Thursday, October 29, 2009

சத்யராஜினால் மாட்டிக் கொண்ட கவுண்டமணி!

ஊரோடு வாழ்ந்த பனை மரம் வேறொடு விழுந்து நசுக்குச்சாம்...! கவுண்டமணி-சத்யராஜ் விவகாரத்தை பார்த்தால் இப்படிதான் சொல்ல தோன்றுகிறது. உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசிய நடிகர் நடிகைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொடர்ந்தவர், தராசு இதழின் நிருபர் தாமோதரன். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, போலீசாரிடம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். வழக்கில் சுமார் 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதில் கவுண்டமணியும் ஒருவர்!


பிரச்சனையே அதுதான். அங்கு நடந்த கண்டன கூட்டத்தில் பேசியவர்களை வார்த்தைக்கு வார்த்தை கிண்டலடித்துக் கொண்டிருந்தாராம் கவுண்டர். அவரை போய் வழக்கில் சேர்ப்பது நியாயமா? பத்திரிகையாளர்களில் சிலரே, வழக்கு போட்ட நிருபரை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் நிருபர் சொன்ன பதில் இதுதான்.

“அன்னைக்கு பேசிய சத்யராஜ், இங்கு வந்திருக்கிற எல்லார் மீதும் வழக்கு போடுங்க. உங்களால என்ன புடுங்க முடியுதுன்னு பார்க்கிறேன் என்று பேசியிருக்கிறார். அவரு சொன்ன மாதிரியே அங்கு வந்த எல்லாரையும் வழக்குல சேர்த்திருக்கேன். அந்த லிஸ்ட்டில்தான் கவுண்டமணியும் வந்திட்டாரு. இதுக்கு காரணம் நான் இல்லே. சத்யராஜ்தான்” என்றாராம்.

இதைதான் கூட இருந்தே குழி பறிக்கிறதுன்னு சொல்வாங்களோ?

Read More...

அப்படியே ஷாக் ஆயிட்டேன்...

அப்படியே ஷாக் ஆயிட்டேன்.... வடிவேலு ஸ்டைலில் சந்தியா சொன்னபோது நமக்கும் ஷாக்! ஓடிப்போலாமா படத்தின் கதையை பற்றி சொல்லும் போதுதான் இப்படி ஆரம்பித்தார் சந்தியா. சங்கீதாவின் தம்பி பரிமளுடன் இவர் ஜோடி சேரும் ஓடிப்போலாமா படத்தின் கதையை சொல்வதற்கு முன் டைட்டிலை கேட்டதுமே இன்ப ஷாக் ஆனாராம். முழு கதையை கேட்டு முடிச்சதும் எனக்கு ஆச்சர்யம். ஏன்னா, இப்படி ஒரு தலைப்பு வச்சிட்டு யாருமே எதிர்பார்க்காதது மாதிரி ஒரு கதையை சொன்னார் டைரக்டர் கண்மணி. இந்த படத்திலே வொர்க் பண்ணியது சந்தோஷம். அதே நேரத்திலே ஒரு வருத்தம்னு சொல்லிவிட்டு சந்தியா நிறுத்திய போது, ஏதோ குண்டை து£க்கி போடப் போகிறார் என்றுதானே தோன்றும்? ஆனால் சப்....


இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் சத்யம் வளாகத்திலே நடந்திச்சு. கேசட் வெளியிடுற நேரத்திலே நான் ஃபிளைட்ல வட்டமடிச்சிட்டு இருந்தேன். க்ளைமேட் சரியில்லேன்னு ஐதராபாத்திலிருந்து எட்டரைக்குதான் கிளம்புச்சு ஃபிளைட். இங்கே வந்தால் இறங்கறதிலேயும் பிரச்சனை. வேற வழி? கடவுளே... இந்த படம் நல்லா வரணும்னு மேலே இருந்தே பிரார்த்தித்து கொண்டேன் என்றார். இவருக்கும் பரிமளுக்கும் லவ்வோ லவ் என்று ஊரெல்லாம் வதந்தி. ஆனால் ஒன்றுமே தெரியாத மாதிரி பேசினார் சந்தியா. என்னோட குட் ஃபிரண்ட் பரிமள். நல்ல டான்சரும் கூட. இந்த படத்திலே அவரோட ஆட்டம் ரொம்ப பேசப்படும் என்றார்.


பரிமள் என்ன சொல்கிறார்? அவங்க என்னை விட சீனியர் ஆர்ட்டிஸ்ட். ஆனால் அந்த பந்தா எதுவுமே இல்லாம பழகினாங்க. என்னோட மேக்கப்பை கூட சரி பண்ணினாங்கன்னா பார்த்துக்கோங்களேன் என்றார். இவங்க ரெண்டு பேரோட முகத்தையும் பார்த்தால், செய்தி டுபாக்கூராக இருக்குமோ?


இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இவரது கல்யாண நாளன்றுதான் கதையே கேட்டு இசையமைக்க ஒப்புக் கொண்டாராம். கல்யாண நாளும் அதுவுமா இப்படி ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன்னு மனைவியிடம் எப்படி சொல்றது? தைரியமாக 'ஓடிப்போலாமா' என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கேன்னு சொன்னதும், "டைட்டில் புதுசா இருக்கே?" என்று ஆச்சர்யப்பட்டாராம் திருமதி இமான்.

Read More...

