Wednesday, October 14, 2009

முன்னோட்டம்: வானம் பாத்த சீமையிலே

பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் லிட் நிறுவனத்துக்காக தெய்வானை மூவிஸ் சார்பில் அமுதா துரைராஜ், கே.சி.என். சந்திரசேகர், தயாரிக்கும் புதிய படம் வானம் பாத்த சீமையிலே. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜேப்பி அழகர். அசோக்குமார், கதாநாயகனாக நடிக்கிறார். வெயில் படத்தில் நடித்த பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சரண்யா, கஞ்சாகருப்பு, விஜயகுமார், செவ்வாழை, குருஜி, கதிர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்குநர் ஜேப்பி அழகர் சொல்கிறார்:-

இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகி போல் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது கருப்பணசாமி கோயில். இந்தக்கோயில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ஐந்தரை அடி உயரத்தில் உண்மையான கருப்பண்ணசாமி சிலையை ஐதீக முறைப்படி உருவாக்கினார். கிராம மக்களின் ஒத்துழைப்புடன் அந்த சிலை புதிய கருப்பணசாமி கோயிலாக நிர்மாணிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் வரும் ஒரு திருவிழா பாடலுக்கு 500-க்கும் மேற்பட்ட முளைப்பாரி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. கதாநாயகன் அசோக்குமார் உண்மையிலேயே தீவிர கடவுள் பக்தி உள்ளவர். படத்தில் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது போன்ற காட்சியில் நடிக்கும் போது உண்மையிலேயே சாமி அருள் வந்து மயங்கி விட்டார்.

ஒளிப்பதிவு: செந்தில் பரமேஷ், இசை: ஸ்ரீகாந்த்தேவா, பாடல்கள்: பழனி பாரதி, நந்தலாலா, ஜேப்பி அழகர், படத்தொகுப்பு: வி.டி.விஜயன், சண்டைப் பயிற்சி: சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம்: பி.வி

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009