தேவையான பொருட்கள்
1. சாதம் - 2 கப்
2. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. உளுந்து - 1 தேக்கரண்டி
6. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
7. பச்சை மிளகாய் - 2 (கீரியது)
8. வெங்காயம் - 4 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
9. கொத்தமல்லி, கருவேப்பிலை
10. உப்பு
11. தக்காளி - 3 (நல்லா சிவந்து பழுத்த தக்காளி, பொடியாக நறுக்கியது)
செய்முறை
•கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
•இதில் பச்சை மிளகாய், வெங்காயம், மல்லி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
•வெங்காயம் வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து பச்சை வாசம் போய், தக்காளி குழைந்து வரும்வரை வேக விடவும்.
•எண்ணெய் பிரிந்து வரும்போது சாதத்தை கொட்டி கிளரவும். 5 நிமிடம் சிறுந்தீயில் சாதத்தோடு பிரட்டி எடுக்கவும்.
குறிப்பு:
சாதம் குழைந்து போகாமல் கிளர வேண்டும். சாப்பிட 1/2 மணி நேரம் முன்னதாக செய்து வைத்தால் தக்காளி சாதத்துடன் ஊறி சுவை கூடும். இதை அப்பளம், மசாலா வடை'யுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment