Sunday, September 6, 2009

“ரசிகர் மன்றம் வேண்டாம்” -அனுஷ்கா

“அருந்ததி” படம் மூலம் முன்னணி நடிகையாகியுள்ளார் அனுஷ்கா. தெலுங்கு, தமிழ் ஹீரோக்கள் அவருடன் ஜோடி சேர போட்டி போடுகின்றனர். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் மாதவன் ஜோடியாக “ரெண்டு” படத்தில் அனுஷ்கா நடித்தார். அப்படம் பெரிதாக போகாததால் மீண்டும் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். இப்போது அருந்ததி வெற்றியால் மீண்டும் தமிழ்பட அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

விஜய் ஜோடியாக “வேட்டைக்காரன்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. தற்போது சூர்யாவுடன் “சிங்கம்” படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார். ஒரே நேரத்தில் இரு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பதால் இதர நடிகைகள் கலக்கமடைந்துள்ளனர். நயன்தாரா, திரிஷா வரிசையை அனுஷ்கா எட்டிப்பிடிப்பார் என்கின்றனர்.

“சிங்கம்” முடிந்ததும் இன்னொரு மெகா பட்ஜெட் படத்தில் பெரிய கதாநாயக நடிகர் ஒருவருடன் ஜோடி சேர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அனுஷ்காவுக்கு ரசிகர் மன்றம் துவங்க அவரது ரசிகர்கள் பிரியப்பட்டனர். அனுஷ்காவை அணுகி அதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கக்கூடாது என்று அனுஷ்கா கண்டிப்பாக கூறி விட்டார்.

ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு பெரிய நடிகை இல்லை. இப்போது தான் வளர்ந்து கொண்டு இருக்கிறேன். நடிப்பில்தான் இப்போது என் முழு கவனமும் உள்ளது. ரசிகர் மன்றம் தேவையில்லை. சில காலம் கழித்து அதுபற்றி யோசிக்கலாம் என்று கூறி ரசிகர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.

திரிஷா, நமீதா ஏற்கனவே ரசிகர் மன்றங்களை துவங்கி சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009