ஸ்பா-பிரான்கர்சாம்ப்ஸ் : பார்முலா-1 ரேசில் நேற்று இந்தியாவுக்கு பொன்னான நாள். பெல்ஜியம் கிராண்ட்பிரிக்ஸ் ரேசில் "போர்ஸ் இந்தியா' அணியின் கியான் கார்லோ பிசிக்கெலா இரண்டாவது இடம் பெற்று அசத்தினார்.
இதன் மூலம் "பார்முலா-1 ரேஸ் ஒரு விளையாட்டு அல்ல, வெறும் பொழுதுபோக்கு தான்' என விமர்சித்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு சரியான பதிலடி கொடுக்கப் பட்டுள்ளது.பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா பிரான்கர்சாம்ப்சில் பார்முலா-1 கிராண்ட்பிரிக்ஸ் ரேஸ் நேற்று நடந்தது. இதில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான "போர்ஸ் இந்தியா' அணியும் பங்கேற்றது. இதன் சார்பில் பங்கேற்ற இத்தாலியைச் சேர்ந்த கியான்கார்கலோ பிசிக்கெலா மின்னல் வேகத்தில் பறந்தார். இவர் இரண்டாவது இடம் பெற்றார். இதன் மூலம் "போர்ஸ் இந்தியா' அணி முதல் முறையாக பார்முலா-1 புள்ளிகளை பெற்று வரலாறு படைத்தது. முதலிடத்தை பெராரி அணியின் கிமி ரெய்கானன் பெற்றார்.
இது குறித்து பிசிக்கெலா கூறுகையில்,""ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் முதலிடத்தை பறிகொடுத்தது மிகுந்த கவலை அளித்தது. எங்களது இலக்கு பார்முலா-1 புள்ளிகளை பெறுவது தான். இரண்டாவது இடம் பெற்றதன் மூலம் 8 புள்ளிகள் கிடைத்தது மிகப் பெரிய விஷயம்,''என்றார்.
0 comments:
Post a Comment