மாதவனின் அடுத்த அவதாரம் கதாசிரியர்

மாடலிங்கில் கலை வாழ்க்கையை தொடங்கிய மாதவன் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் மற்றும் இந்திப்படங்களில் நடித்து வரும் மாதவன் எவனோ ஒருவன் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் தற்போது அவர் கதாசிரியர் என்ற அடுத்த அவதாரத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதையை எழுதியிருக்கும் மாதவன், அந்த கதையை டைரக்டர் குமரவேலனிடம் கொடுத்து படம் இயக்குமாறு கேட்டிருக்கிறார். கதையை படித்து பார்த்த குமரவேலன், இந்த படத்தில் மாத‌வனையே நடிக்குமாறு கோரியுள்ளாராம். இதுபற்றி குமரவேலன் அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சூப்பரான ஸ்டோரி. இந்த படத்தில் நடித்தால் மாதவனின் இன்னொரு முகம் வெளிப்படும். திரைக்கதை பற்றி விவாதிக்க மும்பை சென்று மாதவனை சந்திக்க இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

Read More...

பழைய பேப்பரை விற்று 6 வயது சிறுமிக்கு உயிர் கொடுத்த மாணவர்கள்

மதுரை : மதுரை வடமலையான் மருத்துவமனையின் "ஊர் கூடி உதவுவோம்' என்ற திட்டத்தின்கீழ், பழைய பேப்பரை சேகரித்து விற்று, அதில் கிடைத்த தொகையை 6 வயது சிறுமியின் ஆப்பரேஷனுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றினர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.

பொதுமக்களிடம் பழைய நாளிதழ்களை நன்கொடையாக பெற்று, அதில் கிடைக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இதுகுறித்து மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் பயனாக, மதுரை டால்பின் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 11 ஆயிரம் பழைய நாளிதழ்களை விற்று 47 ஆயிரம் ரூபாயும், பொதுமக்கள் 4,658 ரூபாயும் நன்கொடையாக அளித்தனர். இதைக் கொண்டு, பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டை இருந்த திண்டுக்கல் சிறுமி சித்ராவுக்கு அறுவை சிகிச்சையின்றி, கேத்லாப் முறை மூலம் இருதய ஓட்டை அடைக்கப்பட்டது. மொத்த செலவு 1.10 லட்சம் ரூபாயில், நன்கொடை போக, மீதமுள்ள தொகையை மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக்கொண்டது.

ஆப்பரேஷன் செய்த டாக்டர் கண்ணனும் கட்டணம் பெறவில்லை. நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி கூறுகையில், ""ஒவ்வொரு துளி நீரும் சேர்ந்துதான் சமுத்திரத்தை உருவாக்குகிறது. அதுபோல் அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்று இதனை வெற்றி பெற செய்ய வேண்டும்'' என்றார்.திட்டமேலாளர் ஹேமலட்சுமி, ரேடியோ மிர்ச்சி நிலைய இயக்குனர் தினேஷ், நிகழ்ச்சி இயக்குனர் ராதா உடனிருந்தனர்.

Read More...

Thursday, October 22, 2009

JEGAN MOHINI [2009] Tamil Movie [Real TC] [Good Quality]







Banner: ...........................Murali Cine Arts
Cast: .............................Namitha, Raja, Vadivelu, Nila & Jyothi Lakshmi
Direction: ........................N.K.Vishwanathan
Production: .......................H.Murali
Music: ............................Ilayaraja
Lyricis: ..........................Vaali & Na.Muthukumar
Released Year: ....................2009


http://rapidshare.com/files/296282592/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part1.rar
http://rapidshare.com/files/296282589/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part2.rar
http://rapidshare.com/files/296282629/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part3.rar
http://rapidshare.com/files/296282580/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part4.rar
http://rapidshare.com/files/296282810/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part5.rar
http://rapidshare.com/files/296282797/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part6.rar
http://rapidshare.com/files/296282828/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part7.rar
http://rapidshare.com/files/296282670/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part8.rar

Read More...

Jegan Mohini DVD Rip ~ 1CD ~ x264 ~ 1st On Net Tamil Movie Download

Banner: ...........................Murali Cine Arts
Cast: .............................Namitha, Raja, Vadivelu, Nila & Jyothi Lakshmi
Direction: ........................N.K.Vishwanathan
Production: .......................H.Murali
Music: ............................Ilayaraja
Lyricis: ..........................Vaali & Na.Muthukumar
Released Year: ....................2009

Download Links:
http://rapidshare.com/files/295965389/jegan_mohini__tc_real_copy_700_mb.mp4.001
http://rapidshare.com/files/295965216/jegan_mohini__tc_real_copy_700_mb.mp4.002

http://rapidshare.com/files/295940580/jegan_mohini__tc_real_copy_700_mb.mp4.003
http://rapidshare.com/files/295950587/jegan_mohini__tc_real_copy_700_mb.mp4.004

Read More...

Tuesday, October 20, 2009

ஆதவன் (Aadhavan Review)

ஒரு கில்ல‌ரின் குடும்ப பிளாஷ்பேக்தான் ஆதவன். ஆ‌க்சனும் வேண்டும், குடும்ப சென்டிமெண்டும் வேண்டும் என்று இரட்டை குதிரை சவா‌ரி செய்ததில் ஆதவன, ஆ...வதம்.

காசு கொடுத்தால் யாரையும் குறி வைத்து கொல்வதில் ஆதவன் (சூர்யா) எக்ஸ்பார்ட். அப்பா சாயா‌ஜி ஷிண்டே, அண்ணன் ஆனந்த்பாபு என குடும்பத்துக்கே கொலைதான் தொழில்.

ஒரு முறை ஜட்‌ஜ் ஒருவரை (முரளி) கொலை செய்ய ராகுல்தேவ் அண்டு கோ காசு கொடுக்கிறது. ஆனால், எக்ஸ்பர்ட்டுக்கு இந்தமுறை குறி தவறிவிடுகிறது. ஜட்‌ஜின் வீட்டிற்குள் வேலைக்காரனைப் போல் புகுந்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்போதும் எஸ்ஸாகிவிடுகிறார் ஜட்‌ஜ். இப்போது கதையில் ஒரு ட்டுவிஸ்ட்.

