பிரியாமணியும், தெலுங்கு நடிகர் தருணும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. தெலுங்கு இணைய தளங்களும் இச்செய்தியை போட்டி போட்டி பரப்பின. இருவரும் சில வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது காதல் ஏற்பட்டதாகவும், ரகசியமாக சந்தித்து வந்த அவர்கள் இப்போது திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
பிரியாமணி தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஏற்கனவே பிருதிவிராஜுடனும் பிரியாமணியை இணைத்து கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த பிரியாமணியிடம் தருணை திருமணம் செய்ததாக வந்துள்ள செய்திகள் பற்றி கேட்டபோது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:-
எனக்கும், தருணுக்கும் திருமணம் நடக்கவில்லை. என்னைப்பற்றி ஏன்தான் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. தருணும், நானும் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தோம். அவரை நான் கடைசியாக சந்தித்தது கூட அந்த படப்பிடிப்பில்தான். அதன்பிறகு அவரை பார்க்கவே இல்லை. தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. தருண் இப்போது என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது கூட எனக்கு தெரியாது.
உண்மை இப்படி இருக்க எங்களுக்கு திருமணம் நடந்ததாக வதந்தி பரப்புவது வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை என்றே நான் கருதுகிறேன். இந்த வதந்திகளுக்காக நான் வருத்தப்பட போவதும் இல்லை. நான் நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அதில் எனது நடிப்பை பாராட்டி நிறைய பேர் வாழ்த்து தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment