Saturday, August 29, 2009

சேரன் - நேற்று இல்லாத மாற்றம்

பொக்கிஷம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததில் சேரனுக்கு வருத்தம். அவரைவிட அதிக வருத்தம் சேரனின் ரசிகர்களுக்கு. அவர்களின் பாராட்டும், பாஸிட்டிவ்வான விமர்சனமுமே தற்போது சேரனுக்கு எனர்‌ஜி பூஸ்ட்.

பொக்கிஷம் ஓடும் திரையரங்களுக்கு நே‌ரில் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்திவரும் சேரன், இனி சோதனை முயற்சிகள் செய்வதில்லை, குறிப்பாக அடுத்தவர் தயா‌ரிப்பில் என்று புதிய முடிவெடுத்திருப்பதை சில நாட்கள் முன்புகுறிப்பிட்டிருந்தோம். இந்த புதிய முடிவுடன் வேறொரு மாற்றத்தையும் சேரனிடம் காண முடிகிறது. அது தோற்றத்தில் உள்ள மாற்றம்.

பொக்கிஷம் படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் நடிப்பதாக இருந்தார் சேரன். சேரனை வைத்து படமெடுப்பதாக மிஷ்கினும் அறிவித்திருந்தார். இந்தப் படத்துக்காக சேரனும் அடர்த்தியாக தாடி வளர்த்திருந்தார்.

மிஷ்கின் கமலை சந்தித்த பிறகு எல்லாமே மாறிப் போனது. கமல் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க பச்சைக் கொடி காண்பித்ததால், யுத்தம் செய் படத்திலிருந்து சேரனை கழற்றிவிட்டு கமலுக்கு கதை பண்ண ஆரம்பித்தார் மிஷ்கின். இந்த திடீர் பல்டி காரணமாக யுத்தம் செய் படத்துக்கு வளர்த்த அடர்த்தியான தாடியை ஷேவ் செய்து பளபளப்பாக மாறியிருக்கிறார் சேரன்.

அடுத்து பெ‌ரிய ஹீரோவை வைத்து பாரசீக ரோஜாவை அவர் இயக்குவார் என கூறப்படுகிறது. ஆல் தி பெஸ்ட் சேரன்.

Read More...

Thursday, August 27, 2009

கந்தசாமிக்கு முதலிடம் - Chennai Box Office Kandhasamy

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் விக்ரமின் கந்தசாமி முதலிடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில் பிரமாண்டமான ஓபனிங் இந்தப் படத்திற்கே என்பது முக்கியமானது.

5. மலை மலை
மூன்று வாரங்கள் முடிவில் 42 லட்சங்கள் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது ஏ.வெங்கடேஷின் மலை மலை. இதன் சென்ற வார இறுதி வசூல், ஏறக்குறைய 1.7 லட்சங்கள்.

4. நாடோடிகள்
சமுத்திரக்கனியின் படம் நூறாவது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. எட்டு வாரங்கள் முடிவில் சென்னை வசூல் மட்டும் ஏறக்குறைய 3.53 கோடிகள். சென்றவார இறுதி வசூல் 1.9லட்சங்கள்.

3. அழகர்மலை
ஆர்கே-யை ஹீரோவாக நிலை நிறுத்தியிருக்கிறது அழகர்மலை. வடிவேலு ஆர்கே காம்பினேஷன் வொர்க் அவுட்டானது படத்தின் பலம். சென்றவார வசூல், 2.8 லட்சங்கள். இதுவரையான மொத்த சென்னை வசூல் 27 லட்சங்கள்.

2. பொக்கிஷம்
இரண்டாவது இடத்தில் பொக்கிஷம். முதல் மூன்று நாளில் ஏறக்குறைய 38 லட்சங்கள் வசூலித்த இந்தப் படம், சென்றவார இறுதியில் 10.7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 83 லட்சங்கள்.

1. கந்தசாமி
விக்ரமின் கந்தசாமி இந்த வருடத்தின் பிரமாண்ட ஓபனிங்கை பெற்றுள்ளது. நவீன ராபின்ஹுட் கதையான இதன் கமர்ஷியல் அம்சங்கள் படத்தை காப்பாற்றும் என நம்பலாம். முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய 93 லட்சங்களை இப்படம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Read More...

Tuesday, August 25, 2009

சேரனின் திடீர் முடிவு

பொக்கிஷம் படத்தின் ‌ரிசல்ட் சேரனை ரொம்பவே பாதித்திருக்கிறது. படம் சுமாராகப் போனாலும் பத்தி‌ரிகைகளாவது படத்தை கொண்டாடும் என்று நினைத்தார். அவர் எண்ணத்துக்கு மாறாக படத்தை எண்ணெய்யில் வறுத்தெடுத்துவிட்டன மீடியாக்கள். படமும் திரையிட்ட இடங்களிலெல்லாம் ஈயடிக்கிறது.

இழைத்து இழைத்து உருவாக்கிய பொக்கிஷத்தால் தயா‌ரிப்பாளர் இத்தேஷ் ஜெபக்கிற்கு ஆறு கோடி வரை இழப்பு ஏற்படும் சூழல் உருவாக்கியிருக்கிறது. இதனால் புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறார் சேரன்.

அடுத்தவர் காசில் சோதனை முயற்சி மேற்கொள்வதில்லை என்பதுதான் அந்த முடிவு. மற்ற இயக்குனர்களைப் போல இனி கமர்ஷியல் ரூட்டில் பயணிக்கப் போவதாகவும் தீர்மானித்திருக்கிறார்.

கடினமான முடிவு, சேரனின் ரசிகர்கள் இதை எப்படி ‌‌ஜீரணிக்கப் போகிறார்கள்?

Read More...

Monday, August 24, 2009

Kandasamy TC DVD RIP - First on net Download Kandhasamy

Banner: V Creations
Cast: Vikram, Shriya, Raghuvaran, Vivek, Santhanam, Vinod Raj, Y G Mahendran, Arun Mathavan, Vinayak, Alex, Indrajith
Direction: Susi Ganesan
Production: Kalaipuli S Thanu
Music: Devi Sri Prasad

Download Links:
http://rapidshare.com/files/272453547/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.001
http://rapidshare.com/files/272455060/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.002

http://rapidshare.com/files/272456628/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.003
http://rapidshare.com/files/272458189/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.004
http://rapidshare.com/files/272460392/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.005
http://rapidshare.com/files/272462568/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.006
http://rapidshare.com/files/272464791/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.007
http://rapidshare.com/files/272466538/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.008
http://rapidshare.com/files/272452134/Kanthaswamy__2009____TC_Untouched___HQ.rar.009

Read More...

Sunday, August 23, 2009

விநாயகர் வழிபாட்டில் ஆரோக்கியமும், ஆனந்தமும்!

``ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே''

முழுமுதற் கடவுளாம் விநாயகர் ஐந்து கரங்களுடன் அபயம் அளிப்பவர். விநாயகரின் தோற்றமே விசித்திரமானது எனலாம். அதனையே இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

ஐந்து கரங்களில் வலப்புறக் கையில் ஒன்று, பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது. மற்றொரு வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது.இடப்புறக் கைகளில் ஒன்றில் பாசக் கயிறும், மற்றொரு இடக்கையில் மோதகமும் (கொழுக்கட்டை) வைத்தபடி விநாயகர் காட்சி தருகிறார். ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

கொடியவர்களை ஒழிக்கும் ஆயுதமாக அங்குசத்தையும், தம்மை வழிபடும் அடியவர்களுக்குத் துன்பம் தருவோரை தமது பாசக்கயிற்றால் அழிக்கவே அதனைக் கையில் ஏந்தியுள்ளார். மற்றொரு கையில் அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டையை வைத்துள்ளார். துதிக்கையில் வைத்திருப்பது அமுதக் கலசம்.

அதாவது விநாயகரை மனமுருக வேண்டி வழிபடுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.

