''எதுக்குடா எதிர்க்கட்சித் தலைவரை கடிச்சு வச்சீங்க?''
''நீங்கதானே தலைவரே அவர் மேல ''பல்முனை'' தாக்குதல் தொடர வேண்டுமுன்னு மேடையில அறிவிச்சீங்க!''
''இனிமேல் நீங்க அதிகமா நடக்கணும்!''
''உங்ககிட்டே ட்ரீட்மெண்டுக்கு வந்த பின்னாடி எங்கிட்டே இருந்த காரை வித்துட்டு இப்பல்லாம் எங்கே போனாலும் நடந்தேதான் போறேன் டாக்டர்!''
''நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்...''
''அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க...!''
''எருமை வெளியே போகும்போது தன் ஆண் கன்றிடம் என்ன சொல்லிட்டுப் போகும்?''
''BI SON''
மனைவி: என்னங்க இது ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே.. எதுக்கு?
கணவன்: நீ தானே "டெய்லி காலண்டர்" வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!
ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க...
சோமு: பரவாயில்லையே... நிஜமாகவா..?
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..
மேனேஜர்: இந்த ஆபிஸ”க்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா?
வேலையாள்: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?
மேனேஜர்: அட... அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..!
அந்தப் படம் பயங்கர சண்டைபடம்தான். அதுக்காக இப்படி பண்ணக் கூடாது...
ஏன்?
டிக்கட் கொடுக்கும் போதே மூஞ்சியில் ஒரு குத்து விடறாங்க.
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் மசாலா படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
பெரியவர்: டேய் உங்க அப்பா எங்கே.?
சிறுவன்: ஹோம் வொர்க் பண்ணிகிட்டு இருக்காரு...
பெரியவர்: உன்னோட ஸ்கூல் பாடத்தை அவர் எழுதறாரா?
சிறுவன்: இல்லே காய்கறி நறுக்கிகிட்டு இருக்காருன்னு சொன்னேன்.
0 comments:
Post a Comment