பத்து வயதில் வீட்டை விட்டு ஓடிய ஜட்‌ஜின் மகன்தான் அவரை கொலை செய்ய வந்திருக்கும் சூர்யா. அப்புறமென்ன? எதி‌ரிகளை வதம் செய்து தந்தையை காப்பாற்றி குடும்பத்துடன் ஐக்கியமாகிறார்.

கில்லர் சூர்யா வேலைக்காரன் சூர்யாவாக முரளியின் வீட்டிற்குள் நுழையும் போது பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆனால், வீட்டிலிருக்கும் இரண்டு டஜன் சொந்தங்களுடன் அவர் லூட்டியில் இறங்கும் போது எதிர்பார்ப்பு புஸ்ஸாகிறது. இந்த நீளமான குடும்ப குத்தாட்டத்தில் வடிவேலு மட்டுமே ஆறுதல். சரோஜாதேவியின் அதிகபடி மேக்கப்பை அவர் கிண்டல் செய்யும் போதெல்லாம் சி‌ரிப்பில் திணறுகிறது திரையரங்கு.

நயன்தாரா வழக்கமான அசட்டு ஹீரோயின். ஐஸ்லேண்டில் அளவான காஸ்ட்யூமில் டூயட் பாட மட்டும் உபயோகப்பட்டிருக்கிறார். சரோஜாதேவியின் கொஞ்சிப் பேசும் தமிழ், செம காமெடி. அவ்வளோ பெ‌ரிய நடிகையை காமெடி பீஸாக்கிட்டீங்களேப்பா.

கொடூரமான கொலைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்யவரும் ஜட்‌ஜ், இப்படியா குடும்பத்துடன் டூர் போய்க் கொண்டிருப்பார்? கொல்கத்தா போலீஸ் கமிஷனர் பெப்சி விஜயன், போலீஸ் அதிகா‌ரி ‌ரியாஸ் கான் என அனைவரும் அட்சர சுத்தமாக தமிழ் பேசுகிறார்கள்.

வில்லன் யார் என்றால், குழந்தைகளின் உறுப்புகளை எடுத்து விற்கும் டாக்டர் ராகுல்தேவ். புலன் விசாரணையிலேயே இதை பார்த்திட்டோமே, கொஞ்சம் புதுசா யோசித்திருக்கக் கூடாதா? சூர்யா முரளியின் மகன் என்பது எவ்வளவு சுவாரஸியமான திருப்பம்? ஜவ்வான திரைக்கதையில் அதுவும் சொதப்பலாகிறது.

முதல் கொலை முயற்சியிலேயே முரளி தனது தந்தை என்று சூர்யா தெ‌ரிந்து கொண்டதை கமிஷனர் விவ‌ரிக்கும் இடத்தில் மட்டும் திரைக்கதையாசி‌ரியர் பளிச்சிடுகிறார். கச்சிதமான ஒளிப்பதிவும், திறமையான எடிட்டிங்கும் குறிப்பிட வேண்டிய அம்சங்கள். ஹாரிஸின் பின்னணி இசை சுமார். தேவையேயில்லாமல் வந்து போகின்றன பாடல் காட்சிகள். திறமையான சண்டைக் காடசிகள் என்றாலும் நம்பகத்தன்மை குறைவு.

முரளி திறமையான நடிகர். ரெடிமேட் சினிமா அப்பாவாக அவரை வீணடித்திருக்கிறார்கள். அயன் சூர்யாவுக்கும், ஆதவன் சூர்யாவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரே விதமான நடிப்பு. ரூட்டை மாத்துங்க பாஸ். பிளாஷ்பேக் காட்சி அக்மார்க் ட்ராமா. பத்து வயது சூர்யா துப்பாக்கி பிடித்து சுடுவதெல்லாம் ரொம்ப ஓவர்.

லா‌ஜிக் இல்லாத காட்சிகள், லவுட் ஸ்பீக்கர் வில்லன், சொதப்பல் பிளாஷ்பேக், நம்ப முடியாத ஹீரோயிசம், டெம்போ இல்லாத திரைக்கதை... ஆதவன் - சூ‌ரியகிரகணம்.

Read More...

காதலும்..! - சூர்யநீலன்

மாதவனும், கலாவதியும் ``கேட்லாக்''கை வைத்துக்கொண்டு எந்த மாதிரியான வைரநெக்லஸ் வாங்கலாமென மும்முரமாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தரகர் குரலெழுப்பினார்.

``சார்..., மாதவன் சார்...,''

``வாங்க கல்யாண சுந்தரம்.'' மாதவன் சொன்னதும் தன் கைப்பையுடன் மாதவன் அருகே வந்து அமர்ந்தார் தரகர் கல்யாணசுந்தரம். அமர்ந்த அடுத்த நிமிடமே பையில் உள்ள மணப்பெண் போட்டோக்களை ஒவ்வொன்றாக காட்ட ஆரம்பித்தார்.

மாதவனுக்கும், கலாவதிக்கும் அவர் காட்டியதில் காவ்யா போட்டோ தான் பிடித்திருந்தது.

அவர்கள் காவ்யாவை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் காவ்யாவின் அழகு மட்டுமல்ல, அவளது குடும்ப அந்தஸ்தும்தான். 100 பவுன் நகையும், ஒரு போர்டு காரும் வரதட்சணையாக கொடுப்பார்கள் என தரகர் கூறியது அவர்களை உச்சி குளிர வைத்து உடனே சம்மதம் சொல்ல வைத்துவிட்டது.

