தேவையானவை:
து.பருப்பு- அரை கப்
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
உப்பு- சிறிது
புளி- சிறிது
மா வடு (சின்ன மாங்க்காய்) - 6
சின்ன வெங்காயம்- 10
அரைக்க:
காய்ந்த மிளகாய்- 12
சோம்பு- சிறிது
சீரகம்- சிறிது
உப்பு- சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 5 தேக்கரண்டி
மிளகு- 10
கடுகு- அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
சோம்பு- சிறிது
பூண்டு- சில பல்
செய்முறை:
பருப்பை ஊறவைத்து, மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும். மா வடுவை வெந்நீரில் ஊறவைக்கவும். வெங்காயம், பூண்டை நறுக்கவும்.அரைக்க வேண்டியதை விழுதாக அரைக்கவும்.உப்பு, புளியைக் கரைத்து, அதில் அரைத்த பருப்பு, மசாலா சேர்த்து, 5 கப் நீர் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தாளித்து வெங்காயத்தை வதக்கவும். அத்துடன், ஊறவைத்த மா வடுவையும் போட்டு வதக்கி, கரைத்து வைத்திருக்கும் பருப்புக் கலவையை ஊற்றி, பூண்டையும் போட்டு, குறைந்த தணலில் அடிப்பிடிக்காமல் கிளற குழம்பு வற்றியதும் இறக்கவும்.
1 comments:
website nadatubavarin kavanatirkuuu!!!!!!!!!
parupaii araikavenduma ella vegaka vaituu araikavendum ma???
Maavarthal enrallll ennna??????
puriyura language la podungaaaaaaaaaaaaa edula unnumae puriyala
Post a Comment