Saturday, September 5, 2009

செருப்புடன் கிரிவலம் : சினேகாவால் புது சர்ச்சை

நடிகை சினேகா திருவண்ணாமலையில் செருப்புடன் கிரிவலம் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடிகை சினேகா அவரது தந்தை ராஜாராமுடன் திருவண்ணாமலைக்கு வந்தார். கோவில் ராஜகோபுரம் எதிரில் இருந்து கிரிவலம் புறப்பட்டார். அவருடன் பாதுகாப்புக்கு 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்தனர். பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க முயன்றபோது, பாதுகாப்புக்கு வந்த இளைஞர்கள் படம் எடுக்கவிடாமல் தடுத்தனர். "நாங்கள் விளம்பரத்துக்கு வரவில்லை, சுவாமி கும்பிடவே வந்தோம்,'' என கூறி தடுத்தனர். பின்னர் அனைத்து பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள் ஒன்றாக குவிந்ததால், பத்திரிகையாளர்களுக்கும், சினேகாவின் பாதுகாப்புக்கு உடன் வந்த இளைஞர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் சினேகா தலையிட்டு, போட்டோ எடுக்க அனுமதித்தார்.

காலில் செருப்பு அணிந்தபடி சினேகா கிரிவலம் சென்றது, வேடிக்கை பார்த்த பக்தர்கள் மத்தியில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை நகர்ப்புற பகுதி நெருங்கியவுடன், "ரசிகர்கள் கூட்டம் அதிகமாக கூடிவிடும்' என்பதால், கோவிலுக்கு இரண்டு கி.மீ., தூரத்துக்கு முன் கிரிவலத்தை முடித்த சினேகா அதிகாலை 4 மணிக்கு காரில் ஏறி புறப்பட்டு அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.

கோவில் நடை திறந்தவுடன் காலை 5.30 மணி அளவில் கோவிலுக்குவந்து கோபூஜையில் கலந்து கொண்டார். கோவிலில், சுவாமி, அம்மனை தரிசனம் செய்தார். நவக்கிரக சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். கோவிலுக்கு திடீர் வருகை குறித்து நிருபர்கள் கேள்விகேட்டபோது பதிலளித்த சினேகா, தன் "டிரேட்மார்க்' சிரிப்பு சிரித்தபடி, "நல்ல விஷயத்துக்காக வந்திருக்கிறேன். நல்லதே நடக்கும்,'' என கூறினார். சினோ செருப்பு அணிந்தபடி கிரிவலம் சென்றதால் பக்தர்கள் பலர் முணுமுணுத்தனர்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009