வடபழனி சிக்னலில் பல வண்டிகளுக்கு மத்தியில் பளபளக்கும் பல்சர் வண்டியில் பச்சை விளக்கிற்காக காத்திருந்தான் மாதவனின் மகன் ஜெய்ராம். ஜெய்ராமின் இடுப்பை இறுக்கி அணைத்தபடி பின்புறம் இருந்தாள் சுமதி. ஜெய்ராமின் குடும்பத்துடன் ஒப்பிடும்பொழுது சுமதியின் குடும்பம் சாதாரணமானதுதான்.


சிக்னலில் பச்சைவிளக்கு எரிந்தது. அனைத்து வண்டிகளும் புறப்பட்டன. ஜெய்ராம் வண்டியை கியர் போட சுமதியின் அணைப்பு மேலும் இறுகியது.டூவீலரில் இருவரும் ஊர் சுற்றும்பொழுது துப்பட்டாவால் தனது முகத்தை மூடிக்கொள்வாள் சுமதி.

``இப்படி முக்காடு போட்டுகிட்டு பயந்து பயந்து காதலிக்கிறது எவ்வளவு நாளைக்கு ஜெய்ராம்... எப்ப கல்யாணமாகி சுதந்திரமா போகப் போறோம்? ஏதாவது பேசு ஜெய்ராம்?'' என ஜெய்ராமின் காதுகளில் கிசுகிசுத்தவாறே இருந்தாள் சுமதி.

``உனக்கு மட்டுமா, எனக்கும் தான் பயமா இருக்கு. நம்ம வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். நான் செத்தேன்.'' -என பதிலுக்கு தந்தையின் மீதுள்ள பயத்தை காட்டினான் ஜெய்ராம்.

``அப்பறம்... இப்படியே முக்காடு போட்டுகிட்டு சுத்தவேண்டியதுதானா?''

ஜெய்ராமுக்கு சுமதியின் மீது காதல் இருந்தாலும், தனது காதலை தந்தை மாதவனிடம் கூறும் அளவுக்கு தைரியமில்லை. காரணம் பணத்தாசையும், அந்தஸ்து பித்தும் பிடித்த பெற்றோரிடம் தனது காதல் வெற்றியடையுமா என்கின்ற சந்தேகமும், பயமும்தான் காரணம். பேராசையுள்ள பெற்றோர்களை பார்க்கும் பொழுது சில நேரங்களில் ஜெய்ராமுக்கு வெறுப்பும் கோபமும்தான் மிஞ்சும்.

இரவு, வீட்டிற்கு வந்த ஜெய்ராம் நடுஹாலில் கால்களை அகட்டி சோபாவில் ``அப்பா...டா..'' என உட்கார்ந்தான். அருகில் டீபாயில் காவ்யா போட்டோ கண்ணில் பட, அதை எடுத்து ``யார் இது?'' என்ற கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருக்க பெட்ரூமிலிருந்து வெளிவந்தாள் தாய் கலாவதி.

``என்னடா... இவ்வளவு லேட்? எங்க போனே? என்று வழக்கமான கேள்விகளை கேட்டுவிட்டு ``இவ பேரு காவ்யா. இவளைத்தான் உனக்கு செலக்ட் பண்ணிருக்கோம். இவள்தான் நம்ம குடும்பத்துக்கு மருமகளா வரணும். மேலும் இவ நம்ம குடும்பத்துக்கு தகுந்தாற்போல பணக்கார வீட்டுப் பெண்.'' என கலாவதி வரிசையாக கூற ``என்னது! எனக்கு தெரியாம இந்த வேலையெல்லாம் எதுக்கும்மா? எனக்கு இப்போதைக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம்.'' என தயக்கத்துடன் தனது கருத்தை வெளிப்படுத்த...

``டேய், என்னடா'' என தந்தை மாதவன் உள்ளேயிருந்து குரலெழுப்பினார். ஜெய்ராமுக்கு மனபதற்றம் சற்று அதிகமானது.

அப்பா தொடர்ந்தார்...

``நம்ம குடும்ப கவுரவத்துக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த பெண் இவள்தான். இந்த வீட்டுக்கு எவ வரனும்னு எனக்கு தெரியும். இந்த போட்டோவ்ல இருக்கிற காவ்யாவைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கிற''. அதிகார தோரணையில் பேசினார் மாதவன்.

இந்த நேரத்தில் சுமதி பற்றி அப்பாவிடம் கூறலாம் என நினைத்தாலும் பயம் தடுத்தது. மீறி கூறினாலும் வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்கிற சந்தேகம் அவன் வாயை கட்டிப்போட்டது.

மாதவனும், கலாவதியும் கோபத்துடன் சென்றதும் ஜெய்ராமால் திடமாக முடிவெடுக்க இயலவில்லை. அதேநேரம் காவ்யாவின் போட்டோவை பார்க்காமலும் இருக்க முடியவில்லை. சுண்டிவிட்டால் ரத்தம் வரும் கலரில் உலக அழகி போல் போட்டோவில் காட்சி தந்தாள் காவ்யா. பணத்தோடு அழகு வீடு தேடிவரும்போது விட்டுவிட முடியுமா? அவன் மனதுக்குள் நேற்றைய காதலுக்கும் நாளைய காதலுக்குமாக போராட்டம்.

ஆறு மாதத்திற்கு பிறகு...

பட்டு சட்டை, பட்டு வேஷ்டியுடன் கட்டிலில் அமர்ந்திருந்தான் ஜெய்ராம். அறை முழுவதும் மல்லிகை வாசம். ஜெய்ராமின் மனம் மட்டும் சுமதியை மறக்கவில்லை. அவளுடைய நினைவாகவே அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் பால் கிண்ணத்துடன் உள்ளே வந்தாள் அழகு தேவதை காவ்யா. வந்தவளை வரவேற்று அருகில் அமர வைத்தான்.