`ஆனை முகத்தனை ...' யானை போன்ற முகத்தைக் கொண்டிருப்பவர். இளம்பிறை (முழு நிலவின் ஒரு பகுதி - அரைவட்டம்) போன்ற வயிற்றைக் கொண்டிருப்பவர். நந்தி தேவரின் மகனாகப் பட்டவரை, ஞானமாகிய மிகச் சிறந்த அறிவு படைத்தவரை, புந்தியில் - நம் மனத்தில் என்றும் நினைத்து வணங்குவோமாக! - என்பதே அந்தப் பாடலின் பொருளாகும்.

விநாயகரை வழிபடுவோருக்கு வினைகள் ஏதும் வராது. ஐந்து கரத்தானை வணங்குவோருக்கு ஞானம் பெருகி, நலம் பல பெருகும்.

முகத்தில் ஒரு கையை (துதிக்கை) கொண்டிருப்பதால், விநாயகரை ஒருகை முகன் என்றும் கூறுவர்.

விநாயகர் தத்துவம்
யானைத் தலையின் தத்துவம் யாதெனில் யானை சிறந்த அறிவு படைத்தது. யானையின் காதுகள் பெரியதாக இருப்பதால் நுண்ணிய சப்தத்தைக் கூட அதனால் கேட்க முடியும். புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் யானை ஒருங்கே எடுத்துக் கொள்வது போல, நாமும் எப்போதும் ஒரே மாதிரி இருத்தல் அவசியம் என்பதையே விநாயகரின் யானை முகம் உணர்த்துகிறது.

விநாயகரின் வாகனம் மூஞ்சுறு. இது இருளில் தான் சஞ்சரிக்கும். உணவுப் பொருட்களின் வாசனையைப் பிடித்துக்கொண்டே அவை எங்கிருக்கிறது எனக் கண்டு கொள்ளும்.

ஆன்மீகத்தில் இருள் என்பது அஞ்ஞானத்தையும் வாசனை என்பது ஆசைகனையும் குறிக்கிறது. எனவே தான் அஞ்ஞானத்தையும் ஆசைகளையும் கட்டுப்பாட்டில் வைப்பவர் விநாயகர் என்பதை விளக்கவே அவற்றின் உருவமாக விளங்கும் மூஷிகத்தை (மூஞ்சுறு) வாகனமாகக் கொண்டுள்ளார்.

ஒருமுறை, கைலாயத்தில் சிவபெருமானும், பார்வதியும் தாயம் ஆடிக் கொண்டிருந்தார்களாம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவரை தீர்மானிக்கும் பொறுப்பு நந்திதேவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் உண்மையில் ஈஸ்வரன் தோற்ற போதிலும், அவர் மீது நந்திக்கு இருந்த பெரும் அபிமானம் காரணமாக, ஈஸ்வரனே வென்றதாக தீர்ப்பு கூறினார்.

இதனால் சினம் கொண்ட பார்வதி தேவி, நந்தியை சபித்தாராம். பின்னர் பார்வதியின் பாதம் பணிந்து பாவ விமேசனம் கோரினார் நந்திதேவர்.
பார்வதியும் மனமிரங்கி, ``ஆவணி மாத சதுர்த்தியில் விநாயகரின் பிறந்த தினத்தன்று, உனக்குப் பிரியமான அறுகம்புல்லினால் அர்ச்சனை செய்தால் உன் சாபம் நீங்கும்'' என அருளினார்.

இதன்மூலம் சுயநலத்தை விடுத்து, பொதுநலம் வேண்டி, நமக்குப் பிடித்த பொருளைக் கொண்டு கடவுளைப் பூஜிக்க வேண்டும் என்பது தெரிகிறது. இதுவே உண்மையான விநாயக தத்துவமாகும்.

நைவேத்யப் பின்னணி
விநாயகருக்குப் படைக்கப்படும் நைவேத்யங்களில் முக்கியமானவை சுண்டல், கொழுக்கட்டை, எள் உருண்டை மற்றும் பழங்கள்.

