தமிழைவிட அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது நாடோடிகளின் தெலுங்கு ரிமேக்கான சம்போ சிவ சம்போ. அஞ்சாதேயில் வரும் கத்தாள கண்ணால குத்தாத நீ என்னை... பாடலை சேர்த்து படத்தின் டெம்போவை கூட்டியிருக்கிறார்கள்.
சசிகுமார் நடித்த வேடத்தில் ரவிதேஜாவும், அனன்யா நடித்த வேடத்தில் ப்ரியாமணியும் நடிப்பது தெரியும். படத்தில் முக்கியமானது அந்த எம்பி கதாபாத்திரம். அதில் நடிக்க சமுத்திரக்கனி தேர்வு செய்திருப்பது நிஜ அரசியல்வாதியான ரோஜாவை.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணி தலைவராக இருக்கும் ரோஜாவின் சாராய கடை உடைப்பு மற்றும் எதிர்கட்சியினரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் கசமுச மேடை பேச்சுகள் ஏற்கனவே அவருக்கு ரவுடி இமேஜை ஆந்திராவில் ஏற்படுத்தியிருக்கிறது. வில்லி எம்பி வேடத்துக்கு அவரைவிட பொருத்தமானவர் ஆந்திராவில் இருக்க முடியாது.
சம்போ சிவ சம்போவை ஒரே ஷெட்யூல்டில் முடித்துவிட்டு கன்னட ரிமேக்கிற்கு செல்லவுள்ளார் சமுத்திரக்கனி. அப்படியே இந்தி ரிமேக்கையும் இயக்குங்க சார்.
0 comments:
Post a Comment