அழகான காவ்யாவின் கண்களில் மட்டும் அப்போது கட்டுக்கடங்கா சோகம். அவன் கேட்காமலே ஆரம்பித்தாள்.

``என் மனசுல உள்ளதை நீங்க தப்பா நினைச்சாலும் நான் சொல்லித்தான் ஆகணும். ரெண்டு வருஷமா ஒருத்தரை நான் உயிருக்குயிரா காதலிச்சேன். ஆனா எங்க காதல் கை கூடாம போச்சு. அந்தஸ்து பேதம் எங்க காதல் சிறகை வெட்டிப் போட்டுருச்சு. நீங்க யாரையாவது காதலிச்சிருந்தா அந்த வலி உங்களுக்குப் புரியும். உங்களோட மனம் ஒப்ப எனக்கு கொஞ்ச காலம் ஆகலாம். அதுவரைக்கும்...'' என்றவள், பெட்ஷீட்டை தரைக்கு விரித்து தலையணையை தலைக்கு வைத்து தூங்கத் தொடங்கினாள்.

அதிர்ந்து போனவன், கொட்டக் கொட்ட விழித்தபடி மாமனார் வீட்டில் காலையில் அவனுக்கு போட்ட 7 பவுன் சங்கிலியை இப்படியும் அப்படியுமாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். விடியலுக்கு இன்னும் நேரம் இருந்தது.

***

Read More...

பேராண்மை - Peranmai (2009) cam first on the net - Movie Download

Cast : Jayam Ravi. Roland Kickinger. Vasundra. Urvashi. Vadivelu. Saranya
Directed : S. P. Jananathan
Produced : K. Karunamoorthy C. Arunpandiyan
Written :S. P. Jananathan
Music : Vidyasagar
Editing : V. T. Vijayan
Distributed : Ayngaran International

MEGAUPLOAD~LINK
Code:
http://www.megaupload.com/?d=AWT4GI5L

Read More...

Sunday, October 18, 2009

அகிம்சை என்னும் வேதம்! (சிறுகதை) - கவுரி ரங்கசாமி

ரயில் நகர ஆரம்பித்தது. எனக்கு எதிரே உட்கார்ந் திருந்த ஒரு பெரியவர், காந்தியின் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். நான் மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். நான் சிரித்தற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? நான் யார் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடையலாம்.
என் பெயர் வேண்டாம்... என் பெயர் உங்களுக்கு அவசியமில்லாதது; ஆனால், நான் யார் என்று சொல்லி விடுகிறேன். நான் ஒரு தீவிரவாதி... என்னைப் பார்த்தால், நான் ஒரு தீவிரவாதி என்று ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். அப்படி ஒரு அப்பாவித்தனமான முகம் எனக்கு. நாளை நான் செய்யப்போகும் காரியம், உலக வரலாற்றில் மறக்க முடியாத இடத்தைப் பிடிக்கப் போகிறது. என் மனதுக்குள் அடங்க மறுக்கும் கோபத்திற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். என்னை விரக்தியின் எல்லைக்குக் கொண்டு போய் தற்கொலைக்குத் தூண்டிய இந்த அரசாங்கத்துக்கு ஒரு அதிர்ச்சி பேரலையை உருவாக்க வேண்டும்.
என்னை பார்த்து புன்னகைத்தார் அந்த பெரியவர். நான் இறுக்கமான முகத்தோடு அவருடைய புன்னகையை அலட்சியப்படுத்தினேன். அவர், என்னோடு பேச முயல, நான் சட்டென்று திரும்பிக் கொண்டேன்.
என் செல்போன் ஒலித்தது. என் தலைமை அழைத்தது. சூட்கேசை பத்திரமாய் வைத்துவிட்டு செல்போனுடன் பாத்ரூம் விரைந்தேன்.
""எங்க இருக்கறே?''
""ரயில்ல... பாத்ரூமுக்குள்ளே...''
""ஓ.கே., நாளைக்கு காரியத்தை கச்சிதமா முடிச்சுடு.''
""ஓ.கே.,''
""வெற்றியோடு திரும்பி வா!''
""வெற்றியோடதான் திரும்புவேன்.''
நாளை நடக்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிக்கப் போகிறது. அந்தக் கட்சித் தலைவரோடு சேர்ந்து பல உயிர்களை பலி கொடுக்க இருக்கிறேன். இதையெல்லாம் நான்தான் செய்ய இருக்கிறேன். திரும்பி என் இருக்கையில் வந்து அமர்ந்தபோது அந்த பெரியவரும், ஒரு இளைஞனும் ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். என் சூட்கேசை பார்த்தேன். அதில், வெடிகுண்டு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது.