பொதுவாக உடலுக்கு ஏற்ற ஆற்றலைத் தருபவை பழங்கள் எனலாம். எள்ளானது சுவாச சம்பந்தமான நோய்களையும், கண் நோய்களையும் தீர்க்கவல்லது. தவிர, நீராவியில் வேக வைக்கப்படும் கொழுக்கட்டை, சுண்டல் போன்றவை அஜீரணம் ஏற்படாமல் எளிதில் ஜீரணிக்கக் கூடிய பதார்த்தங்களாகும்.

எனவே ஆரோக்கியமும், ஆனந்தமும் ஒருசேர நம் முன்னோர்கள் விநாயகரை வழிபட்டு வந்துள்ளார்கள் என்பது புலனாகிறது. நாமும் முன்னோர்களைப் பின்பற்றி, அவர்கள் வழியில் விநாயகர் வழிபாடு செய்து ஆரோக்கியத்துடன் ஆனந்தத்தையும் பெறுவோம்!

Read More...

கொழுக்கட்டை - இனிப்பு வகை

தேவையான பொருட்கள் :
1. அரிசி ஒரு ஆழாக்கு
2. வெல்லம் 1/4 கிலோ
3. முற்றிய தேங்காய் 1
4. ஏலக்காய் 10

செய்முறை :
1. பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை நைசான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

2. ஒரு ஆழாக்கு மாவிற்கு 2 1/2 ஆழாக்கு தண்ணீரை அளந்து உருளை மாதிரி அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

3. மாவு வெண்மையாக இருக்கும் பொருட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தண்ணீரில் விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை விட்டு கீழே இறக்கி வையுங்கள்.

4. அரைத்து வைத்த மாவில் ஒரு ஆழாக்கு மாவைச் சிறிது சிறிதாக உருளித் தண்ணீரில் தூவுங்கள், அதை கட்டி தட்டாமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

5. தண்ணீரும் மாவும் நன்றாகக் கலந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு டேஸ்டாக இருக்க ஒரு சிட்டிகை உப்பைத் தண்ணீரில் போடலாம். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும், மாவை இறக்கி வைத்து ஒரு தட்டு போட்டு மூடிவைத்துவிட வேண்டும். இப்போது கொழுக்கட்டைக்கு மாவு தயார்.

6. ஒரு முற்றிய தேங்காயைப் பூப்போல் துருவி 1/4 கிலோ வெல்லமும் சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கிளறவேண்டும்.

7. வெல்லமும் தேங்காயும் கலந்து ஒட்டாமல் வரும் பதத்தில், 10 ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து விடவேண்டும். இப்போது பூரணம் தயார்.

8. அரை மணி நேரம் கழித்து மாவை சிறிய எலுமிச்சம் பழ சைஸில் (கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு) உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளுங்கள்.

9. பூரணத்தை அதில் ஒரு ஸ்பூன் வைத்து, பூரணம் வெளியில் தெரியாதவாறு மூடி வைத்து விடவேண்டும்.

10. இம்மாதிரி 10 கொழுக்கட்டைகள் செய்தபின் குக்கரில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து வெயிட் போடாமல் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஆறியபின் கொழுக்கட்டைகளை எடுக்க வேண்டும்.

Read More...

Saturday, August 22, 2009

கந்தசாமி விமர்சனம்‎ - Kandaswamy movie review

கறுப்பு பணத்தை கொள்ளையிட்டு ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் சி.பி.ஐ. அதிகாரி கதை.

முருகன் கோவில் மரத்தில் ஏழைகள், பணக்கஷ்டங்களை தீர்க்க வேண்டி துண்டு சீட்டுகள் எழுதி கட்டிச்செல்கின்றனர். மறுநாள் அவர்கள் வீட்டு வாசல்களில் கடவுள் கந்தசாமி பெயரில் பணப்பைகள் கிடக்கின்றன.

இந்த செய்தி நாடெங்கும் பரவி மக்கள் கூட்டம் கோவிலில் அலைமோதுகிறது. போலீசார் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். டி.ஐ.ஜி. பிரபு உண்மையை கண்டு பிடிக்க வருகிறார்.

இன்னொரு புறம் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு சி.பி.ஐ. அதிகாரி விக்ரம் கறுப்பு பண முதலைகளை வேட்டையாடி கோடி கோடியாய் பணத்தை மீட்கிறார். பாங்கியில் ஆயிரம் கோடி மோசடி செய்து பதுக்கிய ஆஷிஷ் வித்யார்த்தி வீட்டிலும் சோதனை நடத்தி கட்டுகட்டாய் பணம் எடுக்கிறார். இதனால் ஆத்திரமாகும் ஆஷிஸ் மகள் ஸ்ரேயா விக்ரமை பழி வாங்க துடிக்கிறார்.

கறுப்பு பணத்துடன் சொகுசு பஸ்சில் சுற்றும் ராஜ்மோகனையும் விக்ரம் சிக்கவைத்து ஒரு கிராமத்தை தத்தெடுக்க செய்கிறார்.

விக்ரமால் பாத்திக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தந்திரமாக தங்கள் வலையில் விழவைக்கின்றனர். அப்போது கறுப்பு பணத்தை கொள்ளையிட்டு கந்தசாமி கடவுள் பெயரில் ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் நபர் விக்ரம் என்ற அதிர்ச்சி தகவல் தெரிகிறது. போலீசில் காட்டி கொடுக்காமல் இருக்க தங்களிடம் இருந்து பறித்த பணத்தை திருப்பி தரவேண்டும் என கெடு வைக்கின்றனர். விக்ரம் அதை ஏற்பது போல் நடிக்கிறார். அவர்கள் கூட்டாளிகளுடன் கை கோர்த்து செயல்படுகிறார். அப்போது வெளிநாட்டு பாங்கிகளில் இந்தியர்கள் மேலும் ஆயிரக்கணக்கான கோடி கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பது தெரிய வருகிறது. அவர்களை பிடிக்க காய்நகர்த்துகிறார். அந்த கூட்டத்தின் முக்கிய புள்ளி அலெக்சை கைது செய்து ஆதாரங்களுடன் நிருபிக்க முயற்சிக்கிறார். அப்போது கறுப்பு பண கும்பல் அலெக்சை கொல்கிறது. டி.ஐ.ஜி. பிரபுவும் விக்ரமை அடையாளம் கண்டு கைது செய்ய நெருங்குகிறார். கறுப்பு பண முதலைகளை மக்கள் மன்றத்தில் தோலுரிப்பதும் சட்டத்தின் பிடியில் இருந்து எப்படி தப்புகிறார் என்பதும் கிளைமாக்ஸ்...

ஹாலிவுட் ஸ்டைலை பிரதிபலிக்கும் அதிரடி சண்டை சாகச படம். விதவிதமான கெட்டப்புகளில் அசத்துகிறார் விக்ரம்.

ஏழை பெண் கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு கொடுத்த பணத்தை அபகரிக்கும் மன்சூர் அலிகானை சேவல் கோழி வேஷத்தில் கொக்கரக்கோ என கூவியும் கோழி போல் நடந்தும் அந்தரத்தில் தாவியும் பறந்து துவம்சம் செய்யும் ஆரம்பமே சூப்பர்மேன் ஸ்டைல்.

சோளக்கொல்லையில் அதே ரூபத்தில் கத்தி ஈட்டிகளுடன் பாயும் ரவுடிகளை அந்தரத்தில் பறந்து தாக்கி அழிப்பது “சீட்” நுனியில் உட்கார வைக்கும் சண்டை. அது படமாக்கப்பட்டுள்ள விதம் ஆங்கில படங்களுக்கு சவால் விடுகிறது.

ஐஸ்வர்யாராய் போல் அழகி வேண்டி கோவில் மரத்தில் துண்டு சீட்டு கட்டும் சார்லி கோஷ்டிக்கு பாடம் புகட்ட பெண் வேடமிட்டு நடனமாடி நையபுடைக்கும் சீன்கள் கலகலப்பானவை.

சி.பி.ஐ. அதிகாரி கெட்டப்பில் மிடுக்கு காட்டுகிறார். மெக்சிகோவில் கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் வில்லன்களுடன் மோதி அழிக்கும் சண்டைக் காட்சி பிரமிப்பு. ஆக்ஷனில் இன்னொரு சிகரம் தொட்டுள்ளார் விக்ரம்.

