Sunday, July 12, 2009

மாணிக் முகாமில் சிறிலங்க அதிபர் மகன் மீது சேறு வீச்சு!

இலங்கையி‌‌ல் தமிழர்கள் அடைத்து வைக்கப்ட்டுள்ள மாணிக் முகாமை பார்வையிடச் சென்ற சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச மீது அங்கிருந்த தமிழர்கள் சேற்றையும், கற்களையும் வீசியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, இளையோர் செயல் திட்டம் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஊடகவியலாளர்களுடன் நாமல் ராஜபக்ச வன்னியில் உள்ள மாணிக் முகாமிற்குச் சென்றிருந்தபோதே இச்சம்பவம் நடந்துள்ளது.

அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ஊடகவியலாளர்கள் புகைப்படமும், ஒளிப்பதிவும் செய்துள்ளனர். ஆனால் அவற்றை அங்கிருந்த இராணுவத்தினர் அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பெரும்பாலான ஊடகங்களில் இதுபற்றிய தகவல் வெளிவரவில்லை என்று பதிவு இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009