Thursday, October 29, 2009

சத்யராஜினால் மாட்டிக் கொண்ட கவுண்டமணி!

ஊரோடு வாழ்ந்த பனை மரம் வேறொடு விழுந்து நசுக்குச்சாம்...! கவுண்டமணி-சத்யராஜ் விவகாரத்தை பார்த்தால் இப்படிதான் சொல்ல தோன்றுகிறது. உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசிய நடிகர் நடிகைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொடர்ந்தவர், தராசு இதழின் நிருபர் தாமோதரன். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, போலீசாரிடம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். வழக்கில் சுமார் 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதில் கவுண்டமணியும் ஒருவர்!


பிரச்சனையே அதுதான். அங்கு நடந்த கண்டன கூட்டத்தில் பேசியவர்களை வார்த்தைக்கு வார்த்தை கிண்டலடித்துக் கொண்டிருந்தாராம் கவுண்டர். அவரை போய் வழக்கில் சேர்ப்பது நியாயமா? பத்திரிகையாளர்களில் சிலரே, வழக்கு போட்ட நிருபரை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் நிருபர் சொன்ன பதில் இதுதான்.

“அன்னைக்கு பேசிய சத்யராஜ், இங்கு வந்திருக்கிற எல்லார் மீதும் வழக்கு போடுங்க. உங்களால என்ன புடுங்க முடியுதுன்னு பார்க்கிறேன் என்று பேசியிருக்கிறார். அவரு சொன்ன மாதிரியே அங்கு வந்த எல்லாரையும் வழக்குல சேர்த்திருக்கேன். அந்த லிஸ்ட்டில்தான் கவுண்டமணியும் வந்திட்டாரு. இதுக்கு காரணம் நான் இல்லே. சத்யராஜ்தான்” என்றாராம்.

இதைதான் கூட இருந்தே குழி பறிக்கிறதுன்னு சொல்வாங்களோ?

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009