ஸ்ரேயா வில்லி காதலி, கவர்ச்சியில் தாராள மயம்... ஆடையிலும் மேக்கப்பிலும் அன்னியமாய் தெரிகிறார்.

பிரபு அமைதியான போலீஸ் அதிகாரியாக பளிச்சிடுகிறார். தேங்காய் கடை தேனப்பனாக வரும் வடிவேலு காமெடி பெரிய பலம். பக்தர்களிடம் பணம் வசூலிக்க கந்தசாமி போல் வேடமிட்டு மன்சூர்அலிகானிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகளும் போலீசை வைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பிரபு விசாரணை நடத்தும் போது குளித்து துணி துவைக்கும் சீன்களும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. கிருஷ்ணா, ஆஷிஸ் வித்யார்த்தி, அலெக்ஸ் வில்லத்தனங்கள் மிரட்டல்...

வில்லன் கிருஷ்ணாவின் சொகுசு பஸ் ஸ்ரேயாவின் ஆடம்பர படுக்கை அறை பிரமிக்க வைக்கின்றன.

“ஹைடெக்” தரத்தில் ஹாலிவுட்டுக்கு இணையான ஆக்ஷன் படம் கொடுத்துள்ளார் இயக்குனர் சுசிகணேசன். கந்தசாமியாக விக்ரம் செய்யும் தர்மகாரியங்களுக்கு உதவும் சக கூட்டாளிகளின் நெட்வொர்க் வலுவானவை. “கறுப்பு பணம்” என்பது பழைய கருவாக இருந்தாலும் காட்சிகளின் புதுமை விறுவிறுப்பு ஏற்றுகிறது.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. “எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி” பாடல் முணு முணுக்க வைக்கிறது. என்கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

Read More...

வைர மோதிரத்துடன் நடிகை அசினுக்கு காதல் கடிதம் - Love letter for Asin with diamond ring

சமீபத்தில் ஒரு ரசிகர் நூதனமான முறையில் வைர மோதிரத்துடன் காதல் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பி அதிர்ச்சியூட்டியுள்ளார். அந்த மோதிரம் மிகவும் விலை உயர்ந்ததாம்.

கடிதத்தில் உங்களை நான் காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை. எனது காதலை ஏற்றுக்கொள்ளுங்கள். தினமும் உங்கள் நினைவாகவே என் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. நான் பெரிய கோடீஸ்வரன். ராணி மாதிரி வைத்துக் கொள்வேன். எனது காதலை ஏற்றுக்கொள்ளுங்கள். திருமணத்துக்கு சம்மதம் சொல்லுங்கள் என்றெல்லாம் எழுதி இருக்கிறாராம்.


திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டியும் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. கடிதத்தை படித்த அசின் அதிர்ச்சியாகி உள்ளார். இதுவரை எந்த ரசிகரும் இதுபோல் விலை உயர்ந்த வைர மோதிரத்துடன் காதல் கடிதம் அனுப்பியதில்லை. தன் மீது வெறிப்பிடித்த காதலுடன் இருக்கும் ரசிகரின் நடவடிக்கை அசினுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடிதம் பற்றி அசினிடம் கேட்டபோது, அதை உறுதிப்படுத்தினார். ஆனால் மேற்கொண்டு எதையும் பேச மறுத்து விட்டார். அது ஒரு ரசிகனுக்கும் எனக்கும் இடையே உள்ள தனிப்பட்ட விஷயம். அதற்கு கருத்து சொல்ல நான் விரும்பவில்லை என்று கூறி விட்டார்.

Read More...

யோகா, தியானம் கற்க ஆசிரமத்தில் இருப்பேன் -ஸ்ரேயா - Shreya learning meditation!!!!!!!!!!1

கோயம்புத்தூரில் உள்ள ஆசிரமத்தில் தங்கி தியானம், யோகாவும் கற்று வருகிறார்.

இதுபற்றி அவர் சொல்கிறார்.