எனக்கு வேலை கொடுக்காத இந்த நாட்டுக்கு, நான் கொடுக்கும் பரிசு; வேலை வாங்கித்தர என்னிடம் லஞ்சம் கேட்ட அரசியல் கட்சிக்கு நான் கொடுக்கும் பதிலடி. வாழ்க்கையில் மிகப்பெரிய விரக்தி. தற்கொலைக்கு முயன்ற போது தான், இந்த இயக்கத்தைப் பற்றி என் நண்பன் ஒருவன் சொன்னான்; சேர்ந்தேன். என் கோபத்துக்கும், விரக்திக்கும் ஆறுதல் கிடைத்தது.
""தம்பி... நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்... வேலை கிடைக்கலைங்கறதுக்காக அரசாங்கத்தை நாம குறை சொல்றது தப்பு...''
""அப்ப, அரசாங்கத்து மேலே தப்பே இல்லைன்னு சொல்றீங்களா?''
""தப்பு இருக்கலாம்... ஆனா, அரசாங்க வேலையையே ஏன் நம்பி இருக்கணும்? சொந்த தொழில் செஞ்சு பொழைச்சுக்கலாம்... பிழைக்கிறதுக்கு எத்தனையோ வழி இருக்குது தம்பி...''
""இல்ல, சார்... இந்த அரசாங்கத்துக்கு நம்ம மேலே அக்கறை இல்லை.''
சிரித்தார் பெரியவர்.
""தம்பி... அரசாங்கம் அப்படிங்கறது யாரு... நாம தானே...? இந்த நாட்டு மேலே உங்களுக்கு அக்கறை இருக்கா?''
""என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க? இந்த நாட்டுக்காக உயிரை கொடுக்கக் கூட தயாரா இருக்கேன்; ஆனா, இந்த நாடுதான் எனக்கு வேலை கொடுக்க மறுக்குது.''
""இந்த நாட்டு மக்கள் மேலே உங்களுக்கு அக்கறை இருக்கா?''
""கண்டிப்பா சார்... நாடு வேற, மக்கள் வேறன்னு நான் நினைக்கறதில்லை.''
""வெரிகுட்... தம்பி, கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு கிராமத்து ஆள் உங்ககிட்ட ஏதோ கேட்டாரே?''
இளைஞனின் முகம் சட்டென்று மாறியது.
""சார்... அது... அது...'' என்று திணறினான்.
""சொல்லுங்க, தம்பி... உட்கார இடம் கேட்டாரு... கொஞ்சம் அட்ஜஸ் பண்ணினா, அஞ்சு பேர் உட்காரலாம்... இல்லையா?'' வியர்த்துப் போனான் அந்த இளைஞன்.
""இல்ல, சார்... அஞ்சு பேர் உட்கார்ந்து போறது கஷ்டம்...'' சிரித்தார் பெரியவர்.
""நம்ம எதிர் சீட்டை கவனிச்சீங்களா? ஆறு பேர் உட்கார்ந்து இருக்கிறாங்க.'' இளைஞனால் பேச முடியவில்லை.
ச்சே... வார்த்தையால் மடக்கிவிட்டாரே... அந்த இளைஞனும் இருக்கை மேல் வைத்திருந்த தன் சூட்கேசை எடுத்து, அடியில் தள்ளி, நின்று கொண்டிருந்த ஒருவரை அழைத்து இடம் கொடுத்து விட்டானே. முட்டாள்... வார்த்தை ஜாலத்தில் கரைந்து விட்டான். நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். காந்தியம், அகிம்சை என்று சொற்பொழிவாற்றத் துவங்கிவிட்டார் அந்த பெரியவர். ஏற்கனவே என் சீட்டில் ஆறு பேர்... போதாக்குறைக்கு, இந்த சொற்பொழிவு வேறு...


"முட்டாள் கிழவரே... உங்கள் அகிம்சையால் முடியாததை எங்களது தீவிரவாதத்தால் நிகழ்த்திக் காட்டுகிறேன்... பார்த்துக் கொண்டே இரு கிழவா...' வெயிலை சபித்தபடியே நடந்தாள் முத்தம்மாள்.
""யப்பா, என்ன வெயிலு... இந்தப் பாடுபடுத்துது...''
சுள்ளி பொறுக்குவதற்காக பனங்காட்டுக்கு வந்திருந்தாள். சனிக்கிழமை என்பதால் சண்முகத்துக்கு பள்ளிக்கூடம் லீவு. அவன் நான்காம் வகுப்பு படிக்கிறான். போன வருடம் காட்டு வேலைக்குப் போன அவனுடைய அப்பா, பாம்பு கடித்து இறந்து விட்டார். இந்த ஒரு வருடத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்து விட்டாள் முத்தம்மாள். கூலி வேலைக்குப் போய் மகனைக் காப்பாற்றி வருகிறாள். மகன் மட்டும் இல்லையென்றால், அவளும் இந்த உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு, புருஷன் போன இடத்துக்கு போயிருப்பாள். வறுமையான வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது?
""சண்முகா... எங்கயும் போயிடாதே... ஒரே இடத்தில் விளையாடு,'' என்று சண்முகத்தைப் பார்த்து கத்தினான்.
""சரிம்மா...'' என்று ஆலமரத்தடியில் இருந்த மாட்டு வண்டியில் ஏறி விளையாடினான் சண்முகம். சரியான வெயில். சுட்டெரித்தது. காட்டுக்குள் ஒரு ஆளையும் காணவில்லை; இல்லையென்றால், ஆள் நடமாட்டம் இருக்கும். வெயில் என்பதால் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கூட ஆற்றங்கரைப் பக்கம் போயிருப்பர். ஒரு சுமை சுள்ளி சேர்ந்தால் போதும்; சீக்கிரம் வீடு போய்ச் சேர்ந்து விடவேண்டும். சண்முகம், பசியில் இருப்பான். வீட்டிலேயே இருடா என்றால் கேட்க மாட்டேன்ங்கறான். உம்... அவனுக்கு கறிச்சோறு கொடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இன்றைக்கு கால் கிலோ கறிஎடுக்க கொஞ்சம் காசு இருக்கு. சுள்ளிப் பொறுக்கிக் கொண்டு போனால் வாய்க்கு ருசியாக சோறாக்கிக் கொடுக்கலாம்.


