Sunday, October 4, 2009

Chennai yil Bayangaramm ------ Chennai its going to be a fear city ???

சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி, இவரது 13 வயது மகன் சூரஜ் ஆகியோர் கடந்த வாரம் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அனந்தலட்சுமி அணிந்திருந்த நகைகளும், வீட்டில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இக்கொலை தொடர்பாக வேல்முருகன் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இரட்டை கொலை பரபரப்பு அடங்கும் முன்னர் நேற்று ஒரே நாளில் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி நேரு நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 60). இவர் தனது 2 மகன்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். நேற்று மகன்கள் இருவரும் வெளியில் சென்று விட்டனர். மனோன்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.


அப்போது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் மனோன்மணியை அடித்துக் கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொலை நடந்த வீட்டின் மேல் தளத்தில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. அங்கு 4 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நேரத்தில் தான் இந்த துணிகர கொலை சம்பவம் நடந்துள்ளது. டைல்ஸ் பதிப்பதற்காக பெருங்குடியை சேர்ந்த வாலிபர் மனோன் மணியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல குன்றத்தூரை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணும் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் அருகே உள்ள சோமங்கலம் மேட்டூரை சேர்ந்தவர் தேசிகன். இவரது மனைவி சாந்தி. நேற்று மதியம் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த நேரத்தில் 2 பேர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். சாந்தி தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்ற போது பின் தொடர்ந்த 2 வாலிபர்களும் சாந்தியின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் நிலை குலைந்த சாந்தி ரத்த வெள்ளத்தில் பிணமானார். அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் தபபிச் சென்றனர்.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் சமீப காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை கொன்று நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

இதனால் வீடுகளில் தனியாக இருப்பதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர். வயதானவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இச்சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் மத்தியில் நிலவும் இந்த பயத்தை போக்கி அவர்கள் நிம்மதியாக வாழபோலீசார் வழிவகுக்க வேண்டும்.

அடுத்தடுத்து நடந்துள்ள இந்த 3 கொலைகளுமே நகைக்காக நடந்த கொலை கள்தான். தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிவருவதும் இது போன்ற கொலைகளுக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

இது போன்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களுக்கு திருட்டு நகைகள் விற்பதும் எளிதான காரியமாகி விடுகிறது. ஏதாவது அடகு கடைகளில் இந்த நகைகைள அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு கிடைத்ததை வாங்கிக் கொண்டு தப்பி விடுகிறார்கள். எனவே கொடுப்பதை கொடுத்து விட்டு நகைகளை அடகு வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி யாராவது நகைகளை கொண்டு வந்தால் அவர்கள் பற்றி உடனடியாக தகவல் தர வேண்டும் என்று அடகு கடைக்காரர்கிளடம் அறிவுறுத்தியுள்ளோம்.

அது போன்ற திருட்டு நகைகளை வாங்கும் அடகு கடை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பகல் நேரங்களில் பாதுகாப்புக்காக காவலாளிகளை நியமிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009