நான் தற்போது கோவை ஆசிரமத்தில் இருக்கிறேன். அங்கு தியானம், யோகா போன்றவற்றை கற்கிறேன். எனக்கு பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவது உண்டு. யோகா, தியானம் கற்ற பிறகு அது இல்லை. மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரமத்தில் தொடர்ந்து இருப்பேன்.

நான் நடித்த கந்தசாமி படம் இன்று ரிலீசாகிறது. அப்படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். படத்தை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. ரசிகர்கள் போலவே நானும் படத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சுப்புலட்சுமி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். வித்தியாசமான வேடம். பணக்கார பெண்ணாக வருகிறேன். காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும். கனவுலகத்தை அதில் காணலாம். இடைவேளைக்கு பின் யதார்த்த நிலைக்கு கதை திரும்பும்.


ரசிகர்கள் போலவே நானும் படத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சுப்புலட்சுமி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். வித்தியாசமான வேடம். பணக்கார பெண்ணாக வருகிறேன். காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும். கனவுலகத்தை அதில் காணலாம். இடைவேளைக்கு பின் யதார்த்த நிலைக்கு கதை திரும்பும்.

தனுசுடன் நடிக்கும் குட்டி படமும் எனக்கு நிறைவு தந்துள்ளது. கீதா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அழகான காதல் கதை. இரு படங்களும் எனக்கு பெயர் வாங்கி தரும்.

Read More...

பொக்கிஷம் - Pokkisham Film Review

உணர்ச்சிகளை அழுத்தமாக கொடுப்பவர் சேரன். ரசிக்கிற மாதி‌ரி இருக்கும் அந்த அழுத்தம் பொக்கிஷத்தில் வலிக்கிற மாதி‌ரி இருப்பது நெருடல்.

கொல்கத்தாவில் மரைன் இன்‌ஜினியராக பணிபு‌ரிகிறவர் சேரன். நோயாளியான அப்பாவைப் பார்க்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் மருத்துவமனையில் பக்கத்து கட்டிலில் அம்மாவுக்கு துணையாக இருக்கும் பத்மப்‌ரியாவை சந்திக்கிறார்.

மருத்துவமனையில் இருக்கும் சில நாட்களில் பத்மப்‌ரியாவின் இலக்கிய ஆர்வமும், புத்திசாலித்தனமும் சேரனுக்கும், சேரனின் நல்ல மனசு பத்மப்‌ரியாவுக்கும் பிடித்துப் போக அவரவர் ஊருக்கு திரும்பிய பிறகும் கடிதம் மூலமாக வளர்கிறது நட்பு. நாளடைவில் இந்த கடித நட்பு காதலாக மாற்றமடைய, காதலர்களைப் போலவே நமக்கும் பதற்றம்.

இந்துவான சேரனும் முஸ்லிமான பத்மப்‌ரியாவும் ஒன்றிணைய இந்த சமூகம் அனுமதிக்குமா? அதுவும் சாதியும், மதமும் தலைதூக்கியிருந்த எழுபதுகளில்?

ஆச்ச‌ரியமாக, பெண் கேட்டுவரும் சேரனையும், அவரது அப்பா விஜயகுமாரையும் உட்கார வைத்து சோறு போடுகிறது பத்மப்‌ரியாவின் குடும்பம். மதத்தைவிட மனுஷனை நேசிக்கிறவன் நான் என்று இருவ‌ரின் திருமணத்துக்கு சம்மதிக்கிறார் பத்மப்‌ரியாவின் அப்பா.

ஆனால், மூன்றே மாதத்தில் பத்மப்‌ரியாவிடமிருந்து வரும் கடிதம் நின்று போகிறது. சின்ன தடயம்கூட இல்லாமல் அந்த குடும்பமே காணாமல்போக, சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் சேரன் தேடுகிறார்... தேடுகிறார்... தனது இறுதி மூச்சுவரை தேடுகிறார். தனது காணாமல் போன காதலிக்கு அவர் எழுதிய முகவ‌ரி இல்லாத கடிதங்கள் உ‌ரியவரை சென்றடைந்ததா என்பது கிளைமாக்ஸ்.