"உம் பையனுக்கு நல்லா படிப்பு வருது முத்தம்மா... அவனை நல்லா படிக்க வை... நிச்சயம் பெரிய ஆளா வருவான்...' வீடு தேடி வந்து சொல்லிவிட்டுப் போனார் கலா டீச்சர். முத்தம்மாவுக்கு பெருமையாக இருந்தது.
"முடிஞ்ச வரைக்கும் படிக்க வைப்போம்...' என்று நினைத்துக் கொண்டாள். சுள்ளி கொஞ்சம் சேர்ந்து விட்டது.
"இது போதும்... நாளைக்கு பார்க்கலாம்... பையன் பசியில இருப் பான்...' என்றபடி சுள்ளியைக் கட்ட ஆரம்பித்தாள்.
""அய் யோ... அம்மா...!''
சண்முகத்தின் அலறல் கேட்டு திடுக் கிட்டாள். குரல் வந்த திசை நோக்கி ஓடினாள்.
கீழே விழுந்து கிடந்தான் சண்முகம். அவன் மண்டையில் அடிபட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது.
""அய்யோ, சண்முகம்! என்னடா ஆச்சு?''
""அம்மா... அம்மா... வலி தாங்க முடியலே... வண்டியில இருந்து கீழ விழுந்துட்டேன்...''
மாடு கட்ட போட்டிருக்கும் கல்லில் மண்டை அடிபட்டிருந்தது.
""அய்யோ, சாமி... நான் என்ன செய்வேன்...'' பதறினாள் முத்தம்மாள். அவளுக்கு உயிரே போய்விட்ட மாதிரி இருந்தது. பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமென்கிற பதைபதைப்பு. யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம் என்றால் ஒரு ஆளையும் கண்ணில் காணோம். யாராவது சைக்கிளில் வந்தால், பையனை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம். ஊர் கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. டாக்டரம்மா வீட்டில்தான் இருப்பார்கள். என்ன செய்யறது? சாமி, எம்புள்ளையைக் காப்பாத்து...
சும்மாடுத் துண்டை எடுத்தாள். சண்முகத்தின் தலைக்கு கட்டு போட்டாள்.
அவன் வலி தாங்காமல், "அம்மா... அம்மா...' முனகினான். ""பொறுத்துக்க சாமி... ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்...''
பையனைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.
""அம்மா... வலிக்குதும்மா...''
இட்டேரியைத் தாண்டி விட்டாள்... ரயில் தண்டவாளத்தைத் தாண்டி, கருவேலங்காட்டு வழியாக ஓடினால், கால்மணி நேரத்தில் போய்விடலாம். அவள் ஓட்டத்துக்கு பத்து நிமிஷத்திலேயே போய் விடலாம்...
ரயில் தண்டவாளத்தை தாண்ட கால் வைத்ததும் அதிர்ந்து போனாள் முத்தம்மாள்.
""அடக்கடவுளே... என்ன கொடுமை?''
தண்டவாள இணைப்பில் விரிசல் விட்டிருப்பதைக் கண்டாள்.
""இது ரயில் வர்ற நேரமாச்சே... பத்து, பதினஞ்சு நிமிஷத்தில வந்துடுமே...''
குழம்பி நின்றாள் முத்தம்மாள்.
""அம்மா வலிக்குதும்மா,'' அழுதான் சண்முகம்.
"இப்ப என்ன செய்யிறது? ரயில் வந்தா, பெரிய விபத்து நடக்குமே... நூத்துக்கணக்கான உயிர்களை சுமந்துட்டு வருது. காப்பாத்தணுமே... ஊருக்குள்ள போய் ஆளுங்களை கூப்பிட்டு வர்றதுக்குள்ள ரயில் வந்துடுமே... ரயிலை நிறுத்தணுமே...'
வலியால் சண்முகம் துடிக்க, கலங்கிப் போனாள் முத்தம்மாள்.
"அய்யோ... எம்பையனை காப்பாத்தணுமே...'
செய்வதறியாது திகைத்து நின்றாள்.
மகனைக் காப்பாற்றுவதா? மக்களை காப்பாற்றுவதா? மகனா? மக்களா? ஒரு உயிரா? பல உயிர்களா?
""அம்மா முடியலேம்மா... வலிக்குதும்மா...'' மகன் கதறுவதைப் பார்த்தாள். ஒரு முடிவுக்கு வந்தாள்.
"ஆத்தா... மகமாயி... எம்புள்ளை உம்பொறுப்பு... அவனை நீ காப்பாத்து...' ரயிலை தடுத்து நிறுத்துவது என் பொறுப்பு!' என்று முடிவெடுத்தாள்.
ரயிலை நிறுத்த சிவப்புத் துணி காட்ட வேண்டுமே! சிவப்புத் துணிக்கு எங்கே போவது? சும்மாடுத் துண்டைப் பார்த்தாள். வெள்ளைத் துண்டு மகனின் ரத்தத்தால் நனைந்து சிவப்பாக மாறியிருந்தது. மகனை ஓரமாக படுக்க வைத்து துண்டை எடுத்தாள். முந்தானையை கிழித்து மகனின் தலையில் கட்டினாள். துண்டை ஒரு குச்சியில் கட்டினாள். மனசை இறுக்கமாக்கினாள். ரயிலின் வருகைக்காக காத்திருந்தாள்.


