவாதம் செய்கிறார்.
தற்போது இந்தியில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கிலும் ஒரு படம் செய்கிறார். ஆண்களுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவர்களை வெறுக்கும்படி செய்கின்றன. நம்பி பழகிய ஆண் நண்பர்கள் சிலரும் அவரை ஏமாற்றி விட்டார்களாம். இதனால் ஆண்களுடன் பழகுவதையே தவிர்க்கிறார். இதுபற்றி சதா சொல்கிறார்.
எனக்கு ஆண் நண்பர்கள் கிடையாது. அவர்களை நண்பர்களாக வைத்துக்கொள்ள ஆசையும் இல்லை. பெரும்பாலான ஆண்கள் மனநிலை எனக்கு தெரியும். அவர்கள் பெண்களை தங்கள் ஆசை வலையில் சிக்க வைக்கும் நோக்கத்துடனேயே பழகுகிறார்கள். எல்லா ஆண்களுமே ஏமாற்றுக்காரர்கள்தான் என்று ஆவேசமாக சொன்னார்.
0 comments:
Post a Comment