நயன்தாரா- பிரபுதேவா காதல் தீவிரமாகியுள்ளது. இருவரும் ரகசியமாக சந்திக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா தொழிலாளர்கள் விழாவுக்கு நயன்தாரா வந்த போது நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது பிரபுதேவா தனது குழந்தையை அழைத்து போய் நயன்தாராவை பார்த்தார்.
பிறகு குழந்தையுடன் நயன்தாரா ஷாப்பிங் போனதாக தகவல் வெளியானது. இந்த விஷயங்கள் பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு தெரிய ஆவேசமாகியுள்ளார். ஏற்கனவே நயன்தாராவும் பிரபுதேவாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் பிரபுதேவா இருந்தார். இப்போது முதல் தடவையாக வாய் திறந்துள்ளார் அவர் கூறியதாவது:-
எனக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவில்லை. நயன்தாரா கையில் எனது பெயரை பச்சை குத்தி இருப்பது உண்மையா என்று என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த கேள்விக்கான பதில் ஒரு குழந்தைக்கே தெரியும். நானும் நயன்தாராவும் பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்பதற்கு பயப்படவில்லை.
ஸ்ரீதேவியும், பிரியாமணியும் எனக்கு பிடித்த நடிகைகள். அடுத்த படம் பற்றி இன்னும் முடிவு செய்யவல்லை. அரசியலுக்கு வரமாட்டேன். நடிப்பு, இயக்கம், நடனம் மூன்றில் நடனத்தைதான் ரொம்ப விரும்புகிறேன். சல்மான்கான், விஜய் இருவரில் விஜய்தான் சிறப்பாக நடனம் ஆடுகிறார். தமிழ் திரையுலகில் விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி நால்வரும் நன்றாக நடனம் ஆடக்கூடியவர்கள்.
இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
0 comments:
Post a Comment