சிறிது நேரத்தில்...
தடக், தடக், தடக்... கூவென்ற அலறலோடு ரயில் வருகையை அறிவித்தது. மகனைப் பார்த்தாள் முத்தம்மாள். மயங்கிப் போயிருந்தான். பொங்கிய அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள். ரயில் கண்ணில் பட்டதும் வேகமாக துணியை அசைத்தாள்.
ஓயாமல் பேசிக் கொண்டே வந்தார் அந்த பெரியவர். எனக்கு எப்போதடா ரயிலை விட்டு இறக்குவோம் என்றாகி விட்டது. இந்த இளைஞன் அவருடைய பேச்சில் ஆர்வமாகிவிட்டான்.
""மனுசன் எப்படி வாழணும்ன்னு வாழ்ந்து காட்டியவர் காந்தி. அவரோட அகிம்சை கொள்கைகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்துமான்னு கேட்கறீங்க... தீவிரவாதம்ங்கற விஷம் இன்னிக்கு உலகம் முழுக்க பரவிடுச்சு. தீவிரவாதம் மக்களுக்கு அமைதியான வாழ்க்கையைத் தராது; மக்களுக்கு அமைதியான வாழ்க்கைக்கு வழி வேணும்னா, அதுக்கு ஒரே வழி... காந்தியோட அகிம்சை வழிதான்.
""அகிம்சைக்கு என்னைக்கும் அழிவே கிடையாது. அது ஒரு அற்புதமான பாதை, அமைதியான வாழ்க்கைக்கு அதுதான் வேதம்.''
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரயில், திடீரென்று பிரேக் போட்டு அதிர்ந்து நின்றது.
""என்ன, ரயில் இப்படி சடன் பிரேக் போட்டு நிற்குது...?''
""ஏன், நடுக்காட்டுக்குள்ள நின்னுடுச்சு?''
ஆள் ஆளுக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.
""எல்லாரும் எங்க ஓடறாங்க...''
நான் குழப்பத்தோடு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்.
"ரயில் இஞ்ஜினுக்கு முன்னால என்ன கூட்டம்?''
ஒரு மனிதரை அழைத்து விவரம் கேட்டார் பெரியவர்.
""நம்ம உயிரை எல்லாம் ஒரு கிராமத்து பெண் காப்பாத்தி இருக்கறாங்க... தண்டவாளம் விரிசல் விட்டிருக்கு சார்... அந்த பொம்பளையோட பையன் மண்டையில அடிபட்டு உயிருக்கு போராடிட்டு இருக்கான்... பையனோட ரத்தம் நனைந்த துண்டை காட்டி ரயிலை நிறுத்தியிருக்காங்க...''

எல்லாரும் அதிர்ந்து போவதைப் பார்த்தேன். அந்த பெரியவர்,
""வாங்க... எல்லாரும் போய் பார்க்கலாம்... அந்த பொண்ணுக்கு நம்மாள ஏதாவது உதவ முடியுமான்னு பார்க்கலாம்...'' என்றார். பெட்டியை விட்டு இறங்க ஆரம்பித்தனர்; நானும் சூட்கேசுடன் இறங்கி அவர்களோடு நடக்க ஆரம்பித்தேன்.
இஞ்ஜினுக்கு முன் கூட்டமாய் பயணிகள்... ஒரு பெண், மகனை மடியில் போட்டு அழுது கொண்டிருந்தாள்.
""அய்யோ... தெய்வமே... எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே... நான் என்ன செய்வேன்... சம்முகா... சம்முகா... என்னைப்பாரு சாமி...''
முதலுதவிப் பெட்டியோடு ஒருத்தர் ஓடி வந்தார்.
""தள்ளுங்க... வழி விடுங்க... டாக்டர் வர்றாரு...'' வேகமாக ஓடி வந்தார் டாக்டர்.
""அம்மா, பயப்படாதம்மா... உன் மகனுக்கு ஒண்ணும் ஆயிடாது...'' சிகிச்சை செய்ய ஆரம்பித்தார்.
""இங்க ஆஸ்பத்திரி இருக்கா? எவ்வளவு தூரம் போகணும்?'' விசாரித்தார் டாக்டர்.
"பையனுக்கு பிளட் நிறைய போயிருக்கு... பிளட் கொடுக்க வேண்டியிருக்கும்... பையனுக்கு என்ன குரூப்புன்னு தெரியலே...''
""எனக்கு ஓ பாசிடிவ் டாக்டர்... யாருக்கு வேணும்னாலும் கொடுக்கலாம். நான் கூட வர்றேன்...'' என்று பெரியவர் சொன்னதும், ஆள் ஆளுக்கு அவரவர் ரத்தப் பிரிவை சொன்னார்கள்.
சற்று தூரத்தில் போய்க்கொண்டிருந்த ஜீப்பை சப்தம் போட்டு நிறுத்தினர். பையனையும், அந்த பெண்ணையும் ஜீப்பில் ஏற்றினர். உடன் அந்த பெரியவரும், இளைஞனும் ஏற, இன்னும் சிலரோடு ஜீப் கிளம்பியது.
""தண்டவாளம் சரியான பின்னாலதான் ரயில் கிளம்பும். எவ்வளவு நேரம் ஆகும்ன்னு தெரியலே...''
எல்லாரும் அந்த பெண்ணைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
எனக்குள் அந்த பெரியவர் சொன்ன வார்த்தைகள் திரும்பத்திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
"மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு ஒரே வழி... காந்தியோட அகிம்சை வழிதான். அகிம்சைக்கு, என்னைக்கும் அழிவே கிடையாது. அது ஒரு அற்புதமான பாதை. அமைதியான வாழ்க்கைக்கு அதுதான் வேதம்...'
ஒரு கிராமத்துப் பெண், தன் மகனின் உயிரை விட மக்களின் உயிரை பெரிதாக நினைத்து காப்பாற்றி இருக்கிறாள்.
நான் படித்தவன்... படித்து என்ன பிரயோசனம்? இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகும்,நான் திருந்தாமல் போனால் நான் மனிதப் பிறவியே இல்லை.
எனக்கு ஒரு தகவல் தேவை. யாரிடம் விசாரிப்பது? தேடினேன்.
டிக்கெட் பரிசோதகர் நின்று கொண்டிருந்தார். அவரை நெருங்கினேன்.
""சார்... இங்க பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் எதாவது இருக்கா?''
அவர் என்னை மேலும், கீழும் பார்த்தபடி சொன்னார்.
""ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு... ஏன் கேட்கறீங்க...''
""சரணடையணும்,'' என்றேன்.
***

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009