உள் மனசில் வைத்த ஐஸ் கிரீம் மாதிரி ஜில்லென்று இருப்பவர் சரண்யா மோகன். யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு என்று இவர் நடித்த படங்களில் பாதி சூப்பர் ஹிட்! மீதி படங்களோ சோக லிஸ்ட்! வெண்ணிலா ஹிட்டுக்கு பிறகு சென்னையில் பங்களா பிடித்து செட்டில் ஆகிவிடுவார் என்று எதிர்பார்த்தால், கேரளாவில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் படிக்க போய்விட்டாராம். அவ்வளவுதானா தமிழ்? கேரளாவுக்கு போன் போட்டு கேட்டால், “ஐய்யே... கொஞ்சம் கேப் விட்டா அப்படியே வீட்டுக்கு அனுப்பிடுவீங்களே” என்றார். (ஆஹா மூச் வந்திருச்சுங்க..)
தமிழ்ல நடிக்க நல்ல கதையா கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரம் அறிவிப்பு வரும் பாருங்க. வெண்ணிலா கபடிக் குழு படத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் நடிக்க ஆஃபர் வந்திச்சு. வந்தோமா, போனோமான்னு இல்லாம நல்ல கதையா இருக்கணும் என்று மெனக்கெடுறேன். அதனாலதான் இந்த கேப் என்றார். ஓய்வு நேரத்தில் சங்கீதம் கத்துக்கிறேன். யாராவது பாட கூப்பிட்டா சொல்லுங்க என்று ஐஸ்கிரீமில் மேலும் கொஞ்சம் சர்க்கரையை கொட்டுது பொண்ணு. ரீசண்ட்டா ஒரு கதை கேட்டேன். அப்படியே பிரமிச்சு போயிட்டேன். உடனே ஓ.கே சொல்லிட்டு ஷ§ட்டிங் போயாச்சு. கெமிஸ்ட்ரின்னு படத்து பேரு. வுஜி தம்பின்னு மலையாளத்திலே பேமஸ் ஆன டைரக்டர். புதுமுக ஹீரோவுடன் பாதி படத்துக்கு மேலே முடிஞ்சாச்சு. இதுக்கு பிறகு தமிழ்தான் என்றவரிடம், கிளாமரா நடிப்பீங்களா என்ற கேள்வியை கேட்டது தப்பா போச்சு. எதிர் முனை கட்! சிறிது நேரம் கழித்து நல்லாதானே பேசிட்டு இருந்தீங்க. ஏன் இப்படியெல்லாம் கேட்கிறீங்க என்றார். ஆஹா, கவர்ச்சிங்கிற வார்த்தையை சொன்னதுக்கே கட்டா? போச்சுரா...
0 comments:
Post a Comment