Saturday, July 18, 2009

நயன்தாரா அடுத்த அருந்ததி - Nayanthara is Next Arunthathi


ஹீரோயின் ஓ‌ரியண்ட் படங்களை எடுப்பதில் கோடி ராமகிருஷ்ணா டாக்டரேட் வாங்கியவர். இவர் விஜயசாந்தியை வைத்து இயக்கிய படங்கள் அவரை லேடி அமிதாப்பச்சன் என கொண்டாடும் அளவுக்கு உயர்த்தியது. இவரது அருந்ததியில் நடித்த பிறகு அனுஷ்காவின் மார்க்கெட் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது நாடறியும்.

கோடி ராமகிருஷ்ணாவின் அடுத்தப் படத்தில் நாயகியாக நடிக்கப் போகிறவர் நயன்தாரா என்கின்றன ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள். இதுவும் அருந்ததியைப் போல ஹீரோயின் ஓ‌ரியண்ட் கதை.


எம்.எஸ்.ராஜுவின் சுமந்த் ஆர்ட் புரொட‌க்சன் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது. கோடி ராமகிருஷ்ணாவும் எம்.எஸ்.ராஜுவும் இணைந்து உருவாக்கிய அனைத்துப் படங்களும் சில்வர் ஜூப்லி கொண்டாடியவை என்பதால் இந்த புதிய படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. எம்.எஸ்.ராஜுவின் மகன் சுமந்த் அஸ்வின் இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

நயன்தாராவின் கடைசி நான்கு படங்கள் - குசேலன், சத்யம், வில்லு, ஏகன் - தோல்வியடைந்தன. சூர்யாவுடன் நடித்துக் கொண்டிருக்கும் ஆதவன் மட்டுமே தற்போது அவர் கைவசம் உள்ளது. இந்த சூழலில் கோடி ராமகிருஷ்ணாவின் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை புதுப்பிக்க நினைக்கிறார் நயன்தாரா.

ஆக, அடுத்த அருந்ததி நயன்தாராதான் என அடித்து கூறுகிறார்கள் ஆந்திராவில். பார்ப்போம், கோடி ராமகிருஷ்ணாவின் கடைக்கண் பார்வை யார் மீது விழுகிறது என்று.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009