சேரனின் மகன் அவரது காதல் கடிதங்களை படிப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. கடிதங்கள் வாயிலாக கதை சொல்வது சுவாரஸியமாக இருந்தாலும், சேரன், பத்மப்‌ரியா குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும்போது, ச‌ரி, போதும் நிறுத்துங்கப்பா என்று சொல்லத் தோன்றுகிறது.

மிடில் கிளாஸ் இளைஞனாக சேரன் கச்சிதம். சி‌ரிக்கும்போதும், சோகமாக இருக்கும்போதும் தாடையை சுருக்கி அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சொல்ல மறந்த கதை தொடங்கி மாயக்கண்ணாடி வரையான சேரன்களை நினைவுப்படுத்துகிறது.

முக்காடு போட்ட அரைவாசி முகத்திலேயே அத்தனை உணர்வுகளையும் கொண்டு வருகிறார் பத்மப்‌ரியா. போனில் சேரனின் குரலை கேட்டதும், பேச முடியாமல், உங்களை பார்க்கணும்போல இருக்கு என்கிறாரே, சபாஷ் போட வைக்கும் நடிப்பு. நதீரா என்ற நாகூர் முஸ்லிம் பெண்ணாகவே மாறியிருக்கிறார்.

பத்மப்‌ரியாவின் அப்பா அவரை வீட்டிற்குள் சிறை வைத்தாலும், சேரனுடன் தொடர்பு கொள்ள அவர் ஏன் முயற்சிக்கவில்லை? அவருக்கு திருமணமாயிற்றா? இந்த கேள்விகளுக்கு அவர் இறுதி காட்சியில் விளக்கம் தரும்போது, பாதி திரையரங்கு காலியாகி விடுகிறது. கிளைமாக்ஸில் கத்தி‌ரி போடாததால் வந்த குழப்பம்.

சின்ன வேடம் என்றாலும் அசத்தியிருக்கிறார்கள் விஜயகுமாரும், சேரனின் நண்பராக வரும் இளவரசுவும். இருவரும் கம்யூனிஸ்டாக வருவதாலா தெ‌ரியவில்லை, இருவர் நடிப்பும் படு யதார்த்தம்.

படத்தின் இரண்டு ஹீரோக்கள் கலை இயக்குனர் வைரபாலனும், ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவும். எழுபதுகளின் கொல்கத்தாவை இருவரும் சேர்ந்து கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். நிலா.. நீ வானம், காற்று, மழை பாடலின் விஷுவல, பார்க்கப் பார்க்கப் பரவசம். சபேஷ் முரளி இசையில் இந்தப் பாடல்தான் டாப்.

சேரன் கம்யூனிஸ்ட், பத்மப்‌ரியா இலக்கிய ஆர்வம் உள்ளவர். இந்த அடையாளங்கள் கதாபாத்திரத்தின் தன்மையில் எந்த தனித்தன்மையையும் பிரதிபலிக்கவில்லை. துர்காவை வணங்கியதும் சேரனுக்கு பத்மப்‌ரியாவிடமிருந்து கடிதம் வருகிறது. அடுத்த கணமே கம்யூனிஸ்ட் ஆன்மிகவாதியாகிறான். எதற்கு இந்த திணிப்பு? சேரனை போலவே எல்லா கதாபாத்திரங்களும் சோகம் வந்தால் கண்ணை மூடி வானத்தைப் பார்க்கிறார்கள்.

சேரனுக்கும், பத்மப்‌ரியாவுக்குமான நட்பு துளிர்விடும் ஆரம்பக் காட்சிகள் ரம்யமானவை. தமிழ் சினிமாவின் குத்துப் பாட்டு, ஆ‌க்சன் காட்சி, திடீர் திருப்பம் எதுவுமில்லாமல் நேர்மையான ஒரு படத்தை தர சேரன் முயன்றிருக்கிறார். அதில் அவர் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறாரா என்பது இரண்டாம்பட்சம்... அந்த நேர்மை, அதுதான் இந்தப் படத்தின் பொக்கிஷம்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009