சாந்தனுவும், சந்தியாவும் காதலிப்பதாகச் செய்திகள் வெளியானது. இதுபற்றி சந்தியா கூறியதாவது: என் காதலை பற்றி நிறைய செய்திகள் வெளிவந்து விட்டது. இப்போது சாந்தனுவுடன் வருகிறது. அவரது சகோதரி சரண்யா எனக்கு நெருக்கமான தோழி. அவர் மூலமாக சாந்தனு அறிமுகமானார். இருவரும் நல்ல நண்பர்கள். அதை காதல் என்று கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். இதை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இந்த நிமிடம் வரைக்கும் யாருடனும் காதல் இல்லை. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஓடிப்போலாமா, நூற்றுக்கு நூறு, ஆப்த ரட்ஷகா என படங்கள் இருக்கிறது. இன்னும் புதிய புதிய கேரக்டர்களில் நடித்து புகழ்பெற வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment